Wednesday, June 10, 2015

MBBS merit list may be delayed

The announcement of merit list for admission to MBBS/BDS courses through single-window counselling could get delayed, as revaluation results for the Class XII examination conducted by State Board have not yet been released.

The Directorate of Medical Education had scheduled the release of rank list on Friday, but is still awaiting the revaluation results. “We will know by Wednesday when the results would be out,” an official said.

A selection committee official said, “It would be difficult to release the rank list on Friday. We will need at least a day or two between random number and the rank list. Once we get the re-totalling and revaluation results, we will start the process of generating random numbers. We will also need a day between the announcement of results and the generation of the random number.”

The DME has to follow the Supreme Court orders that the first phase of medical counselling be held between June 19 and 25, the official added.

Speaking on the revaluation, an official from the School Education Department said they were still in the process of compiling the list. “We will do our best to get it done by then, but the results are unlikely to be announced in the next two or three days,” the official said.

For the medical entrance, marks in Physics, Chemistry, Biology, Zoology and Botany are taken into consideration to decide the cut-off marks. Marks in mathematics are used for fixing random numbers.

According to sources, maximum number of students applied for revaluation in Physics and Mathematics this year.

Many students are expecting a large difference in their marks after re-totalling and revaluation. “There is an entire page with seven marks that they have not considered in the totalling of my Physics paper. Many of my friends, too, expect at least three or four marks extra in the subjects they applied for,” a student said.

In the case of engineering, the random number will be generated for all candidates who had applied irrespective of whether they are eligible or not, so the delay in re-totalling or revaluation results will not affect the counselling, an official from Tamil Nadu Engineering Admissions said.

மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது சிங்கப்பூர்


logo


சிங்கப்பூர்,

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சிங்கப்பூர் திரும்ப பெற்றுள்ளது.


மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன.இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன. அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை என்று கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.


இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் தயாரிக்கப்படும் மேகி நூடுல்ஸ் வகைகளை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று சிங்கப்பூர் அரசும் அந்நாட்டு இறக்குமதியாளர்களுக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, சிங்கப்பூர் கடைகளில் இருந்து மேகி நூடுல்ஸ் அகற்றப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நுடுல்சுகளில் உடல் நலத்துக்கு கேடான எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதனால் விற்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அந்நாட்டு வேளாண் உணவு மற்றும் கால்நடை ஆணையம் (AVA), தெரிவித்துள்ளது.


முன்னதாக, கடந்த வாரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸுகளை ஆய்வுக்கு அனுப்பிய சிங்கப்பூர் வேளாண் உணவு மற்றும் கால்நடை ஆணையம், ஆய்வு முடிவு வரும் வரை நூடுல்ஸ்களை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், இந்த சோதனை முடிவில் மேகி நூடுல்ஸில் உண்பதற்கு ஆபத்தான பொருள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி கொண்டுள்ளது என்று அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெல்மெட்’ தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்

1963–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த ‘தர்மம் தலைகாக்கும்’ என்ற திரைப்படத்தில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ‘தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும்’ என்ற கவிஞர் கண்ணதாசன் பாடலைப் பாடுவதுபோல, ஒரு காட்சி வரும். ஆனால், இப்போது பெருகிவரும் விபத்துக்கள் அதிலும் குறிப்பாக ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஏற்படும் விபத்துக்களையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும், அவர்கள் மரணத்தால் அவர்களின் குடும்பமே நிர்க்கதியாகி நிற்பதையும் பார்க்கும்போது, இந்த பாடலை ‘ஹெல்மெட்’ ‘தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும்’ என்று கூறுவதே சாலப்பொருத்தமாக இருக்கும்.

சாலைப்பாதுகாப்புக்காக ஒரு கடுமையான சட்டம்வேண்டும் என்று இந்தியா முழுவதுமே கோரிக்கை வலுத்து வருகிறது. அதிலும் மத்திய அரசாங்கம் பொறுப்பேற்று ஒருவாரத்தில் கோபிநாத் முண்டே என்ற மந்திரி தலைநகராம் டெல்லியிலேயே கார் விபத்தில் இறந்ததால், இந்த அரசாங்கம் சாலைப்போக்குவரத்து பாதுகாப்புக்காக இரும்புக்கரம்கொண்டு ஒரு சட்டத்தைக் கொண்டுவரும், அந்த சட்டம் பெருமளவு விபத்துக்களை தவிர்க்கும் என்று எதிர்பார்த்தது இன்னும் நிறைவேறவில்லை. 1988–ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தை வலுவுள்ளதாக ஆக்கும் வகையிலும், போக்குவரத்து குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையிலும், 2014–ம் ஆண்டு சாலைப்பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மசோதா என்று ஒரு மசோதா தயாரிக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. முண்டே இறந்து ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்றப்பட திட்டமிட்ட இந்த மசோதா, பல காலக்கெடுக்களை கடந்தும் நிறைவேற்றப்படும் வழியை காணாமல் இருக்கிறது. அதன்பிறகு, 4 முறை பல திருத்தங்கள் செய்யப்பட்டு இந்த மசோதாவின் நோக்கமே இப்போது நீர்த்துப்போய்விட்டது.

ஆனால், பாராளுமன்றத்தால் முடியாத இந்த நோக்கத்தின் ஒரு பகுதியை, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், வருகிற ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இருசக்கர வாகனங்களையும் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று பிறப்பித்துள்ள தீர்ப்பு மூலம் நிறைவேற்றிவிட்டார். மத்திய அரசாங்கமும், அனைத்து மாநிலங்களும் இவ்வாறு இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்வதை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 2006–2007–ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 3 ஆயிரத்து 426 ஆகும். ஆனால், 2013–2014–ல் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு நிச்சயமாக இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 70 லட்சத்தை தாண்டி வேகமாக சென்றிருக்கும். இதுபோல, 2005–ம் ஆண்டு இருசக்கர வாகன விபத்துக்களில் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,670 பேர் என்று இருந்தநிலை மாறி, 2014–ல் 6,419 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்து இருக்கிறார்கள். ஆக, இனியும் தாமதம் இல்லாமல், இது நீதிபதியின் அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டது என்ற விமர்சனங்கள் வந்தாலும், மத்திய சட்டத்தின் தாமதத்தையும், உயிர்காக்கும் தீர்ப்பு இது என்ற வகையிலும், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் நடவடிக்கையில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். நீதிபதி என்.கிருபாகரன் வழியை திறந்துவிட்டார். அதன் வழியே செல்வது மத்திய, மாநில அரசுகளின் கையில்தான் இருக்கிறது.

Tuesday, June 9, 2015

முதல் உலக விருது



பல வெற்றிப் படங்கள் 1959ல் ரிலீசாயின. ‘அவள் யார்’ போன்ற வித்தியாசமான படமும் வந்தது. ‘பாகப்பிரிவினை’ என்ற குடும்ப சித்திரமும் வெளியானது. ‘கல்யாணப் பரிசு’ மூலம் ஸ்ரீதர் டைரக¢டர் ஆனார். அந்தப் படமும் மெகா ஹிட்டானது. அதே போல் வெளிநாடுகளிலும் தமிழ் சினிமாவின் பெருமையை நிலை நாட்டிய இன்னொரு படமும் இதே ஆண்டில் ரிலீசானது. சிவாஜி கணேசனின் நடிப்பு பசிக்கு தீனி போட்ட அந்தப்படம், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட மாவீரனின் வரலாறு படமானது. இது படமாகும் முன்பு பலமுறை நாடகமாக போடப்பட்டது. அதிலும் சிவாஜிதான் நடித்திருந்தார். கட்டபொம்மன் என்றதுமே மக்களுக்கு சிவாஜியின் முகம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக¢கு இந்த கேரக்டராகவே சிவாஜியை மக்கள் பார்த¢தனர். படத்தில் நடித்தபடியே இந்த நாடகத்திலும் சிவாஜி நடித்தார். மாலை 5 மணி ஆகிவிட்டால், ஷூட்டிங்கிலிருந்து நேராக நாடக சபாவுக்கு சென்றுவிடுவார். மாலையில் இந்த நாடகத்தில் அவர் நடிப்பார். மாதத்தில் 25 முறை கண்டிப்பாக இந்த நாடகம் நடக்கும். அத்தனையிலும் சிவாஜி ஆஜர் ஆவார். மொத்தம் 100 நாட்களை இந்த நாடகம் கொண்டாடியது. 100வது நாளில்
அண்ணாதுரை பங்கேற்று, சிவாஜிக்கு கேடயம் வழங்கி கவுரவித்தார்.

இப்படியொரு வரலாற்று கதையை படமாக்க பிரமாண்ட நிறுவனமான ஜெமினி திட்டமிட்டது. ஆனால், அதற்கு முன்பே அதை திட்டமிட்டவர் பி.ஆர்.பந்துலு. இந்த படத்துக்கு அதிகம் செலவாகும், படமாக்குவதும் சுலபம் அல்ல என்பதால் பந்துலு இதை எடுக்க மாட்டார் என வாசன் நினைத்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை தயாரிக்கப் போவதாக வாசன¢ பத்திரிகையில் விளம்பரமும் தந்தார். அவர் விளம்பரம் தரப்போவதை முன்கூட்டியே அறிந்திருந்தார் பந்துலு. எனவே அதே தினம் இன்னொரு பக்கத்தில் சிவாஜியின் படத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் பட விளம்பரத்தை தந்தார். வாசன் அசந்து போனார். சிவாஜிக்கு நிகராக வேறு யாராலும் நடிக்க முடியாது என்பதை வாசன் உணர்ந்திருந்தார். அதனால் இப்படத்தை பந்துலுவுக்கே விட்டுக் கொடுத்தார்.

பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பந்துலு தயாரித்து, இயக்கிய இப்படத்தின் தொடக்க விழாவில் ஜெமினி வாசன் கலந்துகொண்டு, பலருக்கு ஆச்சரியத்தை தந்தார். முதல் நாள் ஷூட்டிங்கையும் அவரே தொடங்கி வைத்தார். பந்துலு இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்தார். கெவா என்ற உயர்ந்த ரக கலரில் படம் தயாரிக்கப்பட்டது. முழு படத்தையும் பார்த்துவிட்டு, இதை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கலர் பிரிண்ட்டில் வெளியிட திட்டமிட்டார் பந்துலு. இந்த தொழில்நுட்பம், லண்டன் உட்பட வெளிநாடுகளில் மட்டுமே இருந்தது. இதற்காக இப்பட பிரிண்ட்டுகளை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து வெற்றிகரமாக பிரிண்டுகள் தயாராகி சென்னை வந்தன. இந்த பட ஷூட்டிங்கை குறுகிய காலத்தில் எடுக்க முடியுமா? என்று கூட பலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால், பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் குறுகிய காலத்திலேயே ஷூட்டிங் நடத்தி முடித்ததும் சிறப்பம்சம்.

சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.வரலட்சுமி, ஜெமினி கணேசன், ஜாக்சன் துரையாக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்தனர். கதை மற்றும் வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். இசை ஜி.ராமநாதன். திரைக்கதை, இயக்கம் பந்துலு. போர் காட்சிகள் படத்தின் ஹைலைட். வரி செலுத்த எதிர்ப்பு தெரிவித்து ஜாக்சன் துரையுடன் கட்டபொம்மன் பேசும் வசனங்கள்
தியேட்டரை அதிர வைத்தது.

இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் விருதுக்கும் தேர்வானது. ஆனால், தேசிய விருதுக்கான சான்றிதழ் மட்டுமே தந்தார்கள். அதே நேரம் கெய்ரோ உலகப் படவிழாவில் போட¢டி பிரிவில் இப்படம் கலந்துகொண்டது. இப்பெருமையை பெற்ற முதல் தமிழ்ப் படம் இதுதான். விழாவின் கடைசி நாளில் பந்துலு, சிவாஜி, பத்மினி ஆகியோர் கெய்ரோ சென்றனர். விழாவில் விருதுக்கான படங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பல நாட்டு படங்கள் போட்டியில் இருந்தன. இதில் நம் படத்துக்கு எங்கே விருது கிடைக்கும் என மூவருமே சாதாரணமாக நிகழ்ச்சியை பார்த¢துக் கொண்டிருந்தனர். சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான விருதுகளை உருது மொழியில் அறிவித்து வந்தனர்.

பத்மினிக்கு இந்தி தெரியும் என்பதால் அவர் அதை உன்னிப்பாக கவனித்து வந்தார். சிறந்த நடிகர் என்ற விருதுக்கான அறிவிப்பு வந்தது. பந்துலு, சிவாஜி அமர்ந்திருந்த சேர்களுக்கு நடுவே பத்மினி அமர்ந்திருந்தார். அந்த அறிவிப்பை கேட்டதும் எழுந்து நின்றவர், துள்ளிக் குதித்தார். ÔÔஅண்ணே உங்களுக்கு விருது அறிவிச்சிருக்காங்கÕÕ என சத்தமாக சொல்ல, சிவாஜி, பந்துலு பிரமித்து போனார்கள். அவர்கள் இருவருக்குமே சந்தேகம். நம்ப முடியவில்லை. ஆனால், அதுதான் உண்மை. அன்று கெய்ரோ பட விழாவில் நம் தமிழர் விருது வாங்கினார். சிறந்த இசைக்காக ஜி. ராமநாதனுக்கும் கெய்ரோ விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. விருது அறிவிப்பு நாடு முழுவதும் பரவியது. ஆஸ்கர் விருது வாங்கியதற்கு நிகரான பெருமைய¤ல் தமிழ் சினிமா சந்தோஷத்தில் திக்குமுக்காடியது.

Vyapam scam: Manhunt on for 34 absconding UP MBBS students

The Special Investigation team probing the Madhya Pradesh Professional Examination Board (MPPEB) or Vyapam scam in Bhopal has declared 34 MBBS students of Kanpur's Ganesh Shankar Vidyarthi Medical College as absconders and has announced a reward of 2,000 for information on them. The SIT has also put up posters across the medical college to nab them for their involvement in the multi-crore scam.

The students are among the 54 medical students from Uttar Pradesh, Madhya Pradesh and Bihar who had taken the PMT (Pre-Medical Test) in Madhya Pradesh while impersonating aspiring candidates. The remaining 20 students have already been arrested and sent to jail.

The scam had rocked the states of Madhya Pradesh and Uttar Pradesh as several big names were found involved in the racket.

Most of these students were linked to a coaching institute in Kakadev area of Kanpur which used to promise weak candidates admissions to medical colleges in Madhya Pradesh.

The Bhopal SIT also visited Jhansi, Saifai and Pratapgarh to nab some of the absconding students but did not succeed in its hunt.

Two students of Kanpur Medical College against whom a cash reward was announced have already completed their MBBS.

தரையிறக்கப்பட்ட விமானம்: தேனியால் வந்த வினை

லண்டன் : பிரிட்டனின், சவுத்தாம்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம், தேவையற்ற, அன்னிய பயணியின் வருகையால், அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை, ப்ளைபீ நிறுவனத்தை சேர்ந்த, பீ-384 என்னும் பயணிகள் விமானம், சவுத்தாம்டன் விமான நிலையத்தில் இருந்து டப்ளினுக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனே, சவுத்தாம்டன் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும், சவுத்தாம்டன் விமான நிலையத்தில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றிய பின், பொறியாளர்கள் விமானத்தை சோதனையிட்டனர்.சிறிது நேர சோதனைக்குப் பின், விமானத்தின் பின்பகுதியில் பறந்து கொண்டிருந்த தேனீ கண்டுபிடிக்கப்பட்டது.தேனீயால் ஏற்பட்ட தாமதத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டது. பின்னர், பயணிகளை ஏற்றிக்கொண்டு, விமானம் புறப்பட்டு சென்றது.

வேலைவாய்ப்பில் வயது வரம்பு சலுகைஉயர்நீதிமன்றக் கிளை மறுப்பு


மதுரை:'வேலை வாய்ப்பில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது,' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
தேனி பெரியகுளம் கெங்குவார்பட்டி கனி தாக்கல் செய்த மனு: கனரக வாகனம் ஓட்ட உரிமம் பெற்று, 2002 ல் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். 13 ஆண்டுகளாக எந்த நேர்காணலுக்கும் அழைக்கவில்லை. மே 1 ல் மருத்துவ பணிகள் நியமன தேர்வு வாரியம் டிரைவர்கள் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டது. வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட பதிவு மூப்பு பட்டியலில் என் பெயர் இல்லை.

ஜூலை 1 ஐ தகுதியாகக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட வயதுவரம்பைவிட, 24 நாட்கள் கடந்ததாகக்கூறி நிராகரித்தனர். வயது வரம்பை தளர்த்தி நேர்காணலில் பங்கேற்க அனுமதித்து, பணி நியமனம் வழங்க கலெக்டர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு: மனுதாரருக்கு ஜூலை 1 நிலவரப்படி 24 நாட்கள் வயதுவரம்பு கடந்து விட்டது. மனுதாரருக்கு மட்டும் சலுகை காட்ட முடியாது. வயது வரம்பு உட்பட நிர்வாக முடிவுகளில் தலையிட முடியாது. சலுகை வழங்கினால் மனுதாரர் போல் பாதிக்கப்பட்டுள்ள பலர் சலுகை கோருவர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணதாஸ் ஆஜரானார்.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறைஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது. சாப்பிடும் முன் மற்றவர்கள...