Wednesday, June 24, 2015

பண்பாட்டுக் கோலங்கள் By அ. அறிவுநம்பி

ஒரு பேருந்துப் பயணத்தின்போது முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த இருவரின் உரத்த உரையாடல் நான் விரும்பாமலேயே என் காதுகளில் படர்ந்து நின்றது. தன் ஊரில் மிதமான மழை பொழிந்ததை ஒருவர் கூறினார். மற்றவர் ஊரில் மழையில்லை. எங்க நல்லவங்க இருக்காங்களோ அங்க மழையிருக்கும் என்ற மரபுத் தொடர் உச்சரிக்கப் பெற்றது. மண் வளத்துக்கு மழை சரி, மன வளத்துக்கு எது என்ற வினாவும் பூத்தது. அப்போது வள்ளுவம் மின்னியது.
பண்புடையார் பட்டுண்டு உலகம் என்ற விடையும் கிடைத்தது. பண்பாட்டுக் கூறுகளின் அகல நீளங்களை அளந்து பார்க்க வேண்டியது தேவையானது.
பண்பாட்டை வெளிப்படுத்தும்போது புறக்கூறுகள் மாறியிருக்கலாம். பண்பாட்டின் மூலக்கூறு மாறாது, மாறக் கூடாது. முப்பதாண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில் நடந்த ஒரு திருமண நிகழ்வில், சென்னையிலிருந்து வந்த புகழ் பெற்ற எழுத்தாளரின் அருகில் அமர்ந்து உணவு உண்ண நேர்ந்தது. நான் உண்டு முடிப்பதற்கு ஐந்து மணித் துளிகளுக்கு முன் அவர் உண்டு முடித்துவிட்டார்.
ஆனால், நான் பணியை முடித்தபிறகு அவர், தம்பி, எந்திரிப்பமா என்றார். அவர் எனக்காகத்தான் அதுவரை காத்திருந்தார் என்பது அப்போதுதான் புரிந்தது. பந்தியில்கூட சக மனிதனை மதிக்கும் ஓர் ஒழுங்கை நேசிக்கும் இப்பண்பாடு இன்றில்லை.
பந்திக்கு முந்து என்ற பழமொழியின் பொருளைப் பிழையாகக் கருதியவர்கள், முதல் பந்தியில் இடம் பெற முந்துகின்றனர். உணவுப் பந்தி நிகழுமிடத்தில் தெரிந்தவர், தெரியாதவர் யாராக இருந்தாலும், உண்பவர்களுக்கு நேர்முன்பாக - முந்தியிருந்து - உண்பவர்களை உபசரிக்க வேண்டும். என்ன தேவை என்று கேட்டு உண்பிக்க வேண்டும். இப்பண்பாட்டு மரபு இன்று காணாமல் போய்விட்டது.
கிருபானந்த வாரியார் தன் சொற்பொழிவில், வைக்கோலை எடுத்துத் தொழுவத்தில் கட்டியுள்ள மாட்டுக்குப் போடுவதும் பந்தியில் மனிதர்கட்குப் பரிமாறுவதும் இன்று ஒன்று போலாகிவிட்டது. மாடு தின்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லை.
ஆனால், விருந்தினராக வந்தவர்களின் எதிரே நின்று இன்னும் கொஞ்சம் பாயாசம் சாப்பிடுங்களேன் எனக் கவனிக்கும்போதுதான் இரண்டு தரப்பிலேயும் அன்பு மலரும் என்று கூறுவார். இயந்திரத்தனமான விருந்து உபசரிப்பில் மனிதம் இல்லை.
ஒரு மேடை. பக்கத்தில் அமர்ந்திருந்தவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு மூத்தப் பேராசிரியர். என் பக்கம் தலையைச் சாய்த்தபடி மெதுவாகச் சொன்னார்: முதல் வரிசையிலே நாலாவதா இருக்கானே, அவன் எங்கிட்ட படிச்சவன். இன்னிக்கு எனக்கு முன்னால கால்மேலே கால் போட்டு மரியாதையில்லாம உட்கார்ந்திருக்கறதைப் பாரு. அப்படி உட்காருவது ஒரு காலத்தில் மரியாதைக் குறைவாகக் கருதப்பட்டது.
முறைமைகள் மாறி விட்டன. குருகுலக் கல்வி முறையில் ஆசான் மட்டும் நடுநாயகமாக அமர்ந்திருக்கவும், சீடர்கள் அவரருகே நின்று கொண்டு அல்லது கீழே தரையில் அமர்ந்து பணிவாகப் பாடங்கேட்பர். இப்போதோ மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருக்க ஆசிரியர் நின்று கொண்டு பாடம் நடத்துவதே நிகழ்முறை. சூழலுக்கேற்பச் செயல்பாடுகள் மாறும். ஆனாலும், பண்பாட்டின் உயிரைப் பறிக்கலாகாது.
எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது பயில்மொழி. அந்த இறைக்கு முன்பாகவாவது பணிவுடன் தோன்றுவதுதானே ஒழுங்கு. அப்படி இருக்கும்போது, அவர்களின் மனத் திரையில் ஒரு தொடர் தானாகவே ஒளிரும். அது, பணியுமாம் என்றும் பெருமை. இது கற்றோர் பண்பாடு.
காலச் சூழல் நடைமுறைக் கூறுகளை மாற்றலாம். பழங்காலத்தில் ஒரு பெண் தன் கணவருடைய பெயரைச் சொல்லுவதில்லை. சொல்லுவது மகாக் குற்றமாகும். இன்றைக்கு, ஊடகங்களில் செய்தி வாசிப்பவர்கள் அனைவரும் ஊரறிய, உலகமறியத் தன் பெயருடன் தன் கணவரின் பெயரையும் உரத்து அறிவிப்பது மரபாகிவிட்டது.
பல வீடுகளில் கணவரைப் பெயர் சொல்லி மனைவி அழைக்கும் வழக்கமும் வந்துவிட்டது. கேட்டால், கூப்பிடுவதற்குத்தானே அவரது (கணவரின்) பெற்றோர் பெயர் வைத்துள்ளனர் - இது மனைவியின் பதில். பின் தூங்கி முன் எழும் மரபும், கணவர் உண்ட எச்சில் இலையில் அல்லது தட்டில் மனைவி உண்ணும் பழக்கமும் மாறிவிட்டது. அவை பொருளற்றவை எனக் கருதப் பெற்று மாற்றங்களை இவ்வுலகம் பெற்றுவிட்டது.
பழங்காலத் திரைப்படங்களில் வைகறையில் துயில் எழும் நங்கை தன் மணவாளனின் கால்களைத் தொட்டு வணங்கிய பிறகு அன்றாடப் பணிகளை மேற்கொள்வதாக வரும் காட்சி இன்றைய தலைமுறையினருக்கு நகைச்சுவைக் காட்சியாகிப் போனது. இத்தகு பழக்க வழக்கங்களை ஊடகங்களும், காலப் பின்னணியும், வாழ்க்கை வேகமும் மாற்றின. இதில் பிழையில்லை.
ஆனால், புது நாகரிகம் என்ற பெயரால் உண்டாகும் பண்பாட்டுச் சரிவுகளை எதில் சேர்ப்பது? ஓர் ஆடவன் பல பெண்களோடு திரிகிறான் என்றால், அவனைத் திருத்துவதே சரியானதாயிருக்குமே அல்லாமல் ஆணும் பெண்ணும் சமம் என்ற முழக்கத்துடன் ஆடவர்கள் பலருடன் ஒரு பெண்ணும் திரிவது அறமாகுமா என்பாரின் வினா அழுத்தமானது. இதில், ஆண், பெண் இருவருக்குமே மிகப் பெரிய பொறுப்புண்டு. முறையாக யாவும் நடந்தால் அஃது இல்லறப் பண்பாடு.
ஒரே இடம், ஒரே நபர், ஒரே செயல்பாடு. ஆனாலும், ஒன்றைச் செய்வதுபோல மற்றொன்றைச் செய்ய இயலாது. குறுக்கே தடுப்பது பண்பாடு என்ற உயரிய தடைச் சுவராகும்.
திருமண மன்றம் போன்ற ஒரு பொது இடத்தில் இருபது வயது இளைஞன் ஒருவன் ஒரு வயதுக் குழந்தையை முத்தமிடலாம். அதே இடத்தில் அதே நபர் பதினாறு வயதுப் பெண்ணிடம் அப்படி நடக்க இயலாது. முன்னது கனிவான அன்பின் பரிமாற்றம், பின்னது காமத்தின் களியாட்டமென்றே கருதப் பெறும்.
ஆணும், பெண்ணும் நான்கு சுவர்களுக்குள் எவ்வளவு அணுக்கமாகவும் இருக்கலாம். பலர் நடுவில் இவ்வாறு இருத்தல் மரபு இல்லை. ஆனால், திரைப்படங்களும், இணையங்களும் புகுத்திய புதுப் போக்குகளின் மயக்கத்தில் இன்று இளைஞர்களும், இளம் பெண்களும் பயணங்களின்போது பேருந்தில், தொடர்வண்டியில் அமர்ந்துள்ள கோலங்கள் எப்படி எனக் கூற வேண்டியதில்லை.
இன்றைய காதல் இணையர்களின் இருப்பு தலைகீழானது. சுற்றியிருப்பவர்கள் தாம் வெட்கப்பட்டுக் கொண்டு வேறு திசைகளில் பார்வையைச் செலுத்துகின்றனர். மேனிக் காதலாக அல்லாமல் மேன்மைக் காதலாக இருக்கும்போதுதான் அது அகப் பண்பாடு.
பழைய காலத்து உடை இன்றில்லை. உணவுப் பழக்கங்களும் அப்படியே. போக்குவரத்து வசதிகள் மாறி விட்டன. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப வீடுகளின் அமைப்பும் பிறவும் வேறாகிவிட்டன.
இவை போன்றதன்று பண்பாடு என்பது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை எல்லாத் திருமண மண்டபங்களிலும் மண்டபத்துக்கு வெளியில்தான் காலணிகளை விட்டிருந்தனர். ஆனால் இப்போதோ, மணமக்களுக்கு வாழ்த்துக் கூறவும், பரிசு கொடுக்கவும் மணமேடைக்கு வரும்போது காலணிகளுடனே வருகின்றனர்.
தீபமேற்றப்பட்டு, அக்கினி வளர்க்கப் பெற்று, சில இடங்களில் இறையுரு வைக்கப்பட்டுள்ள மேடையைப் பலரும் கோயில் போன்றே எண்ணுவர். அம்மேடையைப் புனிதமாகக் கருதுவர்.
ஏனெனில், விபூதி பூசியும், அட்சதை தூவியும் வாழ்த்துமிடம் வழிபாட்டிடம் போன்றது என்ற நினைவு இறுக்கமாயிருந்தது. குறைந்தபட்சம் மேடையிலாவது காலணி அணியாதிருக்கலாமே என்பது மூத்த குடிமக்கள் வழிகாட்டல்.
வயது முதிர்ந்த ஒருவர் பேருந்தில் ஏற முயலும்போது, அவருக்கு உதவ முன்வராமல், "ஏ பெரிசு, பாத்து வாய்யா, விழுந்துடப் போறே' என்கிற ஏளனக் குரல் பெரிய நகரங்களில் இன்று அன்றாட நிகழ்வாகிவிட்டது.
அதே சூழலில், பெரியவரே என்றோ, ஐயா என்றோ அழைத்து, பாத்து மெதுவாக வாங்கய்யா, கவனமா வாங்க என்ற குரல் வருமேயானால் அந்த இடத்தில் மணக்கும் கனிவும், அன்பும், பாசமும், மதிப்பும் இமயத்தை விஞ்சுவதை உய்த்துணரலாம். இதுவே உயர் பண்பாடு.
ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவில் ஒரு நாடகம் நடந்தது. சாலமோன் கதைதான். மேடை நடுவில் சாலமோன். எதிரில் ஒரு பச்சிளங் குழந்தை. இடதுபுறம் இருந்த வந்த நங்கை அந்தக் குழந்தை தன்னுடையது என்கிறாள். வலதுபுறமிருந்து வருபவளும் அந்தக் குழந்தை தன்னுடையது என்பாள்.
உண்மையறிய அந்த மன்னன் வாளையுருவி அந்தக் குழந்தையை வெட்டப் போவதாகக் கூற உண்மையான தாய் பதறிப் போய், அரசே வெட்டாதீர்கள், அவளிடமே குழந்தையைத் தாருங்கள் என்பாள். இஃது உலகறிந்த கதை.
அன்றைய நாடகத்தில் காட்சிகள் மாறின. அரசனின் எதிரே குழந்தை. இருபுறமிருந்தும் வந்த பெண்கள் இருவருமே அந்தக் குழந்தை தங்களுடையதில்லை என்று வாதிடுகின்றனர். காவலர்களை அரசன் நோக்க, குப்பைத் தொட்டியில் அழுதபடி கிடந்தது இந்தக் குழந்தை. அருகினில் இவர்கள் நின்று கொண்டிருந்தனர். மூவரையும் இங்கே கொணர்ந்தோம் என்றனர்.
உண்மையான தாயைக் கண்டறியும் நோக்கில் வேகமாக வாளைத் தூக்குவார் மன்னர், இடதுபுறம் நின்ற பெண், வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக வேண்டும் என்று கூறிச் சிரிப்பாள். வலதுபுறப் பெண்ணோ, அரசே சன்னம் சன்னமாக வேண்டுமானாலும் அறுத்துக் கொள்க என்று கூறிப் புன்னகைப்பாள்.
ஒன்றும் புரியாத அரசர், உள்நுழையும் அமைச்சரிடம் மன்னர், என்ன இது என்பார். அமைச்சர் தலைகவிழ்ந்தபடியே, மன்னியுங்கள் அரசே, தாங்கள் இப்போது இந்தியாவில் இருக்கிறீர்கள் என்று பதில் தருவார். கதை யாருடையது என்பதைவிடக் கருத்துக்கு மதிப்புத் தரவேண்டிய பகுதி இது.
மாற்றங்கள் தேவைதான். ஆனால், மூலத்துவம் மாறக் கூடாது. நீங்கள் கையில் ஏந்திக் கொண்டிருப்பது தங்கத் தட்டாக இருக்கலாம், வெள்ளிப் பேழையாக இருக்கலாம், வைரம் பதித்த கலயமாக இருக்கலாம், அவை முக்கியமில்லை. அவற்றில் பரிமாறப் பெறும் உணவு கெட்டுப் போயிருந்தால் எப்படி உண்ண முடியும்?
வளைந்து நெளிந்துபோன தகரத் தட்டில் கூடத் தரமான உணவை உண்ண முடியும். வெளி நாகரிக நடைமுறைகள் யாவும் பாத்திரக் கலங்கள். பண்பாடுதான் உணவு.
தனக்கும், பிறருக்கும் பயன் தரும் பண்பாடுகளால் விளையக் கூடியவை அழகுக் கோலங்கள். மற்றவையெல்லாம் வெறும் அலங்கோலங்கள்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்,
புதுச்சேரி மையப் பல்கலைக்கழகம்.
முறைமைகள் மாறி விட்டன. குருகுலக் கல்வி முறையில் ஆசான் மட்டும் நடுநாயகமாக அமர்ந்திருக்கவும், சீடர்கள் அவரருகே நின்று கொண்டு அல்லது கீழே தரையில் அமர்ந்து பணிவாகப் பாடம் கேட்பர். இப்போதோ மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருக்க ஆசிரியர் நின்று கொண்டு பாடம் நடத்துவதே நிகழ்முறை.

புதிய வருமான வரி படிவம்: அரசு அறிவிக்கை வெளியீடு

எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி படிவத்துக்கான அறிவிக்கையை அரசிதழில் மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.
மேலும், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான அவகாசமும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு இதற்கு முன்பு 14 பக்க படிவம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தப் படிவத்தில் வெளிநாட்டுப் பயணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை கேட்கப்பட்டிருந்தன.
இதனால், படிவத்தில் தேவையற்ற கேள்விகள் இருப்பதாகவும், அதனை பூர்த்தி செய்வது சிரமமாக இருப்பதாகவும், தனி நபர்கள், தொழிலதிபர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்தப் படிவத்தை நிறுத்தி வைக்குமாறு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டார். அந்தப் படிவங்களுக்குப் பதிலாக, தலா 3 பக்கத்தில் ஐ.டி.ஆர்-2ஏ, ஐ.டி.ஆர்-2 என்ற 2 படிவங்களை மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
அதில், "ஐ.டி.ஆர்- 2ஏ' படிவத்தை தொழில், வர்த்தகம், வெளிநாட்டுச் சொத்துகள் ஆகியவற்றின் மூலம் வருவாய் ஈட்டாத தனி நபர், ஹிந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
"ஐடிஆர்-2' படிவத்தை தொழில், வெளிநாட்டுச் சொத்துகள் ஆகியவற்றின் மூலம் வருவாய் பெறுவோர் தாக்கல் செய்ய வேண்டும் அந்த அதிகாரி கூறினார்.

Government yet to identify land for Karur medical college

PWD has forwarded a Rs. 210-crore proposal

Although the State government has issued an order for setting up a government medical college in Karur in 2016-17 academic year, but it is yet to firm up the site and allocate funds for the institution.

Chief Minister Jayalalithaa had announced the setting up of the college in the State Assembly in August 2012.

Although a Government Order was issued for starting the college and creation of the post of a Special Officer for the medical college, it is said that there was delay in taking steps for starting the college.

Enquiries revealed that a private individual had donated 20 acres of land at Kuppuchipalayam near Vangal on Karur-Vangal Road for setting up the college.

The government has acquired another five acres from him, since the site was five acres short as per the MCI norms. The land is about 10 km from the Government Hospital in Karur.

As per the MCI norms, the distance between the government hospital, if it is used as medical college hospital, and the new campus should not be more than 5 km. Apprehensions were raised whether the government and the MCI would accept the site or not.

Enquiries revealed that the Public Works Department (PWD), which was supposed to take up construction work, has forwarded an estimate for Rs. 210 crore for the construction of medical college in February. It was likely to be revised considering the cost escalation.

Tuesday, June 23, 2015

ஜூலை 25ல் அகில இந்திய மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத்தேர்வு!



புதுடெல்லி: அகில இந்திய மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத்தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடக்கிறது.

அகில இந்திய மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், இந்த தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானதால், இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி, அரியானா மாநில மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், மே மாதம் 5-ம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வு முடிவை வெளியிடவும் தடை விதித்த நீதிபதி, 4 வாரங்களில் மீண்டும் நுழைவுத் தேர்வை நடத்தி, ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் முடிவுகளை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், அகில இந்திய மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. மேலும், மறு தேர்வுக்கு புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது எனவும், ஏற்கனவே விண்ணப்பித்தோருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமும் தகவல் அனுப்பப்படும் எனவும், கூடுதல் விவரங்கள் www.aipmt.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Siddhartha likely to become campus college of NTRUHS


Health varsity has no campus college

The Siddhartha Medical College (SMC) here is likely to be developed as the ‘campus college’ of Dr. NTR University of Health Sciences (NTRUHS) post-bifurcation. NTRUHS which, for the time being has jurisdiction over medical and dental colleges in Telangana also, has no campus college.

The government is therefore giving the idea of converting SMC into campus college of NTRUHS a serious consideration, according to reliable sources.

Situated in about 60 acres near NTRUHS in the city, SMC has been under the administrative control of the Directorate of Medical Education of A.P for the last 15 years and admissions are made under the State quota to 100 MBBS and 58 P.G seats.

It is trying for an additional intake of 50 MBBS seats, for which the Medical Council of India has conducted inspections a few weeks ago.

At this juncture, the proposal for making SMC the campus college of NTRUHS has come up.

According to an official of NTRUHS, the proposal will eventually get the government’s nod as the NTRUHS is not in a position to construct a new college, recruit faculty and provide other facilities partly due to financial constraints.

A new NTRUHS will require at least 10 acres, which is not available under the present circumstances. This is a basic hurdle for it (NTRUHS) to have its campus college.

Given the situation, the government has given the proposal a serious thought so much that Special Chief Secretary (medical and health) of Government of A.P, L.V. Subrahmanyam, had during his recent visit to the city, held deliberations on it with NTRUHS authorities and other officials concerned.

It is pertinent to mention here that NTRUHS is still the apex institution for medical education in both A.P and Telangana as per the NTR University of Health Sciences Act (Telangana Adaptation) Order, 2014. Its newly-formed counterpart Dr. Kaloji Narayana Rao University of Health Sciences is coming up in Warangal.

“The Minister (Kamineni Srinivas) has raised the issue a couple of times but nothing has yet fructified,” said SMC Principal Shashank.

இந்திய செவிலியர்களை விரட்டும் இங்கிலாந்து..dinamalar 23.5.2015



லண்டன்: இங்கிலாந்தின் புதிய குடியேற்ற சட்ட விதிகள் காரணமாக, இந்தியா மற்றும் ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளை சேர்ந்த, 30 ஆயிரம் செவிலியர்கள் வேலையிழந்து, தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.


இங்கிலாந்து அரசின் தேசிய சுகாதார சேவை திட்டத்தின் கீழ், அயல்நாடுகளில் இருந்து ஏராளமானோர், செவிலியர் பணியில் அமர்த்தப்படுகின்றனர். உள்நாட்டில், செவிலியர் பயிற்சி இடங்கள் குறைக்கப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து, செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டை அடுத்து, இந்தியாவில் இருந்து தான், ஆண்டுக்கு, 30 ஆயிரம் செவிலியர்கள், இங்கிலாந்து செல்கின்றனர். இவர்கள், ஆண்டுக்கு சராசரியாக, 21 லட்சம் ரூபாய் முதல், 28 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இந்நிலையில், ஐரோப்பா சாராத நாடுகளில் இருந்து குடியேறுவோரை கட்டுப்படுத்த, இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.


இதற்காக, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறது. அதன்படி, ஆண்டுக்கு குறைந்தபட்சம், 35 லட்சம் ரூபாய் சம்பாதிக்காத குடியேறிகள், ஆறு ஆண்டுகளுக்குப் பின், நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.இத்திட்டம், 2011ம் ஆண்டு முதல், முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட, குறைவாக ஊதியம் பெறும் இந்திய செவிலியர்கள், 2017ல், தாயகம் திரும்ப வேண்டும்.




ஐரோப்பா அல்லாத நாடுகளை சேர்ந்த செவிலியர்களில், 90 சதவீதம் பேர், ஆறு ஆண்டுகளுக்குள், 35 லட்சம் ரூபாய் சம்பாதிக்க இயலாமல் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், புதிய விதிமுறை அமலானால், இங்கிலாந்தில் உள்ள இந்திய செவிலியர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை

தமிழகத்திலும் பி.எட். படிப்புக் காலம் வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆணையை தமிழக அரசு இப்போது பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்சிடிஇ) வெளியிட்டது.
இந்த புதிய வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இது அமலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புக் காலம் நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதில் என்.சி.டி.இ. உறுதியாக இருந்தது.
தொடர் இழுபறி காரணமாக வரும் கல்வியாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டாகவே இருக்குமா அல்லத இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில், வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், ஜூலை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.எட். படிப்புக் காலம் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகளாக உயர்வது உறுதியாகியுள்ளது.
பல்கலைக்கழகம் எச்சரிக்கை: தமிழக அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, என்.சி.டி.இ.-இன் புதிய வழிகாட்டுதல், புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மதுரையில் வருகிற 26-ஆம் தேதியும், திருநெல்வேலியில் ஜூன் 27, கோவையில் ஜூன் 29, சேலத்தில் ஜூலை 1, திருச்சியில் ஜூலை 2, சென்னையில் ஜூலை 3 ஆகிய தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
இதில், பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள அனைத்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி தலைவர், செயலர், முதல்வர் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
கல்லூரிகள் சார்பில் பிரதிநிதிகள் அனுப்பப்படக் கூடாது. அவ்வாறு பங்கேற்கத் தவறும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

NEWS TODAY 22.08.2026