Wednesday, June 24, 2015

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 585 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன: நாளையுடன் கலந்தாய்வு முடிகிறது


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கை பொதுப் பிரி வினருக்கான 4-ம் நாள் கலந் தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு 646 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டன. 599 மாணவர்கள் மட்டுமே கலந்தாய் வில் பங்கேற்றனர்.

கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 125 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 180 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 33 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 338 இடங்கள் நிரப்பப்பட்டன. 261 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்தாய் வில் பங்கேற்று தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். கல்லூரியில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை வழங்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்துள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர். வரும் 25-ம் தேதி (நாளை) வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பொதுப் பிரிவினருக்கான 4-ம் நாள் கலந்தாய்வு முடிவில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 585 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 253 எம்பிபிஎஸ்இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 36 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) 212 எம்பிபிஎஸ் இடங்களும் நிரம்பி விட்டன. அரசு ஸ்டான்லி மருத் துவக் கல்லூரியில் 26 எம்பிபிஎஸ் இடங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 23 இடங்கள் மற்றும் அண்ணாசாலை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 16 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருக்கின்றன.

NURSING COUNCIL OF INDIA RESOLUTIONS DATED 16TH JUNE 2015





கண்ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்!


இன்று - ஜூன் 24: கண்ணதாசன் பிறந்தநாள்

அர்த்தங்களின் சுமையற்ற கண்ணதாசனின் வரிகள் தருவது தித்திப்பும் மயக்கமும்…

அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்னையில் ஒருநாள் காலையில் பெட்டிக்கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். எதிர்ப்புறச் சாலையோரத்தில் மஞ்சள் கொன்றையொன்று தகதகக்கும் மலர்களோடு நின்றுகொண்டிருந்தது. எட்டு மணி வாக்கில் சூடில்லாத வெயிலில் மஞ்சள் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு பாடலின் வரிகள் சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தன: 'வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்'

எத்தனையோ முறை நான் கேட்ட பாடல் அது. அழகான சொற்களைக் கொண்டு நிரப்பப்பட்ட பாடல் அது என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்று அந்த மஞ்சள் கொன்றை அந்தப் பாடலை எனக்குத் திறந்து காட்டியது. அந்த மஞ்சள் கொன்றையின் மலர்கள்தான் வசந்த காலத்தின் வைரமணி நீரலைகள் என்று எனக்குத் தோன்றியது. மனம் எவ்வளவு விசித்திரமானது. தனது நினைவறையில் எல்லாவற்றையும் கொட்டிவைத்து, சம்பந்தமில்லாததுபோல் தோன்றும் இரு விஷயங் களுக்குள்ளும் உறவு இருக்கிறது என்பதை ஏதோ ஒரு தருணத்தில் திடீரென்று உணர்த்திவிடுகிறது. மஞ்சள் கொன்றை அந்தப் பாடலைத் திறக்க, அந்தப் பாடல் எனக்கு வசந்த காலத்தைத் திறந்தது. நிழற்சாலை ஒன்றின் நடைபாதையில் பரவசத்துடன் நடக்க ஆரம்பித்தேன். கொய்யா, மாம்பழம், நாவற்பழம், சப்போட்டா, சீத்தாப்பழம் என்று வசந்தத்தின் வெவ் வேறு வண்ணங்கள் அந்த நடைபாதையில் போகும் வழியெல்லாம் தள்ளுவண்டிகளில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன. வசந்தம் இன்னும் விரிந்து கொண்டே போனது. அன்று, வசந்தத்துக்கு என் கண்களைத் திறக்கச் செய்தார் கண்ணதாசன்.

காதுகளின் கவிஞன்

கண்ணதாசன் பாடல்களில் இசையையும் தருணங்களையும் அகற்றிவிட்டு வெறும் வரிகளாக வாசிக்கும் விமர்சகர்களுக்குப் பலமுறை அவரது வரிகள் ஏமாற்றம் தரலாம். ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. கண்ணதாசன் கண்களின் கவிஞன் அல்ல; செவியின் கவிஞன். கவிதைகள் காலம்காலமாகச் செவிக்கு உரியவையாகத்தான் இருந்திருக்கின்றன. செவிநுகர் கனிகள் என்று கம்பன் சொல்லியது கவிதைகளுக்குத்தான் முற்றிலும் பொருந்தும். நீரில் நீலம் பிரியும் மைத்துளி போல செவியில் விழும் சொற்கள் மனதுக்குள் விரியும். எழுத்து, அச்சு என்பவையெல்லாம் அந்தச் சொற்களின் ஆவணக்காப்பகங்கள் போன்றுதான்.

தற்போது கவிதைகள் தமக்குரிய இசைத் தன்மையை விட்டுப் பார்வையை நோக்கித் திரும்பி விட்டன. கவிதைகள் காட்சிகளையே பெரிதும் தற்போது உருவாக்குகின்றன. கண்ணதாசன் அந்தக் காலத்துப் பாணர்களின் தொடர்ச்சி. அவரது பாடல்களைப் படிப்பதைக் காட்டிலும் இசையோடு கேட்கும்போது ஏற்படும் பரவசம் விளக்க முடியாதது. அது இசையால் மட்டுமே வருவதல்ல. முதற்காரணம், கண்ணதாசனின் வரிகள்தான். எடுத்துக்காட்டாக, 'போலீஸ்காரன் மகள்' என்ற திரைப்படத்தில் வரும் 'இந்த மன்றத்தில் ஓடிவரும்…' பாடலைப் பார்க்கலாம். அழகான மெட்டு, பி.பி. ஸ்ரீநிவாஸ், ஜானகி இருவரின் மதுரக் குரல்கள். இப்படி இருக்கும்போது இந்த வரி 'இந்தச் சபைதனில் ஓடிவரும்…' என்றோ, 'இந்தத் தோட்டத்தில் ஓடிவரும்…' என்றோ இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! 'மன்றம்' என்ற எளிய சொல்லில் இசை வந்து விழும்போது மாயாஜாலம் நிகழ்கிறது. மேலும், விசித்திரமான சூழலைக் கொண்டது அந்தப் பாடல். ஒரு தங்கை தன் காதலனை நினைத்து இப்படிப் பாடுகிறாள்:

நடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கிறாள்

அவள் விடிந்த பின் துயில்கின்றாள்

என் வேதனை கூறாயோ?

ஒருத்தி தன் காதல் வேதனையைச் சொல்லும் இந்தப் பாடலின் இடையே அவளுடைய அண்ணன் வேறு நுழைந்துகொள்கிறான். தென்றலிடம் தன் தங்கைக்காக அவனும் தூதுவிடுகின்றான். இந்த அண்ணனையே மறந்துபோகும் அளவுக்கு அவள் அளப்பரிய காதல் கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய காதலின் ஆழத்தைச் சொல்லும் அதே வேளையில், தனது தங்கைக்கு இந்த அண்ணனின் நினைவு இல்லாமல் போய்விட்டதே என்பதையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறான். காதல் பாடலில் அண்ணன் வந்தாலே ஓர் அபஸ்வரம்போல் ஆகிவிடும், இதில் அவன் தனது பொறாமை உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறானே! ஆனால், இசகுபிசகான இந்தத் தருணத்தையே பாடலுக்கு உயிரூட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இப்படி எழுதியிருக்கிறார் கண்ணதாசன்:

தன் கண்ணனைத் தேடுகிறாள்

மனக் காதலைக் கூறுகிறாள்

இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று

அதனையும் கூறாயோ...

தேன்பனி!

சொற்கள் இசைக்கு உயிர்கொடுக்க வேண்டுமே யொழிய, சொற்களுக்கு இசை உயிர்கொடுக்கக் கூடாது. அதனால்தான் 'மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்றான் பாரதி. கண்ண தாசனுடையதோ பனி போன்ற சொல்லின்பம். சொல்லின்பம் என்பது சொல்லில் அதிக அர்த்தத்தை ஏற்றும்போது வருவதல்ல. சொற்களின் சுமையை நீக்கும்போது இனிமை தானாகவே வந்துசேரும். லெப்பர்டி என்ற இத்தாலியக் கவிஞனின் வரிகளைப் பற்றி இதாலோ கால்வினோ இப்படிச் சொல்கிறார்: 'அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத் தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.' இது சில சமயங்களில் கண்ணதாசனுக்கும் பொருந்தும்.

பனி என்றால் தேன் கலந்த பனி! அப்படித்தான் சொல்ல வேண்டும் கண்ணதாசனின் வரிகளை. 'பனிபோல் குளிர்ந்தது கனிபோல் இனித்ததம்மா' என்ற வரிகளை வேறு எப்படிச் சொல்வது? இந்த வரிகளின் அர்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சொற்களை மெலிதாக முணுமுணுத்துப் பாருங்கள். எவ்வளவு தண்மை! எவ்வளவு தித்திப்பு! இதேபோல் சொல்லின்பம் தரும் ஒரு சில உதாரணங்களையும் பாருங்கள்:

'மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு'

(பால்வண்ணம் பருவம் கண்டு - பாசம்)

'பாலாடை போன்ற முகம் மாறியதேனோ

பனிபோல நாணம் அதை மூடியதேனோ'

(பாவாடை தாவணியில் - நிச்சயத் தாம்பூலம்) 'முதிராத நெல்லாட ஆடஆட

முளைக்காத சொல்லாட ஆடஆட'

(கட்டோடு குழலாட- பெரிய இடத்துப் பெண்)

'இளைய கன்னிகை மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவாளாம்'

(நாளாம் நாளாம்… - காதலிக்க நேரமில்லை)

தேன்மூடிய சிருங்காரம்

காதல், காம உணர்வுகளைப் பூடகமாகவும் இனிக்கஇனிக்கவும் சொன்னவர் கண்ணதாசன். ஒரு பெண் தன்னுடைய காம உணர்வுகளைச் சொல்வதைச் சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், 'அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்' என்ற வரிகள் கண்ணதாசன் சொற்களில் சுசீலாவின் குரலில் வந்து விழும்போது ஒழுக்கவாதிகளுக்கும் மயக்கம் வருமே, அதை என்னவென்று சொல்ல! ஆரம்பத்தில் வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன வளுக்கு, அவன் 'ஒன்று' தந்த பிறகு உன்மத்தம் ஏறிக்கொள்கிறது. பிறகு, போதாது இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறாள். உண்மையில் அவள் வேண்டாம் என்று சொன்னதெல்லாம் கட்டுப் பாடுகளுக்குப் பயந்தல்ல; தனக்கு உன்மத்தம் ஏறி விடும் என்று பயந்துதான் என்பது பிறகு தெரிகிறது:

'தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்

ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்

அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்

ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள், போதாதென்றாள்...

அர்த்தத்துக்கு அடுத்த இடம்தான்

கண்ணதாசன் இப்படியெல்லாம் மயக்கம் தரும்போது அர்த்தத்தை யார்தான் தேடிக்கொண் டிருப்பார்கள். இப்படிச் சொல்வது கண்ணதாசன் அர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவரில்லை என்பது அர்த்தம் அல்ல. அவரது தத்துவப் பாடல் களுக்குள் புகுந்தால் அவற்றிலிருந்தும் மீள முடியாது. சொற்களிலே கவிஞன் கிறுகிறுக்க வைக்கும் போது அங்கே அர்த்தம் நமக்கு இரண்டாம் பட்சமாகப் போய்விடும். 'உன்னை நான் கொல்லவா?' என்பதை கண்ணதாசன் தனக்கேயுரிய மொழியில் கேட்டால் 'கொல்லுங்கள்' என்றுதானே நமக்குச் சொல்லத் தோன்றும்.

கண்ணதாசனுக்குத் திரைப்படம், இசை, 'சிச்சுவேஷன்' எல்லாம் தனது உணர்வுகளையும், சோகங்களையும் கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பு. கண்ணதாசன் தனது இறுதிப் பாடலில் இப்படி எழுதியிருப்பார்:

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே!

உண்மையில், இது நம்மை நோக்கி அவர் வைக்கும் வேண்டுகோள். எப்படி மறக்க முடியும் கண்ணதாசன், உங்களை!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

| 'தி இந்து' நாளிதழ் நடுப்பக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான கட்டுரை |

37 snakes captured from residential area in Madurai city

MADURAI: As many as 37 snakes were captured in a span of two hours from a residential area in the heart of Madurai city on Tuesday.

It all started when the residents saw two snakes at a parking lot at the North Masi Street-West Masi Street junction on Tuesday morning. The panicked residents alerted snake-catchers. And three snake-catchers rushed to the spot.

As the residents stood in disbelief, the snake-catchers started capturing rat snakes -- one snake after another - from small holes on the parking lot and from cracks on a dilapidated building, which was once a movie theatre.

Each snake had an average length of six feet.

They went on capturing the snakes with their hands, and whenever they exhibited the snakes holding them in their hands, the residents stepped back in fear.

In two hours, 37 snakes were in their sacks!

"It's hard to believe that a large number of snakes lived here," said R Divya, a resident.

The snake-catchers demanded Rs 250 for each snake they caught. The residents had no issue in paying whatever they demanded. But what they were concerned about was the slithering realization that two snakes had escaped after being caught! The residents feared that the snakes would come back and bite them.

However, snake experts allayed their fears saying that rat snakes were harmless.

AIPMT re-test: Medical aspirants in TN confused over admission options

CHENNAI: With CBSE announcing re-exam of All India Pre-Medical Test (AIPMT) on July 25, medical aspirants in Tamil Nadu are confused over their admission options. While the re-test could be a blessing for many who could not do well in their first attempt, others are worried.

More than six lakh AIPMT candidates have registered to compete for 3,000-odd seats across the country. Many have applied for engineering seats as a fallback option. AIPMT candidate Jagani Vashan says "I did well in the first attempt, and was hoping to apply to medical colleges, but since it is a competitive test, I need to keep other options open. Engineering colleges are demanding 1.5 lakh for the first semester and we will lose the money if we have to withdraw the seat later."

Many students were worried that medical colleges elsewhere start admission by August, and they may lose out academically as they will have to wait for their results originally scheduled for June 5. Ashish Pratik, another candidate, said he was hoping for the exam would be held in June. "It becomes a long break for us and it's a little hard to motivate oneself to prepare a second time," he said.

Students as well as academicians felt that it was tough on medical aspirants in Tamil Nadu with no other entrance options like CET or Comed-K. This year's Class 12 pass-outs in TN are already challenged by the previous year's applicants who now have an advantage because of easier exams last year. The issue is in court. Around 15% of medical seats in the state are reserved for AIPMT candidates.

Coaching experts feel positivity is the need of the hour for AIPMT candidates in light of the re-exam. "Any re-exam is a strain, but if this is not carried out, then there would be disparity at the entrance level. Students should not worry about the paper pattern, and give it their best shot. We too are concerned that students should not lose out academically due to delay in admission," said Akash Educational Services Chennai head Jean John.

Plight of nursing students remains neglected


Students of the Nursing College under Belagavi Institute of Medical Sciences, on Monday met the Small Scale Industries and District in-charge Minister Satish L. Jarkiholi and urged him to improve conditions in the college at the earliest.

The students, pursuing B.Sc. Nursing programme, pointed out the lack of teaching staff which led to difficulties in studying without teachers. There are 187 students pursing nursing programme but only four teachers are available at the college. Considering the students’ strength, there should be atleast 24 teachers as per the rules of Rajiv Gandhi University of Health Sciences and Nursing Council of India.

Despite problems being brought to the notice of the BIMS authorities, there has been no positive response. Added to the shortage of teachers, the college lacks basic amenities like absence of drinking water, library, toilets and other necessary facilities since its establishment in 2011, students said.

Mr. Jarkiholi assured the students to look into the matter immediately and try to resolve the problems and improve facilities.

காணாமல் போகும் கிராமங்கள்



நாளுக்கு நாள் வீங்கிப் பெரு(க்)கும் நகரங்களின் தாக்கங்கள் சூழ்ந்து சூறையாடியவற்றுள் கிராமங்கள் தலையானவை.
இந்தியாவின் ஆன்மா எனக் கருதத்தக்க கிராமங்களைத் திரைக்காட்சிகளில் மட்டும்தான் திரும்பக் காண முடியும் என்கிற அளவுக்கு உள்ளீடழிந்த பொக்கைகளாகக் கிராமங்கள் நிற்கின்றன.

வேளாண் பணிகளுக்காக வேண்டி, ஊர் ஓரத்துச் செய்(வயல்)களை ஒட்டியிருந்த ஒன்றிரண்டு களத்து வீடுகளை, குறுங்காடுகளை பக்கத்தில் உள்ள குறுநகர்கள், நகர், நகர் என நகர்த்தி விரிந்ததன் காரணமாய், தனித்தனி நகர்களாகிவிட்டன.
வேம்போ, புளியோ அடையாளமாக ஒற்றை நிறுத்தம் கொண்டிருந்த ஊருக்கு இப்போது குறைந்தது ஆறேழு நிறுத்தங்கள். ஆனால், அந்த மரங்களைத்தான் காணோம்.
கணக்கு வைத்துப் பேருந்துகள் அடுத்தடுத்து வந்துபோய்க் கொண்டிருந்தாலும் வாடகை கார்கள் வரத்தும் அதிகம்.
பெருநகரங்களில் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வந்திறங்கும் முன்பே, ஆங்கிலப் பள்ளிகளின் வாகனங்கள் வந்து பிள்ளைகளை வாரிச் சுருட்டிக் கொண்டுபோய் விடுகின்றன.
நிறுத்தந்தோறும் நான்கைந்து தேநீர்க் கடைகள். தொடக்கத்தில் அதிர்ஷ்டத்தை ஊருக்குள் கொண்டு வந்து சேர்த்த லாட்டரி விற்பனையகங்கள், அவ் விற்பனை தடை செய்யப்பட்டபின், கூண்டுகள் கட்டித் தொலைத் தொடர்பு மையங்களாகின. அவையும் காலாவதியான கவலையில் தவிக்காமல், ரீசார்ஜ் செய்து பிழைக்கின்றன.

ஒருகாலத்தில் ஐம்பது ரூபாய்க்கே சில்லறையின்றி அல்லாடிய அவ்விடத்தில் ஆயிரம் ரூபாய்த் தாள்கள் இப்போது தாராளமாய்ப் புழங்குகின்றன. நீக்கமற எல்லார் கரங்களிலும் செல்லிடப்பேசிகள்.
ஆறெனப் பரந்து, அளைந்து விளையாடப் புழுதி தந்த வீதிகள் சிமென்ட் சாலைகளாய் விறைத்துக் கிடக்கின்றன விளையாடப் பிள்ளைகளின்றி வெறிச்சோடி. திண்ணைகள் விழுங்கி வீடுகள் பருக்க, தெருக்களும் குறுகிச் சந்துகளாகியிருக்கின்றன.

மண்டியிட்டுப் படுத்திருக்கும் கன்றையோ, ஆட்டையோ கட்டிய இடத்தில் இரு சக்கர வாகனங்கள். மாட்டு வண்டியும் கூட்டு வண்டியும் நின்ற கூடங்கள், கார் ஷெட்டுகள், அடைகாக்கும் கோழிகட்குப் போடப்பட்ட கோழிக்கிடப்பு இடம்தான் கான்வென்ட் பிள்ளைகளின் ஷூ வைக்கும் இடம்.

தெருக்களில் இருந்த குழாயடிகளின் சுவடுகள் கூட இல்லை. குழாயடிச் சண்டைக் குரல்கள், வீட்டின் உள்ளோடும் "நான் ஸ்டாப்' கொண்டாட்டங்களில். ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாள்களில் தன் ஊற்றுப்பெருக்கால் ஊரார்க்கு நீர்வார்த்த ஊத்துகள் தூர்ந்து தலைமுறை கடந்தன.

வான் மழையைத் தேக்கி வைத்து, தனித்த சுவைகளுடன் தண்ணீர் கொடுத்த ஊருணிகள் வறண்டு கிடக்க, வேன்களில் வந்திறக்கும் கேன்களை வாங்கி வைத்துத் தாகம் தணிகிறார்கள் மக்கள். ஊருக்குப் பொதுவான கிணறுகளும் மரணமெய்திவிட்டன. சில இடங்களில், அவையே ஊர்ப் பொதுக் குப்பைக் குழிகள்.
பெரும்பாலான கண்மாய்ப் புறம்போக்குகளில் அரசு அலுவலகக் கட்டடங்கள். குளங்களும் குறுகி, குழிந்த வயிற்றுக் குண்டோதரன்களாய் வானம் பார்த்து மல்லாந்து கிடக்கின்றன.
ஒருகாலத்தில் வீடுகளுக்கு விலாசங்களாய்ச் சொல்லப்பட்ட விதவிதமான மரங்களில் ஒன்றைக்கூடக் காணோம். புழக்கமில்லாத இடங்களில் தழைத்தெழுகின்றன, இளைதாகக் கொல்லாது விடப்பட்ட முள்மரங்கள். மற்றாங்கே பசும்புல் காண்பதும் அரிது.

கொடுமை பொறுக்காத உள்ளங்களில் இருந்து வெளிப்படும் கிராமியச் சாப மொழிகளுள் முக்கியமானவை பொட்டலாய்ப் போக, நாசமாய்ப் போக. அவையெல்லாம் கூடி விளைந்து வருகின்றன வயல்களில், விற்பனைக்கு வீட்டுமனைகளாக.
பிழைப்புத் தேடி வெளியிடங்களுக்குப் போன பிள்ளைகளின் வருமானத்தில் கொஞ்சமாய்த் தம்மையிருத்திக் கொண்டிருக்கும் கிராமங்களில் பெரிதும் இல்லவேயில்லை அவற்றுக்கான தண்மை.

வாங்க, வாங்க எங்கப் பனையில மு(நு)ங்கு வெட்டியிருக்கோம் என்று அக்கம் பக்கத்தாரையெல்லாம் கூவியழைத்துக் காசு வாங்காமல் சீவிக் கொடுத்த நுங்கின் பனிநீர்போல் பாசமிகு தூய நெஞ்சுடையோர் பேசவும் ஆளற்றுச் சுருங்கிக் கிடக்கிறார்கள்.
ஊர்ப் பொது மன்றுகளில் இருந்துபேச இருப்போர் குறைவு.
காய்ந்ததுபோகக் காய்க்கும் தாவர வர்க்கத்து நுங்கோ, இளநீரோ, தேங்காயோ, காய்கறியோ, கீரையோ, யாதாயினும் உள்ளூரில் விளைந்தாலும், வெளியூர்ச் சந்தைக்குப் போய்த்தான் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.

ஆனால், வெளிநாட்டு மென்பானங்கள் அனைத்தும் குளிரூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்களில் வைத்திருந்து உள்ளூர்களிலேயே விற்கப்படுகின்றன.

உற்பத்தி மூலங்கள்தான் ஒடுங்கி வருகின்றன. காரணமான பொதுப் பகை யாதென உணராமல் தமக்குள்ளேயே பகைத்துக் கொண்டும் அடித்துக் கொண்டும் வீழ்கிற மக்களுக்கு வேண்டிய வாழ்வியல் ஞானம் என்று வரும் என்று ஊர்க்காவல் தெய்வங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

உள்ளூரில் விளையும் நெல்லியும், சீதாவும், வாழையும், மாவும் அருகி வருகின்றன. ஆனால், ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள்களை, திராட்சைகளை ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் நிரப்பி வந்து கூவி விற்கிறார்கள்.

வாங்கக் குடம் நிறைத்த வள்ளற் பெரும் பசுக்கள் இப்போது இல்லை. பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால் தரும் பக்குவம் மறந்து பல காலமாயிற்று. தீவனம் விழுங்கி, பால் கொடுக்கும் உயிருள்ள இயந்திரமாகிப் போயின இப்போதிருக்கும் கறவைகள்.
பசுவோ, எருமையோ, ஊருக்குச் சில இருந்தாலும், பாலுக்குப் பக்கத்துள்ள நகரங்களுக்குத்தான் போக வேண்டியிருக்கிறது. பச்சைப் பிள்ளைக்கு என்றாலும், பாக்கெட்தான் பால் தருகிறது. உழவு மாடுகள் இல்லாத ஊர்களிலும் பெருமைக்கு வைத்திருந்த காளைகளை விற்க வைத்துவிட்டது ஜல்லிக்கட்டுத் தடைச் சட்டம்.

வீட்டின் புறத்தே இப்போது துவைக்கிற கல் இல்லை, புழக்கடைக்கேணி தூர்த்த இடத்தில்தான் போர் (ஆழ்துளைக்குழாய்ப் பதிப்பு).

பிழிந்த துணிகளை நிழலிலும், வெயிலிலும் உலர்த்த ஏதுவாய்த் தன் வீட்டையும் பக்கத்து வீட்டையும் இணைத்துக் கட்டிய கொடி(க்கயிறு)களைக் காணோம். அவற்றுக்கான இடத்தை, கேபிள் தொலைக்காட்சி ஒயர்கள் கைப்பற்றியிருக்கின்றன. இணைப்பு (connection) எனச் சொல்லப்பட்டாலும் வீட்டொடு வீட்டை இணைப்பதற்குப் பதிலாய், தனித்தனித் தீவுகளாக்கியிருக்கின்றன அவை.

அம்மியும், குழவியும் ஆட்டுக் கல்லும், நெல்லின் உமி நீக்கும் கல் உரலும், மாவாக்கும் மர உரலும், திரிகைக் கல்லும் கண்படவேயில்லை. பருவத்துக்கேற்ப உருவாகும் பனை, தென்னை ஓலை விசிறிகளையே பலர் கண்டிராதபோது, வெட்டி வேர் விசிறிகளை யாரே அறிவார்?

அவ்விசிறிகளின் மீது நன்னாரி வேர் ஊறும் பானை நீரைச் சன்னமாய்த் தெளித்து விசிற வரும் கோடைக்காலத்துக் குளிர்காற்றைப் போலச் செய்யும் ஏர்கூலர்களோடு, ஏ.சி.க்களும் பொருத்தப்பட்ட மாளிகைகள் வளாóகின்றன. ஊரே ஒருகாலத்தில் ஏ.சி. போட்டதுபோல் இருந்தது என்றால் யார்தான் நம்புவார்?
மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், மின்விசிறி, மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து மின் சாதனங்களும் நிலைகொண்ட ஊர்களில் மின்சாரம்தான் ஒழிந்துபோய்விடுகிறது.
புண்ணியவான்கள் நட்ட புங்க மரத்தையும், புளியொடு வேம்பையும் வேரொடு தோண்டி விட்டபின், தானே முளைக்க எச்சமிடும் பறவைகளும் இப்போது வருவதில்லை.
முட்டையிடவும், அடைகாத்துக் குஞ்சு பொரிக்கவும் கோழிகளுக்காக வைத்திருந்த பஞ்சாரங்களும், நீரளவு குன்றிச் சேறு மிகுந்த காலங்களில், அழிகண்மாய் மீன் பிடிக்க வைத்திருந்த பறிகளும், கண்மாய்க்குள் நிழல் கொடுத்து நீராதாரம் கீழ்போய்விடாமல் காத்த கருவேல மரங்களில் காய்த்த காய்களைக் கால்நடைகளுக்கு உணவாக அலப்பி விடுகிற அலக்கைகளும், நெல்லோ, கம்போ, கேழ்வரகோ, பருவத்துக்குத் தக்கவாறு நிரம்பித் திமிர்ந்த குதிர்களும் கொள்ளை போனதுபோல் இல்லாது போயினவே.

உற்பத்திக்கான வாய்ப்புகள் மிகுதியும் சுருங்கி, அடையாளமாய் அக்கம்பக்கத்திருக்கும் மலைகளையும் மண்மேடுகளையும் வெட்டி, விளைநிலங்களையும் கூறு போட்டு விற்றபின் எப்படியிருக்கும் கிராமங்கள்?

வேராதாரங்களையும், நீராதாரங்களையும் சூறையாடிய இடங்களை ஊர்கள் என்று எப்படிச் சொல்வது?

பொருள் தேடிப் புலம் பெயர்ந்த கிராமத்து மக்களுக்கு இனிப் பெயரளவில்தான் ஊர்கள்.

காணாமல்கூட அல்ல களவுபோய்க் கொண்டிருக்கும் கிராமங்களைக் காக்கவும், முன்போல் ஆக்கவும் - தன்னிறைவு பெற்ற முன்னணிக் கிராம வளர்ச்சிக்கு, குன்றக்குடி அடிகளார் வகுத்துக் கொடுத்த குன்றக்குடித் திட்டமும், ஜே.ஸி. குமரப்பா போன்ற மேதைகளின் செயலாக்க வரைவுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டால்தான் நல்லது.

சுதேசிப் பொருளாதாரம் குறித்துப் பேசிப் பயனில்லை. செயல் வடிவாக்கமே தாமதமின்றிச் செய்ய வேண்டிய பெருங்கடமை.
பணத்தாள்களில் படமாகும் காந்தி, பண்பாட்டுக் கூறுகளோடு கிராமங்கள் மீட்சியுற நடமாடுபவராக வந்தால்தான் நலவாழ்வு, இல்லையெனில் யாவர்க்கும் வீழ்வே!

NEWS TODAY 22.08.2026