Thursday, June 25, 2015

அனுமதி பெற தவறிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்


உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியைப் பெற தமிழகத்தைச் சேர்ந்த 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டும் தவறிவிட்டன.

கடந்த ஆண்டு 13 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற இந்திய மருத்துவக் கழகம் அனுமதி மறுத்தது.

இந்த நிலையில், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி, திருச்சி, அன்னப்பூர்ணா மருத்துவக் கல்லூரி சேலம், மாதா மருத்துவக் கல்லூரி தண்டலம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெடிக்கல் சயின்ஸ் அன்ட் ரிசர்ச், ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, சென்னை ஆகிய 5 கல்லூரிகளும் இந்த ஆண்டும் அனுமதி பெற தவறிவிட்டன.

மீதமுள்ள 8 கல்லூரிகளும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி பெற்றுள்ளன.

தமிழகத்தில் ஹெல்மெட் கடும் தட்டுப்பாடு: ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்றவை விலை ரூ.550 முதல் ரூ.2,700



தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் உத்தரவு அமலுக்கு வர இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், ஹெல்மெட் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஹெல்மெட் தட்டுப்பாடு ஏற்பட்டு ள்ளது.

கட்டாய சட்டம்

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று 1985-ம் ஆண்டு தமிழகஅரசு உத்தரவிட்டது. அதன்பின், 1988-ல் வெளியான மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திலும் ஹெல்மெட் கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இதை அமல்படுத்து வதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டவில்லை. அவ்வ ப்போது நீதிமன்றங்கள் தலை யிட்டு, ஹெல்மெட் கட்டாயம் என உத்தரவுகளை பிறப்பிக்கும். ஒன்றிரண்டு மாதங்கள் மட்டும் வாகன ஓட்டிகளை போலீஸார் எச்சரிப்பதும், அபராதம் வசூலிப் பதும் நடக்கும். அதன்பிறகு மறந்துவிடுவர்.

இந்நிலையில், விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

தமிழக அரசு உத்தரவு

அதன் அடிப்படையில் தமிழகத் தில் ஜூலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல் மெட் அணிய வேண்டும். வாகனத்தை ஓட்டுபவர் மட்டு மின்றி, பயணிப்பவரும் ஹெல் மெட் அணிய வேண்டும். தவறும்பட்சத்தில் வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். ஐஎஸ்ஐ சான்று பெற்ற புதிய ஹெல்மெட் மற்றும் அதை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காட்டினால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திருப்பித் தரப்படும் என, தமிழக அரசு கடந்த 17-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணி வதன் அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விற்பனை அதிகரிப்பு

முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அதில் பயணிப்போரும் ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில தினங்களாக ஹெல்மெட் விற்பனை கடுமையாக அதிகரித்துள்ளது.

கடுமையான தட்டுப்பாடு

ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் அதிகமான எண்ணிக்கையில் ஹெல்மெட் தேவைப்படுவதால் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை நிறுவன உரிமையாளர் மாலைசூடி பி.எம். பால்ராஜ் கூறும்போது, ‘தமிழகம் முழுவதும் சுமார் 3 கோடி ஹெல்மேட் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி, மும்பை, டெராடூன் உள்ளிட்ட இடங்களில் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற 6 முன்னணி ஹெல்மெட் தயாரி ப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தினமும் 250 ஹெல்மெட் அளவுக்கு தான் தயாராகின்றன. இந்நிறுவனங் களின் குடோன்களில் கையிருப்பில் இருந்த அனைத்து ஹெல்மெட்டுகளும் காலியாகிவிட்டன. இனி புதிதாக தயாரித்து தான் வரவேண்டியுள்ளது.

அவகாசம் வேண்டும்

எங்கள் கடையில் தினமும் சரசாரியாக 25 ஹெல்மெட் விற்பனையாகும். தமிழக அரசின் உத்தரவுக்கு பின் தினமும் 500 ஹெல்மெட் வரை விற்பனையாகின்றன. ஆனால், தயாரிப்பு நிறுவனங்கள் போதுமான ஹெல்மெட் சப்ளை செய்வதில்லை.

ஒரு கண்டெய்னர் ஹெல்மெட் கேட்டு முன்பணம் செலுத்தியிருந்தேன். ஒரு கண்டெய்னரில் 2,800 ஹெல்மெட் வரும். ஆனால், தயாரிப்பு நிறுவனமோ வெறும் 360 ஹெல்மெட்டை மட்டுமே அனுப்பியுள்ளது.

எனவே, ஜூலை 1-ம் தேதிக்குள் அனைவருக்கும் ஹெல்மெட் கிடைத்துவிடுமா என்பது சந்தேகம் தான். கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்த ஜூலை 15-ம் தேதி வரை அவகாசம் கொடுத்தால் வசதியாக இருக்கும்.

விலை உயர வாய்ப்பு

ஹெல்மெட்டை பொறுத்தவரை ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்றவை குறைந்தபட்சம் ரூ.550 முதல் அதிகபட்சம் ரூ.2700 வரை கிடைக்கின்றன. மக்கள் தரமான ஹெல்மெட்டுகளையே விரும்பி கேட்கின்றனர்’ என்றார் அவர்.

ஹெல்மெட் வாங்கிய 'பில்' சமர்ப்பிக்க வேண்டுமா?- வாகன ஓட்டிகள் எதிர்ப்பு



ஹெல்மெட் அணியாமல் பிடிபடும் வாகன ஓட்டிகள், பின்னர், ஹெல்மெட் வாங்கிய ‘பில்’ சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் திரும்பத் தரப்படும் என்ற உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் வருகிற 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் பிடிபடும் நபர்களிடம் ஓட்டுநர் உரிமம் உட்பட அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும். பின்னர் அந்த நபர் புது ஹெல்மெட் வாங்கி, அதற்கான பில்லை சமர்ப்பித்த பின்னரே ஆவணங்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கூறுகையில், "ஹெல்மெட் போட வேண்டியது அவசியமானதுதான். ஆனால் அதற்கான பில்லையும் வைத்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஹெல்மெட் வாங்கி 3 ஆண்டுகள் ஆகிறது. அதற்கான பில்லை நான் இன்னுமா வைத்திருக்க முடியும். ஒரு அவசர சூழ்நிலையில் நான் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி பிடிபட்டால், என்னிடம் ஏற்கெனவே ஹெல்மெட் இருக்கும் நிலையில், நான் எப்படி புது ஹெல்மெட் வாங்க முடியும். மோசமான சாலைகளால் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் தினமும் பள்ளி செல்லும் எனது குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்கிறேன். அவர்களுக்கும் ஹெல்மெட் அணிய வேண்டுமா? இது போன்ற சிக்கலான சில கேள்விகள் பல உள்ளன. இவற்றையும் ஆராய்ந்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்து போலீஸார் வைத்ததே சட்டமாகி விடும்" என்றனர்.

இது குறித்து போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டபோது, "ஹெல்மெட் அணியாதவர்களின் ஆவணங்களை பறிமுதல் செய்வது இயலாத காரியம். பெரும்பாலான வர்கள் ஆர்.சி.புக், இன்ஸ்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றின் நகல்களை மட்டுமே வைத்திருப் பார்கள். ஒரிஜினல் இருக்காது. நகல்களை பறிமுதல் செய்து என்ன பயன்? பள்ளி செல்லும் குழந்தை களுக்கும் ஹெல்மெட் அணிவித்து அழைத்து செல்வது நல்லது.

பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும்போது அவர்களுக்கு ஏன் ஹெல்மெட் அணிவிக்கவில்லை என்று இதுவரை அபராதம் விதித்த தில்லை. ஆனால் வாகனத்தை ஓட்டுபவர் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்" என்றனர்.

மனம் நினைப்பதை அருளும் குரு பகவான்



குருப்பெயர்ச்சி ஜூலை 5

நவக்கிரங்களில் ஒருவராக இருந்து ஆட்சி செய்பவர் குரு பகவான். குருப் பெயர்ச்சி என்பது இவரின் சஞ்சாரத்தையே குறிக்கும். ஈசனே நவக்கிரகங்களின் ஆதி நாயகன் என்பதால், சிவ குருவாய் இருக்கும் தட்சிணாமூர்த்தி இக்குருவின் குரு. குருப் பெயர்ச்சியையொட்டி, இந்த இரு குருவையும் சிறப்புப் பூஜை செய்து வணங்கலாம்.

குருவைப் பொறுத்தமட்டில், பெயர்ச்சி ஆவதற்கு முன்னரே பெயர்ச்சி பலன்களைக் காட்டிவிடக் கூடியவர். அதனால் குருப் பெயர்ச்சிக்கு முன்னரும், அன்றும், பின்னரும் வழிபடுவதால் கேட்ட வரம் பெற்று மனமகிழ்ச்சியை அடையலாம்.

குரு சன்னிதியில் நின்று கோரிக்கைகளை மனதார நினைத்தாலே போதும், அவற்றைக் காலாகாலத்தில் நிறைவேற்றி நலம் பல பெற வைப்பார் என்பது ஐதீகம். இத்தகைய குரு தனிச் சன்னிதி கொண்டு அருள்புரிவது தேவாரத் திருப்பெயரான திருத்தென்குடித்திட்டை எனும் திட்டையில்.

குருவுக்குத் தனி சன்னிதி

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்றழைக்கப்படும் குரு பகவான் திட்டையில் தனி சன்னிதி கொண்டு காட்சி அளிக்கிறார். இதில் விசேஷம் என்னவென்றால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையே இச்சன்னிதி அமைந்துள்ளது அபூர்வம்.

புத்திகாரகர், தனகாரகர் என்று அழைக்கப்படும் குரு, தங்கத்துக்கும், தனத்துக்கும் அதிபதி. இவர் பக்தர்களின் தோஷங்களை நீக்கி உலகியல் இன்பங்களை வழங்குபவர் என்பது ஐதீகம்.

மூலவர், வசிஷ்ட முனிவர் தவம் புரிந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். பிரளய காலத்திலும் மூழ்காமல் இந்த இடம் இருந்ததால் திட்டு அதாவது மேடு எனப் பொருள்படும் வகையில் திட்டை எனப் பெயர் பெற்றது இந்தத் தலம். இறைவி உலகநாயகி என்னும் மங்களாம்பிகை. பெண்கள் துயர் தீர்க்க முதலில் வரும் முதல்வி எனலாம்.

தாவரங்களாக அருள்புரியும் தேவர்கள்

சிவன் கோயில் என்றாலும் மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தால் உருவாக்கப்பட்டது இங்குள்ள சக்கர தீர்த்தம். மற்றுமோர் அற்புதம், இத்தலத்தில் தேவர்கள் மரம், செடி, கொடிகளாகப் பிறந்து இறைவனை வழிபடுகின்றனர் என்றும், ருத்ரன் ஆல மரமாகவும், விஷ்ணு அரசமரமாகவும், பிரம்மன் பூவரசு மரமாகவும் தோன்றியுள்ளனர் என்றும் தல புராணம் தெரிவிக்கிறது. ஆனால் வில்வ மரம்தான் தல விருட்சம்.

இத்திருக்கோயில் கொடி மரம் முதல் விமானக் கலசம் வரை அனைத்தும் கருங்கல்லால் ஆனவை. மூலவர் வசிஷ்டேஸ்வரர் சன்னிதி விமானத்தில் சந்திரகாந்தக் கல் அமைக்கப்பட்டுள்ள விதம் கட்டடக் கணிதக் குறிப்பாக இருக்கிறது.

சரியாக நாழிகை ஒன்றுக்கு அதாவது இருபத்தி நான்கு நிமிடங்கள் ஒரு நாழிகை, ஒரு சொட்டு நீர் நேராக சிவனின் பாண லிங்கத்தின் உச்சியில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அதனால், அபிஷேகப் பிரியனான சிவனுக்கு சதாசர்வ காலமும் அபிஷேகம் இயற்கையாகவே நிகழ்வதோர் அற்புதம்.

சிறப்பு ஹோமம்

குருப் பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு பரிகார ஹோமம் ஆகியவை குரு பரிகாரத் தலம் என்றழைக்கப்படும் தஞ்சை மாவட்டம் திட்டையில் அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற உள்ளது.

ஜூலை 13, 14 ந் தேதிகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் லட்சார்ச்சனை நடைபெறும். ஜூலை 15 முதல் 19 ந் தேதி வரை காலை 8 மணி முதல் 11 மணி வரை சிறப்புப் பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்த கனரா வங்கி: 'டோல் ஃப்ரி' புகாருக்குப் பின் பணிந்தது நிர்வாகம்



கோவையில் பழைய ரூபாய் நோட்டுகளைச் செலுத்தச் சென்ற ஓய்வு பெற்ற தபால் அலுவலரை, பெட்டிக் கடைக்குச் சென்று மாற்றிக் கொள்ளுமாறு, வங்கிக் கிளை மேலாளர் கூறியது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை மீறிய செயல் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பணப் புழக்கத்தை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கடந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதில், 'கடந்த, 2005-க்கு முன் அச்சிடப்பட்ட, ரூ.1000, 500 உட்பட, அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகாது.

எனவே, இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, கடந்த டிசம்பர் வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

பின்னர், ஜூன், 30-ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிவடைய, இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால், 'பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் தங்கள் கணக்கில் அவற்றை, டெப்பாசிட் செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கோவைப்புதூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் ஊழியரான ஹரிகரன் என்பவர், அதேபகுதியில் உள்ள கனரா வங்கிக் கிளைக்கு ரூ. 16,400 அளவுக்கு (10 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள்) நேற்று எடுத்துச் சென்றுள்ளார்.

அந்த நோட்டுக்களை காசாளரிடம் செலுத்த முயன்றபோது, அதை வாங்க மறுத்த காசாளர், 10 ரூபாய் நோட்டுக்களை பெற முடியாது. வேறு எங்காவது மாற்றிக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வங்கிக் கிளை மேலாளரை சந்தித்து ஹரிகரன், நோட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால், ‘நோட்டுக்களை வாங்க முடியாது. இவ்வளவு நாள் உங்களை யார் இதை வைத்திருக்கச் சொன்னது. பெட்டிக் கடைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள்’ என சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால், அதிருப்தி அடைந்த ஹரிகரன், கனரா வங்கியின் டோல்ஃப்ரி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் மண்டல அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தல் வந்தததைத் தொடர்ந்து, அந்த நோட்டுகளை வங்கி நிர்வாகம் அவரிடம் இருந்து வாங்கியுள்ளது.

இது குறித்து வாடிக்கையாளர் ஹரிகரன் கூறும்போது, ‘பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் ஜூன் கடைசிக்குள் மாற்றுமாறு ரிசர்வ்வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இதற்கு மாறாக வங்கி நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கும், மத்திய நிதி அமைச்சகத்துக்கும் புகார் தெரிவிப்பேன்.

சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ரூபாய் நோட்டுக்களை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு 3 மணி நேரம் செலவிட வேண்டி இருந்தது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறி வங்கி நிர்வாகம் நடந்துள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எனக்கு இந்த நிலைமை என்றால் படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் என்றால் என்ன செய்வார்கள். இது கண்டனத்துக்குரியது’ என்றார்.

'அறிவுறுத்தப்படும்'

இது குறித்து கனரா வங்கியின் முதன்மை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, 'பழைய ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்ற வந்தால் அவர்களிடம் இருந்து கட்டாயம் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வாங்க முடியாது என மறுக்கக் கூடாது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு மீண்டும் அறிவுறுத்தப்படும்' என்றார்.

5 Self-Finance Med Colleges Fail to Get MCI Nod Again

CHENNAI: With the Medical Council of India (MCI) continuing to refuse approval of five self-financing medical colleges citing infrastructure defects and shortage of teaching faculty, the wait for more MBBS seats under government quota continues.
Of the 13 self-financing medical colleges in Tamil Nadu, MCI denied approval for SRM Medical College, Trichy, Annapoorna Medical College and Hospital, Salem, Madha Medical College and Hospital, Thandalam, Chennai, Melmaruvathur Adiparasakthi Institute Medical Science and Research and Sri Muthukumaran Medical College. Each of these colleges had applied for 150 seats.
Speaking to Express, Dr C V Bhirmanandam, vice-president, MCI, said approval was denied to all the five colleges because of infrastructure deficiencies and shortage of teaching faculty. “They did not satisfy MCI norms, and there were many flaws in the operation of these colleges. So MCI denied approval for 2015-2016, too. The message was conveyed to the official from the Directorate of Medical Education during a meeting that was held on Tuesday,” he added.
A senior official in the Directorate of Medical Education told Express that they were not expecting these seats to receive the sanction this year. “These colleges had applied last year but then too, failed to get recognition. So we were not actually expecting these seats for this academic year as well,” the official said.
Had these been cleared, there would have been an additional 97 seats each from SRM Medical College, Annapoorna Medical College and Hospital, and Melmaruvathur Adiparasakthi Institute Medical Science and Research, and 75 each from Madha Medical College and Hospital and Sri Muthukumaran Medical College under government quota.
The current batch of students are already battling seat allotment with the previous batch of Plus Two candidates. The second phase of counselling for self-financing colleges will be conducted on July 25 and the third phase on September 30 as per the Supreme Court order.
Meanwhile, the fate of ESIC Medical College in Chennai is yet to be decided.

எம்.எஸ்.வியை கொண்டாடிய இசை அரங்கம்


ஜூன் 24 - இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் 87-வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சமீபத்தில் ‘எம்எஸ்வி டைம்ஸ்.காம்’ சென்னையில் ஒரு இசை அரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. பாடல்கள் மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பில் எம்.எஸ்.விஸ்வநாதனின் பல்வேறு பரிணாமங்களை எடுத்துக்காட்டிய இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

எம்.எஸ்.வி இசையில் வெளியான ‘அன்பே வா’, ‘கௌரவம்’ ஆகிய படங் களில் அவர் பின்னணி இசைக்கோர்ப் பில் செலுத்திய நேர்த்தியை செல்லோ சேகர் (குன்னக்குடி வைத்தியநாதன் மகன்) இந்நிகழ்ச்சியில் விவரித்தார்.

‘தூது சொல்ல ஒரு தோழி’, ‘சட்டி சுட்ட தடா கை விட்டதடா’ ஆகிய பாடல்களில் உள்ள தனித்தன்மையை ‘கிடார்’ பாலா விளக்கிப் பேசினார். கரஹரப்ரியா ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் வெவ்வேறு நுட்பத்தைப் பயன்படுத்தி இசையமைத்ததை இசையமைப்பாளர் தாயன்பன் எடுத்துக்கூறினார்.

‘கலங்கரை விளக்கம்’, ‘உத்தர வின்றி உள்ளே வா’ ஆகிய படங்களில் இடம்பெற்ற டைட்டில் பாடல்களின் வழியே படத்தின் கதையைச் சொல் லும் எம்.எஸ்.வியின் தனித்த அடை யாளத்தை எடுத்துக்கூறினார், ஆடிட்டர் மற்றும் மெல்லிசைப் பாடகர் வி.பால சுப்ரமணியன். எம்.எஸ்.விஸ்வநாத னின் லய வேலைப்பாடல்கள் பற்றிய பரிணாமத்தை ‘வெள்ளிக்கிண்ணம் தான்’ உள்ளிட்ட சில பாடல்களை முன் னிலைப்படுத்தி எம்.எஸ்.சேகர் பேசி னார். நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி, திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்து ராமன், இசையமைப்பாளரும், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக்குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றியவரும், லால்குடி ஜெயராமனின் ‘தில்லானா’ இசைத்தட்டு உருவாக்கத்தில் மேற்கத் திய இசையமைத்து பியூஷன் இசைக்கு வழிவகுத்தவருமான ஷ்யாம் ஜோசப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை ராம் லஷ்மணன், எம்.எஸ்.வி. வைத்தி ஆகியோர் தொகுத்தளித்தனர்.

இந்த விழாவில் எம்.எஸ்.விஸ்வ நாதன் பற்றி நல்லி குப்புசாமி பேசிய தாவது:

30 ஆண்டுகளுக்கு முன்பே எம்.எஸ்.வியோடு நெருங்கி பழகும் அனுபவம் பெற்றவன் நான். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை விழா வுக்கு அவரே நேரில் வந்து அழைப் பிதழ் கொடுப்பார். ‘எதுக்குங்க நீங்க வரணும். சொல்லி அனுப்பினா நான் வந் துடுவேனே’ என்று கூறினால்கூட கேட்க மாட்டார். அவர் வாழ்கிற காலத்தில் நாம் வாழ்வது பெருமையான விஷயம்.

எம்.எஸ்.விக்கு நடிக்க வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வம் இருந்தது. ஒரு நாடகத்தில் கோவலன் வேடம் போடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் எம்.எஸ்.வி குட்டையாக இருப்பதால் அவர் தேர்வாகாமல் போய் விட்டார். ‘என்னை குட்டை என்று தவிர்த் தவர்கள், கண்ணகி வேடம் போட்டவரை நெட்டை என்று கூறி நீக்க வேண்டியது தானே’ என்று கோபப்பட்டார். ‘அதெல் லாம் விடுங்க சார். அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னைக்கு நாங்க இப்படி சிறப்பான பாடல்களை கேட்டி ருக்க முடியாதே’ என்று சொன்னோம்.

1973-74களில் தினம் ஜவுளிக் கடைக்கு போகிறேனோ இல்லையோ, கண்ணதாசனைப் பார்ப்பதற்காக கவிதா ஹோட்டலுக்கு சென்றுவிடு வேன். எம்.எஸ்.விக்கும் தனக்கும் உள்ள நெருக்கம், வேடிக்கையான அனுபவங் களை எல்லாம் கவிஞர் மணிக்கணக்கில் சொல்வார். அதுதான் நட்பு.

இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்பி.முத்துராமன் பேசும்போது, “ஜெய்சங்கர் நடிப்பில் ‘துணிவே துணை’ படத்தை இயக்கினேன். படத் தில் முதல் சில காட்சிகளில் வசனம் இல் லாமல் எம்.எஸ்.வியின் திகில் இசை தான் முக்கிய அங்கமாக இருக்கும். அந்த இசை, படத்தை அவ்வளவு நேர்த்தியாக நகர்த்திச் செல்லும்.

ஒருமுறை, கண்ணதாசன் இறந்து விட்டார் என்று எம்.எஸ்.வி வீட்டுக்கு செய்தி வருகிறது. மார்பிலும், தலை யிலும் அடித்துக்கொண்டு கதறி அழுத படி கண்ணதாசன் வீட்டுக்கு போகிறார், எம்.எஸ்.வி. அங்கே ‘வாப்பா விசு’ என்று கண்ணதாசன் குரல் கேட்கிறது. ‘ஏண்ணே.. இப்படி!’ என்று படபடத்து நிற்கிறார்.

‘நான் இறந்துபோனால் நீ எப்படி கதறி அழுவாய் என்பதை நான் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்தேன்’ என்று கண்ண தாசன் கூறியிருக்கிறார். அதுதான் நட்பு. கவியரசருக்கு சிலை வைத்த பெருமை எம்.எஸ்.விக்குத்தான் சேரும்’’ என்றார்.

ஷ்யாம் ஜோசப் பேசும்போது, “பாட்டை பாமர மக்களும் கேட்க வேண்டும். கேட்ட மாத்திரத்திலேயே அதை அவர்கள் பாட வேண்டும் என்கிற நோக்கம் அவருக்கு அவசியமாக இருந்தது. இசையில் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ரேன்ஞ் என்று ஒரு கட்டத்தை சொல்வோம்.

அதை எந்த அளவில் கொடுக்க வேண்டும் என்கிற வித்தை அறிந்தவர், எம்.எஸ்.வி. சங்கீதத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கு மேல் செய்தவர் எம்.எஸ்.வி’’ என்றார்.

Endoscopic camera used to copy paper in sealed packet CM orders probe

Endoscopic camera used to copy paper in sealed packet CM orders probe 23.08.2026 Raipur: A tiny endoscopic camera was allegedly slipped thro...