Thursday, November 10, 2016

ரூ.500, ரூ.1000 நோட்டை மாற்ற படிவம் பூர்த்தி செய்வது அவசியம்: இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம்

By DIN  |   Published on : 10th November 2016 04:42 AM 

வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான சிறப்புப் படிவத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு இந்த சிறப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து அளிப்பது அவசியம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கிகளின் உயர் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
இன்று முதல்...: நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாழக்கிழமை (நவ.10) முதல் மாற்றிக் கொள்ளும் ஏற்பாடுகளை தமிழகம் உள்பட நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் செய்து தயார் நிலையில் உள்ளன.
சிறப்புக் கவுன்ட்டர்கள்: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும்.

சிறப்புப் படிவம் இலவசம்:

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு வைத்துள்ளோர் சிறப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,000 வரை எந்த வங்கிக் கிளையிலும் அளித்து மாற்றிக் கொள்ளலாம். அனைத்து வங்கிக் கிளைகளிலும் இந்த சிறப்புப் படிவம் இலவசமாக அளிக்கப்படும்.
அடையாள அட்டை பிரதி அவசியம்: கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையின் பெயர், வாடிக்கையாளரின் பெயர், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு ("பாஸ்போர்ட்'), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அடையாள அட்டை, பான் அட்டை ஆகியவற்றின் ஏதாவது ஒன்றின் பிரதியை சிறப்புப் படிவத்துடன் அளிப்பது அவசியமாகும். அடையாள அட்டையின் எண்ணை சிறப்புப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.எந்த வங்கிக் கிளை
யிலும்...: தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில்தான் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; மேலும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கிக் கணக்குப் புத்தகம் ("பாஸ் புக்') தேவையில்லை.

ஒவ்வொரு நாளும் ரூ.4,000 அளவுக்கு பழைய நோட்டுகளை மாற்றும்போது சிறப்புப் படிவத்தை அளிப்பது அவசியம். இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் வெள்ளிக்கிழமை (நவ.11) முதல்தான் புழக்கத்துக்கு வர உள்ளன. இதன் காரணமாக வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாழக்கிழமை (நவ.10) மாற்றும் பொது மக்களுக்கு ரூ.100 எண்ணிக்கையில்தான் மாற்று நோட்டுகள் வழங்கப்படும்.
கணக்கில் பணம் செலுத்த...: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் பொதுமக்கள் பதற்றப்படத் தேவையில்லை;

வங்கிகளுக்கு இருப்பில் உள்ள அனைத்து பழைய ரூ.500, ரூ.1,000 பழைய நோட்டுகளை எடுத்துச் சென்று வழக்கம்போல் சேமிப்புக் கணக்குப் படிவத்தைப் பூர்த்தி செய்து வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவது மிகவும் சிறந்தது; வாடிக்கையாளர்கள் பழைய ரூ,500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
பழைய 500, 1,000 ரூபாய் பறிமுதல் செய்ய உத்தரவு

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றால், வழக்கம்போல் பறிமுதல் செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, வரும், 19ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும், மாநிலம் முழு வதும் உள்ள, கட்சி நிர்வாகிகளை, மூன்று தொகுதிகளில் குவித்துள்ளனர். அவர்கள் ஓட்டல், திருமண மண்டபம், வீடு போன்றவற்றை வாடகைக்கு எடுத்து தங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில், அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக, புகார் எழுந்தது; அதன் அடிப்படையில், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.இம்முறை, அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்படுகிறது. சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.இந்நிலையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், நேற்று முன்தினம் இரவு முதல் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால், தேர்தலில் பணத்தை வாரி இறைக்க தயாராக இருந்த, கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். எனினும், டிச., 30 வரை, வங்கி அல்லது தபால் நிலையத்தில் மாற்றிக் கொள்ளலாம் என்பதால், கையிருப்பில் உள்ள, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களை, வாக்காளர்களுக்கு வழங்கலாமா என, ஆலோசித்து வருகின்றனர்.எனவே, வாகன சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, பறிமுதல் செய்யாமல் இருக்கக் கூடாது; வழக்கம்போல், அவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
'பங்க்'குகளில் சில்லரைக்கு பதில் துண்டு சீட்டு

தாம்பரம்,: பெட்ரோல், 'பங்க்'களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தவர்களுக்கு, சில்லரைக்கு பதிலாக, துண்டு சீட்டே அளிக்கப்பட்டது.நேற்று நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்தார். வங்கிகள், அஞ்சலகங்கள், பெட்ரோல் 'பங்க்'களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று காலை, மேற்கு தாம்பரம், கடப்பேரியில் உள்ள தனியார் பெட்ரோல், 'பங்க்'கில், வாகன ஓட்டிகள் பலர் பெட்ரோல் போட சென்றனர். 'பங்க்' ஊழியர்கள், 'சரியான சில்லரை கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் போடப்படும்' என, தெரிவித்தனர்.அதே நேரம், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தள்ளி விடுவதற்காகவும், பலர் பெட்ரோல் போட வந்தனர். அவர்கள் முழு பணத்துக்கும் பெட்ரோல், டீசல் போட்டு சென்றனர்.சில வாகன ஓட்டிகள், 100, 200, ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கள் என, 'பங்க்' ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சில்லரை பிரச்னையால், 'பங்க்' ஊழியர்கள், துண்டு சீட்டில், 'பங்க்' முத்திரையுடன், மீதி சில்லரை தொகையை எழுதி கொடுத்து, அனுப்பினர்.அடுத்தடுத்த நாட்களில், அந்த துண்டு சீட்டை காண்பித்து, அதில் உள்ள மீதி தொகைக்கு, வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட்டு கொள்ளலாம் என, 'பங்க்' சார்பில் தெரிவிக்கப்பட்டது.


ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மாற்ற போகிறீர்களா?

பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக் களை, வங்கியில் கொடுத்து மாற்றும் திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்து வோரை, வருமான வரித் துறை கண்காணிக்க உள்ளது. தவறு செய்திருந்தால், 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.




இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகவுமே, பழைய ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தியர்களை, நியாயமாக வரி கட்டுபவர் களாக மாற்றுவதே, இதன் மற்றொரு நோக்கம். அதனால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருப்போருக்கு, இந்த திட்டத்தை பயன்படுத்தி, அபராதம் விதிக்கப்படும்.

நாட்டில், புழக்கத்தில் உள்ள, 17 லட்சம் கோடி ரூபாய் கரன்சியில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 88 சதவீதம் ஆகும். எனவே, கணிசமான தொகை பதுக்கி வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

வங்கிகளுடன்தொடர்பு கொண்டு, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பழைய நோட்டுகளை கொடுத்து, புதிய நோட்டு பெறுவோர்; இரண்டு லட்சலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, 'டெபாசிட்' செய்வோரின்விபரங்களை கேட்டுப் பெற,மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர்களின் விபரங்கள், வருமான வரிக் கணக் குடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். வரி செலுத்தா மல் போயிருந்தால்,தவறுக்கேற்ப,200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

-- நமது நிருபர் -

மக்கள் நினைப்பது என்ன? : கருத்து கேட்கும் பிரதமர்

நாட்டில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற மத்திய அரசின் நடவடிக்கை குறித்து, மக்களின் கருத்துகளை, பிரதமர் மோடிக்கு, 'ஆப்' வாயிலாக தெரிவிக்கலாம்.நாட்டில் கறுப்புப் பண புழக்கத்தையும், கள்ள நோட்டு புழக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி துணிச்சலாக அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து, பல துறைகளைச் சேர்ந்தவர்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்நட வடிக்கை குறித்து மக்களின் எண்ணத்தை நேரடியாக அறிய, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்தார். இதற்காக, 'ஸ்மார்ட் போன்'களில், 'ஆப்' வாயிலாக, பிரதமருக்கு, மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். இதற்கு, கூகுள் பிளே ஸ்டோரில் சென்று, 'நரேந்திர மோடி' என, ஆங்கிலத்தில் டைப் செய்து, டவுண்லோடு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்நடவடிக்கை குறித்து, மக்களின் கருத்துக்களை பிரதமர் நேரடியாக அறிந்து கொள்ள எடுத்துள்ள முயற்சி, பல தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது.
- நமது நிருபர் -

மத்திய அரசு செல்லாது என அறிவித்த, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம்.




மத்திய அரசு செல்லாது என அறிவித்த, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம்.

சில்லரை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், நோட்டுகளை மாற்ற ஏராளமான மக்கள் குவிவர் என்பதால், மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மக்கள் நலன் கருதி, சனி, ஞாயிறு, வங்கிகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில், கறுப்பு பணத்தை ஒடுக்கும் வகை யிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி நேற்று முன்தினம், அதிரடியாக அறிவித்தார். இதனால், நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு, ஏ.டி.எம்., மையங்களை நோக்கி பொதுமக்கள்விரைந்தனர். ஆனால், பெரும்பாலானோரால் பணம் எடுக்க முடியவில்லை.

அலைச்சல்

இந்நிலையில் நேற்று, ஏ.டி.எம்., மையங்களும், வங்கிகளும் மூடப்பட்டிருந்ததால், கையில் பணம் இல்லாமல் பொதுமக்கள், அன்றாட தேவைக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாமல், கடுமையாக அவதிப்பட்டனர். நுாறு ரூபாய் நோட்டுகளைத் தேடி, கடை கடையாக மக்கள் அலைந்தும், ஏமாற்றமே மிஞ்சியது.

பெரும்பாலான கடைக்காரர்கள்,500,1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர். சில இடங்க ளில்,அவற்றை வாங்கினாலும், முழுத் தொகை க்கு பொருட்களை வாங்க கட்டாயப் படுத்தினர். இந்த புதிய அறிவிப்புபற்றி அறியாத ஏழை மக்கள், அடுத்து என்ன செய்வது எனக் கேட்டு அலைந்ததை பார்க்க, பரிதாபமாக இருந்தது.

இந்நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், வங்கிகள், தபால் நிலையங்களிலும், இன்று முதல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது; புதிய, 500, 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும். இதற்காக, போதுமான அளவிற்கு, புதிய கரன்சி நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அச்சிட்டு, வினியோகித்துள்ளது.


பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும், பணம் எடுப்பதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் குவிவர் என்பதால், வங்கிகளில் கூடுதல் கவுன்டர்கள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன; போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.

ஆறுதல்

'இப்பிரச்னை தற்காலிகமானது தான். டிச., 30 வரை, நோட்டுகளை மாற்றலாம். டெபிட் கார்டு
பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு இல்லை; பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

'இப்பிரச்னை தீர சிலநாட்கள் ஆகும் என்பதால், வழக்கமாக விடுமுறை தினங்களான,
இரண்டாவது சனி, ஞாயிறு அன்றும், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும், அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் செயல்படும்.

வங்கி ஏ.டி.எம்., மையங்களில், 50, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தரும் வகையில் மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளதால், வெள்ளிக்கிழமை காலை வரை செயல்படாது. அனைத்து, ஏ.டி.எம்., மைய பரிவர்த்தனைகளு க்கும், டிச., 30 வரை, கட்டணம் வசூலிக்கப் படாது என்பதும், பொதுமக்களுக்கு ஆறுதலான அறிவிப்பு.

ரிசர்வ் வங்கியில்உதவி மையம்

பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்று வது மற்றும் வங்கிகளில் பணம் எடுப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை, ரிசர்வ் வங்கி கிளையில்,உதவி மையம் செயல் பட துவங்கியுள்ளது. பொதுமக்கள், 044 - 2538 1390 மற்றும் 044 - 2538 1392 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு,சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.

- நமது நிருபர் -

அதிக பணம் டெபாசிட்டா: வரி, அபராதம் விதிக்கப்படும்

புதுடில்லி: 'காலாவதியான, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை, அதிக அளவில் வங்கி கணக்கில் செலுத்துபவர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவர்களுக்கு வரியுடன், 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ரூ. 2.5 லட்சம் : இது குறித்து, மத்திய வருவாய் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா கூறியதாவது: காலாவதியான, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிக் கணக்கில் செலுத்த, டிசம்பர், 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், வங்கியில் அதிக அளவு தொகையை டெபாசிட் செய்பவர்கள் குறித்து ஆராயப்படும். குறிப்பாக, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் அனைத்து டெபாசிட்கள் குறித்தும் வருமான வரித்துறை ஆய்வு செய்யும். அவ்வாறு டெபாசிட் செய்பவர்களின் வருமான வரி கணக்கு தாக்கலுடன் ஒப்பிட்டு, வருவாய்க்கு அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை வரி ஏய்ப்பாக கருதி, அதற்கு வரியும், 200 சதவீத அபராதமும் விதிக்கப்படும். இதனால், சிறு வணிகர்கள், குடும்பத் தலைவிகள், தொழிலாளர்கள் போன்றவர்கள் பீதியடைய வேண்டாம். அவர்கள், இரண்டு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்தாலும், வருமான வரி வரம்புக்குள் வராத நிலையில், அவர்களுக்கு பாதிப்பு இருக்காது.
தங்கம் காப்பாற்றுமா? : கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பலரும், தங்கத்தை வாங்கி குவிப்பதாக கூறப்படுகிறது. தங்கம் வாங்குபவர்களின், 'பான்' எண்களை பெற வேண்டும் என, அனைத்து தங்க நகை வியாபாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது கடைபிடிக்கப்படுகிறதா என, வருமான வரித்துறை சோதனைகளை மேற்கொள்ளும். அதனால், ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 24.05.2026