Wednesday, December 14, 2016

புயல் மழைக்கு உயிரிழந்தோர் 23-ஆக உயர்வு.. 3-வது நாளாகத் தொடரும் மீட்பு பணிகள்


சென்னையில் கோரத் தாண்டவம் ஆடிய வர்தா புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.

வங்க கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12-ம் தேதி மாலை சென்னையில் கரையை கடந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த புயல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆவேசமாக வீசியது. இந்த புயல் மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 பேர் என்று முதல் நாள் அறிவிக்கப்பட்டது. நேற்று 16-ஆக உயர்ந்திருந்தது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனும் அஞ்சப்பட்டது. அதேபோல, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.

புயல் மற்றும் கன மழை காரணமாக, ஏராளமான மரங்கள் மற்றும் கட்டடங்கள் சாய்ந்ததில் 27 பெண்கள் உள்பட 172 பேர் படுகாயங்களுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 97 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தபடி, உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க, நேற்று உத்தரவு பிறப்பித்தார்.



புயல் காற்றில், பழைய கட்டடங்கள், சுமார் 12 ஆயிரம் மரங்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டட மின் கம்பங்கள், 450 மின்மாற்றிகள் உள்ளிட்டவை சாய்ந்துவிட்டன. பல்வேறு இடங்களில் மரங்கள், வாகனங்களின் மீது விழுந்து கண்ணாடிகள் உள்ளிட்டவை உடைந்து சேதமடைந்தன.

இதனால், சென்னை நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ரயில் மற்றும் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு இரண்டாவது நாளாக மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் இல்லாததால் வீடுகளில் உள்ள மோட்டார்களை இயக்க முடியாமல் தண்ணீர் இன்றி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.



புயல், மழை காரணமாக கடைகள், வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் அவை திறக்கப்படாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

வரதா புயல் தாக்கத்தில் சிக்கித் தவித்த சென்னை மாநகரம், தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து, மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில், சென்னையில் 3-வது அவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பேருந்துகள் இன்று பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் சென்னை மக்கள் தங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் ஓரிரு நாட்களும் ஆகக்கூடும். இதை அதிகாரிகள் விரைவு படுத்தி வருகின்றனர்.

- ரா.வளன்

வர்தா புயலால் தமிழகத்துக்கு ரூ. 6,749 கோடி இழப்பு



வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு, பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த புயலால் தமிழகத்துக்கு ரூ.6,749 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான அசோசாம் கூறியுள்ளது. குறிப்பாக விவசாயம், மீன் துறை ஆகிய இரண்டு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நகர் மற்றும் கிராமம் இரண்டு பகுதிகளுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அசோசாம் கூறியுள்ளது. மேலும், தென் இந்தியாவின் சுற்றுலாத்துறையும் இதனால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

'வார்தா' புயல்: காற்றில் பறந்த கூரைகள்; தங்க இடமின்றி தவித்த மக்கள்

சென்னை ராயப்பேட்டை முத்தையா தோட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிசைகளின் மேற்கூரை மீது மரங்கள் விழுந்தன. மழைநீரும் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து முத்தையா தோட்டம் குடிசைப் பகுதியில் வசித்து வரும் சித்ரா கூறியதாவது: புயல் காற்றால் எங்கள் பகுதியில் உள்ள குடிசைகள் அனைத்தும் நேற்று சேதமடைந்துவிட்டன. கூரைகள் காற்றில் பறந்துவிட்டன. பல குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. குழந்தைகளின் பள்ளி புத்தகங்கள், உடமைகள் அனைத்தும் மழையில் நனைந்துவிட்டன. இதனால், அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் நேற்று தஞ்சமடைந்தோம்.

அங்கும் மரம் விழுந்ததால் அருகில் உள்ள கருமகாரிய கூடத்தில் பலர் தஞ்சமடைந்தனர். நேற்று இரவு முழுவதும் படுக்க சரியான இடமின்றி, உணவில்லாமல் குழந்தைகளும், முதியவர்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகினர். ஆனால், இதுவரை அதிகாரிகள் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் நேரத்தில் ஓட்டுகேட்டு வரும் கட்சிக்காரர்கள், உதவி தேவைப்படும் காலத்தில் உதவவில்லை. இந்தப் பகுதிக்கு அருகிலேயே உள்ள குழந்தைகள் மையத்தையும் பூட்டிவைத்துவிட்டனர். இதனால், அங்கு சென்றும் தங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

'வார்தா' தாண்டவம்: களைப்பில்லாமல் உழைக்கும் காவல்துறை

க.சே. ரமணி பிரபா தேவி

சென்னை மற்றும் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டிருக்கிறது ’வார்தா ’ புயல். சென்னையின் ஒட்டுமொத்த மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சூறாவளிக்காற்றும், மழையும் நின்றுவிட்ட நிலையில் அதன் விளைவாக விழுந்த பெரு மரங்கள் சாலைகளில் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் விரைந்து சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் ரோந்து வாகனங்கள் தங்கள் வேலையைத் தொடங்கியிருந்தன. காலை அலுவலகம் வரும்போது கண்ணில் தென்பட்ட காட்சிகள் இவை.

வழியில், சிந்தாதிரிப்பேட்டையில் மரங்களை அப்புறப்படுத்தும் வேலைகளில் ஏராளமான காவல்துறையினரைக் காண முடிந்தது.

அருகில் சென்று விசாரித்தபோதுதான் தெரிந்தது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் பூபாலன் அவரென்று. அவரோடு காவல்நிலையத்தின் மற்ற காவலர்களும், சில இளைஞர்களும் வீழ்ந்துகிடந்த மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தனர். ''பணியாளர்கள் யாரும் வரவில்லையா?'' என்று கேட்டேன். ''அதனால் என்னங்க, நம்ம வீட்டுல யாரு செய்யறோம்? நம்மதானே, அதுபோலத்தான் இங்கயும்!'' என்று கூறியவாறு தன் பணியைத் தொடர்ந்தார்.



பல்நோக்கு மருத்துவமனையின் எதிர்ப்புறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு அருகே இருந்த கட்டிடத்திலும் மரங்கள் பெயர்ந்து கிடந்தன. அவற்றையும் சில காவலர்கள் எடுத்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

வாலஜா சாலை, கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள சாலை மரங்களை திருவல்லிக்கேணி D1 காவல்நிலைய உதவி ஆணையர் உட்பட நிறைய அதிகாரிகள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர் என்று சக நண்பர் கூறினார்.

இதுபோல வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகள், டி.டி.கே. சாலை, வெஸ்ட் காட் சாலை உள்ளிட்ட சென்னை நகரத்தின் ஏராளமான இடங்களில் விழுந்துகிடக்கும் மரங்களையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருவதாக அந்த வழியாக வந்த அலுவலக நண்பர் கூறியதைக் கேட்க முடிந்தது.



தன்னலம் கருதாது மழை, வெயில், புயல் என எல்லா இயற்கை சீற்றங்களிலும், செயற்கை மாற்றங்களிலும் களைத்துப் போகாது உழைக்கும் காவல்துறைக்கு ஒரு ராயல் சல்யூட்!

22 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை தாக்கிய புயல்


சென்னையை அதிதீவிர புயல் ஒன்று 22 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கியிருப்பது தெரியவந்துள் ளது.

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் வங்கக் கடலில் புயல் உருவாவது வழக்க மானது. இது பெரும்பாலும் தமிழ கம் மற்றும் ஆந்திரா, ஒடிசா அல் லது மேற்கு வங்க கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும். தமி ழகத்தை பொருத்தவரை பெரும் பாலான புயல்கள் கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட் டங்களில் தான் கரையைக் கடக்கும்.

இரு வாரங்களுக்கு முன்பு தமிழக கரையைக் கடந்த ‘நடா’ புயல், நாகப்பட்டினம் அருகே தான் கரையைக் கடந்தது. சென்னையை கரையைக் கடப் பதும், சென்னையை தாக்குவதும் அரிதாகவே நிகழ்கிறது. ஒருசில புயல்கள் மட்டுமே சென்னை அருகே கரையைக் கடக்கின்றன. அவற்றிலும் அரிதானவையே சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளன.

தற்போது சென்னை அருகே கரையைக் கடந்துள்ள அதி தீவிர புயலான வார்தா, சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 192 கி.மீ வேகத்தில் தாக்கியதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற புயல், 22 ஆண்டுகளுக்கு முன்பு 1994-ல் சென்னையை தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2010-ல் உருவான ‘ஜல்’ புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது. 2012-ல் உருவான ‘நிலம்’ புயல், மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இந்த 2 புயல்களும் சென்னை அருகே கரையைக் கடந்தாலும், சென்னைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அதே வேளையில், கடந்த 1994-ல் அக்டோபர் 31-ம் தேதி சென்னையை தாக்கிய புயல், சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது சென்னையில் 24 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அதனைத் தொடர்ந்து அதற்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் புயலாக இந்த வார்தா புயல் விளங்குகிறது. ஒரு அதிதீவிர புயல் ஒன்று சென்னையை தாக்கும் நிகழ்வு, 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் நிகழ்ந்துள்ளது என்று அந்த முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

கொந்தளித்தது கடல்.. கொட்டித் தீர்த்தது மழை.. கோரத் தாண்டவம் ஆடியது ‘வார்தா’ புயல்..: தலைவிரி கோலத்தில் தலைநகர்!

ச.கார்த்திகேயன்

பகலிலேயே இருளில் மூழ்கியது சென்னை: மின்சாரம் துண்டிப்பு; அதிக உயிரிழப்பு தவிர்ப்பு
சூறைக் காற்றின் பேயாட்டத்தில் பெயர்ந்தன மரங்கள், மின் கம்பங்கள்; போக்குவரத்து பாதிப்பு
முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் காரணமாக வீடுகளிலேயே மக்கள் முடங்கியதால் நிம்மதி

சென்னையை மணிக்கு 110 கிமீ வேகத்தில் தாக்கிய ‘வார்தா’ புயலின் கோரத்தாண்டவத்தால் தலைநகரம் தலைவிரிகோல மானது. சூறைக் காற்றாலும், கொட்டித் தீர்த்த மழையாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, 4 நாட்களுக்கு முன்பு ‘வார்தா’ புயலாக உருமாறியது. தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கிய இந்த புயல், பின்னர் அதிதீவிர புயலாக மாறியது.

இந்த புயல் கரையை நெருங்க நெருங்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் லேசான காற்றும், மழையும் தொடங்கியது. நேற்று காலையில் காற்றின் வேகமும், மழையும் மேலும் அதிகமானது. சுமார் 12 மணி அளவில் உச்சநிலையை அடைந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று தீவிர மாக வீசியது. கடல் கொந்தளிப் புடன் காணப்பட்டது. கூடவே கனமழையும் கொட்டித் தீர்த்து.

இந்த புயலால் சாலையோரங் களில் இருந்த 3,300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதேபோல் சென்னை, காஞ்சி, திவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமை யாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வெவ்வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டன.




நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் மரம் விழுந்து சிக்கியுள்ள 2 அரசுப் பேருந்துகள். | படம்: க.ஸ்ரீபரத்


விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியா ளர்கள், தீயணைப்புப் படை வீரர்கள், போலீஸார் ஈடுபட்டனர். இயந்திரங்கள் மூலமாக மரங்களை அறுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக அகற்றி, உடனடியாக சீரான போக்குவரத்துக்கு வழி வகை செய்தனர்.அவர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் களமி றங்கி மரங்களை அகற்றினர். போக்குவரத்தையும் ஒழுங்குப் படுத்தினர்.

இந்தப் புயல் உருவான உடனேயே அரசின் வருவாய்த் துறை முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பல்வேறு துறை அதிகாரி களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இதன்மூலம் போதிய மீட்புக் குழுக்களை ஏற்படுத்தவும், தேசிய பேரிடர் மீட்பு படைகளைத் அழைத்து தயார் நிலையில் நிறுத்தவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், அவர் களுக்கு தேவையான உணவை வழங்கவும் உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியிலும் அந்தந்த மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் முடுக்கி விடப்பட்டனர். அரசும், பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பும் வெளி யிட்டது. நீண்ட நேரம் கெடாமலிருக்கும் உணவுகளை சமைத்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் காரணமாக, புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், மக்கள் வீடுகளிலே முடங்கினர். முன்கூட் டியே பொதுமக்கள் காய்கறிகள், பால், கேன் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டனர். இதனால் இந்த பேரிடரால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வில்லை.

சென்னையில் 30 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அத்துறை செயலர் க.பணீந்திரரெட்டி, மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மேற்பார்வை அலுவலர் காக்கர்லா உஷா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இருளில் மூழ்கியது

முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சூறைக் காற் றுடன் மழை பெய்த நிலையில், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்த நிலையிலும், பல இடங்களில் மின் பெட்டி அருகில் நீர் தேங்கிய நிலையிலும், மின்சாரம் தாக்கி ஏற்படும் உயிர்ப் பலிகள் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் புயல் காரணமாக 4 பேர் பலியாகியுள்ளனர். 24 குடிசைகள் சேதமடைந் துள்ளன.




ஆழ்வார்பேட்டை நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே மாடியிலிருந்து தெருவுக்கு வந்த குடிநீர் தொட்டி. | படம்: க.ஸ்ரீபரத்


மேலும் கருமேகங்கள் சூழ்ந்து, சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வந்ததாலும், நகர் முழுவதும் வெளிச்சம் குறைந்ததாலும், சென்னை பகலிலேயே இருளில் மூழ்கியது.

முதல்வர் வேண்டுகோள்

இதனிடையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வார்தா புயல் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

235 புகார்கள் பதிவு

சென்னையில் மரம் மற்றும் மின் கம்பங்கள் விழுந்தது, நீர் தேங்கியது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 235 புகார்களை மாநகராட்சி பெற்றுள்ளது. இதில் 203 புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்தது தொடர் பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

இந்த புயல் மேற்கு பகுதி பழவேற்காடு அருகே கரையைக் கடந்தது. அதன் மையப் பகுதி மாலை 3.30 மணி அளவில் சென்னை துறை முகம் அருகே கரையைக் கடந்தது. கிழக்கு பகுதி 6.30 மணி அளவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. காற்றின் தாக்கம் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மரக் காணம் ஆகியவற்றுக்கு இடைப் பட்ட பகுதி வரை இருந்தது. புயல் கரைகடந்தாலும் நாளை (இன்று) மாலை வரை மழை நீடிக்கும்.

\


சூறைக் காற்றில் சிக்கி சேதமுற்ற ராயபுரம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம். | படம்: ம.பிரபு


காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, சென்னை மீனம்பாக்கத்தில் 18 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை செம்பரம்பாக்கத்தில் 170 மிமீ, பூந்தமல்லியில் 130 மிமீ, அம்பத்தூரில் 121 மிமீ, திருவள்ளூரில் 116 மிமீ, சோழ வரத்தில் 106 மிமீ, திருவாலங் காட்டில் 97 மிமீ, செங்குன்றத்தில் 93 மிமீ, திருத்தணியில் 93 மிமீ, ஊத்துக்கோட்டையில் 88 மிமீ, பொன்னேரியில் 74 மிமீ, பூண்டியில் 64 மிமீ, தாமரைப்பாக்கத்தில் 52 மிமீ, பெரும்புதூரில் 153 மிமீ, செங்கல்பட்டில் 65 மிமீ, திருக்கழுகுன்றத்தில் 50 மிமீ, காஞ்சிபுரத்தில் 45 மிமீ, மதுராந்த கத்தில் 45 மிமீ, அரக்கோணத்தில் 92 மிமீ, காவேரிபாக்கத்தில் 19 மிமீ, திண்டிவனத்தில் 16 மிமீ, மரக்காணத்தில் 13 மிமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு, இது போன்ற மோசமான புயலை சென்னை சந்தித்துள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

Saturday, December 10, 2016

சசிகலா | கோப்பு படம்

அதிமுகவில் மிகவும் அதிகாரம் வாய்ந்த பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தீவிர முயற்சி: ஜெயலலிதா சமாதியில் சோகத்துடன் அஞ்சலி

அதிமுக பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற சசிகலா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, நேற்று ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர் சோகத்தோடு அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அன்று இரவே, தமி ழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன் னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால், கட்சியின் பொதுச் செய லாளர் பதவி இன்னும் காலியாகவே உள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் என்றாலும், கட்சி விதிகளின்படி, போட்டியின்றி ஒருமனதாகவே பொதுச் செயலாளர் தேர்ந் தெடுக்கப்படுகிறார். அதன்படி, 1988-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 7 முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுச் செயலாளர் பதவி மிகவும் அதிகாரம் வாய்ந்தது என்பதால், அப்பதவியைக் கைப் பற்ற சசிகலா தீவிர முயற்சியி்ல் இறங்கியுள்ளார். இதற்காக, முதல்வர் ஓபிஎஸ், தம்பிதுரை எம்.பி. மற்றும் அமைச்சர்களுடன் கடந்த 3 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்ட செய லாளர்களில் பலர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் தேர்வான வர்கள். எனவே, அவர்களில் பலரும் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருப் பதாக தெரிகிறது. ஆனால், ஒன் றிய, கிளைச் செயலாளர்கள் என அடிமட்ட நிர்வாகிகளிடமும், தொண் டர்களிடமும் சசிகலாவுக்கு அவ்வள வாக ஆதரவு இல்லை. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங் களிலும் சசிகலா எதிர்ப்பு கருத்து களையே அதிகம் காண முடிகிறது.

இதையெல்லாம் மீறி, பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் சசிகலா, கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் தன் மீதான ஆதரவு அலையை உருவாக்கு மாறு அமைச்சர்கள், எம்எல்ஏக் கள், நிர்வாகிகளிடம் அவர் கூறியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, மத்திய பாஜக அரசின் காய் நகர்த்தல்களை சமாளிப்பது, அதிமுகவை திமுக உடைக்காமல் கவனமாக இருப் பது, உள்கட்சியில் இருக்கும் உடைப்பு முயற்சிகளைத் தடுப்பது, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை முன்னிறுத்தி செய் யப்படும் முயற்சிகளை முறியடிப் பது உள்ளிட்டவை குறித்தும் சசிகலா விரிவாக ஆலோசனை நடத்தியுள்ள சசிகலா, இப்பணிகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் ஒப்படைத் திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையில், முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் சசி கலா நேற்றும் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு, ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் தனது குடும்பத்தினருடன் சசிகலா வந்து அஞ்சலி செலுத்தினார். சசிகலா நேற்று மிகுந்த சோகத்துடன் காணப்பட்டதும், ஜெயலலிதாவை வணங்கியதுபோல மிகவும் பவ்யமாக அவருக்கு அமைச்சர்கள் வணக்கம் தெரிவித்ததும் குறிப் பிடத்தக்கது.

NEWS TODAY 14.06.2026