Wednesday, December 14, 2016

22 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை தாக்கிய புயல்


சென்னையை அதிதீவிர புயல் ஒன்று 22 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கியிருப்பது தெரியவந்துள் ளது.

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் வங்கக் கடலில் புயல் உருவாவது வழக்க மானது. இது பெரும்பாலும் தமிழ கம் மற்றும் ஆந்திரா, ஒடிசா அல் லது மேற்கு வங்க கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும். தமி ழகத்தை பொருத்தவரை பெரும் பாலான புயல்கள் கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட் டங்களில் தான் கரையைக் கடக்கும்.

இரு வாரங்களுக்கு முன்பு தமிழக கரையைக் கடந்த ‘நடா’ புயல், நாகப்பட்டினம் அருகே தான் கரையைக் கடந்தது. சென்னையை கரையைக் கடப் பதும், சென்னையை தாக்குவதும் அரிதாகவே நிகழ்கிறது. ஒருசில புயல்கள் மட்டுமே சென்னை அருகே கரையைக் கடக்கின்றன. அவற்றிலும் அரிதானவையே சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளன.

தற்போது சென்னை அருகே கரையைக் கடந்துள்ள அதி தீவிர புயலான வார்தா, சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 192 கி.மீ வேகத்தில் தாக்கியதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற புயல், 22 ஆண்டுகளுக்கு முன்பு 1994-ல் சென்னையை தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2010-ல் உருவான ‘ஜல்’ புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது. 2012-ல் உருவான ‘நிலம்’ புயல், மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இந்த 2 புயல்களும் சென்னை அருகே கரையைக் கடந்தாலும், சென்னைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அதே வேளையில், கடந்த 1994-ல் அக்டோபர் 31-ம் தேதி சென்னையை தாக்கிய புயல், சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது சென்னையில் 24 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அதனைத் தொடர்ந்து அதற்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் புயலாக இந்த வார்தா புயல் விளங்குகிறது. ஒரு அதிதீவிர புயல் ஒன்று சென்னையை தாக்கும் நிகழ்வு, 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் நிகழ்ந்துள்ளது என்று அந்த முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...