Wednesday, December 14, 2016

வர்தா புயலால் தமிழகத்துக்கு ரூ. 6,749 கோடி இழப்பு



வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு, பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த புயலால் தமிழகத்துக்கு ரூ.6,749 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான அசோசாம் கூறியுள்ளது. குறிப்பாக விவசாயம், மீன் துறை ஆகிய இரண்டு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நகர் மற்றும் கிராமம் இரண்டு பகுதிகளுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அசோசாம் கூறியுள்ளது. மேலும், தென் இந்தியாவின் சுற்றுலாத்துறையும் இதனால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...