Monday, December 19, 2016



இது புதுசு: திருமணத்துக்கு முன் எதைப் பேசலாம்?

யாழினி
Return to frontpage

இன்று காலம் ஓரளவு மாறிவிட்டது. திருமணம் முடிந்த பிறகே கணவனை ஏறெடுத்துப் பார்க்கும் நிலை இன்று இல்லை. பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களில்கூட மணமக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் சில மாதங்களாவது நேரம் இருக்கிறது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறுவதற்குள் இருக்கும் இந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே ஒருவரையொருவர் எந்தளவுக்குப் புரிந்துகொள்கின்றனர் என்பது கேள்விக்குறிதான்.

அத்துடன், காதல் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களைவிட ஏற்பாட்டுத் திருமணங்களில் இருக்கும் சிக்கல்கள் இன்றைய சூழலில் அதிகரித்திருக்கின்றன. இந்தச் சிக்கல்களைத் தாண்டி எப்படித் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தேன் என்பது பற்றி நஸ்ரீன் ஃபஸல் என்ற இளம்பெண், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் பகிர்ந்திருந்தார். அவருடைய அனுபவத்தை ஃபேஸ்புக்கில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்திருந்தனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் ‘லைக்’செய்திருக்கின்றனர்.

நஸ்ரீன் ஃபஸல் ஒர் இளம் எழுத்தாளர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்திருக்கிறார். கடந்த நான்கு மாதங்களுக்குமுன் இவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. தற்போது கணவர் அமீனுடன் சவுதி அரேபியாவில் வசித்துவருகிறார். தன்னுடைய ஏற்பாட்டுத் திருமணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு நஸ்ரீன் கூறியிருக்கும் காரணங்கள் பலரையும் ஈர்த்திருக்கின்றன.

என் கணவரை முதல்முறை சந்தித்தபிறகு, என்னைப் பற்றிய அறிமுகத்தை இரண்டு பக்கங்களுக்கு அவருக்கு எழுதி அனுப்பினேன். ஒரு பக்கத்தில், நான் யார் என்பதைத் தெரிவித்திருந்தேன். இன்னொரு பக்கத்தில் என்னுடைய வாழ்க்கைத் துணையிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, அவர் தன்னைப் பற்றிய மூன்று குறிப்புகளையும், எனக்கு நேரடியான மூன்று கேள்விகளையும் அனுப்பியிருந்தார்.

ஒருவரையொருவர் புரிந்துகொள்ளத் தொடங்கிய இந்த முதல் வாரத்தில் நாங்கள் 80 மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டோம்! ஆமாம், எண்பது மின்னஞ்சல்கள். இந்த மின்னஞ்சல்களில் அற்பத்தனமான எந்த விஷயங்களையும் நாங்கள் பேசவில்லை. முழுக்க முழுக்க எங்களுடைய வாழ்க்கையின் முன்னுரிமைகள், எதிர்காலம், வாழ்க்கைத் துணையிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் பற்றித் தொடர்ந்து விவாதித்தோம். பெரும்பாலான கேள்விகளை நான்தான் முன்வைத்தேன்.

‘பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’, ‘முறைகேடு’ Abuse பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’, ‘எப்போது குழந்தைகள் வேண்டுமென்று நினைத்திருக்கிறீர்கள்?’… இப்படிப் பல கேள்விகளைக் கேட்டேன். அவர் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதிலளித்தார். இப்படி இருவரும் திருமணத்தை உறுதிப்படுத்த இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டோம். இந்த முறையான அறிமுகம்தான் எங்கள் உறவின் அடித்தளம்.

நம்முடையது ஒரு வேடிக்கையான கலாசாரம். ஓர் உணவகத்தில் உணவைத் தேர்வு செய்யப் பல மணி நேரம் எடுத்துக்கொள்வோம். ஆனால், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போதுமட்டும், ஓர் ஆணும் பெண்ணும் சில மணிநேரங்களில் (சில சமயங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக) அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இதில் எந்த நியாயமுமில்லை என்று நீள்கிறது நஸ்ரீனின் விவரம்.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் கட்டத்திலிருக்கும் பெண்கள் நஸ்ரீன் சொல்லியிருக்கும் விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உணர்வுகள், ஆன்மிகம், பணி வாழ்க்கை, நிதி நிலைமை, உடல் சார்ந்த எதிர்பார்ப்புகள் போன்ற விஷயங்களைத் திருமணத்துக்குமுன் பேசிவிடுவது நல்லது. கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டு, பேச வேண்டிய விஷயங்களை நேரடியாகப் பேசித் தெளிவு பெற்றபின் திருமணத்தை உறுதிசெய்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.

பெற்றோர் முடிவுசெய்துவிட்டார்கள், அவர்கள் நமக்கு நல்லதுதான் செய்வார்கள் என்ற வழக்கமான வரையறைக்குள் சிக்கிக்கொள்ளாமல் உங்கள் பார்வையிலிருந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை குறித்த தெளிவுடன், ஒத்துப்போகும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும்போது, அது மகிழ்ச்சியானதாகவும் வெற்றிகரமானதாகவும் இருக்கிறது என்ற உண்மையை நஸ்ரீன் தன் அனுபவத்தின் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார்.

மனமே நலமா?- இழப்புத் துயரத்திலிருந்து மீள வழியில்லையா?

டாக்டர். எம்.எஸ்.தம்பிராஜா



நான் இறந்த பிறகு

எனக்காகக் கொஞ்சம் அழு, கண்ணீர் விடு

நம் இனிமையான தருணங்களை

அவ்வப்போது நினைத்துக்கொள்

ஆனால், கொஞ்ச நேரம் நினைத்தால் போதும்.

பின் அந்த நினைவுகளைத் தாண்டிச் செல்

நீ உயிரோடு இருக்கும்வரை

உன் எண்ணங்கள் உயிருள்ளவர்களுடனேயே இருக்கட்டும்” - யாரோ

மனித வாழ்வில் இழப்புகள், குறிப்பாகக் குடும்பத்தினர் ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்புகள், தவிர்க்க முடியாதவை. அன்பார்ந்த ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை. ஒரு தாய் தன் மகனை இழப்பதாலும், ஒரு கணவன் தன் மனைவியைப் பறிகொடுப்பதனாலும் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் ஏற்படும் ஓர் அகால மரணம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். அந்த மரணத்தின் கருநிழல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதே இல்லை.

“ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அவளைத் தேடுவேன். அவள் இல்லை என்று உணரக் கொஞ்ச நேரம் ஆகும். பின் மனதை ஒரு பாரம் அழுத்தும். முக்கியமான ஏதோ ஒரு பொருளைத் தொலைத்துவிட்டபோது ஏற்படும் படபடப்பு இருக்கிறதே, அது போன்ற ஒரு பதற்றம் என் நெஞ்சில் வியாபிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படித்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஆரம்பமாகிறது” - மனைவியை இழந்த ஒருவரின் மனக்குமுறல் இது.

நெருங்கிய ஒருவரின் மரணத்துக்குப் பின் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்குகளைப் பட்டியலிடுவது கடினம். ஆனாலும் இழப்புத் துயரத்தை (Grief) அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தவர்கள், அன்பார்ந்த ஒருவரை இழந்த பின் ஏற்படும் உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் விரிவாக விவரித்துள்ளார்கள்.

உணர்ச்சிக் கோலங்கள்

மரணத்தை அறிந்த பின் முதன்முதலில் ஏற்படுவது மனஅதிர்ச்சி. கூடவே மனம் மரத்துப் போகிறது (Shock and Numbness). மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை உள்ளம் நம்ப மறுக்கிறது. ‘இது உண்மை இல்லை’ என்று தோன்றுகிறது. நடப்பது எல்லாம் வேறொரு உலகத்தில் நடப்பதுபோலத் தோன்றுகிறது. அடுத்ததாக, மெல்ல மெல்ல உண்மை விளங்க ஆரம்பிக்கும்போது, கடும் மனவேதனை ஒருவரை ஆட்கொள்கிறது. நெஞ்சில் வேல் பாய்ந்ததுபோன்று உள்ளம் வலிக்கிறது.

அழுகையை நிறுத்த முடிவதில்லை. கடும் துயரம் மனதை ஆக்கிரமிக்கிறது. ஊன் உறக்கம் கொள்ள முடிவதில்லை. இழந்தவரின் நினைவு மனதை விட்டு நீங்குவதே இல்லை. இதிலிருந்து மீளச் சில வாரங்கள், மாதங்கள் ஆகலாம்.

அதோடு, அவரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்ற உணர்வும் மனதை உறுத்துகிறது. “நான் அவனைப் பள்ளிக்கூடச் சுற்றுலாவுக்கு அனுப்பியிருக்கக் கூடாது” என்று தன்னையே மீண்டும் மீண்டும் கடிந்துகொள்கிறாள், பள்ளிச் சுற்றுலாவின்போது தன் மகனைக் கடலில் பறிகொடுத்த ஒரு தாய். இந்தக் கட்டத்தில் தன்னையே குறைகூறுவதும் (“நான் மட்டும் அன்று அவர் கூடவே இருந்திருந்தால், அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்கலாம்”), மற்றவர்களைக் குற்றம்சாட்டுவதும் (“அந்த டாக்டர் சரியாகக் கவனிக்கவில்லை”) சகஜம்.

சில வேளைகளில் இறந்தவர் மீதே கடும் கோபம் கொள்வதும் உண்டு (“இந்த மனுஷன் என்னைத் தனியே விட்டுவிட்டுத் தான் போய்ச் சேர்ந்துவிட்டான்”). ஆனால் இம்மாதிரியான எண்ணங்களால் குற்ற உணர்வு பெரிதாகி, அதை வெளியே சொல்வதற்குத் தயங்கவும் செய்யலாம்.

குரலும் இருப்பும்

இறந்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல், நடந்ததையே நினைத்து நினைத்து மனம் வருந்துவது தவிர்க்க முடியாத ஒன்று. சில வேளைகளில் இறந்தவர் தன்னுடன் பேசுவதுபோல அவருடைய குரல் கேட்கலாம்; அவர் அருகில் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். ஆனால், இவை நெடுங்காலம் நீடிப்பதில்லை.

இவ்வாறாக ஒரு மரணத்துக்குப் பின் மனஅதிர்ச்சி, மனவலி, கோபம், குற்ற உணர்வு, மன சஞ்சலம் ஆகிய பல தரப்பட்ட மனவெழுச்சிகளுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். இவை குறிப்பிட்ட எந்த ஒழுங்குமின்றி மனதை வியாபிப்பதுதான் இழப்புத் துயரத்தின் தன்மை.

எப்படிக் குறைப்பது?

பொதுவாக, இழப்புத் துயரம் ஓரிரு ஆண்டுகள்வரை நீடிக்கும். பின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும். இறந்தவர் இல்லாமல் வாழ்க்கையைச் சீரமைக்க வேண்டி இருக்கும். ஆனாலும் இறந்தவரின் நினைவு, நிழல்போல நெடுங்காலம் தொடரும். ஒருவரது மரணத்துக்குப் பின் நடத்தப்படும் இறப்புச் சடங்குகள் சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபட்டாலும், இவை இழப்புத் துயரத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இழப்புத் துயரம் உடலையும் வெகுவாகப் பாதிக்கிறது. மனைவியை இழந்த ஆண்களில் பலர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மரணமடைகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாத்துக்கொள்ளும் திறனும் இழப்புத் துயரத்தின்போது குறைகிறது.

சாதாரண இழப்புத் துயரத்தின்போது ஏற்படும் மனவேதனைக்கு மருந்துகள் தேவை இல்லை. காலம்தான் இவர்களுக்கு மருந்து. சிலர் தூக்க மாத்திரையைப் போட்டுக்கொள்வது உண்டு; சிலர் மது அருந்தி மனதை மரத்துப்போகச் செய்வதுண்டு. இவை பயன் தருவதில்லை. சிகிச்சை ஏதும் இல்லாமலேயே ஓரிரு ஆண்டுகளில் சாதாரண இழப்புத் துயரம் தானாகக் குறையும். நெருக்கமானவர்களுடன் தன் மனவேதனையைப் பகிர்ந்து கொள்வது இழப்புத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு உதவும்.

தீராத இழப்புத் துயரம்

சில மரணங்கள் தீவிரமான இழப்புத் துயரத்தை உண்டாக்கலாம். தற்கொலைகள், அகால மரணங்கள் போன்றவை ஏற்படுத்தும் துயரம் கடுமையாகவும் நெடுங்காலம் நீடிப்பவையாகவும் அமையலாம். இது தீராத இழப்புத் துயரம் (Unresolved grief) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் பல ஆண்டுகள் கழிந்த பின்னும் தான் இழந்தவரைப் பற்றி பேசும்போது மிகுதியாக உணர்ச்சிவசப்படுகிறார் என்றால், அவர் இன்னும் அந்தத் துயரத்தில் இருந்து விடுபடவில்லை என்று கூறலாம்.

இறந்தவரின் சடலத்தைக் காணக் கிடைக்காதபோது ஏற்படும் துயரம் இவ்வகையைச் சேர்ந்தது. இறந்தவர் ஒரு நாள் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில், இவர்கள் நாட்களைக் கடத்துகிறார்கள். அவர் திரும்பி வருவது சாத்தியமில்லை என்பது அடிமனதில் தெரிந்தால்கூட, அதை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.

உதாரணமாக, படிப்புக்காக வெளிநாடு சென்று விபத்தில் இறந்துவிட்ட ஒரு மாணவனின் தாய் (அவருக்கு மகனின் உடல் காணக் கிடைக்கவில்லை) பத்து ஆண்டுகளுக்கு மேலாக எவரையும் தன் மகனின் அறைக்குள் போக அனுமதிக்காமல், அந்த அறையைப் பழசு போலவே வைத்திருந்தார்! இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏறக்குறைய 20,000 பேர் ‘காணாமல் போனார்கள்’. இவர்களின் பெற்றோர், உறவினர் படும் இழப்புத் துயரமும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.

தீராத இழப்புத் துயரத்துக்கு உளவியல் ஆலோசனை அவசியம். கடுமையான இழப்புத் துயரம் மனச்சோர்வுக்கும் வழி வகுத்துவிடலாம். எனவே, அதற்கு ஆலோசனை பெறுவதே சிறந்தது.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

பெண் குழந்தை போற்றுவோம்: பெண் குழந்தை பிறந்தால் பரிசு!

என். முருகவேல்

அடுத்தவன் வூட்டுக்குப் போற பொம்பள புள்ளையப் பெத்துட்டு, அதுக்குக் காலம் முழுக்கக் காவலா இருக்க முடியும்? பெத்தோம், கட்டிக் கொடுத்தோம்ன்னு இல்லாம, அதுகளைப் படிக்க வச்சு, நகை நட்டுப் போட்டுக் கட்டிக் கொடுக்க நாங்க எங்கே போறது? அதான் கலைச்சிப்புடறது” என்று சொன்ன தொட்டிக்குப்பத்தைச் சேர்ந்த சின்னாயியும், “பொண்ணுங்க வீட்ல இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. வெளியில் போனாலும் பாதுகாப்பு இல்லை. அதுக்குப் பயந்துகிட்டு எங்க ஊரில் பாதிப் பேரு பொண்ணுன்னு தெரிஞ்சாலே கலைச்சிடறாங்க” என்ற எம்.பட்டியைச் சேர்ந்த வினோதினியும் இன்று தங்கள் கருத்துகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

விருத்தாசலம் சுற்றுவட்டாரக் கிராமங்கள் கருக்கலைப்பின் கரும்புள்ளி கிராமங்களாக விளங்கின. மங்கலம்பேட்டை, மங்களூர், முகாசா பரூர், எம்.பட்டி, எறுமனூர், தொட்டிக்குப்பம், மு.அகரம், எடச்சித்தூர், மாத்தூர் உள்ளிட்டக் கிராமங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் சராசரிக்கும் குறைவாக இருந்தது. 1000 ஆண்களுக்கு 983 பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை கிராமங்களில் ’மக்கள் கருத்தொளி இயக்கம்’ மூலம் சில ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்தி வந்தது. பெண் குழந்தைகள் பிறப்பைத் தடுக்கும் முக்கியக் காரணிகளைக் கண்டறிந்து, முதல்கட்டமாக 6 ஸ்கேன் மையங்களை மூடியிருக்கிறது. வரதட்சிணை, பெண் மீதான அடக்குமுறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

பெண் குழந்தை வளர்ப்பின் எதிர்காலம் குறித்த கவலைகளைப் போக்கி, பெண் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ‘பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்!’ என்ற மத்திய அரசின் திட்டம் தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதியை, பெண் குழந்தை தினமாகக் கொண்டாடி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு உபகரணங்கள், மத்திய அரசின் ஜனனி சுரக் ஷா யோஜனா திட்டத்தின் கீழ் 700 ரூபாயும், தாயின் பங்களிப்புடன் கூடிய செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்கையும் ஆரம்பித்துக் கொடுக்கின்றனர். பெண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழையும் ஒரு மரக்கன்றையும் வழங்குகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது கிராமங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 5 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். பெண்களைக் கொண்டாடும் மாவட்டமாகக் கடலூர் மாறும் காலம் தொலைவில் இல்லை.

சட்ட விரோதமாக ரூபாய் நோட்டு மாற்றிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேர் பெங்களூருவில் கைது: சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை

இரா. வினோத்

சட்ட விரோதமாக‌ செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேரை பெங்களூருவில் கைது செய்து சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக‌ விசாரித்து வருகின்றனர்.

மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த வருமான வரித்துறை நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதமாக க‌ர்நாடகாவில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் ரூ. 200 கோடிக்கும் அதிகமான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண ஏழை எளிய மக்கள் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருக்கும் நிலையில், வருமான வரித்துறை பண முதலைகளிடம் இருந்து கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து வருகிறது. வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவர்களிடம் சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கறுப்புப் பணத்தை புதிய ரூபாய் நோட்டுகளாக‌ மாற்றிக் கொடுத்ததில் அரசு அதிகாரிகள், தனியார் வங்கி அதிகாரிகள், இடைத் தரகர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாகவே பெங்களூருவில் கடந்த வாரம் வங்கி அதிகாரிகள் 5 பேர், இடைத் தரகர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு ரிசர்வ் வங்கி அதிகாரி மைக்கேல் சட்ட விரோதமாக ரூ. 6 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் சட்ட விரோதமாக பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த பெங்களூரு ரிசர்வ் வங்கி கிளையின் மூத்த சிறப்பு உதவியாளர் சதானந்த நாயக்கா மற்றும் சிறப்பு உதவியாளர் கவின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு ரூ. 1.99 கோடி மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய்களை மாற்றிக்கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ விசாரித்து சட்ட விரோத செயல்பாடு, ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 2 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. கைதாகியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இருவரும் நேற்று பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கைதான ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Is Group Admin Liable For Defamatory Texts Made By A Member? Delhi HC Says No 
The Delhi High Court, while dismissing a civil suit for defamation against an administrator of a social media group, observed that he cannot be made liable for defamatory statements made by any other member of the group. Justice Rajiv Sahai Endlaw said: 

“I am unable to understand as to how the administrator of a group can be held liable for defamation even if any, by the statements made by a member of the group.” The court said that making an administrator of an online platform liable for defamation would be akin to making the manufacturer of the newsprint on which defamatory statements are published liable for defamation. “When an online platform is created, the creator, thereof, cannot expect any of the members thereof to indulge in defamation and defamatory statements made by any member of the group cannot make the administrator liable therefore. 

It is not as if without the administrator’s approval of each of the statements, the statements cannot be posted by any of the members of the group on the said platform,” the court observed. The administrator of Telegram and a Google group, where some defamatory statements were allegedly made by some members, was made defendant to the suit. The court observed that the plaint does not disclose any cause of action against the admin and it deserves to be rejected.

Read more at: http://www.livelaw.in/group-admin-liable-defamatory-texts-made-member-delhi-hc-says-no/
527 Days In Hospital To Evade Arrest: SC Holds Doctors Guilty Of Contempt

Hospitals and doctors who give shelter to criminals to escape from arrests will now have to think twice as they can also be held guilty of contempt of court.

 The Supreme Court, in Sita Ram vs. Balbir, has held two medical professionals guilty of contempt for granting medical asylum to an accused, without there being any reason or medical condition justifying his prolonged admission as an indoor patient. However, the court has not yet imposed any punishment on them and has granted them one more opportunity to present their view on the issue. It was revealed in the inquiry that the accused remained admitted in the hospital for 527 days and no laboratory test was conducted during the period of admission. 

“It is inconceivable that in normal circumstances, a man, who has no ailment or a medical condition requiring emergency treatment, would be kept as indoor patient without any laboratory test and without recovering a single paisa for more than 247 days,” the bench headed by the Chief Justice of India observed. The court also considered the question whether a person, who is not bound by a direction issued by the court, could be held guilty for committing contempt of court for his conduct in either directly aiding and abetting violation on part of the person who is bound by such direction. Referring to three English decisions, Seaward v. Paterson, Attorney General v. Times Newspapers Ltd. and another, and Z Ltd. v, the court held that the doctors were guilty for having helped the accused in his attempts to violate the court order and, thereby, obstructing the administration of justice. 

“We have found that the continued admission for such a long period as indoor patient was not justifiable for any reason or medical condition of the respondent. Both these medical professionals are responsible for such prolonged admission, which was actuated by only one reason -which was to extend medical asylum to the respondent as a cover to defeat the orders passed by this court and the trial court,” the court said while directing the doctors to be present in the court on 2nd January.

Read more at: http://www.livelaw.in/527-days-hospital-evade-arrest-sc-holds-doctors-guilty-contempt/

Saturday, December 17, 2016


தரமற்ற உணவகங்கள்

By எஸ். ரவீந்திரன் | Published on : 17th December 2016 01:23 AM | அ+அ அ- |

வாரம் ஒருமுறை குடும்பத்தோடு நல்ல உணவகத்துக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதில் கமகமக்கும் வாசனை, மூக்கைத் துளைக்க வைக்கும் அசைவ உணவகத்தைத் தேடி செல்பவர்கள் பலர். செல்லிடப்பேசி அல்லது குறுஞ்செய்தியை அனுப்பினால் போதும். அடுத்த நிமிடம் உங்கள் வீட்டுக்கே வந்து சுவையான உணவை தர உணவகங்கள் தயார்.
இவர்கள் இயந்திரத்தனமான வாழ்க்கையில் சுழல்வதை காசாக்கிப் பார்க்கிறார்கள். எனவே நம்பிக்கையுடன் அங்கு சென்று விதவிதமாக ருசித்துப் பார்த்து கேட்ட தொகையையும் கொடுத்துவிட்டு வருபவர்களுக்கு அண்மையில் இடிபோல வந்திறங்கியிருக்கிறது ஒரு செய்தி. அது, தரமான அசைவ உணவகங்களில் இறைச்சிகளில் கலப்படம் என்பதுதான்.
மனிதர்களுக்கு முதலில் நம்பிக்கை தேவை. ஆனால் நம்பிக்கை மோசடி செய்து ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சியில் கலப்படம் செய்து இப்படி ஒரு பிழைப்பை நடத்துபவர்களை என்ன செய்வது?
பொதுவாக அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் உணவகங்களுக்குச் செல்வதை முடிந்தவரையில் தவிர்க்கலாம். ஒரு சில நல்ல உணவகங்கள் இத்தகு இழிசெயலில் இறங்குவதில்லை.
நம்மில் பலருக்கும் விசித்திர குணம் ஒன்று உண்டு. மலிவு என்று கேள்விப்பட்டால் போதும். எப்பேர்ப்பட்ட வேலையையும் விட்டுவிட்டு அங்கு சென்றுவிடுவார்கள்.
மலிவு என்றாலே அது போலி அல்லது திருட்டுத்தனம் செய்வதாகத்தான் அர்த்தம். தரமான பொருள்களின் விலை அதிகமாகத்தான் இருக்கும். அதற்காக மலிவானவற்றை வாங்குவதால் ஆரோக்கியம், செலவு என அனைத்திலுமே கேடுதான் விளையும்.
அதேபோல அசைவ உணவகங்களில் குறைந்த விலையில் உணவை தரும்போது இந்த விலைக்கு இறைச்சி வாங்க முடியுமா என நாம் யோசிக்க வேண்டும். நாய்க்கறி, பூனைக்கறி போன்றவற்றை மனது வந்து எப்படி கலக்கிறார்களோ தெரியவில்லை.
இன்றைய நிலையில் கலப்படமற்ற இறைச்சி என்றால் கோழியைக் கூறலாம். அதுவும் உயிரோடு வாங்கும் வரைதான். இன்னும் ஒரு பொருளில் கலப்படம் செய்ய முடியாது. அது மீன் வகை எனலாம். இந்த காலத்தில் அதிலும் பழைய மீன்களை கலந்து விடுகின்றனர்.
இது தவிர பறவையினங்களில் கலப்படம், மாடு,ஆடு இறைச்சிகளில் நோய் தாக்கிய கால்நடைகள், இறக்கும் தருவாயில் உள்ளவை, இளங்கன்றுகள் என பலதரப்பட்ட இறைச்சிகளைக் கலக்கின்றனர்.
பெரும்பாலான உணவகங்களில் முந்தைய நாளில் மிஞ்சியிருக்கும் இறைச்சிகளை வினிகர் போன்ற ரசாயனங்களைக் கலந்து மறுநாளில் பயன்படுத்துகின்றனர். இவற்றை அத்தனை எளிதில் யாராலும் கண்டறிய முடியாது.
சுவையூட்டிகளில் சுகாதாரத்துறையினரால் அனுமதிக்கப்பட்டவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. உதாரணமாக வெள்ளி நிறத்தில் கேக், பிஸ்கெட் போன்றவற்றில் கலக்கப்படுபவை மாட்டு கொழுப்பால் தயாரிக்கப்படுபவையாகும்.
இதேபோல அடர்த்தியான குழம்பு வகைகளிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால் அது பார்த்தாலே ருசியைத் தூண்டும். இவ்விதமாக பல பொருள்கள் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக சுகாதாரத்துறையினர் பயனுள்ள வழிகாட்டுதல்களை சம்பந்தபட்ட உணவகங்களுக்கு வழங்கியிருந்தாலும் அவை கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருக்கின்றன.
இது போன்ற புகார்களுக்காகவே மத்திய அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி குறைந்தது ரூபாய் ஒரு லட்சமும் அதிகபட்சமாக ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தனை சட்டங்கள் இருந்தபோதிலும் அதை அலட்சியப்படுத்துவதுதான் நடந்து வருகிறது.
இதைத் தடுக்க உணவகங்களுக்கு வாங்கப்படும் இறைச்சிக்கு சுகாதார அதிகாரிகள் சீல் வைத்து தர வேண்டும். இது நடக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் பாதுகாப்பு, சுகாதாரமான இறைச்சிகளை வழங்குவதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அது இல்லாதவரை கலப்படத்தை ஒழிக்க முடியாது.
மேலும் மசாலா, சுவையூட்டிகள் கலப்பதால் அது எந்த இறைச்சி என கண்டுபிடிப்பதற்கு சிரமமாக இருக்கும். எனவே முடிந்தவரை அசைவ உணவுகளை உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நம் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
சரி அசைவத்துக்கு மட்டும்தான் இந்த கலப்படம் என்றால் இல்லை. ஏனெனில் சைவத்திலும் கைவரிசை காட்டுவோர் உள்ளனர். தரமில்லா மசாலா பொருள்கள். அசுத்தமான குடிநீர், இலைகளுக்குப் பதில் சுற்றுப்புறக்கேடு தரும் பிளாஸ்டிக் தாள்கள், பருப்புகளில் கலப்படம் செய்து சமைக்கப்படும் கூட்டு, சாம்பார்,குழம்பு வகைகள் என சொல்லி மாளாது.
குறிப்பாக மசாலாப் பொருள்களில்தான் அதிகமாக கலப்படம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வோருக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் விரைவிலேயே வெளியில் வந்து மீண்டும் தங்கள் தொழிலைத் தொடர்கின்றனர்.
பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டுள்ள சைவ, அசைவ மசாலாக்களை பயன்படுத்தக் கூடாது. இப்படி தொடர்ச்சியாக இப்பொருள்கள் உடலில் சேர்வதால் புற்றுநோய், தோல்நோய், அஜீரணக்கோளாறு, வயிறு உபாதைகள் என ஏற்படுவதுடன் உயிருக்கே ஆபத்தை உண்டாக்குகின்றன.
எனவே கூடிய வரையில் வீடுகளில் கையினால் தயாரிக்கப்படும் மசாலா வகைகளை பயன்படுத்துவதே சிறந்தது. பழங்காலத்தில் தயாரித்த உணவுப் பக்குவத்தை இப்போது யாருமே பின்பற்றுவதில்லை. அவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு எந்தவித நோய்களும் வராமல் தடுக்கலாம்.
மிகவும் இக்கட்டான நிலை ஏற்பட்டால் தவிர மற்ற சமயங்களில் உணவகங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுதான் ஒரே வழி. ஆகவே கலப்படம் செய்து உணவகம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து இனி அத் தொழிலை அவர்கள் மீண்டும் நடத்த முடியாதவாறு செய்ய வேண்டும். அதுவரை கலப்படத்தைத் தவிர்க்கவே முடியாது.

NEWS TODAY 08.06.2026