Monday, December 19, 2016


ESIC hosp in a fix as MCI declines renewal permission

By Ram M Sundaram | Express News Service | Published: 18th December 2016 01:50 AM |

Last Updated: 18th December 2016 04:46 AM | A+A A- |


CHENNAI: The ESIC Medical College Hospital, Chennai, is in troubled waters again after the Medical Council of India declined renewal of MBBS admissions for the forthcoming academic year.

The apex medical regulating body has cited unhygienic student hostel rooms, underqualified staff and shortage of essential facilities as reasons for rejecting the proposal to renew permission for fifth batch.

It all began in March last when the Employees’ State Insurance Corporation under the Union Labour Ministry signalled its intention to withdraw from the field of medical education. As this raised questions about future of hundreds of students studying in 11 institutes under the corporation, including the one in Chennai, the college located in K K Nagar witnessed a series of protests by students and staff condemning the corporation’s move.

After much struggle, it finally took the State government’s intervention to restore calm after it took over the operation of the institute under an agreement with the Centre.

Amid all this chaos, the MCI denied permission to admit students pointing out a series of deficiencies for the 2016-17 batch (4th batch). This was repealed after the ESIC authorities submitted compliance report.
However, the same problem has seemed to have surfaced again this year. The executive committee of MCI which met on October 10 declined permission to admit students for MBBS course in the forthcoming year.
The committee members who inspected the college in the previous week cited as many as 25 reasons to deny permission, including 15.97 per cent deficiency in faculty and 27.94 per cent shortage of resident doctors.

Their report also mentioned that the college’s medical superintendent Sowmya Sampath possessed only eight years of administrative experience against requirement of 10 years and hence was not qualified to hold the post. When Express contacted her, she refused to comment.
“Apart from leaky roofs in the central library, the exam hall, students’ hostel were under construction and there was no internet connection,” government sources said.

Responding to this, a senior ESIC administrator said that they have rectified these deficiencies within the stipulated deadline (30 days) and have sent a compliance report to the MCI. The college is awaiting fresh inspection from the committee members before May.


புயல் கற்றுத் தந்த பாடம்

ராஜலஷ்மி நிர்மல்

கடந்த வார வார்தா புயல் நம்மை கிட்டத்தட்ட அபாயத்தின் உச்சிக்கு அழைத்து சென்றுவிட்டது. இதுபோன்ற ஒரு புயல் காற்றை சென்னை சந்திக்கவில்லை என்று சொல்கின்றனர். புயல் ஓய்ந்த பின்னரே எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பதை பார்க்கமுடிந்தது. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து கிடந்தன. அதுமட்டுமல்லாமல் வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களும் மிகப் பெரிய அளவுக்கு சேதமடைந்தன. வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பு 6,500 கோடி ரூபாய் இருக்கும் என அசோசேம் மதிப்பிட்டுள்ளது. இது ஒரு தனி நிகழ்வு அல்ல. இந்தியா முழுவதும் வருடந்தோறும் புயலால் மிகப் பெரிய பொருளாதார இழப்பு நேரிடுகிறது என்பதே உண்மை.

பொதுவாக புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது தனிநபர்களின் பொருட்கள், வாகனங்கள், வீடு ஆகியவைதான் மிகப்பெரிய அளவு பாதிப்புக்கு உள்ளாகும். இவற்றிக்கு காப்பீடு எடுத்திருந்தால் இழப்பை ஈடுகட்டிருக்காலமே என்று நமக்கு தோன்றும். சிலர் காப்பீடு எடுத்திருப்பார்கள் ஆனால் இழப்பீடு கோரும் பொழுது இவை உங்கள் பாலிசியின் கீழ் வரவில்லை என இழப்பீடு மறுக்கப்படும். ஆகவே காப்பீடு எடுக்கும்போது கவனமாக எடுக்க வேண்டியது அவசியமாகிறது. கார் மற்றும் வீடுகளுக்கான காப்பீடு எடுக்கும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வாகன காப்பீடு

பொதுவாக இருவகையான வாகன காப்பீடுகள் உள்ளன. ஒன்று தானாக பாதிப்பு ஏற்படுவதற்கான காப்பீடு.மற்றொன்று மூன்றாவது நபரால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீடு. புயல் மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்பு மூன்றாவது நபரால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீட்டின் கீழ் வரும்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தில் நிறைய கார்கள் பாதிப்புக்கு உள்ளாயின. காப்பீடு செய்து வைத்திருந்தவர்கள் பாதிப் படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கோரினர். ஆனால் பலருக்கு இழப்பீடு விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டன. தண்ணீர் தேங்கியிருந்த பகுதியில் தொடர்ந்து இருந்ததால் ஏற்பட்ட தொடர்ச்சியான அழிவு என்று மறுத்தனர். தொடர்ச்சியான அழிவு வாகன காப்பீட்டின் கீழ் வருவதில்லை என்று ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்தை சார்ந்த சஞ்சய் தத்தா கூறுகிறார்.

புயல் போன்ற இயற்கை பேரிடர் களுக்கு அப்படி இல்லை. மரத்தின் கீழ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு சூறாவளி காற்றினால் மரம் சாய்ந்து வாகனத்திற்கு இழப்பீடு ஏற்படுமாயின் அது வாகன காப்பீட்டின் கீழ் வரும் என்கிறார் எஸ்பிஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டு பிரிவின் தலைவர் பங்கஜ் வர்மா.

காரில் உள்ள மியூசிக் பிளேயர், ஸ்டீரியோ சிஸ்டம்ஸ், பார்க்கிங் கேமரா ஆகியவை சாதரணமான வாகன காப்பீட்டில் வராது. காரில் ரப்பர், பிளாஸ்டிக், நைலான் பகுதிகள், டயர், டியூப், பேட்டரி ஆகியவற்றில் 50 சதவீதம் தேய்மானமாக கருதப்படும். கண்ணாடி பாகங்களுக்கு 30 சதவீதம் தேய்மானமாக கருதப்படும்.

நீங்கள் எடுக்கும் பாலிசியோடு கூடு தலாக பிரீமியம் தொகை செலுத்தினால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க் கலாம். இன்ஜினுக்கென்று உங்கள் பாலிசி தொகையோடு சேர்த்து பிரீமியம் செலுத்த முடியும். விலையுயர்ந்த பொருட்களுக்கும் கூடுதல் பிரீமியம் செலுத்த முடியும்.

வீடுகளுக்கான காப்பீடு

கடந்த வாரம் ஏற்பட்ட புயலால் கட்டிடங்கள் மட்டுமல்ல கட்டிடத்தின் உள்ளே இருந்த ஏசி, கதவுகள், கண்ணாடி கதவுகள், பர்னிச்சர் பொருட்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதுபோன்ற சேதங்களை தவிர்க்க வீடுகளுக்கு காப்பீடு எடுப்பதும் அவசியமாகிறது.

வீடுகளுக்கான காப்பீட்டில் தீயால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீடு மற்றும் பூகம்பம், தீ, வெள்ளம், புயல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புக்களுக்கான விரிவான காப்பீடு என இருவகைகள் உள்ளன. தீயினால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீட்டில் தொடர்ச்சியான இழப்புகள் இதன் கீழ் வராது. ஆனால் நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனம் தீயினால் ஏற்படும் இழப்புக்கான காப்பீட்டில் மின்சார ஷார்ட் சர்க்யூட்டால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குகிறது.

அதேபோல் வீடு முழுவதும் சேதமடைந்தலோ அல்லது ஒரு பகுதி இடிந்து விழுந்தாலோ அதற்காக தனி காப்பீடு வசதி இருக்கிறது. சில தேய்மானங்களை தவிர மீதமுள்ள இழப்பீடு தொகையை வழங்குகின்றன. எலெட்க்ரிக்கல் அல்லது மெக்கானிக்கலாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கென்றும் தனியான காப்பீடு இருக்கிறது.

இப்படி வாகன காப்பீடு மற்றும் வீடுகளுக்கான காப்பீடு எடுக்கும் போது நாம் எதற்காக காப்பீடு எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். காப்பீடு எடுத்துவிட்டோம் இனி கவலையில்லை என்று நினைக்காதீர்கள். நம் பாலிசியில் என்னவெல்லாம் வருகிறது என்பதை பாருங்கள். நம் தேவை இதுதானா என்பதை புரிந்து கொண்டு காப்பீடுகளை எடுத்துவிட்டால் எவ்வளவு பெரிய இழப்பையும் தவிர்க்கலாம்.

தொடர்புக்கு: rajalakshmi.nirmal@thehindu.co.in

அரசியல் நாகரிகம் முளைக்கிறதா, மீண்டும் தழைக்கிறதா?

ஆர்.முத்துக்குமார்

திமுக, அதிமுக தலைவர்களிடம் தென்படும் மாற்றம் கவனிக்க வைக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை அதிமுகவின் முன்னணித் தலைவர்களான தம்பிதுரையும் ஜெயக்குமாரும் நேரில் சென்று நலன் விசாரித்த செய்தி இன்றைய பேசுபொருளாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் அரும்பத் தொடங்கியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவன்று.

அடிப்படையில் ராஜாஜியும் பெரியாரும் இருவேறு துருவங்கள். ஆத்திகம்தான் ராஜாஜியின் சுவாசம்; பெரியாருக்கோ பகுத்தறிவுதான் பிரதானம். ஆனால், சித்தாந்தப் பின்புலங்களைத் தாண்டி இருவருமே அணுக்க நண்பர்கள். தன்னுடைய தனி வாழ்க்கை தொடர்பான அதிமுக்கிய முடிவான மணியம்மையை மணம் செய்துகொள்ளும் முடிவு குறித்து ராஜாஜியிடம் கலந்து பேசியவர் பெரியார். அப்போது தான் கொடுத்த யோசனை என்ன என்பதைக் கடைசி வரை ராஜாஜி பகிரங்கப்படுத்தவில்லை. அவர்களுக்கு இடையிலான நட்பு அந்த அளவுக்கு நாகரிகம் தோய்ந்தது. கொள்கை எதிரியாக இருந்தபோதும் ராஜாஜி மறைந்தபோது, அவரது இறுதிப் பயணத்தில் வாய்விட்டு அழுதபடியே சென்றார் பெரியார்.

ஆரோக்கிய அரசியல்

திமுக ஆட்சியின்போது இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார் முதல்வர் அண்ணா. அப்போது திமுகவின் பிரதான அரசியல் எதிரி காங்கிரஸ். ஆனாலும், அந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் மூவருக்கும் தரப்பட்ட மரியாதையும் கெளரவமும் ஆரோக்கிய அரசியலின் அடையாளங்கள். மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தியவர் காமராஜர்; மாநாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட கம்பரின் சிலையைத் திறந்தவர் பக்தவத்சலம்; மாநாட்டின் கலைப் பொருட்காட்சியைத் திறந்தவர் ராஜாஜி.

முதல்வர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலின் திருமணத்துக்கு வருமாறு காமராஜருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது காமராஜருக்கு உடல்நிலை சரியில்லை. ஆனாலும், காமராஜரின் வருகை அவசியம் என்று கருதிய கருணாநிதி, அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி திருமண அரங்கில், மணமக்கள் அமரும் மேடை வரைக்கும் கார் வருவதற்குத் தோதாகச் சிறப்புவழி ஏற்பாடு செய்தார். அதனை ஏற்று, காரிலேயே மேடைவரை வந்து மணமக்களை வாழ்த்திப் பேசினார் காமராஜர்.

அணுக்க நண்பர்களாக இருந்து அரசியல் எதிரிகளாக மாறிய எம்ஜிஆரும் கருணாநிதியும்கூட அரசியல் நாகரிகம் பேணுவதில் ஆர்வம் செலுத்தியவர்களே. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, தனது மகள் டாக்டர் தமிழிசையின் திருமண விழாவில் பங்கேற்க எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவருக்கும் அழைப்புவிடுத்தார் குமரி அனந்தன். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, இருவரும் ஒரே மேடையில் நின்று, மணமக்களை வாழ்த்திப் பேசினர். அனல் பறக்கும் விவாதங்களுக்குப் பிறகும்கூட கருணாநிதியும் எம்ஜிஆரும் சட்டமன்றத்தில் அருகருகே அமர்ந்து பேசியதுண்டு. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காமராஜரின் படம் வைக்கப்பட்டது. அந்தப் படத்துக்குக் கீழே எந்தப் பொன்மொழி இடம்பெற வேண்டும் என்பதை கருணாநிதியிடம் கேட்டார் எம்ஜிஆர். அவரது ஆலோசனைக்கேற்ப ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொன்மொழியைப் பொறித்தார் முதல்வர் எம்ஜிஆர்.

கருணாநிதியின் கடிதம்

எண்பதுகளின் மத்தியில் எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த தருணத்தில், “நானும் பிரார்த்தனை செய்கிறேன்” என்ற தலைப்பில் கருணாநிதி எழுதிய உருக்கமான கடிதம் முக்கியமானது. மேடைகளில் அதிமுகவும் திமுகவும் அமிலம் சுரக்கும் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில், எம்ஜிஆரின் உடல்நிலை பற்றி திமுகவினர் யாரும் மேடைகளில் பேசக் கூடாது என்று கருணாநிதி உத்தரவிட்டிருக்கிறார். எம்ஜிஆர் மரணம் அடைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் தனது சுற்றுப்பயணத்தைப் பாதியில் ரத்துசெய்துவிட்டு வந்தார் கருணாநிதி. அப்போது திமுக சார்பில் நடக்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு வார காலத்துக்கு ரத்துசெய்யப்பட்டன.

மேற்கண்ட நிகழ்வுகளின் பொருள், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் அன்பின் வடிவமாக, ஒரு தாய் மக்களாக, அரசியல் நாகரிகத்தின் நாடு போற்றும் அடையாளங்களாக மட்டுமே இருந்தனர் என்பதல்ல. அரசியல் விமர்சனங்கள் இருக்கவே செய்தன. கண்டனக் கணைகளைப் பரஸ்பரம் பொழிந்துகொள்ளவே செய்தனர். ஆனாலும், அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உறவுகளில் பெரிய சிக்கல்களையோ, உரசல்களையோ ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

ஆனால், எண்பதுகளின் இறுதியில் தமிழ்நாட்டு அரசியல் களம் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமாக மாறியபோது, மேற்கண்ட அடிப்படைகள் ஆட்டம் காணத் தொடங்கின. அரசியல் எதிரிகளாக இருக்க வேண்டியவர்கள் தனிப்பட்ட எதிரிகளாக இயங்க ஆரம்பித்தனர். பொதுவான விழாக்களிலோ, தனிப்பட்ட நிகழ்வுகளிலோ கருணாநிதியும் ஜெயலலிதாவும் பரஸ்பரம் பங்கேற்பதோ, சந்தித்துக்கொள்வதோ கிடையாது. பொது நிகழ்ச்சியில் சந்திப்பதுகூட அந்தத் தலைவர்களின் பிரத்யேக விருப்பம், தனி உரிமை என்று தவிர்த்துவிடலாம்.

ஆனால், கட்டாயம் பங்கேற்க வேண்டிய சட்டமன்றத்தில் கூட ஜெயலலிதாவும் கருணாநிதியும் சந்தித்துக்கொள்வதை இருவருமே தவிர்த்துவிட்டார்கள். விதிவிலக்காக, திமுக சார்பில் சுனாமி நிவாரண நிதியைத் தருவதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை ஸ்டாலின் நேரில் சந்தித்ததையும் அப்போது கருணாநிதியின் உடல்நலன் குறித்து ஜெயலலிதா விசாரித்ததையும் சொல்லலாம். மற்றபடி, தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக, அதிமுக - திமுக தலைவர்கள் மத்தியில் பரஸ்பர உறவு நாகரிகம் பலவீனமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

மாறும் சூழல்

என்றாலும், சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இரு தரப்பிலும் சிறுசிறு மாற்றங்கள் தென்படுகின்றன. பதவியேற்பு விழாவில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில் முதல்வர் வெளியிட்ட அறிக்கை, எதிரிக் கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று ஸ்டாலின் சொன்னது ஆகியன வெகுவாக வரவேற்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ‘அவர்மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல்நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி வெளியிட்டதும், அதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரித்ததும் அடுத்தடுத்து நடந்தன. உச்சபட்சமாக, முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஸ்டாலின் பங்கேற்றார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை அதிமுக தலைவர்கள் சந்தித்ததும் நலன் விசாரித்து வாழ்த்து சொன்னதும் நடந்தேறியிருக்கின்றன.

ஆக, தமிழகத்தில் மீண்டும் பழைய அரசியல் நாகரிகம் தழைக்கிறது என்று தாராளமாகச் சொல்லலாம். ஆனால், இப்போதுதான் அப்படியொரு நாகரிகம் தொடங்குகிறது என்பது போன்ற பேச்சு உண்மையானதல்ல. இந்தக் கலாச்சாரம் மேன்மேலும் தழைத்தோங்குவது அரசியலை மேலும் மேன்மையானதாக்கும் என்பதோடு மாநிலத்தின் நலனுக்கும் வழிவகுக்கும்!

- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.

‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

வேலை.. திருமணம்.. குழந்தை.. - இளம் பெண்களை வாட்டும் வாழ்வியல் பிரச்சினைகள்


தேடல் நிறைந்த பருவம், இளமை. இன்றைய இளம் பருவத்தினர் இனிமையை தேடுவதைவிட, சுமைகள் மிகுந்து காணப்படும் வாழ்வில் தீர்வு களைத் தேடி அலைபவர்களாக மாறிவருகிறார்கள். குறிப்பாக இருபது-முப்பது வயதுப் பெண்களை, நிரந்தர வேலை, திருமணம், குழந்தைப் பாக்கியம், உடல் பருமன், முதுமையின் தொடக்கம் என எண்ணற்ற பிரச்சினைகள் ஆட்டிப் படைக் கின்றன.

நீங்களும் அதே ரகம் என்றால், ஆய்வாளர்கள் இதில் இருந்து மீள்வதற்கு சொல்லும் வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்.

வேலை:

கல்லூரியை கடந்து, வயது இருபதைத் தாண்டினால், வாழ்க்கை கேள்விகள் நிறைந்ததாகிவிடுகிறது. ‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வியை சமூகம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஏனெனில் பலருக்கும் எதிர்பார்த்த மாதிரியான வேலை உடனே அமைந்துவிடுவதில்லை. விரும்பும் வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கவோ, அலையவோ வேண்டியிருக்கிறது.

25 வயது வரை அதில் நிச்சயமற்ற நிலை நீடித்தால், மனம் மேலும் படபடக்கும். ஒரு பக்கம் பெற்றோர் திருமண ஏற்பாட் டில் மும்முரமாக இருப்பார்கள். அந்த பெண்ணின் மன நிலையோ படித்த படிப்பிற்கான வேலை சரியாக அமையவில்லையே என்ற ஏக்கத்தை எதிரொலித்துக்கொண்டிருக்கும். ஆனால் கிடைத்திருக்கும் வேலையை விட்டுவிட்டு, அதைவிட சிறந்த வேலையை தேடவும் மனம் தயங்கும். இதுபோன்ற பிரச்சினை தனி நபர் சார்ந்தது அல்ல. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பொதுவானவை.

அமெரிக்காவில், ‘இளம் பெண்களின் வேலை திருப்தி’ பற்றி கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. முப்பது வயதுக்குட்பட்ட பணியாளர்களில் 80 சதவீதம் பேர், ‘தாங்களுக்கு கிடைத் திருக்கும் வேலையில் திருப்தியில்லை’ என்று கூறியிருக் கிறார்கள். அதனால் அந்த பணியில் இருந்து வேறு பணிக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், ‘இருக்கிற வேலையை விட்டுவிட்டால் உள்ளதும் போச்சே என்ற நிலை ஆகிவிடக்கூடாது என்ற பயத்துடன் இருப்பதாகவும்’ கூறியிருக்கிறார்கள். ‘வேறு வேலை கிடைக்காமல் போய்விடக்கூடாதே!’ என்ற பயத்திலே கிடைத்திருக்கிற வேலையில் திருப்தியில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

‘இதுபோன்ற அச்சம் தேவையில்லை’ என்கிறார் யோகா ஆசிரியை மேகா. பதிப்புத் துறை சார்ந்த பணியில் இருந்த அவருக்கு அந்த பணியில் திருப்தி இல்லை. ராஜினாமா செய்துவிட்டு தான் கற்ற யோகா கலையை சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். இப்போது மேகாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது யோகா.

“அலுவலக வாழ்க்கை என்னுடைய கனவுகளை சிதைப்பதாக உணர்ந்தேன். இப்போது அதிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன்” என்று பூரிக்கிறார் அவர்.

இப்படி வேலையில் திருப்தியில்லாமல் திணறுகிறவர்களுக்கு மனநல நிபுணர்கள் தரும் தீர்வு என்ன?

“குறிப்பிட்ட துறை உங்களுக்கு ஏற்றது என நினைத்து அதில் வேலை பார்க்கத் தொடங்கியபின் அந்த துறை திருப்தியாக இல்லை என்று உணர்ந்தால் அந்த வேலையை மறுபரி சீலனை செய்வது நல்லதுதான். மனதுக்குப் பிடித்த ஒன்றுதான் மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் உண்டாக்கும். அதே நேரத்தில் அந்த பணியில் இருந்துகொண்டே பிடித்த அடுத்த வேலையை தேடிக்கொள்வது அவசியம். அந்த மாதிரியான நேரங் களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவேண்டும். துணிச்சலை வரவழைத்துக்கொள்ள வேண்டும். என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் உங்கள் மனம் நிலைகுலையாத அளவுக்கு பார்த்துக் கொள்ளவேண்டும்” என்கிறார்கள்.

திருமணம் :

இளம் பெண்கள் ஒருவழியாக கிடைத்த வேலையில் மனதை திருப்திபடுத்திக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கையில், ‘இத்தனை வயதாகிவிட்டதே! எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறாய்?’ என்ற நெருடலான கேள்வி எழுப்பப்படும். நாம் மரபுகளில் ஆழப் பதிந்தவர்கள் என்பதால் சமூகத்தின் இந்தக் கேள்வியை தடுக்க முடியாதுதான். உறவுகளும், தோழிகளும்கூட சமயத்தில் இந்த கேள்விகளை கேட்கும்போது மனதில் லேசாக வலி தோன்றத்தான் செய்யும். தன் மீதான அக்கறையில்தான் அந்த கேள்வியை கேட்கிறார்கள் என்பது தெரிந்தாலும் மனம் கலக்கமடைவதை தடுக்க முடியாது.

இதை எப்படி எதிர்கொள்வது? என்று சொல்கிறார் உளவியல் ஆய்வாளர்.

“அது என் தனிப்பட்ட விருப்பம் என்று முகத்தை முறிக்கும் வகையில் எல்லோரிடமும் பதில் கூற முடியாதுதான். ‘திருமணம்- குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ள இன்னும் கூடுதல் பக்குவம் தேவை என்று நினைக்கிறேன். அதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உங்கள் அக்கறை எனக்கு அதற்கு துணை வரட்டும்’ என்று நாசூக்காக கூறிவிடலாம்.

நிஜமாகவே திருமண வாழ்க்கைக்கு தேவையான தகுதிகளை இளம் பெண்கள் வளர்த்துக்கொள்ளவேண்டியதிருக்கிறது. திருமண வாழ்க்கையின் பொறுப்புகளையும் அவர்கள் உணரவேண் டியதிருக்கிறது. அதற்கு மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக வேண்டியதிருக்கிறது. மணவாழ்க்கையில் அவசரத்தைவிட நிதானமே சிறந்தது.

குழந்தையின்மை:

ஒருவழியாக திருமணம் முடிந்து, ஒன்றிரண்டு வருடங்கள் ஆகிவிட்டால், ‘இன்னும் தொட்டில் ஆடவில்லையே?’ என்ற கேள்வி இளம்பெண்களை நோக்கி எழும்பும். இந்த கேள்வி, திருமணம் செய்த பெண்ணின் வீட்டிற்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் வரும். இந்த மாதிரியான கேள்விகளை கேட்டு பழக்கப்பட்ட குடும்பங்களில் இருந்துதான் நாம் பிறந்து வளர்ந்திருக்கிறோம். அதனால் இந்த கேள்வியை எதிர்கொள்ள பெண்கள் தயங்கக்கூடாது. அதே நேரத்தில் குழந்தையின்மையை பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் அவசியம் இருக்கவேண்டும்.

‘குழந்தையின்மையை நினைத்து பெண்கள் வருந்தவேண்டியதில்லை. இன்றைய நவீன கால மருத்துவத்தில் குழந்தையின்மைக்கும்- வயதுக்கும் தொடர்பில்லை. இளம் வயதை கடந்த பின்பும் நவீன மருத்துவத்தின் மூலம் தாய்மையடையலாம். அதனால் குழந்தையின்மையை பற்றிய பயத்தில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும்’ என்று கூறுகிறார், மகப்பேறு நிபுணர்.

‘குழந்தையின்மையை பற்றிய கேள்விகள் எழுப்பப்படும்போது இளம் பெண்கள் தடுமாறாமல் நிதானமாக பதிலளிக்க வேண்டும். ‘தாய்மையடைதலை இன்னும் ஒன்றிரண்டு வருடங்கள் தள்ளிவைத்திருக்கிறோம்’ என்றோ, ‘தாய்மையடைய தயாராகிக்கொண்டிருக்கிறேன்’ என்றோ, ‘நாங்களும் உங்களைப்போல ஆவலோடு காத்திருக்கிறோம்’ என்றோ சொல்லுங்கள்.

அழகுக் குறைபாடு:

இளம் பெண்கள் தங்கள் தலையில் ஒற்றை நரை முடியையோ, முகத்தில் லேசான சுருக்கத்தையோ முதன் முதலாக காணும்போது மிரண்டு போகிறார்கள். அதனை மறைக்க கையில் கிடைத்த அழகு சாதன பொருட்களை எல்லாம் பயன்படுத்த தொடங்கிவிடு கிறார்கள். இளநரை, தோல் சுருக்கம், குதிகால் வெடிப்பு, உடல் பருமன் போன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது. அந்தந்த துறையில் முறையாக கற்று, சிகிச்சை அளிப்பவர்களை கண்டறிந்து ஆலோசனை பெறுங்கள்.

‘TN opposed to NEET, Medical Council Bill’

State Health Minister C. Vijaya Baskar reiterated Tamil Nadu’s stated position of opposition to the National Eligibility cum Entrance Test (NEET) and also said that the State had objected to the proposed National Medical Commission Bill.

Mr. Vijaya Baskar was speaking at the installation ceremony of the State president of the Indian Medical Association, Tamil Nadu State, held on Sunday.

‘Sensitise other States’

Health Secretary J. Radhakrishnan, who also participated, requested the Association to also sensitise other States about the proposed Bill.

Outgoing State president S. Damodaran said the IMA, Tamil Nadu had 30,000 members across 158 branches. T.N. Ravishankar was installed as the new State president.

Issues such as the importance of the doctor-patient relationship were also highlighted. S. Geethalakshmi, vice chancellor, TN Dr. MGR Medical University and K. Prakasam, national vice president elect were also among those who participated.

No Indian test for students with foreign MBBS degrees

DECCAN CHRONICLE. | KANIZA GARARIPublishedDec 14, 2016, 3:00 am IST
Dr G. Srinivas, president of Telangana Junior Doctors’ Association thinks the new measure is unfair. (Representational image)
Hyderabad: Indian medical students who are getting their MBBS degrees from foreign universities will now have an opportunity to work in India without giving their exams here according to a proposal sent by the Union health ministry to the Medical Council of India.

The government says that this is to overcome the shortage of six lakh doctors in the country. Doctors who graduate from China, Russia, Nepal, South East Asian and Eastern European countries have to write the Foreign Medical Graduates Examination, and if they pass they can register and practise in India.

Data from the Medical Council of India shows that since 2002, 29,968 students have appeared for the foreign medical examination and only 3,610 have passed.
Dr G. Srinivas, president of Telangana Junior Doctors’ Association thinks the new measure is unfair.

“The medical education and bedside experience of foreign doctors are minimal. The teaching standards are different and they are not on par with Indian standards. On one side the government wants us to write exams after passing our MBBS and on the other side they want to recruit foreign doctors without exams, which is not fair. We are going to strongly protest against it,” he said.

It’s the ridiculous division of seats in private medical colleges that forces many students to study abroad. A junior doctor on condition of anonymity explained, “In private medical colleges, 50 per cent of seats are reserved for the government, 20 per cent is in the management quota and the remaining are paid seats which are very expensive. These seats cost allegedly Rs 1.5 core. That is one of the major reasons that many students opt for seats outside India.”

Telangana Medical Council chairman Dr Ravinder Reddy says, “As of today, writing a medical exam for the foreign medical graduate is as per the MCI act and it is being followed.”

But when there is a shortage of doctors, why are trained doctors not being allowed to practise in India? Why must people in rural areas go to RMPs?

A senior doctor on condition of anonymity explained, “The problem is that none of the Indian doctors who are trained in India or abroad want to practise in rural areas. Hence, there will be a growing competition in urban and semi-urban areas only. A foreign doctor will come with a different set of expertise. Also, the name that he is foreign-returned will attract a lot of patients and this is what many are scared about.”

At present, several Indian doctors who got their degrees abroad and were rejected in India are practising in the countries they passed out from. According to sources in the Medical Council of India, many of them have got employment in the Middle East and South East Asian countries where the patient load is manageable.

ஜெயலலிதாவின் தருணங்கள்: அவர் கடந்து வந்த பாதை

பவித்ரா

தமிழகத்தின் முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்தவர் ஜெ.ஜெயலலிதா. அவர் மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும் தாக்கம் செலுத்தும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். பலவிதமான ஏற்ற, இறக்கங்கள் மற்றும் போராட்டங்களைச் சந்தித்த அவரது வாழ்க்கைப் பயணத்தின் திருப்புமுனைகள் இங்கே காலவரிசைப்படி வழங்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் பிறந்தார்

கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா மாவட்டத்திலுள்ள மேல்கோட்டை என்னும் ஊரில் ஜெயராம், வேதவல்லி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். அவரது அப்பாவழித் தாத்தா இட்ட பெயர் கோமளவல்லி. அவருக்கு ஒரு வயதானபோது ஜெயலலிதா என்ற பெயரைப் பெற்றோர்கள் வைத்தனர். ஜெயலலிதாவுக்கு ஜெயகுமார் என்ற மூத்த சகோதரர். 1950-ல் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம் மரணமடைந்தார். ஜெயலலிதாவின் தாய் வேத வல்லி, ஜெயலலிதாவையும் அவர் அண்ணன் ஜெயகுமாரையும் பெங்களூருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

சென்னைக்கு வந்தார்

ஜெயலலிதாவும் அவரது அண்ணனும் பெங்களூருவில் அத்தையுடன் தங்கியிருக்க அவரது அம்மா வேதவல்லி, சென்னைக்கு வந்தார். ஜெயலலிதா பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் படித்தார். வேதவல்லி நாடகங் களிலும் சினிமாக்களிலும் சந்தியா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். 1958-ல் ஜெயலலிதாவின் அத்தைக்குத் திருமணமான நிலையில், அவர் சென்னை வந்தார். சென்னையின் புகழ்பெற்ற சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கப்பட்டார். கர்நாடக இசை, பரத நாட்டியம் மற்றும் கதக் நடனப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. படிப்பைப் பொறுத்தவரை முன்னணி மாணவியாகத் திகழ்ந்தார்.

திரைவாழ்வு தொடங்கியது

1964-ல் சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் வகுப்பில் நல்லமுறையில் தேறினார். புதுமுக வகுப்பில் படிப்பதற்கு தயாரான சூழலில், குடும்பத்தை அழுத்திய கடன் சுமையை நீக்கும் வகையில் சினிமா நடிகையானார். அவரது முதல் திரைப்படம் ‘சின்னடா கொம்பே’ என்ற கன்னடப் படம். சிறு வயதில் அவருக்கு வழக்கறிஞராகும் லட்சியம் இருந்தது. ஜெயலலிதாவின் முதல் தமிழ்த் திரைப்படம் ‘வெண்ணிற ஆடை’. 1965-ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீதர்.

அதே ஆண்டு தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்பு என்று இன்றும் நினைவுகூரப்படும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உடன் முதல் முறையாகக் கதாநாயகியானர்.

1965 முதல் 1980 வரை ஜெயலலிதா நட்சத்திரமாக ஜொலித்த ஆண்டுகள். அக்காலத்தில் அதிகச் சம்பளம் வாங்கும் திரைக்கலைஞராக விளங்கினார். புகழ் மிக்க பிராண்டுகளின் விளம்பர மாடலாகவும் இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 140 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் 120 திரைப்படங்கள் வெற்றிப்படங்கள். அவர் தமிழில் நடித்த கடைசித் திரைப்படம் 1980-ல் வெளியான ‘நதியைத் தேடி வந்த கடல்’.

அரசியல் வாழ்வின் தொடக்கம்

1982, ஜூன் 5-ம் தேதி, அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் ஜெயலலிதா இணைந்தார். ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் முதல் மேடைப் பேச்சை நிகழ்த்தினார். அரசியலில் நுழைவதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். தான் என்றும் அவர் கூறினார். அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்தை மேற்பார்வையிடும் உயர் மட்டக் கமிட்டியின் உறுப்பினராகப் பின்னர் நியமிக்கப்பட்டார். 1983-ல் ஜெயலலிதா அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார்.

1984, மார்ச் மாதம் 12-ம் தேதி, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பி னராக வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை, அப்போதைய சட்டசபை சபாநாயகர் கே. ராஜாராம் முன்மொழிந்தார். 1984-ம் ஆண்டு முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

எம்.ஜி.ஆர் மரணம்

அ.தி.மு.க. வின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். 1987, டிசம்பர் 24 அன்று மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான இரண்டு அணிகள் ஏற்பட்டன. 1988, ஜனவரி 1-ம் தேதி அ.தி.மு.க. (ஜெ) அணிக்கு பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர்

1989, ஜனவரி 24-ம் தேதி, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜி னாமா செய்தார். போடி நாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் நின்று சட்டசபை உறுப்பினர் ஆனார் ஜெயலலிதா. அவர் தலைமையிலான அணி 27 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி ஆனது.

1989, பிப்ரவரி 9-ம் தேதி தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்து இரட்டை இலை சின்னத்தையும் மீட்டார். அதே ஆண்டு நவம்பர் மாதம் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அ.தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் 39 இடங்களை வென்றது. இதன் மூலம் ஜெயலலிதா தேசிய அரசியலில் நுழைந்தார்.

முதலமைச்சர் ஆனார்

1991-ல் சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி, 234 தொகுதிகளில் 224-ஐ வென்றது. 39 நாடாளுமன்றத் தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது. அதிகபட்ச பெரும்பான்மையுடன் ஜெயலலிதா, தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். அதிகபட்ச பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் (25) இடம்பெற்ற சட்டசபையாகவும் அது அமைந்தது.

தொட்டில் குழந்தைத் திட்டம்

1992-ம் ஆண்டு பெண் சிசுக்கொலையைத் தவிர்க்கும் வகையில் ‘தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2011-ம் ஆண்டுவரை அறிமுகம் செய்யப்பட்டது. பெண்கள் சார்ந்த குற்றங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள் முதல் முறையாக அமைக்கப்பட்டன. போலீஸ் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழகத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்வியில் 69 சதவீதம் இடஒதுக்கீடு தொடர வழிவகை செய்யப்பட்டது.

அடுத்த தேர்தலில் தோல்வி

1996 மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோற் கடிக்கப்பட்டார். அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மீண்டும் பெற்ற வெற்றி

2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. மீண்டும் வெற்றிபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். 2002-ம் ஆண்டு, ஜெயலலிதா ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வென்று மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார். பெண் போலீஸ் கமாண்டோக்களைக் கொண்டு இந்தியாவின் முதல் மகளிர் காவல் படையை அமைத்தார்.

வழக்கு, விடுதலை, மீண்டும் தோல்வி

2003, நவம்பர் மாதம் டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜெய லலிதாவை விடுதலை செய் தது. 2006-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்றது. ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெய லலிதா வென்றார். பின்னர் எதிர்கட்சித் தலைவர் ஆனார்.

அம்மா பிராண்ட்

2011, மே மாதம் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 13 கட்சிகள் கூட்டணி அமைத்து மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனார். அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டன.

2016, மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 134 இடங்களை வென்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரான சில தலைவர்களில் வரிசையில் ஜெயலலிதா இடம்பெற்றார். செப்டம்பர் மாதம், பெண் அரசு ஊழியர்களுக்கு ஒன்பது மாத பிரசவ கால விடுப்பை அறிவித்தார். அதற்கு முன்னர் ஆறு மாத காலமே இருந்தது.

காலம் ஒலித்த மணி

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 5-ம் தேதி, 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் மாரடைப்பு காரணமாக நள்ளிரவு 11.30 மணிக்குக் காலமானார்.

NEWS TODAY 08.06.2026