Monday, January 23, 2017

NRI students and parents demand NEET exemptions

DECCAN CHRONICLE.
Hyderabad: Parents of NRI students, wishing to join medicine and dental courses in the country, want to get exemption from NEET qualification provision even as the Supreme Court is set to hear a related case on January 30.

Ten NRI students who joined Mediciti Institute of Medical Sciences in Ranga Reddy district were told by government authorities that they cannot pursue study, they having failed to qualify in NEET.

Mr Rao, who returned from Australia, said that NRI students study abroad and the plus two syllabuses do not fully match with Indian syllabus.

“Our children did not get enough time to prepare for the exam. We are paying up to Rs 22 lakh as fees,” he said.

தடியடி ஏன் நடத்தப்பட்டது! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி


அமைதியாக போராடியவர்கள் மீது காவல்துறையினர் ஏன் தடியடி நடத்தினர் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் நீதிபதி, போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தவறாக வழக்கு பதிந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி கொண்ட அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து, தனி நீதிபதி மகாதேவன் முன்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு முறையிட்டார். இதையடுத்து, பிற்பகல் 2.15 மணிக்கு மனுவை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதன்படி, வழக்கு விசாரணை வந்தது.




அப்போது, 'கடந்த 19-ம் தேதி வரை மாணவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது, மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்' என்று அரசு தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி வாதிட்டார்.




இதையடுத்து நீதிபதி மகாதேவன், அமைதியாக போராடியவர்கள் மீது, ஏன் தடியடி நடத்தப்பட்டது. விரும்பத்தகாத வகையில் சம்பவங்கள் நடந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை டிஜிபி உறுதி செய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தவறாக வழக்கு பதிந்தால் நீதிமன்றத்தை நாடலாம். எவ்வித வழக்கும் பதிய வேண்டாம் என காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என்று கூறினார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை - லாரன்ஸ் விளக்கம்

Actor Lawrence
'இளைஞர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை' என போராட்டக்களத்தில் இருந்த நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மெரினாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், "கடந்த ஒரு வாரம் இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். போராட்டம் இளைஞர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. போராட்டக் களத்துக்குள் வேறு சிலர் புகுந்தனர். அவர்களால்தான் பிரச்னை ஏற்பட்டது.

இளைஞர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. அவசரச் சட்ட நகலை முன்பே காட்டியிருந்தால் கலைந்திருப்போம். அவசரச் சட்ட நகலை கேட்டுள்ளோம். அவசரச் சட்ட நகலை காட்டியபின், அரசு விடுத்த கோரிக்கைப்படி மூன்று மாதம்வரை போராட்டத்தை தள்ளி வைப்போம். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவராவிடின் மீண்டும் போராடுவோம். மாணவர்களை தாக்கியது வருத்தமளிக்கிறது" என்றார்.

போராட்டக் குழுவினர் யார் சொன்னால் கேட்பார்கள்? போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை


மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர், யார் சொன்னால் கேட்பார்கள் என்பதில் போலீஸார் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா முதல் குமரி வரை போராட்டம் நடந்தது. அமைதியாகவும், அறவழியில், தலைமையே இல்லாமல் நடந்த போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுக்கு இந்த போராட்டம் கடும் நெருக்கடியை கொடுத்தது. இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இந்த சட்டத்தை போராட்டக்குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குடியரசு தின விழா நிகழ்ச்சி ஆண்டுதோறும் சென்னை மெரினாவில் நடத்தப்படும். இந்த முறை ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக அந்த விழாவிற்கான ஏற்பாடுகள், ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இதற்கிடையில் தேசிய இறையான்மைக்கு எதிராகவும் போராட்டக்குழுவிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்பினர்.

இதுவே போராட்டக்குழுவை கட்டுப்படுத்த சரியான தருணம் என்று போலீஸ் கருதியது. இதுதொடர்பாக ஆட்சியாளர்களுடன் ஐ.பி.எஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பேச்சுவார்த்தையில் தமிழக போலீஸார் ஈடுபட்டனர்.

மெரினாவை பொறுத்தவரைக்கும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டதால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதில் போலீஸார் அதிக கவனம் செலுத்தினர். இதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்குழுவினர் கலைந்து செல்லவில்லை. இதனால் மெரினாவுக்கு வரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சென்னையில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மெரினாவில் போராட்டக்குழுவின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்த சமயத்தில் போலீஸாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே நடந்த மோதலில் லத்திசார்ஜ் நடத்தப்பட்டது. இருப்பினும் போராட்டக்குழுவினர் கடற்கரையில் கூடினர். அதற்கு மேல் போலீஸாரால் போராட்டக்குழுவினரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த சமயத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸிடம் போலீஸ் உயரதிகாரி பேசினார். ஏற்கெனவே போராட்டக்களத்துக்கு செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்ற போலீஸாரிடம் கேட்ட ராகவா லாரன்ஸ், மெரினாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்ற அவர், நம்முடைய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்து விட்டது. இதனால் போராட்டத்தை கைவிடுமாறு பேசினார். ஆனால் அவரது பேச்சை கேட்க ஒரு பகுதியினர் மெரினாவிலிருந்து கிளம்பினர். ஆனால் மற்றொரு தரப்பினர் அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்பின் இயக்குநர் கௌதமன், போராட்டக்களத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் போராட்டக்குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.


கடற்கரை ஓரத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவது போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அந்த போரட்டக்குழுவினரை எப்படி அங்கிருந்து அகற்றுவது என்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் குறித்து சேகரித்து அதற்குப்பிறகு களத்தில் இறங்கலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டது. அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. இன்று மாலைக்குள் போராட்டக்குழுவினரை மெரினாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இதனால் காலதாமதமில்லாமல் போராட்டக்குழுவினரை வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் போலீஸாருக்கு வேண்டப்பட்டவர்களை களமிறக்கி அதன்மூலம் இந்த போராட்டத்துக்குத் தீர்வு காணலாம். இல்லையென்றால் அரசிடமிருந்து அதிகாரத்தை பெற்று போராட்டக்குழுவினரை அகற்ற வேண்டும் என்று ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஆட்சியாளர்களிடம் சொன்னபோது எந்தக்காரணத்தைக் கொண்டும் இத்தகைய முடிவுகளை போலீஸார் எடுக்கக்கூடாது என்று ஆட்சியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகள் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே 6 நாட்களாக மெரினா போராட்டக்களத்திலேயே 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார், எப்போது இயல்பு நிலைமை திரும்பும் என்று எதிர்பார்த்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் உயரதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, " போராட்டக்குழுவினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களது பேச்சுவார்த்தைக்கு வெற்றி கிடைத்து வருகிறது. விரைவில் மீதமுள்ளவர்களையும் மெரினாவிலிருந்து இன்று அகற்றி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

- எஸ்.மகேஷ்

யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை! முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி


இரண்டு மணி நேரம் மட்டும் அவகாசங்கள் கொடுங்கள் என்று போராட்டக்கார்கள் கேட்டும், அவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க காவல்துறைக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மெரினா கடற்கரையிலும், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் மக்கள் போராட்டத்தை அதிமுக அரசு முறையாக கையாளத் தவறி விட்டது. மாணவர்கள், இளைஞர்கள், கைக் குழந்தைகளுடன் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கும் தமிழுணர்வு ரிதீயான போராட்டங்களை காவல்துறை மூலம் மட்டுமே தீர்த்து வைத்துவிட முடியும் என்று அதிமுக அரசு நினைப்பது முற்றிலும் தவறானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான போராட்டத்தை திரும்பப் பெற வைப்பதை விட்டு விட்டு, காவல்துறை மூலம் இந்தப் பணியை செய்ய வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. இது முழுக்க முழுக்க ஜனநாயக விரோத போக்கு மட்டுமல்ல- சர்வாதிகார மனப்பான்மை கொண்ட அணுகுமுறை.



ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் இளைஞர்களை சந்தித்துப் பேச வேண்டுகோள் விடுத்தேன். பிறகு முதலமைச்சர் டெல்லிக்கு பிரதமரை சந்திக்கச் சென்ற போது “மாணவர்கள், இளைஞர்கள் பிரநிதிநிதிகளை அழைத்துச் செல்லுங்கள்” என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு கூட உடனடியாக மெரினா கடற்கரை சென்று போராடும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவசரச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த முடியும் என்றும், நிரந்தர தீர்வுக்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

ஆனால் இந்த வழிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் "நானே ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைக்கிறேன்" என்று மதுரைக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றதும், தன் அமைச்சரவை சகாக்களை எல்லாம் ஆங்காங்கே உள்ள மாவட்டங்களில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கூட செய்யாமல் ஜல்லிக்கட்டை அவசர கோலத்தில் நடத்தி வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்ததும் இன்று மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் தொடருவதற்கு காரணமாகி விட்டது. அதை விட “காவல்துறையை பயன்படுத்தியே போராட்டத்தை கலைப்பேன். போராடும் மாணவர்களை சந்திக்கவே மாட்டேன்” என்று ஒரு முதலமைச்சர் செயல்படுவதை ஜனநாயக நாட்டில் யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. முதலமைச்சர் இப்படி அடம்பிடித்தது அறப்போரில் ஈடுபட்டு அமைதி வழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்களின் தமிழ் பாரம்பர்யம் மற்றும் பண்பாடு காப்பாற்றும் போராட்டத்தை அவமதிப்பதாக அமைந்து விட்டது.

ஜனவரி 17-ம் தேதியிலிருந்து மெரினாவில் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களும், இளைஞர்களும் மேலும் இரண்டு மணி நேரம் மட்டும் அவகாசங்கள் கொடுங்கள் என்று கேட்டும், அவர்களை தடியடி நடத்தியும், வலுக்கட்டாயமாகவும் கலைக்க காவல்துறைக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டது ஏன். யாரை திருப்திப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எடுக்க உத்தரவிட்டார். கடல் நீரில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் என்று முன்னெச்சரிக்கை உணர்வு கூட மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கு வராமல் போனது ஏன். இப்படி ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் அரசு நிர்வாகத்துக்கும், காவல்துறை நிர்வாகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல் இருப்பது கவலையளிக்கிறது.

கடற்கரையோரத்தில் நடைபெறும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இந்த நாட்டின் எதிர்காலங்களாக திகழும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிர் மிக முக்கியம் என்பதை மனதில் வைத்து காவல்துறையும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்த நிலையிலாவது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக மெரினா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களையும், இளைஞர்களையும் நேரில் சந்தித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கிக் கூறி ஜல்லிக்கட்டு இனி எக்காலத்திலும் தடை பட விடமாட்டோம் என்ற உறுதியை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்' என்றுக்கூறியுள்ளார்.

2 மணி நேரம் பொறுமையாக இருந்திருந்தால்..! காவல்துறையை சாடும் ராமதாஸ்


கடந்த 6 நாட்களாக அமைதி காத்த காவல்துறையினர் அடுத்த இரண்டு மணி நேரம் பொறுமையை கடைபிடித்திருந்தால் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும் என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும், மக்களும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு காவல்துறை ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காகவும், தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்துக்கு எதிரான தாக்குதலை முறியடிப்பதற்காகவும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரலாற்றில் பதிவான அறவழிப் போராட்டம் வலிகளுடன் முடித்து வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது; வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கோரி கடந்த 16-ம் தேதி மதுரை அலங்காநல்லூரிலும், அதைத் தொடர்ந்து மெரினாவிலும் தொடங்கிய அறவழிப் போராட்டங்கள் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றன. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். மக்கள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை நடுங்க வைத்ததன் பயனாகத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கைகூடாத அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன்மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறப்போராட்டம் புதிய வரலாறு படைத்தது. எந்த ஒரு போராட்டமும் வெற்றியுடன் நிறைவடைவது தான் மகிழ்ச்சியானதாகவும், சிறப்பானதாகவும் அமையும். தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தின் செல்லும் தன்மை குறித்த ஐயம் காரணமாக மாணவர்களும், மக்களும் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்தனர். மற்றொருபுறம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தங்களின் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளத் துடித்த கும்பல்கள், மாணவர்களின் போராட்டத்தை தங்களுக்கானதாக மாற்ற நினைத்து, அவமானப்பட்டவர்கள், மாணவர்கள் போராட்டம் வெற்றி பெறுவதை சகித்துக் கொள்ள முடியாமல் அதை சீரழிக்க நினைத்தவர்கள் என பலரும் உள்நுழைந்து போராட்டத்தை திசை திருப்பும் செயல்களில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை மிகவும் பக்குவமாக கையாண்டிருக்க வேண்டும்.


போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடனும், போராட்டக் குழுவினருடனும் காவல்துறையினர் பேச்சு நடத்தி, உண்மை நிலையை அவர்களுக்கு எடுத்துக் கூறி கலைந்து செல்ல வைத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறிவிட்டது. சென்னை மெரினாவிலிருந்து போராட்டக்காரர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் இன்று காலை அறிவிப்பு வெளியிட்ட போது, 2 மணி நேரம் அவகாசம் தாருங்கள்... அதற்குள் கலைந்து செல்கிறோம் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த 6 நாட்களாக அமைதி காத்த காவல்துறையினர் அடுத்த இரண்டு மணி நேரம் பொறுமையை கடைபிடித்திருந்தால் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும்.
ஆனால், காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் நிலைமையை மிகவும் மோசமாக்கி விட்டனர். மாணவர்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் போராட்டத்தில் ஊடுருவிய வன்முறை கும்பலைச் சேர்ந்த சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு தப்பிவிட்ட நிலையில் அப்பாவி மாணவர்கள்தான் காவல்துறை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். மாணவர்கள் மட்டுமின்றி, மெரினா கடற்கரை பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

சென்னை மெரினா கடற்கரை போன்று அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களிலும் மக்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அலங்காநல்லூரில் காவல்துறை தடியடியில் பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறை ஒடுக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறை தாக்குதலை கண்டிக்கும் வகையில் மாணவர்களில் ஒரு பிரிவினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போதைய சூழலில் கடலில் போராட்டம் நடத்துவது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதால் மாணவர்கள் வெளியேற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும், மக்களும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு காவல்துறை ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பதற்றத்தை தணித்து அமைதியும், இயல்பு வாழ்க்கையும் திரும்புவதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களே... தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள் !' - கொந்தளிப்பு அடங்காத மெரினா



ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடிய கூட்டத்தை ஆயுதங்களின் துணையோடு அப்புறப்படுத்தத் தொடங்கிவிட்டது காவல்துறை. 'மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரிக்கும் சூழலில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்காக வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளது தமிழக அரசு' எனக் கொந்தளிக்கின்றனர் மாணவர்கள்.

தமிழக சட்டசபை இன்று கூடியுள்ளது. ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வேலையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. 'நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில் அகல மாட்டோம்' என மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். 'மெரினாவை சுத்தப்படுத்தினால்தான், குடியரசு தினத்தை நடத்த முடியும்' என்பதால், நேற்று நள்ளிரவு முதல் கூட்டத்தைக் கலைக்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ' போலீஸாரின் நடவடிக்கை பெரும் கலவரத்தில் முடியலாம்' என அரசியல் கட்சித் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

"மாணவர்களிடம் பேசுவதற்கான முயற்சியை எடுத்தோம் என காவல்துறை அதிகாரிகள் சொல்கின்றனர். போராட்டக் களத்தில் இருப்பவர்கள், வாட்ஸ்அப் மூலம்தான் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்கின்றனர். ஒரு தலைவர் இல்லாத கூட்டத்தில், யாரிடம் சென்று இவர்கள் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த கூட்டத்துக்கும் கேட்கும்விதமாக, மைக் வைத்துப் பேசியிருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் ஜனநாயகரீதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இதைப் புரிந்து கொண்டு அரசியல் கட்சிகள் ஒதுங்கியுள்ளன. இதுவரையில், நல்லமுறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த நேற்று முதல் தேச விரோதி என முத்திரை குத்துவதை, திட்டமிட்ட சதியாகத்தான் பார்க்கிறோம். இது பா.ஜ.க அரசின் தோல்வி என்று சொல்வதற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் மறுக்கிறார்" எனக் கொதிப்புடன் பேசினார் சி.பி.எம் கட்சியின் சிந்தன். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், " மத்திய அரசுதான் சட்டம் போட வேண்டும். அதைச் செய்யவில்லை. அவசரச் சட்டத்தில் உள்ளவற்றை வெளியில் சொல்லுங்கள் என்கிறோம். அதைச் செய்யவில்லை. அரசாணையை மட்டும் காட்டுகிறார்கள். நேற்று நான்கு பேர் கொடுத்த பேட்டியிலும், என்னென்ன விதிகள் திருத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லவில்லை. 'ஜனாதிபதியின் பார்வைக்குச் செல்லும்' என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதன்மூலம், ஜனாதிபதி கையெழுத்துப் போடவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வளவு கொந்தளிப்புக்கு மத்தியில் குடியரசு தினவிழாவைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?



மக்களை வேதனையில் வைத்துவிட்டு, விழாவைக் கொண்டாடி என்ன பயன்? மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டால், மக்களோடு நின்று மாநில அரசு போராடும். ஆனால், இங்கே மக்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என்பதோடு, மாநில உரிமைக்கான கோரிக்கையும்கூட. என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டத்தில் உள்ளவர்கள் பதறுகிறார்கள். மாணவர்களை பாதுகாக்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் போலீஸார் கைகளில் அடிபடும்போது, தேசிய கீதம் பாடுகிறார்கள், வந்தே மாதரம் எனக் கோஷம் எழுப்புகிறார்கள். தேசிய கீதம் பாடினால், போலீஸார் அடிக்க மாட்டார்கள் என வாட்ஸ்அப்பில் வந்ததை அவர்கள் நம்புகிறார்கள். அத்தனை பேரும் தேசிய கீதம் பாடுகிறார்கள். இவர்களா தேச விரோதிகள்? தேசத்தை மதித்துத்தான் நின்று கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராகப் பேசினாலே, தேச விரோதிகள் ஆகிவிடுவார்கள். 'அராஜகத்தால் வீழ்த்தலாம்' என அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் செய்யத் தவறியதை ஒப்புக் கொள்ள வேண்டும். 'உங்களுக்காக நான் போராடுகிறேன். எங்கள் மீது அவநம்பிக்கை வேண்டாம்' என பொதுமக்களிடம் வந்து நேரிடையாகப் பேசுவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்?" என்றார் ஆதங்கத்துடன்.

" உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஜல்லிக்கட்டு தீர்ப்புக்காக ஒரு வாரம் அவகாசம் கேட்டதில் இருந்தே துரோகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக மக்கள் விரும்பும் வகையில், ஆறு கோரிக்கைகளுக்குத் தீர்வு அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; மிருகவதை சட்டத்தின் காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும்; 1960-ம் ஆண்டின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தகுந்த சட்டத் திருத்தம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டினை தமிழர்களின் பாரம்பர்ய பண்பாட்டு விளையாட்டு என அங்கீகாரம் வழங்கி, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; மேற்படி சட்டமானது உச்ச நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வராமல் இருக்க, அரசியலைமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்; மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தால், பீட்டாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; மேற்கண்ட எங்களுடைய கோரிக்கைளை நிறைவேற்ற மத்திய அரசுக்குத் தமிழகஅரசு வலியுறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில் எங்களை ஒடுக்க நினைக்கும் அரசின் முயற்சிகள் நிறைவேறாது" எனக் கொந்தளிக்கிறார் கல்லூரி மாணவர் ஒருவர்.

ஒரு கிராமத்திற்குள் முதல்வரையே அனுமதிக்காத சூழலை நேற்று பார்த்தோம். இன்று காலை முதல் மெரினாவில் தடியடி நீடித்துக் கொண்டே இருக்கிறது. சட்டசபைக் காட்சிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

NEWS TODAY 23.08.2026