Saturday, July 15, 2017

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை:ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தமிழக அரசு அறிவிப்பு

 
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில்,அரசு பிறப்பித்த அரசாணையை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. 
 
சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்கனை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிறவகை பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ந் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தர்னீஷ்குமார், சாய் சச்சின் உள்ளிட்ட பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.

அவர் தனது உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த தமிழக மாணவர்களின் நலன் கருதி இந்த அரசாணையை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு நியாயப்படுத்துகிறது. மேலும், இதுகுறித்து கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் கூறுகிறது.

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை ‘நீட்’ தேர்வு முடிவின் அடிப்படையில் தான் நாடு முழுவதும் நடைபெறுகிறது என்பதால், அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களிலும், அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதற்காக மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், தமிழக அரசுக்கு ஒரு பரிந்துரையை அனுப்பி உள்ளார். அதில், 85 சதவீத இடங்களை மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, இந்த அரசாணையை பிறப்பித்து உள்ளது.

அதாவது கூடுதல் இயக்குனர் ஜூன் 22-ந் தேதி இந்த பரிந்துரையை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்று அதே நாளில் தமிழக அரசு இந்த அரசாணையை பிறப்பித்து இருக்கிறது.

இந்த ஆவணங்களை எல்லாம் படித்து பார்த்தபோது, தமிழக அரசு தன் மனதை முழுமையாக செலுத்தி இந்த அரசாணையை பிறப்பிக்கவில்லை என்று தெரிகிறது. கூடுதல் இயக்குனர் செய்த பரிந்துரையின் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதுவும், இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் கூறி இருக்கிறது. அப்படி கொள்கை முடிவு எடுத்திருந்தால், தமிழக அமைச்சரவையில் தான் எடுத்திருக்க வேண்டும்.

கொள்கை முடிவை மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் எடுக்க முடியாது. அவ்வாறு கொள்கை முடிவை எடுக்க அவருக்கு அதிகாரமும் கிடையாது.

ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை

‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் இயற்றி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை.

எனவே, ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை இயற்றிவிட்டு, அந்த தீர்மானம் ஜனாதிபதியின் பரிசீலனையில் இருக்கும்போது, அதே காரணங்களை கூறி இதுபோன்ற இடஒதுக்கீட்டை வழங்கி தமிழக அரசு அரசாணையை பிறப்பிக்க முடியுமா?

மேலும், இதுபோன்ற விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்திருந்தால், அதை முறைப்படி எடுக்கவேண்டும். அமைச்சரவையில் பரிசீலித்து, அங்கு ஒப்புதலைப்பெற்று, முடிவை அறிவித்து இருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு தமிழக அரசு செய்யவில்லை. கூடுதல் இயக்குனர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், கொள்கை முடிவு எடுத்துவிட்டதாக கூறி அரசாணையை பிறப்பித்துள்ளது.

கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளதாகவும், ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுள்ளதால், இந்த சலுகையை தமிழக மாணவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தமிழக அரசு கூறும் காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் என்று முடிவான பின்னர், இந்திய மருத்துவ கவுன்சில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட முடியாது.

சாதி ரீதியான இடஒதுக்கீடு என்பது வேறு, நிறுவனம் ரீதியாக வழங்கப்படும் இடஒதுக்கீடு என்பது வேறு. தற்போது தமிழக அரசு (கல்வி) நிறுவனம் ரீதியான இடஒதுக்கீட்டை வழங்கி உள்ளது.

மேலும், சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், தமிழகத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் போல, தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறது. சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதை அரசு மறந்துவிட்டது.

மாநில பாட திட்டத்தின் கீழ் படிக்கவேண்டுமா?, சி.பி.எஸ்.இ. போன்ற மத்திய பாட திட்டத்தின் கீழ் படிக்கவேண்டுமா? என்பதை முடிவு செய்யும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் தான் உள்ளது. விரும்பிய பாட திட்டத்தின் கீழ் கல்வி பயில்வதற்கு முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் அதிக இடங்களையும், பிற மாணவர்களுக்கு குறைவான இடங்களை ஒதுக்கி இதுபோன்ற அரசாணை பிறப்பிப்பதை ஏற்க முடியாது.

இதைவிட தெளிவாக சொல்லவேண்டும் என்றால், மருத்துவம் என்பது மனித உயிர் சம்பந்தப்பட்டது. சிகிச்சை வழங்கும் டாக்டர்கள், நோயாளிகளுக்கு கடவுள் போன்றவர்கள். இந்த படிப்புக்கு திறமையான மற்றும் கல்வியறிவு உள்ள மாணவர்கள் தான் சேரவேண்டும். இதில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான மொத்த இடத்தில் பெரும் எண்ணிக்கை ஆக்கிரமித்து விடுவார்கள். அதனால், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது.

ஏனென்றால், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை என்பது ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெற உள்ளது. அப்படி இருக்கும்போது மாணவர்களுக்கு பாதிப்பு என்பதை ஏற்க முடியாது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதியான சி.பி.எஸ்.இ. மாணவர்களை, மாற்றான் தாய் மனப்பான்மையில் தமிழக அரசு அணுகக்கூடாது. அவர்களை படிப்பில் சேரவிடாமல் இதுபோன்ற அரசாணையை பிறப்பிக்கக் கூடாது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில், அண்ணன் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழும், தம்பி மாநில பாட திட்டத்தின் கீழும் பிளஸ்-2 தேர்வை எழுதி, மருத்துவ படிப்புக்கு ‘நீட்’ தேர்வு எழுதி தகுதிப்பெற்ற பின்னர், மாநில பாட திட்டத்தில் படித்த தம்பிக்குதான் மருத்துவ கல்வியில் இடம் வழங்க முடியும் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

எனவே, மாணவர்கள் அனைவரையும் ஒரே விதமாக கருதவேண்டும். பாட திட்டங் களின் அடிப்படையில், மாணவர்களை பிரித்து பார்க்கக்கூடாது. எனவே, மேற்சொன்ன காரணங்களால், மருத்துவ படிப்பில் மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், தன்னிச்சையானது என்றும் முடிவு செய்கிறேன். அந்த அரசாணையை ரத்து செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி ரவிச்சந்திரபாபு தனது உத்தரவில் கூறி உள்ளார்.

இந்த நிலையில் சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் பொன்முடி, “தமிழக அரசின் பாடதிட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஐகோர்ட்டு இதற்கு தடை விதித்துள்ளது. எனவே இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குமா? தமிழக மாணவர்களின் நலனை இந்த அரசு காக்குமா? என்பதை அறிய விரும்புகிறேன்” என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வு காரணமாக தமிழக பாட திட்டத்தின்படி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தோம். இதற்கிடையில் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி ஏற்கனவே 15-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மூத்த வழக்கறிஞர் மூலம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளித்தது. எனவே உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு தடை விதிக்கவில்லை, மாறாக சென்னை ஐகோர்ட்டு விசாரிக்க உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டில் அரசு தலைமை வழக்கறிஞர் மூலம் திறமையாக வாதம் செய்யப்பட்டது. இதை தமிழக அரசும் உன்னிப்பாக கண்காணித்தது. தற்போது ஐகோர்ட்டு இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

இது குறித்து சட்ட நிபுணர்களுடனும், முதல்-அமைச்சருடனும் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீர்ப்பின் நகல் கிடைத்ததும் தமிழக அரசின் சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் வற்புறுத்தி உள்ளனர்.

என்ஜினீயரிங் படிப்புக்கும் வரப்போகிறது ‘நீட்’

 
தமிழ்நாட்டில் பிளஸ்–2 படித்து முடித்து விட்டு, ‘பி.டி.எஸ்.’ என்று கூறப்படும் பல் மருத்துவ படிப்புகளுக்கும், எம்.பி.பி.எஸ். என்று கூறப்படும் மருத்துவ பட்டப்படிப்புக்கும் மாணவர் சேர்க்கை எப்போதுதான் நடைபெறும்?, 
 
மிழ்நாட்டில்  பிளஸ்–2  படித்து  முடித்து விட்டு, ‘பி.டி.எஸ்.’ என்று கூறப்படும் பல் மருத்துவ படிப்புகளுக்கும், எம்.பி.பி.எஸ். என்று கூறப்படும் மருத்துவ பட்டப்படிப்புக்கும் மாணவர் சேர்க்கை எப்போதுதான் நடைபெறும்?, எந்த அடிப்படையில் நடைபெறும்? என்பதற்கு இருந்து வந்த குழப்பமான நிலைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ‘நீட்’ தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளைக்கொண்டதாகும். மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்களால் நிச்சயமாக இந்தத்தேர்வை எழுதமுடியாது என்றவகையில், தமிழ்நாட்டிற்கு விலக்குப்பெற சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் அமலுக்கு வரவேண்டும் என்றால், ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படவேண்டும். அதற்கு மத்திய அரசாங்கம் இன்னமும் ஒப்புதல் கொடுக்கவில்லை, தருவதுபோலவும் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டிய கட்டாயத்தில் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்றவர்களில், 15 சதவீதம் அகில இந்திய கோட்டாவுக்குப்போக, மீதமுள்ள 85 சதவீத இடங்களில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 சதவீத இடங்களும், 85 சதவீதம் மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்களுக்கும் தமிழக அரசு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ.யில் படித்த 3 மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பிறப்பித்த ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அப்பீல் செய்தாலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்பதற்கு நிச்சயம் இல்லை. மாணவர் சேர்க்கைக்கு வீண் தாமதம்தான் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையை தவிர்க்க, எந்த தேர்வுவந்தாலும் அதை எங்களால் எழுதமுடியும் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில், அவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படவேண்டும் என்று எவ்வளவோ கல்வியாளர்கள் கோரிக்கைவிடுத்தும், இதுவரை அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இது ஒருபுறம் இருக்க, அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதிலுமுள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கான தேர்வையும் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில் இந்த முடிவை அறிவிக்கப்போகிறது. சில நாட்களுக்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வின் மூலம் முறைகேடுகள் ஒழிந்துள்ளதா?, மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில் முழுக்க முழுக்க அவர்களின் தகுதி அடிப்படையில்தான் வழங்கப்பட்டதா? என்று ஆலோசனை நடத்தியது. இதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் மருத்துவக்கல்வியில் இடம்பெறும் ஒவ்வொரு மாணவரும் உறுதியாக குறைந்தபட்ச தகுதியோடுதான் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ‘நீட்’ தேர்வில் 50 சதவீதத்திற்குமேல் மதிப்பெண் எடுத்தவர்களால்தான் விண்ணப்பமே செய்யமுடியும் என்று தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும், 2018–ம் ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு மூலமே அகில இந்திய அளவில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பதற்கான திட்டத்திற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலும் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆக, என்ஜினீயரிங் படிப்பிற்கும், ‘நீட்’ தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. மத்திய அரசாங்கம் எடுத்துள்ள உறுதிப்பாடான நிலையில், நிச்சயமாக அடுத்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் படிப்பிற்கும் ‘நீட்’ தேர்வு வரத்தான் போகிறது. எனவே, மருத்துவப்படிப்புபோல, என்ஜினீயரிங் படிப்புக்கும் மாணவர்களுக்கு வீணான நம்பிக்கையை தமிழக அரசு வளர்த்து, அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாமல், தொடக்கத்திலே நிலைமையை தெளிவாக்கி, அதற்கு மாணவர்கள் தயார்நிலையில் இருக்கும் வகையில் பயிற்சிகளை அளிப்பதே சாலச்சிறந்ததாகும்.
மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பதிவு செய்த நாள் 14 ஜூலை
2017
23:58

சென்னை: 'மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும், மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க முடியாது' என்றும், உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தியது. இதில், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் என, ௨௫க்கும் மேற்பட்ட மொழிகளில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும், தனித்தனி கேள்விகள் இடம் பெற்றன. அதில், சில எளிதாகவும், சில கடினமாகவும் இருந்தன. அதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இதை எதிர்த்து, நீட் தேர்வு எழுதிய, ௨௫க்கும் மேற்பட்ட மாணவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; அதுவரை, மருத்துவ கவுன்சிலிங் நடத்த, இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என, மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய, மூன்று நீதிபதிகள் பெஞ்சில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், சுப்ரமணியம் பிரசாத் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

மனுதாரரர்கள் தரப்பில், 'நீட் போன்ற அகில இந்திய நுழைவு தேர்வில், நாடு முழுவதும், ஒரே வினாத்தாள் மூலம் தான் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு மொழியிலும், தனித்தனி வினாத்தாள் அளித்தது சட்டத்துக்கு புறம்பானது. இதன்மூலம், அகில இந்திய அளவில் மாணவர்களை, சமமாக தரப்படுத்த முடியாது. எனவே, மே மாதம் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுவரை, மருத்துவ கவுன்சிலிங் நடத்த, இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என வாதிடப்பட்டது.

மத்திய அரசின் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் வாதாடுகையில், 'ஒவ்வொரு மொழி வினாத்தாளையும், அந்தந்த மொழி சார்ந்த, துறை வல்லுனர்கள் மூலம் ஆய்வு செய்து விட்டோம்; வினாத்தாள்கள் சமமாகவே உள்ளன. பல்வேறு மாநிலங்களில், நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதற்கு மாறாக, ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், அது, மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்' என்றார்.

இதை ஏற்ற நீதிபதிகள், 'நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; மருத்துவ கவுன்சிலிங் நடத்தவும் தடை விதிக்க முடியாது' என, உத்தரவிட்டனர். மேலும், 'இந்த பிரச்னையில், எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, உரிய தீர்வு காணப்படும்' என கூறிய நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்குமாறு, சி.பி.எஸ்.இ.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணை, வரும், ௩௧க்கு தள்ளிவைக்கப்பட்டது.
திருவனந்தபுரம் வரை திருச்சி இன்டர்சிட்டி ரயில் நீடிப்பு

பதிவு செய்த நாள் 15 ஜூலை
2017 00:42

மதுரை: திருச்சி-திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) இன்று முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்படுகிறது. திருச்சியில் காலை 7:05 மணிக்கு புறப்படும் ரயில் மதுரை வந்து காலை 9:00 மணிக்கு புறப்படும். திருநெல்வேலியில் இந்த ரயில் மதியம் 12:35க்கு புறப்பட்டு,  மதியம் 3:25க்கு திருவனந்தபுரம் செல்லும். திருவனந்தபுரத்தில் காலை 11:55 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு மதியம் 2:30 மணிக்கு செல்லும். அங்கிருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை வரும். மாலையில் 5:25க்கு புறப்பட்டு, திருச்சிக்கு இரவு 8:15க்கு செல்லும்.
உதவி எதிர்பார்க்கும் மருத்துவ மாணவி

பதிவு செய்த நாள் 14 ஜூலை
2017
23:48
dinamalar
மதுரை: ஏழ்மை காரணமாக கட்டணம் செலுத்த முடியாததால் பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவிக்கிறார் உசிலம்பட்டி மாணவி டீம லோசனி. இவரது தந்தை கணேசமூர்த்தி தனியார் மருந்தக ஊழியர். 2016ல் பிளஸ் 2 தேர்வில் 1026 மதிப்பெண் பெற்ற டீம லோசனி, மதுரை பெஸ்ட் டென்டல் சயின்ஸ் கல்லுாரியில் பல் மருத்துவ படிப்பில் சேர்ந்தார். வங்கி கடன், நகைகள் அடமானம் மூலம் 5 லட்சம் ரூபாய் செலுத்திய பின், மீதி கட்டணம் செலுத்த முடியவில்லை. ஒன்றரை மாதங்களாக வகுப்பிற்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவரது எதிர்காலம் கருதி நிதி உதவி செய்ய முன்வருவோர் 97879 80173 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு உலகில் முதலிடத்தில் பிரதமர் மோடி






புதுடில்லி: மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள அரசுகள் பட்டியலில், 73 சதவீத மக்களின் ஆதர வோடு, உலகில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்ற சர்வதேச அமைப்பு, மக்களின் ஆதரவை பெற்றுள்ள அரசுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 73 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று, பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதற்கு காரணமாக, அந்த அமைப்பு கூறி உள்ளதாவது: கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற,

பிரதமர்நரேந்திர மோடி, செல்லாத ரூபாய் நோட்டு, ஜி.எஸ்.டி., எனப் படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, கறுப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என, மக்களை கவரும் பல்வேறு திட்டங்களால், மக்கள் விரும்பும் தலைவராக விளங்குகிறார். இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா, 62 சதவீத மக்கள் ஆதரவுடன், பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிபர் ரிசெப் தயீப் எர்டோகன் தலைமையான, துருக்கி அரசு, 58 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முயற்சிகளில் ஈடுபட்ட பிரிட்டனில், 41 சதவீத மக்கள், பிரதமர் தெரசா மேக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 30 சதவீத மக்களின் ஆதரவையே பெற்றுள்ளார்.



பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பிய அகதிகள் பிரச்னைகளால் திணறி கொண்டிருக் கும், கிரீஸ் அரசு, 13 சதவீத மக்கள் ஆதரவுடன், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மருத்துவ படிப்பில் 85 சதவீத
உள் ஒதுக்கீடு ரத்து : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு


சென்னை: மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் ௨ முடித்தவர்களுக்கு, 85 சதவீதம்; மத்திய இடைநிலை கல்வி திட்டத்தில் படித்தவர்களுக்கு, 15 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.




இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அரசு தரப்பில், 17ல், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்து வப் படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர் களுக்கு, 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்' என, ஜூன் மாதம், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

'இந்த உத்தரவால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பாதிக்கப்படுவர்; 15 சதவீத இடங்களில் தான், நாங்கள் போட்டியிட வேண்டும் என, கட்டுப்படுத்த முடியாது; இது, பாரபட்சமாக உள்ளது. எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னையைச் சேர்ந்த சாய் சச்சின் உட்பட பலர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களை விசாரித்த, நீதிபதி ரவிச்சந்திர பாபு பிறப்பித்த உத்தரவு:

மாநில பாடத்திட்டத்தில், பிளஸ் ௨ படித்த மாணவர்கள் பின்பற்றிய தேர்வு நடைமுறை, பாடங்கள் வேறானது; அந்த மாணவர்கள், கிராமப்புற பின்னணி உடையவர்கள் என, அரசு தரப்பில் வாதிடப்பட்டது. வெவ்வேறு பாடத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இல்லாமல், 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை என்கிற போது, மாநில அரசு இப்படி ஒரு ஒப்பீட்டை வைப்பது, எனக்கு புரியவில்லை.

உரிமை இல்லை

ஒரு மாணவர், எந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்திருந்தாலும், மருத்துவப் படிப்பில் சேர, 'நீட்' மட்டுமே தகுதி தேர்வாக இருக்கும் போது, உள் ஒதுக்கீடு மூலம் மாணவர்கள் மத்தியில், இரண்டு வகையான பிரிவுகளை ஏற்படுத்த, மாநில அரசுக்கு உரிமை இல்லை.'நீட்' தேர்வை மாணவர்கள் எழுதிவிட்டால், அவர்கள் . அனைவரையும் சமமாகவே கருத வேண்டும். எனவே, இந்த அரசாணை, அரசியலமைப்பு

சட்டத்தை மீறுவதாக உள்ளது. சி.பி.எஸ்.இ., மாணவர்களும், இதர பாடத் திட்டத் தில் படிக்கும் மாணவர்களும், மாநில அரசின் பிள்ளைகள் தான். அவர்களும், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான்அவர்கள், இந்த மாநிலத்தைச் சேராதவர்கள் போல கருதுவது வேதனை அளிக்கிறது. பிளஸ் 2 தகுதி பெறுவதற்கு, மாநில பாடத்திட்டமா, சி.பி.எஸ். இ.,யா என, தேர்வு செய்கிற விருப்பம், அவர்கள் முன் வைக்கப்படுகிறது.

அத்தகைய விருப்பத்தை மாணவர்கள், பெற்றோர் வசம் விடும்போது, சி.பி.எஸ்.இ., தேர்வு செய்கிறவர் களுக்கு, குறைந்த சதவீத ஒதுக்கீடு தான் கிடைக்கும் என, எந்த அறிகுறியும் காட்டப்பட வில்லை. இந்த சூழ்நிலையில், 'நீட்' தேர்வுக்கு பின், அரசு, கட்டுப் பாட்டை கொண்டு வந்தால், அந்த மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும். மருத்துவக் கல்வி என்பது, சமூகத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

மருத்துவர்களை, கடவுளுக்கு சமமாக கருதுகின் றனர். எனவே, மருத்துவப்படிப்புக்கான மாணவர்கள் தேர்வு, தகுதி அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த படிப்புக்கான மாணவர்கள் தேர் வில், தகுதியில் சமரசம் செய்து கொள்ள முடியாது. 'நீட்' தேர்வில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களை விட, சி.பி.எஸ்.இ.,யில் படித்தவர் கள், அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பதற்காக, அவர்கள் மீது பொறாமை கொண்டு, இப்படி ஒரு ஒதுக்கீடு கொண்டு வந்து, அவர்களுக் கான சட்டபூர்வ உரிமையை மறுக்கலாமா; இதை, கண்டிப்பாக ஏற்க முடியாது.

சி.பி.எஸ்.இ., மாணவர்கள் மீது, மாற்றான் தாய் மனப்பான்மையை, மாநில அரசு கையாளுவதை ஏற்க முடியாது. அவர்கள் என்ன, வேற்று தேசத்த வர்களா; சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை, அவர்கள் தேர்ந்தெடுத்தது பாவச் செயலா?'நீட்' தேர்வில் கலந்து கொள்ள, மாநில பாடத்திட்ட மாணவர் களால், தயார்படுத்தி கொள்ள முடிய வில்லை என்ற காரணமும் முன்வைக்கப்பட்டது. 'நீட்' தேர்வுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, 2010 - 11ல், வெளியிடப்பட்டு விட்டது.

மருத்துவ கவுன்சில் தான், பாடத்திட்டத்தை தயாரித்தது. இதர பாடத்திட்டத்தின் கீழ் வரும் மாணவர்களுடன் போட்டியிட, மாநில பாடத்திட்ட மாணவர்களை தயார்படுத்த, மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.பயிற்சி வகுப்புகள், வசதிகளை அளித்திருக்க வேண்டும். அதை விட்டு, கொள்கை முடிவு என்கிற பெயரில், தகுதி நீர்த்து போகும் விதத்தில், இத்தகைய அரசாணையை பிறப்பிக்க முடியாது.

'உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி, தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும்; அதை பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது' என, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.தமிழக அரசு எடுத்த நடவடிக்கையானது, சட்ட வடிவில் இருந்திருந் தால், அட்வகேட் ஜெனரலின் வாதத்தை ஏற்பதில், எந்த பிரச்னையும் இல்லை; ஆனால், இந்த உத்தரவு, நிர்வாக ரீதியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு. இந்த உத்தரவை, மாநில சட்டத்திற்கு இணையாக கருத முடியாது.

மாநில பாடத்திட்டம் மற்றும் இதர பாடத்திட்ட மாணவர்களிடம், ஒரு சமதளத்தை உருவாக்க வேண்டும் என்றால்,மாநில சட்டம் மூலம் தான் ஏற்படுத்த முடியும் என, உச்ச நீதிமன்றஉத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை,

சட்டம் கொண்டு வர, மாநில அரசு எடுத்த முயற்சி யானது, இன்னும் மசோதா அளவில் தான் உள்ளது.

இதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டி யுள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பானது, அரசு தரப்புக்கு சாதகமாக இருப்பதை விட, மனுதாரருக்கு உதவும் வகையில் உள்ளது. இந்த வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலை, இருதரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள், சுட்டிக்காட்டிய தீர்ப்புகள் ஆகிய வற்றை பரிசீலிக்கும் போது, தமிழக அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடானது, சமதளத் தில் உள்ள மாணவர்கள் மத்தியில், பாகுபாடு காட்டுவது போலாகும்.

மேலும், இந்த அரசாணையானது, அரசியல மைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. சமதளம் என்ற போர்வையில், சமமானவர் களை சமன் இல்லாதவர்களாக ஆக்குகிறது. மேலும், 'நீட்' தேர்வின் நோக்கத்தில், மறைமுக மாக குறுக்கீடு செய்வதாகவும், அரசாணை உள்ளது; தகுதியை சமரசம் செய்து கொள்வ தாகவும் உள்ளது.ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பிக்க, மாநில அரசுக்கு, அரசியலமைப்பு சட்டப்படி தகுதி மற்றும் அதிகார வரம்பு இருந்தாலும், அது சட்ட வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்; சட்டத்தை மீறுவதாக இருக்கக் கூடாது.

ஏற்கனவே, 'நீட்' தேர்வு இருக்கும் போது, அதன் நோக்கத்தை நீர்த்து போகச் செய்யும் முயற்சி யாக, நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ நிர்வாக உத்தரவு கொண்டு வருவது, சட்ட விரோதமானது.மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், கிராமப்புற பின்னணி யில் வந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிராக, இந்த நீதிமன்றம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

இந்த மாணவர்களின் வளர்ச்சி, நலன்களில், நீதிமன்றம் அக்கறை கொள்கிறது.அவர்களின் நலன்களை, வளர்ச்சியை, சட்ட விரோத வழிகளில் அடைவதை, நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதுவும், பாதிக்கப்படுபவர்கள், நீதிமன்றத்தின் கதவை தட்டி, தங்கள் பிரச்னைக்கு நிவாரணம் கோரும் போது, அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

உத்தரவு

வழக்கு தொடுத்தவர்களின் எண்ணிக்கை, குறைந்தபட்சமாக வேண்டுமானால் இருக்க லாம்; ஆனால், அவர்கள் கொண்டு வந்த பிரச்னை முக்கியமானது. எனவே, தமிழக அரசு, 2017 ஜூன், 22ல் பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது; அந்த உத்தரவு ரத்து செய்யப் படுகிறது.புதிதாக தகுதி பட்டியலை தயாரித்து, அதன்படி, கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்.

இந்த உத்தரவானது, மனுதாரருக்கு மட்டுமல் லாமல், சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனை வருக்கும் பொருந்தும்.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டு உள்ளார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். வரும், 17ல், மேல்முறை யீட்டு மனு தாக்கலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS TODAY 22.08.2026