Friday, November 3, 2017

வெள்ளக்காடானது சென்னை


By DIN  |   Published on : 03rd November 2017 04:43 AM  
chennai
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையச் சாலையில் வெள்ளத்தில் நீந்தி வரும் கார் .

சென்னையில் வியாழக்கிழமை (நவ.2) மாலை தொடங்கி வெள்ளிக்கிழமை (நவ.3) காலை வரை விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி அதன் அளவு அதிகரித்து பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
154 மி.மீ. மழை: வானிலை ஆராய்ச்சி மைய கணக்கீட்டு அளவின்படி வியாழக்கிழமை (நவ.2) காலை 8.30 மணி முதல் நள்ளிரவு வரை 154 மி.மீ. மழை பதிவானது; மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (நவ.3) காலை 8.30 மணிக்கு (12 மணி நேரம்) கணக்கிடும்போது, 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு 200 மில்லி மீட்டரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையின் விகிதமும் அதிகரிப்பு: வியாழக்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியபோது அதன் விகிதம் 1 மணி நேரத்துக்கு 7 சதவீதமாக இருந்தது; வியாழக்கிழமை இரவு மழையின் விகிதம் 1 மணி நேரத்துக்கு 10 சதவீதம் என அதிகரித்து நள்ளிரவில் 20 சதவீதத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் மின் வெட்டு: மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க சென்னை நகரின் பல இடங்களில் வியாழக்கிழமை இரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நேப்பியர் பாலம் முதல் விவேகானந்தர் இல்லம் வரை சாலையின் இருபுறமும் மழை நீர் வெள்ளம் போன்று தேங்கி நின்றது. இதனால், தலைமைச் செயலகம், நீதிமன்றம், துறைமுகம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் என முக்கிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணிகளை முடித்து வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பொது மக்களும் ஆங்காங்கே வெகு நேரம் காத்திருந்தனர்.
பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்: கனமழை காரணமாக, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை பாரிமுனையில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டது. இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் ரயில்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து சென்றன. அலுவலகப் பணிகளை முடித்து சென்னை கடற்கரை, கோட்டை ரயில் நிலையங்களில் இருந்து மாலை 6 மணிக்கு ரயில் ஏறிய பல ஊழியர்கள் இரவு 9 மணிக்கே வீடுகளுக்குச் சென்று சேர்ந்தனர். 

மாயமான வருமான வரி அதிகாரி சிறு காயங்களுடன் மீட்பு

கிருஷ்ணகிரி: காணாமல் போன, கோவை வருமான வரி அதிகாரி, கிருஷ்ணகிரி அருகே காயங்களுடன் மீட்கப்பட்டார். கோவை, பீளமேடு கவுதமபுரியை சேர்ந்தவர் சிவக்குமார், 38; கோவை வருமானவரி அலுவலகத்தில், துணை ஆணையராக பணிபுரிகிறார். கடந்த மாதம், 13ல் அலுவலகம் சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. அவரின் தம்பி ராம்குமார் புகாரின்படி, பீளமேடு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அச்ச மங்கலம் கூட்ரோடு அருகில், உடலில் சிறு காயங்களுடன் சிவக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியே ரோந்து சென்ற ஊர்க்காவல்படையினர் அவரை மீட்டு, கந்திக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில், போலீசார் சேர்த்தனர். ராம்குமாருக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் ஒப்படைத்தனர்.

குப்பையில், 'ஆதார்' அட்டைகள்: மக்கள் அதிர்ச்சி


குப்பையில், 'ஆதார்' அட்டைகள்: மக்கள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், குப்பையில் வீசப்பட்டு கிடந்த, 'ஆதார்' அட்டைகள் மற்றும் முக்கிய கடிதங்களை பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி, பழைய பேட்டை பகுதியில், நேற்று காலை, குப்பை அள்ளும் பணியில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். நேதாஜி சாலையில், மூன்று பிளாஸ்டிக் பைகளில் வீசப்பட்டிருந்த குப்பையை அள்ளும் போது, ஆதார் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்ததை பார்த்தனர். பையை கீழே கொட்டி பார்த்த போது, ஏராளமான கடிதங்களும், பிரிக்கப்படாத ஆதார் அட்டைகளும் இருந்தன. அவை, கனகமுட்லு தபால் அலுவலகத்தில் இருந்து, பொதுமக்களுக்கு வழங்க எடுத்து வந்தவை என்பது தெரிந்தது. மேலும், 50க்கும் மேற்பட்ட ஒரிஜினல் ஆதார் அட்டைகள், வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய, ஏ.டி.எம்., கார்டின் பின் எண்கள், நகை அடமான கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய கடைசி நாளுக்கான அழைப்பு கடிதங்கள் கிடந்தன. அத்துடன், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டண விபர கடிதங்கள், எல்.ஐ.சி., கடிதங்கள் என, முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், பிரிக்கப்படாமல், பண்டல்களாக கட்டி போடப்பட்டிருந்தன.
கிருஷ்ணகிரி கோட்ட தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர், சுப்பாராவ் கூறுகையில், ''குப்பையில் வீசப்பட்ட கடிதங்கள் மற்றும் ஆவணங்கள், 2015 மற்றும், 2016ல் டெலிவரி செய்ய வேண்டியவை. ''இது எவ்வாறு நடந்தது என, துறை ரீதியாக விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையில் வீசப்பட்ட கடிதங்களை, டெலிவரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

மணக்கோலத்தில் தேர்வெழுதிய பாலிடெக்னிக் மாணவி


மணக்கோலத்தில் தேர்வெழுதிய பாலிடெக்னிக் மாணவி
விழுப்புரம்: பாலிடெக்னிக் மாணவி, மணக்கோலத்தில் வந்து, தேர்வு எழுதினார்.
விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்தை சேர்ந்த வினோதினி; கப்பியாம்புலியூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், 3ம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 26ம் தேதி துவங்கிய, தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கான வாரிய தேர்வை எழுதி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு, வினோதினிக்கு, கடலுார் மாவட்டம், திருவந்திபுரத்தில் திருமணம் நடந்தது. இதைதொடர்ந்து, நேற்று நடந்த, 'டிஜிட்டல் கம்யூனிகேஷன்' தேர்வை எழுதுவதற்காக மணமகள் புறப்பட்டார். காலை, 9:00 மணிக்கு, வினோதினி மணக்கோலத்தில், தன் கணவருடன் காரில் வந்து, தேர்வு எழுதினார்.

வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு இல்லை : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


சென்னை: 'வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்வு, குரூப் - ௪ தேர்விலேயே இணைத்து நடத்தப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும், குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளுக்கும், வி.ஏ.ஓ., பதவிக்கும், பத்தாம் வகுப்பு தான் 
கல்வித் தகுதி.இரண்டு பதவிகளுக்கும், தனியாக தேர்வு நடத்தும்போது, குரூப் - 4 பணிகளுக்கு, 15லட்சம் பேரும், வி.ஏ.ஓ., பதவிக்கு 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்கின்றனர். வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - ௪ தேர்வுக்கும் விண்ணப்பிக்கின்றனர்.
தனியாக நடத்தும்போது, ஒவ்வொரு தேர்வுக்கும், 15 கோடி ரூபாய் செலவாகிறது. இரண்டு தேர்வுக்கும், தனித்தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க, அதிக செலவாகிறது.
இதுவரை நடந்த தேர்வுகளை ஆய்வு செய்ததில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 20 சதவீதம் பேர், மறு பதவிக்கு, மற்றொரு தேர்வு எழுதுவது தெரிகிறது.
எனவே, குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளில், வி.ஏ.ஓ., தேர்வையும் இணைத்து. ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப் - 4ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அந்தந்த பதவிக்கு, தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், வி.ஏ.ஓ., தேர்விலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, பயிற்சி குறித்த பகுதி, தேர்வுக்கான பாடத் திட்டத்தில் தேவை இல்லை என, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்து உள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயர் அபிஷேக முன்பதிவு


நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், 2018க்கான, தினசரி அபிஷேகத்திற்கு, நவ., 5ல் முன்பதிவு துவங்கவுள்ளது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் மூலவருக்கு, தினமும் காலை, 9:00 மணிக்கு, 1,008 வடை மாலை சாத்தப்படும். பின், சுவாமிக்கு அபி ேஷகம் செய்யப்படும். தற்போது, ஐந்து கட்டளைதாரர்கள் இணைந்து, அபிேஷகம் செய்யலாம். அதற்கு, தினசரி, ஐந்து பேர் முன்பதிவு செய்யலாம். ஒருவருக்கு கட்டணமாக, 6,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
வரும், 2018க்கான முன்பதிவு, 5 முதல் துவங்குகிறது. முழு தொகையையும் செலுத்துபவர்களுக்கு மட்டும் ரசீது வழங்கப்படும்; உபயதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே போல், தங்கத் தேர், புஷ்பங்கி மற்றும் வெண்ணை காப்பு அலங்காரம் போன்றவற்றுக்கு, தனித்தனியாக முன்பதிவு நடக்கிறது.
நரசிம்ம சுவாமி திருக்கல்யாணம், ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட நாட்களில் நடக்க உள்ளது. இதற்கு, 2,500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் 3,825 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!

 கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் 3,825 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!
பெரம்பலுார்:கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், இன்று, அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், போர் வெற்றியின் அடையாளமாக கட்டப்பட்டது. இக்கோவில் உலக பிரசித்தி பெற்றது; புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும்,ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, 75 கிலோ எடை உள்ள, 51 மூட்டை என, 3,825 கிலோ அரிசியால் சாதம் சமைத்து, காலை, 9:00 மணி முதல், கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி, மாலை, 6:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

லிங்கத்தின் மேல் சாத்தப்படும், ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது, இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.இந்த ஆண்டும் இன்று அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் இரவு, 9:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். 

மீதமுள்ள சாதம், ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். நாளை, மூலவருக்கு ருத்ரா பிஷேகமும் நடைபெற உள்ளது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...