Friday, November 3, 2017


நாமக்கல் ஆஞ்சநேயர் அபிஷேக முன்பதிவு


நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், 2018க்கான, தினசரி அபிஷேகத்திற்கு, நவ., 5ல் முன்பதிவு துவங்கவுள்ளது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் மூலவருக்கு, தினமும் காலை, 9:00 மணிக்கு, 1,008 வடை மாலை சாத்தப்படும். பின், சுவாமிக்கு அபி ேஷகம் செய்யப்படும். தற்போது, ஐந்து கட்டளைதாரர்கள் இணைந்து, அபிேஷகம் செய்யலாம். அதற்கு, தினசரி, ஐந்து பேர் முன்பதிவு செய்யலாம். ஒருவருக்கு கட்டணமாக, 6,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
வரும், 2018க்கான முன்பதிவு, 5 முதல் துவங்குகிறது. முழு தொகையையும் செலுத்துபவர்களுக்கு மட்டும் ரசீது வழங்கப்படும்; உபயதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே போல், தங்கத் தேர், புஷ்பங்கி மற்றும் வெண்ணை காப்பு அலங்காரம் போன்றவற்றுக்கு, தனித்தனியாக முன்பதிவு நடக்கிறது.
நரசிம்ம சுவாமி திருக்கல்யாணம், ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட நாட்களில் நடக்க உள்ளது. இதற்கு, 2,500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...