Friday, November 3, 2017


மாயமான வருமான வரி அதிகாரி சிறு காயங்களுடன் மீட்பு

கிருஷ்ணகிரி: காணாமல் போன, கோவை வருமான வரி அதிகாரி, கிருஷ்ணகிரி அருகே காயங்களுடன் மீட்கப்பட்டார். கோவை, பீளமேடு கவுதமபுரியை சேர்ந்தவர் சிவக்குமார், 38; கோவை வருமானவரி அலுவலகத்தில், துணை ஆணையராக பணிபுரிகிறார். கடந்த மாதம், 13ல் அலுவலகம் சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. அவரின் தம்பி ராம்குமார் புகாரின்படி, பீளமேடு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அச்ச மங்கலம் கூட்ரோடு அருகில், உடலில் சிறு காயங்களுடன் சிவக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியே ரோந்து சென்ற ஊர்க்காவல்படையினர் அவரை மீட்டு, கந்திக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில், போலீசார் சேர்த்தனர். ராம்குமாருக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

news today 23.10.1024