Friday, November 3, 2017


மணக்கோலத்தில் தேர்வெழுதிய பாலிடெக்னிக் மாணவி


மணக்கோலத்தில் தேர்வெழுதிய பாலிடெக்னிக் மாணவி
விழுப்புரம்: பாலிடெக்னிக் மாணவி, மணக்கோலத்தில் வந்து, தேர்வு எழுதினார்.
விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்தை சேர்ந்த வினோதினி; கப்பியாம்புலியூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், 3ம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 26ம் தேதி துவங்கிய, தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கான வாரிய தேர்வை எழுதி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு, வினோதினிக்கு, கடலுார் மாவட்டம், திருவந்திபுரத்தில் திருமணம் நடந்தது. இதைதொடர்ந்து, நேற்று நடந்த, 'டிஜிட்டல் கம்யூனிகேஷன்' தேர்வை எழுதுவதற்காக மணமகள் புறப்பட்டார். காலை, 9:00 மணிக்கு, வினோதினி மணக்கோலத்தில், தன் கணவருடன் காரில் வந்து, தேர்வு எழுதினார்.

No comments:

Post a Comment

news today 23.10.1024