Saturday, November 11, 2017


சுப்ரீம் கோர்ட்டை இழுத்து மூடுங்க: தலைமை நீதிபதி முன் பூசன் ஆவேசம்

Updated : நவ 10, 2017 23:15 |




புதுடில்லி: எம்.சி.ஐ. எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பெருமளவு ஊழல் நடந்தது அம்பலமானது .இதில் ஒடிசாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மீதான வழக்கில் நீதிபதிகள் பெயரில் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரிக்கிறது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

தொடர்ந்து இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, வழக்கு தொடர்ந்துள்ள அரசு சாரா அமைப்பு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பிரஷாந்த் பூஷண், தலைமை நீதிபதி குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.அதனால் கோபமடைந்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா கண்டனம் தெரிவித்தார். ' தொடர்ந்து நடந்த காரசார விவாதத்தின் போது திடீரென ஆவேசமடைந்த பூசன், எனக்கு பேச அனுமதிக்கவில்லை' என்றால் இந்த சுப்ரீம் கோர்ட் எதற்கு இழுத்து மூடுங்க என்று கூறிவிட்டு கோர்ட்அறையில் இருந்து வேகமாக வெளியேறினார்.
 தோண்ட,தோண்ட,வெளிப்படும்,,'மெகா' மோசடி.. பூதம்!

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடந்து வரும், வருமான வரித்துறை சோதனையில், தோண்ட தோண்ட வெளிப்படும் பூதமாக, 'மெகா' மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. இரண்டாவது நாளாக, 100 இடங்களில் நீடித்த சோதனையில், இதுவரை, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான,பினாமி சொத்து பத்திரங்கள் மற்றும் முறைகேடான முதலீட்டு ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஒட்டுமொத்த தமிழகத்தையும், சசி குடும்பம் கபளீகரம் செய்த பின்னணி விவகாரங்கள், விசாரணையில் வெளிவர துவங்கி உள்ளன.





இதற்கிடையில், மூன்றாவது நாளாக, இன்றும் சளைக்காமல் சல்லடை போட, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதால், பொறியில் மாட்டிய எலி போல, மன்னார்குடி கும்பல் கதி கலங்கி நிற்கிறது.

ஜெயலலிதாவின் தோழியாவதற்கு முன், 'வீடியோ கேசட்' விற்பனை செய்த சசிகலா; போக வேண்டிய இடங்களுக்கு, பொடி நடையாக சென்று வந்த தினகரன், ஒரு சில ஆண்டுகளில், மதுபான ஆலை, தேயிலை எஸ்டேட், சினிமா கம்பெனி, 'டிவி' நிறுவனம் என, பெரும் பண முதலைகளாக உருவெடுத்துள்ளனர். அதன் பலனாக, தமிழகத்தின் பல பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும், சசிகலா குடும்பத்தினர், சொந்தக்காரர்களாகி உள்ளனர்.

ஆட்டம்

ஜெ., முதல்வராக இருந்ததால், அவரது நிழலில், இதுவரை தப்பித்து வந்தனர். ஜெ., மறைந்ததாலும், சசிகலா சிறைக்கு சென்றதாலும், அவரது குடும்பத்தினரின் ஆட்டம் சரியத் துவங்கியது. இந்த நேரம் பார்த்து, ஆட்சியும், கட்சியும், தங்களை கை கழுவியதால், சொத்துக்களையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள, ஆதரவாளர் கூட்டத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையில், வருமான வரித்துறை வளையத்தில், தங்கள் குடும்பம் சிக்கி இருப்பதை உணர்ந்த சசி குடும்பம், இரட்டை இலையை, லஞ்சம் கொடுத்தாவது பெற்று, இழந்த அரசியல் செல்வாக்கை பெற, காய் நகர்த்தியது. அதிலும் வழக்கு வரவே, தினகரன் சிக்கலில் மாட்டினார்.இந்த சூழலில், அவர்கள்



பயந்தபடியே, வருமான வரித்துறையினர், நேற்று முன்தினம், சசி சொந்தங்களை சல்லடை போடத் துவங்கினர்.

அதிரடி

சென்னையில் தினகரன், நடராஜன், விவேக், கிருஷ்ணபிரியா வீடுகள், ஜெயா, 'டிவி' மற்றும் 'நமது எம்.ஜி.ஆர்.,' அலுவலகங்கள் மற்றும் வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலில்' உள்ள, 'ஜாஸ் சினிமாஸ்' மற்றும், 'மிடாஸ்' மதுபான ஆலை உள்ளிட்ட, 111 இடங்களில், அதிகாரிகள் படை, அதிரடியாக புகுந்தது.மேலும், மன்னார்குடியில் திவாகரன், தஞ்சையில் நடராஜன் வீடு, நீலகிரியில் கோடநாடு எஸ்டேட், குன்னுார் கர்சன் எஸ்டேட், புதுச்சேரியில் லட்சுமி நகைக்கடை, தினகரன் பண்ணைத் தோட்டம் மற்றும் பெங்களூரு, ஐதராபாத், டில்லி என, மொத்தம், 187 இடங்களில் சோதனை நடந்தது.

அதில், 900 அதிகாரிகள் ஈடுபட்டனர். இரண்டாவது நாளான, நேற்று காலை, 140 இடங்களில் சோதனை நீடித்தது; மாலையில், 100 இடங்களாக குறைந்தது. அதில், முறை கேடான பரிவர்த்தனைகள் நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

சசிகலா, இளவரசி உள்ளிட்டோரின் போலி நிறுவனங்களை, மத்திய கம்பெனி விவகார அமைச்சகம் முடக்கியுள்ளது. மேலும், சில போலி நிறுவனங்களையும், அவர்கள் நடத்தி வந்துள்ளனர். அந்த, 10 போலி நிறுவனங்கள் தொடர்பான சோதனையில், முறைகேடான பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் சிக்கி உள்ளன.இதேபோல், பல கோடி ரூபாய்க்கு, தமிழகத்தின் பல பகுதிகளில், வாங்கி குவிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கின. தற்போது, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆவணங்களின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய் மதிப்புடையவை.

இது தவிர, நாளை, 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்கிறது. அந்த சோதனைகள் முடிந்த பின் தான், அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகே, வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடான வங்கி பரிவர்த்தனை, போலி நிறுவனங்கள் மூலம் நடந்த முறைகேடுகளின் முழு அளவு தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினகரன், 'கப்சிப்!'

தன் உற்றார், உறவினர் வீடுகளில் சோதனை நடப்பது தெரிந்ததும், தினகரன், நேற்று முன்தினம் கொதித்து எழுந்தார். 'இதற்கு காரணமானவர்களை, சும்மா விட மாட்டேன்' என, கொக்கரித்தார்.வரித்துறை சோதனையில், கிருஷ்ணபிரியா, பாஸ்கரன், திவாகரன்

போன்றவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து, கத்தை கத்தையாக முறைகேடான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல், நேற்று அவருக்கு தெரிய வந்தது. அதனால், நேற்று தினகரன் வாய் திறக்காமல் அமைதியானார்.அதேபோல், தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள, தங்கதமிழ்ச்செல்வன் உதவியாளர் வீட்டிலும், நேற்று வரித்துறை சோதனை நடந்தது; அதனால், தினகரன் ஆதரவாளான அவரும், நேற்று வாயை மூடினார்.

எத்தனை பேர்?

வருமான வரித்துறை வரலாற்றில், ஒரு குடும்பத்தை மையமாக வைத்து நடந்த, மிகப்பெரிய சோதனையாக, சசி கும்பல் மீதான நடவடிக்கை கருதப்படுகிறது. 187 இடங்களில் சோதனை நடந்ததால், ஒரு இடத்திற்கு, 10 பேர் என, உத்தேசமாக கணக்கிட்டு, 1,800 அதிகாரிகள், சோதனைக்கு சென்றதாக தகவல் வெளியானது. 'அது, தவறான தகவல்; முதல் நாள் சோதனையில், 1,000க்கும் குறைவான அலுவலர்கள் தான் ஈடுபடுத்தப்பட்டனர்' என, வரித்துறையினர் தெரிவித்தனர்.

கசிந்தது ரகசியம்!

முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ் வீட்டில் சோதனைக்கு போன போது, மத்திய படையுடன் சென்ற வரித்துறையினர், தமிழகம் முழுவதும், நேற்று சோதனை நடத்துவதற்கு, போலீஸ் பாதுகாப்பை தான் நாடினர்.மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழ்நாடு முழுவதும் நடக்கும் சோதனைக்கு, தேவையான மத்திய வீரர்களை பெறுவதற்கு, கால அவகாசம் கிடைக்காததால், தமிழக போலீசாரின் உதவியை நாடினர்.

இது தொடர்பாக, தமிழக டி.ஜி.பி.,யுடன் பேசி, பாதுகாப்பு கேட்டுள்ளனர். அப்போது, 'ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று, வரித்துறை கூறியுள்ளது. ஆனாலும், எப்படியோ, தினகரன் தரப்புக்கு ரகசியம் கசிந்துள்ளது. சில இடங் களில், போலீசார் முறையாக ஒத்துழைக்க வில்லை என்கின்றனர், வரித்துறையினர்.

மன்னார்குடி ஜாதகம்!

சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், வேலையாட்கள் என, ஒருவர் விடாமல், மன்னார்குடி கும்பலின் முழு ஜாதகத்தையும், வருமான வரித்துறையினர் கையில் வைத்தபடி, சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக போலீசாருக்கு கூட, இவ்வளவு தகவல்கள் தெரியுமா என, வியக்கும் அளவுக்கு, சசி சொந்தபந்தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை, வரித் துறையினர் சல்லடை போட்டு தேடி வரு கின்றனர். இதற்கு, அ.தி.மு.க.,வில், சில முக்கிய புள்ளிகள் உதவியதாக தெரிகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

குவியும் 10 ரூபாய் நாணயங்கள்: வங்கி ஊழியர்கள் தவிப்பு

: நவ 11, 2017 01:24 |




புனே: மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், மலை போல் குவிந்துள்ள, 10 ரூபாய் நாணயங்களை பாதுகாக்க முடியாமல், ஊழியர்கள் தவிக்கின்றனர்.

கடந்த, 2005ல், 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின், 2011ல், சில மாற்றங்களை செய்து, புதிய வடிவில், 10 ரூபாய் நாணயங்களை, ரிசர்வ் வங்கி வெளியிட்டது; 5,200 கோடி ரூபாய் மதிப்பில், 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன.

இந்நிலையில், சமூக வலைதளம் மூலம், புதிய, 10 ரூபாய் நாணயம் குறித்து தவறான வதந்தி பரவியது. பழைய மற்றும் புதிய நாணயங்களில் இருந்த வேறுபாட்டை தவறாக புரிந்து கொண்ட மக்கள், போலி நாணயமாக கருதி வாங்க மறுத்தனர். வியாபாரிகளும், இந்த நாணயங்களை வாங்க மறுத்ததால், மக்கள் தங்களிடம் இருந்த, 10 ரூபாய் நாணயங்களை, வங்கிகளில் டிபாசிட் செய்தனர். புனே மாவட்ட, கூட்டுறவு வங்கி பெட்டகம், 10 ரூபாய் நாணயங்களால் நிரம்பி வழிவதால், ஊழியர்கள் தத்தளிக்கின்றனர்.

வங்கிகளில், 10 ரூபாய் நாணயங்கள் அதிகளவில் 'டிபாசிட்' செய்யப்படுவதாகவும், இந்த நாணயங்களை பெற்றுக் கொள்ள, வாடிக்கையாளர்கள் முன்வருவதில்லை எனவும், இவற்றை என்ன செய்வதென தெரியாமல், வங்கிகள் தவிக்கின்றன எனவும் புனே கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெயில் என்ஜின் தானாக ஓடிய விவகாரம் ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம்



கர்நாடகாவில் ரெயில் என்ஜின் தானாக ஓடிய விவகாரம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நவம்பர் 10, 2017, 08:28 PM

கலபுரகி,

சென்னை–மும்பை இடையே மும்பை மெயில் என்ற ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் கடந்த 8–ந் தேதி மதியம் கலபுரகி மாவட்டம் வாடி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அங்கு வைத்து ரெயிலின் எலெக்ட்ரிக் என்ஜினை மாற்றிவிட்டு டீசல் என்ஜினை பொருத்தும் பணி நடந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் திடீரென்று எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும் டிரைவர் இல்லாமல் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு தானாக ஓடியது. பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று துரிதமாக செயல்பட்டு எலெக்ட்ரிக் என்ஜினை நிறுத்தினர். இந்த சம்பவம் கலபுரகியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும் டிரைவர் இல்லாமல் ஓடியதற்கு வாடி ரெயில் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் 4 பேரின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்தது.

இதையடுத்து, வாடி ரெயில் நிலைய மேலாளர் சந்தோஷ் தாரே மற்றும் 3 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் ரெயில் என்ஜின் மட்டும் தனியாக ஓடிய விவகாரம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.
டெல்லியில் அரசு பஸ்களில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்



5 நாட்கள் மக்கள் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் கூறி உள்ளார்.

நவம்பர் 11, 2017, 03:15 AM
புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசுபாடுவதை தவிர்க்கும் விதமாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை வாகனங்களையும் இயக்க அரசு முடிவு செய்தது. இதற்கான சோதனை ஓட்டம் 2 கட்டமாக கடந்த ஆண்டு நடந்தது.

2-வது கட்ட சோதனை ஓட்டம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அவசர காலங்களில் மட்டும் இத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மிகுந்து கணப்படுவதால் அங்கு வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு முறை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இத்திட்டம் அமலில் இருக்கும் 5 நாட்களிலும் மக்கள் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் கூறி உள்ளார். இது மக்கள் அரசு போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்கப்படுத்தும் என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
தேசிய செய்திகள்

‘நீட்’ உள்ளிட்ட தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை மத்திய மந்திரிசபை ஒப்புதல்



உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

நவம்பர் 11, 2017, 04:15 AM

புதுடெல்லி,


முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் நடத்த தேசிய தேர்வு முகமை அமைக்கப்படும் என்று நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.


அதன்படி, தேசிய தேர்வு முகமை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடக்கத்தில், சி.பி.எஸ்.சி. நடத்தி வரும் நுழைவுத்தேர்வுகளை மட்டும் இந்த முகமை நடத்தும். பிறகு, படிப்படியாக மற்ற நுழைவுத்தேர்வுகளையும் நடத்தும்.


தற்போது, மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வையும், பல்கலைக்கழக மானியக்குழுவுக்காக கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தேர்வையும் சி.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளை, இனிமேல், தேசிய தேர்வு முகமை நடத்தும். இதன் தலைவரை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமிக்கும்.


இந்த முகமைக்கு ஒரே நேர மானிய உதவியாக மத்திய அரசு ரூ.25 கோடி வழங்கும். இதைக்கொண்டு, முகமை தனது முதல் வருட பணிகளை தொடங்கும். பிறகு தனது செலவுகளை தானே கவனித்துக்கொள்ளும். தன்னாட்சி அமைப்பான இந்த முகமை அமைக்கப்படுவதால், பல்வேறு நுழைவுத்தேர்வுகள் எழுதும் சுமார் 40 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கிராமப்புற மக்களின் குடிநீர் தேவைக்காக, தேசிய ஊரக குடிநீர் திட்டத்தை மாற்றி அமைப்பதற்கும், அதற்கு ரூ.23 ஆயிரத்து 50 கோடி ஒதுக்குவதற்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.


கீழ்கோர்ட்டு நீதிபதிகளின் சம்பளத்தை மாற்றி அமைப்பதற்காக 2-வது தேசிய நீதித்துறை சம்பள கமிஷனை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.பி.வெங்கட்ராம ரெட்டி இருப்பார். 18 மாத காலத்துக்குள் இந்த கமிஷன், மாநில அரசுகளிடம் தனது சிபாரிசுகளை தாக்கல் செய்யும்.


இருப்பு வைக்கப்பட்ட பருப்புகளை மதிய உணவு திட்டம் போன்ற மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக ஹாங்காங்குடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய செய்திகள்

அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே ‘கோல்ட் மெடல்’ பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு


அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும் மது அருந்தாதவர்களுக்கு ‘கோல்ட் மெடல்’ வழங்கப்படும் என புனே பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
நவம்பர் 10, 2017, 04:27 PM

புனே,

மதிப்புமிக்க பல்கலைக்கழகம் ‘மோல்ட் மெடலுக்கு’ விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


பல்கலைக்கழகத்தில் தங்க பதக்கம் பெற தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு அதிகமான மதிப்பெண்கள் பெறுவது மற்றும் பல்கலைக்கழக கல்வி நிகழ்வுகளில் பங்கேற்று திறனை வெளிப்படுத்துவது என்பது சிறந்த மாணவர்களுக்கு அவசியமானது என நீங்கள் எண்ணியிருக்கலாம். இப்போது மதிப்புமிக்க புனே பல்கலைக்கழகம் சில விரும்பதக்க நடவடிக்கையையும் இதில் இணைத்து உள்ளது, அதாவது நீங்கள் ‘கோல்ட் மெடல்’ வாங்க வேண்டும் என்றால் அசைவம் சாப்பிடாதவராக இருக்கவேண்டும் மற்றும் மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே.

அசைவம் சாப்பிடாத மற்றும் மது அருந்தாத மாணவர்கள் மட்டுமே ‘மோல்ட் மெடல்’ பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக 'தி குயின்ட்' செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. இச்செய்தி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதங்களில் பரவி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். புனே பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவியும், சரத் பவாரின் மகளுமான எம்.பி. ஸ்ரீபிரியா படேல் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்,

அதிர்ச்சியாக உள்ளது. நம்முடைய பல்கலைக்கழகத்திற்கு என்ன ஆனது... அப்படியென்றால் படித்து பெரும் மார்க் பற்றி? தயவு செய்து அனைவருக்கும் நியாயமான மற்றும் தரமான கல்விக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள். மக்களை ஏன் பிளவு படுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். இதுபோன்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...