தேசிய செய்திகள்
அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே ‘கோல்ட் மெடல்’ பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு
அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும் மது அருந்தாதவர்களுக்கு ‘கோல்ட் மெடல்’ வழங்கப்படும் என புனே பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
நவம்பர் 10, 2017, 04:27 PM
புனே,
மதிப்புமிக்க பல்கலைக்கழகம் ‘மோல்ட் மெடலுக்கு’ விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பல்கலைக்கழகத்தில் தங்க பதக்கம் பெற தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு அதிகமான மதிப்பெண்கள் பெறுவது மற்றும் பல்கலைக்கழக கல்வி நிகழ்வுகளில் பங்கேற்று திறனை வெளிப்படுத்துவது என்பது சிறந்த மாணவர்களுக்கு அவசியமானது என நீங்கள் எண்ணியிருக்கலாம். இப்போது மதிப்புமிக்க புனே பல்கலைக்கழகம் சில விரும்பதக்க நடவடிக்கையையும் இதில் இணைத்து உள்ளது, அதாவது நீங்கள் ‘கோல்ட் மெடல்’ வாங்க வேண்டும் என்றால் அசைவம் சாப்பிடாதவராக இருக்கவேண்டும் மற்றும் மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே.
அசைவம் சாப்பிடாத மற்றும் மது அருந்தாத மாணவர்கள் மட்டுமே ‘மோல்ட் மெடல்’ பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக 'தி குயின்ட்' செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. இச்செய்தி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதங்களில் பரவி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். புனே பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவியும், சரத் பவாரின் மகளுமான எம்.பி. ஸ்ரீபிரியா படேல் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்,
அதிர்ச்சியாக உள்ளது. நம்முடைய பல்கலைக்கழகத்திற்கு என்ன ஆனது... அப்படியென்றால் படித்து பெரும் மார்க் பற்றி? தயவு செய்து அனைவருக்கும் நியாயமான மற்றும் தரமான கல்விக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள். மக்களை ஏன் பிளவு படுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். இதுபோன்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே ‘கோல்ட் மெடல்’ பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு
அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும் மது அருந்தாதவர்களுக்கு ‘கோல்ட் மெடல்’ வழங்கப்படும் என புனே பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
நவம்பர் 10, 2017, 04:27 PM
புனே,
மதிப்புமிக்க பல்கலைக்கழகம் ‘மோல்ட் மெடலுக்கு’ விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பல்கலைக்கழகத்தில் தங்க பதக்கம் பெற தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு அதிகமான மதிப்பெண்கள் பெறுவது மற்றும் பல்கலைக்கழக கல்வி நிகழ்வுகளில் பங்கேற்று திறனை வெளிப்படுத்துவது என்பது சிறந்த மாணவர்களுக்கு அவசியமானது என நீங்கள் எண்ணியிருக்கலாம். இப்போது மதிப்புமிக்க புனே பல்கலைக்கழகம் சில விரும்பதக்க நடவடிக்கையையும் இதில் இணைத்து உள்ளது, அதாவது நீங்கள் ‘கோல்ட் மெடல்’ வாங்க வேண்டும் என்றால் அசைவம் சாப்பிடாதவராக இருக்கவேண்டும் மற்றும் மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே.
அசைவம் சாப்பிடாத மற்றும் மது அருந்தாத மாணவர்கள் மட்டுமே ‘மோல்ட் மெடல்’ பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக 'தி குயின்ட்' செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. இச்செய்தி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதங்களில் பரவி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். புனே பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவியும், சரத் பவாரின் மகளுமான எம்.பி. ஸ்ரீபிரியா படேல் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்,
அதிர்ச்சியாக உள்ளது. நம்முடைய பல்கலைக்கழகத்திற்கு என்ன ஆனது... அப்படியென்றால் படித்து பெரும் மார்க் பற்றி? தயவு செய்து அனைவருக்கும் நியாயமான மற்றும் தரமான கல்விக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள். மக்களை ஏன் பிளவு படுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். இதுபோன்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment