சுப்ரீம் கோர்ட்டை இழுத்து மூடுங்க: தலைமை நீதிபதி முன் பூசன் ஆவேசம்
Updated : நவ 10, 2017 23:15 |
புதுடில்லி: எம்.சி.ஐ. எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பெருமளவு ஊழல் நடந்தது அம்பலமானது .இதில் ஒடிசாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மீதான வழக்கில் நீதிபதிகள் பெயரில் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரிக்கிறது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
தொடர்ந்து இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, வழக்கு தொடர்ந்துள்ள அரசு சாரா அமைப்பு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பிரஷாந்த் பூஷண், தலைமை நீதிபதி குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.அதனால் கோபமடைந்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா கண்டனம் தெரிவித்தார். ' தொடர்ந்து நடந்த காரசார விவாதத்தின் போது திடீரென ஆவேசமடைந்த பூசன், எனக்கு பேச அனுமதிக்கவில்லை' என்றால் இந்த சுப்ரீம் கோர்ட் எதற்கு இழுத்து மூடுங்க என்று கூறிவிட்டு கோர்ட்அறையில் இருந்து வேகமாக வெளியேறினார்.
No comments:
Post a Comment