Saturday, November 11, 2017

'மிடாஸ்' மதுபான கொள்முதல்  கை கழுவுகிறது 'டாஸ்மாக்'

வருமான வரி சோதனையை தொடர்ந்து, சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான, 'மிடாஸ்' நிறுவனத்திடம் இருந்து, மதுபானம் கொள்முதல் செய்வதை முழுவதுமாக நிறுத்த, 'டாஸ்மாக்' முடிவு செய்துள்ளது.




தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், பீர் மற்றும் மது வகைகள் சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

12 லட்சம் பெட்டிகள்

இந்நிறுவனம், 11 நிறுவனங்களிடம் இருந்து, மாதத்திற்கு சராசரியாக, 48 லட்சம் பெட்டி மது வகைகளை வாங்குகிறது. அதில், சசிகலா

குடும்பத்தினருக்கு சொந்தமான, மிடாசிடம் இருந்து மட்டும், 12 லட்சம் பெட்டிகள் வாங்கப்படுகின்றன. தி.மு.க., ஆதரவு நிறுவனங் களான, 'எஸ்.என்.ஜே., கல்ஸ்' ஆகியவற்றிடம், ஆறு லட்சம் பெட்டி; மற்ற நிறுவனங்களிடம் இருந்து, மூன்று - நான்கு லட்சம் பெட்டிகளும் வாங்கப் படுகின்றன.

முதல்வர் பழனிசாமி,தினகரன் மோதலை தொடர்ந்து, மிடாசிடம் வாங்கும் மதுபானங்களை, எட்டு லட்சம் பெட்டி, ஏழு லட்சம் பெட்டி என, டாஸ்மாக் படிப்படியாக குறைத்தது.அதன்படி, இம் மாதத்திற்கு, ஐந்து லட்சம் பெட்டிகள் சப்ளைக்கான, 'ஆர்டர்' மட்டுமே தரப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயம்

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, டாஸ்மாக்கில், மிடாஸ் ஆதிக்கம் அதிகம் இருந்தது. மிடாஸ் மது வகைகளை, 'குடி'மகன்கள் விரும்பாத நிலையிலும், அதிகளவில் வாங்கப் பட்டு, வலுக் கட்டாயமாக விற்கப்படும். முதல்வர் பழனிசாமி, தினகரன் மோதல், டாஸ்மாக்கில் மிடாசின் ஆதிக்கத்தை குறைத்தது.

சில மூத்த அமைச்சர்கள், மிடாசுக்கு ஆதரவாக இருந்ததால், மது கொள்முதலை நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், மிடாஸ் ஆலை உட்பட, சசிகலா, தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு,அலுவலகங்களில், சோதனை நடத்தினர். அதனால், அடுத்த மாதத் தில் இருந்து, மிடாசில் இருந்து, மது வகைகள் வாங்குவதை முழுவதுமாக நிறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...