Saturday, November 11, 2017

ரெயில் என்ஜின் தானாக ஓடிய விவகாரம் ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம்



கர்நாடகாவில் ரெயில் என்ஜின் தானாக ஓடிய விவகாரம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நவம்பர் 10, 2017, 08:28 PM

கலபுரகி,

சென்னை–மும்பை இடையே மும்பை மெயில் என்ற ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் கடந்த 8–ந் தேதி மதியம் கலபுரகி மாவட்டம் வாடி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அங்கு வைத்து ரெயிலின் எலெக்ட்ரிக் என்ஜினை மாற்றிவிட்டு டீசல் என்ஜினை பொருத்தும் பணி நடந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் திடீரென்று எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும் டிரைவர் இல்லாமல் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு தானாக ஓடியது. பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று துரிதமாக செயல்பட்டு எலெக்ட்ரிக் என்ஜினை நிறுத்தினர். இந்த சம்பவம் கலபுரகியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும் டிரைவர் இல்லாமல் ஓடியதற்கு வாடி ரெயில் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் 4 பேரின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்தது.

இதையடுத்து, வாடி ரெயில் நிலைய மேலாளர் சந்தோஷ் தாரே மற்றும் 3 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் ரெயில் என்ஜின் மட்டும் தனியாக ஓடிய விவகாரம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...