Monday, November 27, 2017



Not just cheating, Madras University stares at an examination scam

Siddharth Prabhakar | TNN | Updated: Nov 27, 2017, 06:36 IST



CHENNAI: With 12 students found guilty of impersonation and several others suspected of indulging in malpractices during exams, University of Madras may have on its hands a large-scale, well-networked examination scam involving students, exam centres and invigilators.

The institution investigated examinations held for candidates of the Institute of Distance Education (IDE) in November and December 2016, debarred 12 students — who were found to have hired someone else to write the exams for them — from writing exams for three years. Close to 500 students who wrote exams at IDE centres in Mysuru, Mumbai and Hyderabad have been called for an inquiry along with the hall superintendents and invigilators who supervised the tests.

Experts say the scam is a manifestation of a practice in which universities allow study centres to proliferate outside their jurisdiction in violation of University Grants Commission (UGC) guidelines. These centres are located too far for the university to effectively scrutinise their activities. Following the UGC order, Madras university shut down centres outside Tamil Nadu in May.



The anatomy of the scam as revealed by the inquiry is as follows: Students from Chennai and its neighbouring districts pursuing MBA, BBA, MA or MSc through distance mode chose to write their exams in centres outside TN. Facilitated by unscrupulous elements who had links with the study centres, either dummy candidates were allowed to take the exams or answer scripts were filled outside exam centres. In the second case, the answer sheets were bunched together with the others in the centre and then sent to the university for evaluation.

The enquiry panel probing the scam collected evidence to piece this together. It found handwriting of some candidates on answer sheets differed from subject to subject. In some cases, signature of the student in the exam attendance register was different from the one on the answer sheet. Evidence also pointed to collusion of officials at the examination centres. In some cases, the signature and name of the hall superintendent did not match with that on the answer sheet and attendance register. In others, the signature of the superintendent was missing from the answer sheets.

Latest CommentThese state of affairs must be given global publicity as well at All India level. The rot begins from the head. From vote buying by leaders to the very students who will be responsible for the future of the State.Malaikallan N

Centres outside TN can download question papers half-an-hour before the exam, but after the exam they have enough time to courier the answer scripts. "Exams are held on Sundays, a postal holiday. Centres take advantage and use the extra day to insert the fake answer sheets. Since a courier to Chennai from Mumbai or Hyderabad might take two days, the university can't question the delay," a source probing the scam said.

In a perplexing turn of events, three candidates who were questioned said they did not appear for the exam at all. They alleged that someone else had applied for the exam, paid the fee and wrote the papers in their name. It is suspected that they gave the statement to wriggle out of being debarred.
'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது'

Added : நவ 27, 2017 01:21 | கருத்துகள் (5)



  புதுடில்லி : 'மனைவியை தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என, கணவனை கட்டாயப்படுத்த முடியாது' என, கூறியுள்ள உச்ச நீதிமன்றம், விமான பைலட் ஒருவரை, அவரது மனைவியின் செலவுக்காக, 10 லட்சம் ரூபாயை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை:

விவாகரத்து வழக்கில், பைலட் ஒருவருக்கு ஜாமினை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதர்ஷ் கோயல், யு.யு.லலித் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழும் பைலட் தொழிலில் ஈடுபட்டுள்ள கணவர், துறை ரீதியிலான நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, தான் பணியாற்றும் ஊர்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதாகக் கூறி, ஜாமின் பெற்றுள்ளார். ஆனால், அதன்படி அவர் நடந்து கொள்ளவில்லை என்பதால், அவரது ஜாமினை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. மனைவியை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என கணவனைக் கட்டாயப்படுத்த முடியாது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட  மற்றும்
மனைவி குழந்தைக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும்.

உத்தரவு:

அதனால், விசாரணை நீதிமன்றத்தில், கணவன், 10 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும். அதை அவரது மனைவி தன் செலவுக்காக பயன்படுத்தலாம். மதுரைக் கிளை உத்தர விட்டதுபோல், இந்த வழக்கை, கீழ் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் விசாரிக்க வேண்டும். அப்போது, தற்போது, வழங்க உள்ள, 10 லட்சம் ரூபாயை அதில் ஈடு செய்யலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை: நர்ஸ்கள் முற்றுகை போராட்டம்

Added : நவ 27, 2017 05:51

சென்னை: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், சென்னை- தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அசிங்கமாக திட்டும் ஆசிரியைகள் : போலீஸ் விசாரணையில், 'திடுக்'

Added : நவ 27, 2017 01:13

வேலுார்: அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மேலும் பல மாணவியர் இந்த முடிவுக்கு வந்ததால், அவர்களை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல், நிறுத்தி விட்ட தகவல் கிடைத்துள்ளது.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அருகே, பனப்பாக்கத்தில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. பிளஸ் 1 மாணவியர் சங்கரி, மனிஷா, தீபா, ரேவதி ஆகியோர், மாதாந்திர தேர்வில், கணிதத்தில் தேர்ச்சி பெறாததால், வகுப்பு ஆசிரியர் மீனாட்சி சுந்தரேஸ்வரி, தலைமை ஆசிரியை ரமாமணி திட்டியுள்ளனர். இதனால், நான்கு பேரும், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.வேலுார், எஸ்.பி., பகலவன் தலைமையில், நான்கு தனிப்படையினர், இரண்டாவது நாளாக நேற்று, 22 மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் பெற்றோர் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட, நான்கு மாணவியரையும், டியூஷனில் சேரும்படி ஆசிரியர்கள் கூறினர்; அவர்கள் மறுத்து விட்டனர். கடந்த வாரம், பள்ளி நேரத்தில், அவர்கள் யாரிடமோ மொபைல் போனில் பேசியுள்ளனர். இதை பார்த்த ஆசிரியைகள், ஜாதி பெயரை குறிப்பிட்டு, அனைவர் முன்னிலையிலும் திட்டியுள்ளனர். இதுதான், அவர்கள் தற்கொலைக்கு முக்கிய காரணம்.ஆசிரியைகள் பலர், மாணவியரை அசிங்கமாக திட்டுகின்றனர். இதனால், பல மாணவியர் தற்கொலை முடிவில் இருந்து உள்ளனர்.
இதையறிந்த பல பெற்றோர், அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிர்ச்சியடைந்த போலீசார், பள்ளிக்கு சரியாக வராத, 85 மாணவியரிடம், 'இனி இப்படி இருக்கக் கூடாது' என, அறிவுரை வழங்கினர். பின், அசிங்கமாக திட்டும்,ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்துள்ளனர். பனப்பாக்கம் பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும், வேறு பள்ளிக்கு மாற்ற, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் ராமலிங்கம் தலைமையிலான குழுவினர், இரண்டாது நாளாக, பனப்பாக்கம் அரசு மகளிர் பள்ளியில், நேற்று விசாரணை நடத்தினர். பின்,

நிருபர்களிடம், ஆணையர் ராமலிங்கம் கூறியதாவது:இதுபோன்ற சம்பவம், இனி எந்த பள்ளியிலும் நடக்க கூடாது.குழந்தைகளுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும், 044 2642 1359, வேலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை, 0416 222 2310 என்ற தொலைபேசியில் அழைத்து தெரிவிக்கலாம்.மாணவியர் தற்கொலை குறித்து, நீதி விசாரணை நடத்தப்படும். தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகள் வழிகாட்டி மையம் அமைக்கப்படும். இதில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தொலைபேசி எண்கள் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.பனப்பாக்கம் பள்ளியில், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல்இருக்க, பெற்றோர், பொதுமக்கள், சமூக ஆர்வலர், ஆசிரியர், பத்திரிகையாளர்கள் அடங்கிய, 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது?

Added : நவ 27, 2017 00:35

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுதோறும், மே மாதம், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டுக்கு, ஏப்ரலில், இந்த தேர்வு நடத்தப்படலாம் என, கூறப்படுகிறது.இது தொடர்பாக ஆலோசிக்க, சி.பி.எஸ்.இ.,யின், நீட் தேர்வு கமிட்டி, விரைவில் கூடுகிறது. டிச., மூன்றாம் வாரம் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு, தமிழக மாணவர்கள், முழுமையாக, நீட் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அதனால், நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, 11.35 லட்சத்திலிருந்து, 13 லட்சத்துக்கும் மேல் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -
கட்டடங்களுக்கு சிறப்பு சலுகை   விதிகளை திருத்துகிறது அரசு

நகர், ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி., எல்லைக்குட்பட்ட பகுதிகளில், புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதிக்கப்படும் அளவை விட, சிறப்பு சலுகை வழங்கும் வகையில், விதிகளில் திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.




தமிழகத்தில் நகரமைப்பு சட்டப்படி, நிலத்தின் மொத்த பரப்பளவில், ஒன்றரை மடங்கு வரை, கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்படும்.

கட்டணம்

இதில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும மான, சி.எம்.டி.ஏ.,வில், பிரீமியம், எப்.எஸ்.ஐ.,
எனப்படும் கட்டண அடிப்படையிலான கூடுதல் தளபரப்பு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டது. இதன்படி, வளர்ச்சி விதிகளின்படிஅனுமதிக் கப்படும் அளவில், 50 சதவீதத்தை கூடுதலாக பெற்று, கட்டடங்கள் கட்டலாம்.ஒரு குறிப்பிட்ட நிலத்தில், விதிமுறைப்படி, ஆறு வீடுகள் கட்டலாம் என்றால், அங்கு, பிரீமியம், எப்.எஸ்.ஐ., பயன் படுத்தி, ஒன்பது வீடுகள் கட்டலாம்.

இந்த சலுகையை, டி.டி.சி.பி., பகுதிகளிலும் அறிமுக படுத்த, அரசு ஆலோசித்து வருகிறது.இதுகுறித்து, நகர் ஊரமைப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:டி.டி.சி.பி.,யில், அனைத்து திட்ட பகுதி களிலும், பிரீமியம், எப்.எஸ்.ஐ., சலுகை வழங்கும் வகையில், வளர்ச்சி விதிகளில், திருத்தம் செய்யப் பட உள்ளது.இதற்கான வரைவு தயாரிக்கும் பணிகள், இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

ஆலோசனை

மேலும், புதிய நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் இடங்களில், நிலம் கையகப்படுத்த பயன்படுத்தப்படும் வளர்ச்சி உரிமை மாற்றமான, டி.டி.ஆர்., திட்டத்திலும், இந்த நடைமுறையை

Advertisement செயல்படுத்த ஆலோசித்து வருகிறோம். விரைவில், இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசின் இந்த சலுகையால், டி.டி.சி.பி., பகுதி களில் அதிக உயரம் உள்ள குடியிருப்பு திட்டங் கள் கட்ட, வாய்ப்பு ஏற்படும். மேலும், இதனால், வளரும் நகரங்களில் வீடுகள் விலை உயர்வது தடுக்கப்படும்.

- நமது நிருபர் -
ஆன்லைனில் அறைகள் முன்பதிவு -குளறுபடி களைய நடவடிக்கை : தேவசம்போர்டு தலைவர் தகவல்

Added : நவ 27, 2017 01:44

சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் தங்குவற்கான ஆன்லைன் முன்பதிவில் உள்ள குளறுபடிகள் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு 560 அறைகள் உள்ளன. இதில் 83 அறைகள் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் தங்குவதற்கு வழங்கப்பட்டுள்ளது. 372 அறைகள் சன்னிதானத்தில் உள்ள அக்காமடேஷன் சென்டர் வழியாக நேரடியாக
பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 105 அறைகள் ஆன்லைன் முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் முன்பதிவு பொறுப்பு கெல்ட்ரான் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில தவறுகள் முன்பதிவில் ஏற்பட்டு வருகிறது. ஒரே அறை இரண்டு பேருக்கு முன்பதிவு செய்ய முடிகிறது. இதை சரி செய்ய கேட்டும் அந்த நிறுவனம் சரி செய்யவில்லை. இது தொடர்பாக முதல்வரிடம் தேவசம்போர்டு புகார் செய்துள்ளது. அவரது ஆலோசனைப்படி, வரும் 28-ம் தேதி கெல்ட்ரான் அதிகாரிகளுடன், தேவசம்போர்டு அதிகாரிகள்
பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.கடந்த ஆண்டு மண்டலபூஜைக்காக நடை திறந்த 10 நாட்களில் அறைகளின் வாடகை வருமானம் 73.86 லட்சமாக இருந்தது.ஆனால் இந்த ஆண்டு இது 86.02 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அறை எண்ணிக்கை அதிகரிக்காமல், வாடகை அதிகரிக்காமல் இந்த வருமான உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் குளறு படி விரைவில் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


NEWS TODAY 07.07.2026