Wednesday, January 10, 2018


நீங்கள் சம்பளம் வாங்கியதும் செய்யும் முதல் செலவு என்ன? எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

By உமா பார்வதி | Published on : 10th January 2018 02:54 PM |


நம்மில் பலர் வாழ்வாதாரத்திற்காக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, வேலைக்கேற்ற வருமானத்தை வாங்குபவர்கள். சுருங்கச் சொன்னால் மாதச் சம்பளக்காரர்கள். முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை பரபரப்பாக நம்மிடம் உள்ள பணம் கொடுக்கல் வாங்கலில்(!) கரைந்து கொண்டிருக்கும். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பார்கள் அதுபோலத்தான் ஒரு பிரமோஷன் கிடைத்து வரவு அதிகரித்தாலும், இதோ நானிருக்கிறேன் என்பதுபோன்று ஒரு பெரிய செலவு காத்துக் கொண்டிருக்கும்.

ஒரு சீட்டு முடிந்ததே என்று சந்தோஷமாக எடுக்கப் பார்த்தால் அந்த தொகைக்குச் சற்றும் குறைவில்லாமல் இன்னொரு செலவு நமக்காவே கைகட்டி நிற்கும். இதுதானப்பா வாழ்க்கை, இது ஒரு மாபெரும் ஆட்டம். பரமபதம் போல, ஏறுமுகம் இறங்குமுகமாகத் தான் இப்படித்தான் வாழ வேண்டியுள்ளது என்று சலித்தும் கொள்வோம்.

சம்பளப் பணத்தை மொத்தமாக இஎம்ஐ கட்டியோ, வீட்டு லோனுக்கோ கொடுத்துவிட்டு மாதம் முழுக்க மங்களம் பாடிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போரும் நம்மில் பலர் உள்ளனர். இப்படி ஒவ்வொரு மாதமும் நித்ய கண்டம் பூரண ஆயுசுதான். இதில் சேமிப்பு என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆகாயத்தில் அபார்ட்மெண்ட் கட்டுவதுபோலத்தான். வெறும் கனவு. ஆனால் சேமிப்பு என்பது மனது வைத்தால் சாத்தியமே என்பதை நாம் உணர்வதில்லை. அதற்கு சிறு மெனக்கிடல் வேண்டும். நிறைய திட்டமிடல்கள் தேவை. வாங்கும் ஒவ்வொரு காசுக்கும் கணக்கு வைக்கும் பழக்கம் அதி முக்கியம்.

வேலைக்குச் சென்று திரும்பவே நேரம் போதாமையாக உள்ளது, இதில் மேற்சொன்னவற்றுக்கு எல்லாம் ஏது நேரம் என்று நினைக்காதீர்கள். நிதானமாக யோசித்துப் பாருங்கள் பத்து ரூபாயில் இரண்டு ரூபாய் சேமிப்பாக இருந்தால் அது ஒரே மாதத்தில் 12 ரூபாயாகும் இல்லையா? சிறு துளி பெரு வெள்ளம் என்பது சத்தியமான உண்மை.

இந்த நான்கெழுத்து மந்திரம் உதவும் - பட்ஜெட்

பணம் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தாலும் சிலருக்கு விரய செலவுகள் மறு பக்கம் வருவதற்கான காரணம் என்ன? எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளையும் எதிர்ப்பார்க்கத் தெரிந்திருந்தால் அவை நிச்சயம் உங்களை அச்சுறுத்தாது. உதாரணமாக தினமும் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் நாம் பயணம் செய்கிறோம் என்றால் நிச்சயம் பெட்ரோல் போடுவோம் அது தெரிந்த செலவு. திடீரென்று வண்டி பஞ்சராகும், வீலில் பிரச்னை ஏற்படும், அல்லது சிறு விபத்தில் சிக்கி வண்டியை முழு சர்வீஸ் விடக் கூட நேரும்.

வண்டியில் சென்று பழகியவர்களுக்கு பேருந்து பயணம் பிடிக்காது. அதனால் ஆட்டோ அல்லது காரில் செல்ல முடிவெடுப்பார்கள். வாகனம் சரி செய்ய ஆகும் செலவுடன் போக்குவரத்துச் செலவும் சேர்ந்து கொள்ள, அது ஒரு பெரிய தொகையாக தொக்கி நிற்கும். இத்தகைய செலவுகளை எதிர்நோக்கும் தெம்பினை நாம் முன்னதாகவே திட்டமிட்டிருந்தால் பிரச்னை இல்லை. இல்லையெனில் நொந்து போவதைத் தவிர வேறு வழியில்லை.

முக்கிய செலவுகள் Vs வெட்டிச் செலவுகள்

அடுத்து நம்மால் எதை கட்டிப் போட முடிந்தாலும் நாவைக் கட்டிப் போட முடியாது. சட்டென்று செலவு செய்வது உணவுக் கடைகளிலும் இனிப்புக் கடைகளிலும்தான். சம்பாதிப்தே சாப்பிடுவதற்குத்தானே என்று கட்சி கட்டுவோருக்கு சொல்ல ஒரே வார்த்தைதான். அது உண்மை. ஆனால் தேவையற்றதை உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதை ருசிக்கென்று சாப்பிடும் பாஸ்ட் ஃபுட் போன்றவற்றை தவிர்த்தாலே பர்ஸ் அதிக பதம் இல்லாமல் தப்பித்துவிடும். இந்த மாதம் உணவுக்கென, மளிகை சாமான்கள் உட்பட, இவ்வளவு தான் செலவு செய்வேன் என்று வரையறுத்துக் கொண்டால் அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட செலவு செய்யக் கூடாது. அதுதான் மன உறுதி. இதைக் கடைப்பிடித்தால் நோய்களுக்கு நோ எண்ட்ரி சொல்லி, மருத்துவத்துக்கு ஆகும் செலவுகளையும் தவிர்த்துவிடலாம்.

அடுத்து வேலைக்காரன் படத்தில் வருவது போல் சூப்பர் மார்கெட்டுக்குச் செல்லும்போது தேவையானதை வாங்கிய பிறகு சில தேவையற்றப் பொருட்களையும் சேர்த்து வாங்கிவிடும் பழக்கம். அது பலருக்கு உண்டு. ஷாப்பிங் என்ற அந்நிய வார்த்தை நம்மிடம் புழுக்கத்திற்கு வந்த நாள் முதல் வெட்டிச் செலவு என்ற வார்த்தையும் உடன் சேர்ந்துவிட்டது. வீட்டுக்குத் தேவையான பொருள் மட்டுமே வாங்கினால் போதும். அதுவும் அந்தப் பொருளின் முழுமையான பயன்பாட்டுக்குப் பிறகே அதை மீண்டும் வாங்க வேண்டும். சிலர் ஒன்று இருக்கும் போதே பத்து வாங்கிக் குவிப்பார்கள். பண விரயம் மட்டுமல்லாமல் இடமும் அடைத்துக் கொண்டு வீடே பொருள்களின் குடவுன் போலக் காட்சியளிக்கும். வெளிநாடுகளில் தற்போது மினிமலிஸம் என்ற வாழ்வியல் முறை பரவலாகிக் கொண்டு வருவது. அது வெறொன்றுமில்லை எளிமையாக வாழ்வதுதான். அதைக் கடைப்பிடித்தால் தண்ட செலவுகள் தவிர்க்கப்பட்டுவிடும். பணம் கையில் மாதக் கடைசியில் மட்டுமல்லாமல் என்றென்றும் தங்கும்.

அத்தியாவசிய செலவுகள் என்னென்ன?

சம்பளம் வாங்கியதும் முதல் செலவாக இனிப்பை சிறிதளவு வாங்கச் சொல்வார்கள் பெரியவர்கள். அது சுப செலவாகும். சம்பளப் பணம் கிடைத்ததும் கடனைத் திருப்பித் தருவார்கள் சிலர். அது நல்ல பழக்கம்தான் ஆனால் அதற்கு முன் சில நேர்மறை செலவுகளைச் செய்த பின் இது போன்ற செலவுகளைச் செய்வது பணத்தை தக்க வைத்துக் கொள்ள ஒரு வழிமுறையாகும். எந்த எந்த செலவு அவசரம், எது சற்றுப் பொறுமையாக செய்யலாம், எதில் கவனம் செலுத்தினால் சிறிது சேமிக்கலாம் என்று யோசித்து நிதானமாக செலவு செய்ய வேண்டும். இப்போது அதற்கென பல வழிகாட்டிகள் உள்ளன. புத்தகங்களிலிருந்து, வங்கிகள் வரை பல வழிமுறைகள் வந்துவிட்டன. மனம் இருந்தால் போதும். வழி தானாகப் பிறக்கும் என்பது கண்கூடான உண்மை.

கடன் வாங்குவதும் கொடுப்பதும்

முதலில் நம்முடைய எண்ணங்கள் உயர்ந்திருக்க வேண்டும். எனக்கெல்லாம் எங்கே நடக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்தால், புலம்பலிலேயே வாழ்க்கை கழிந்துவிடும். எனவே நமக்கு உதவக் கூடியவர்கள் எல்லாம் வானத்திலிருந்து குதிக்கப் போவதில்லை. தனி ஒருவனாக எல்லாவற்றையும் நாம் தான் சமாளிக்க வேண்டும்.

கடன் வாங்குவதைத் தவிர்த்தாலே மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படாது. போலவே நம்முடைய வரவுக்கு மீறி மற்றவர்களுக்குக் கடன் தரும் பழக்கமும் வேண்டாம். வாராக் கடன் ஏற்பட்டுவிட்டால் நம்மால் அதைத் தாங்க முடியாது.

நம்முடைய ஒவ்வொரு கனவையும் நனைவாக்க நாம் தான் பாடுபட வேண்டும். இந்தப் போராட்டத்தை அதிக சிக்கலாக்கிக் கொள்வதும், லகுவாக்கிக் கொள்வதும் நம்முடைய கையில்தான் உள்ளது. அதற்காக கஞ்சத்தனமாக வாழச் சொல்லவில்லை. சிக்கனம் எக்கணமும் இருந்தால் வாழ்நாள் முழுவதும் பொற்கணங்கள்தான் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வோம்.

இனி உங்கள் சம்பளத்தில் முதல் செலவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்
Fraud: CBI court convicts former Indian Bank CMD

TNN | Jan 10, 2018, 07:57 IST




CHENNAI: A special CBI court in Chennai has convicted former chairman and managing director of Indian Bank M Gopalakrishnan and two other ex-officials of the bank in Chennai, 25 years after they were accused of swindling about Rs 18.80 crore, the investigating agency said.

According to a press release from the CBI, the special CBI court sentenced Gopalakrishnan, A V Shanmugasundaram, the then zonal manager in New Delhi, and Satish Kumar, then assistant general manager, Indian Bank, New Delhi to three years rigorous imprisonment and fined them sums ranging from Rs 30,000 to Rs 1.40 lakh.

It was alleged in the FIR filed by the CBI that Shanmugasundaram, Satish Kumar and Gopalakrishnan between August 1989 and August 1993 conspired with the director of Scantel Pvt Ltd and Allied Equipment and Services Ltd, New Delhi to cheat thebank.

"In pursuance of the conspiracy, the accused released Rs 18.08 crore as credit facility to the said director of private firm who cheated the Indian Bank," the CBI spokesperson said.

He said after completion of investigation, a chargesheet was filed before the designated court in Chennai for criminal conspiracy and cheating under the provisions of the Prevention of Corruption Act. "During the trial, the director of private firm died and charges against him were abated. After the trial, the court convicted the accused for the said offences," he said.

TN bus strike: Govt allocates Rs 750 crore to transport dept

| TNN | Jan 10, 2018, 14:36 IST

CHENNAI: The Tamil Nadu government allocated Rs 750 crore to the transport department on Wednesday - on the seventh day of the transport workers strike.

"The government is sanctioning Rs 750 crore to the transport department so that the department employees who have retired till November 30, 2017 can get their retirement benefits. The Rs 750 crore will be a Pongal gift for the employees," chief minister Edappadi K Palaniswami announced in the assembly.

Palaniswami said the AIADMK government had sanctioned a total of Rs 5,138.50 crore to the department between 2011 and 2017. "In 2017-18 alone, the government sanctioned 1,689.38 crore," he said.

Palaniswami asked transport employees to call off their strike. But the workers unions refused to call it off and wanted the government to fulfil their demands including salary hike.


பயணங்களில் நொறுங்கும் பள்ளிப் பிள்ளைகள்

By கவிஞர் ஜெயபாஸ்கரன் | Published on : 09th January 2018 02:47 AM |

வேகமாக வந்த மாநகர அரசுப் பேருந்து ஒன்று அதற்கான நிறுத்தத்தைக் கடந்து, சற்றுத் தூரம் தள்ளிப்போய் நின்றது. இறங்க வேண்டியவர்கள் இறங்கிக் கொண்டிருக்கும்போதே, அந்த நிறுத்தத்தில் காத்திருந்த இருபதுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிப் பிள்ளைகள் தங்களது புத்தகப் பைகளைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு வேக வேகமாக ஓடிப்போய் அந்தப் பேருந்தில் முட்டிமோதிக்கொண்டு ஏற முற்பட்டார்கள். அவர்களில் ஐந்து பேர் கூட ஏறாத நிலையில், விசில் ஓசையோடு பேருந்து வேகமெடுத்துவிட்டது.


மனம் பதறவைக்கின்ற அக்காட்சியின் தொடர்ச்சியாக, எஞ்சிய பிள்ளைகள் அடுத்து வந்து நின்ற ஒரு பேருந்தைப் பார்க்கிறார்கள். அது ஏற்கெனவே பயணிகளால் நிரம்பி வழிந்ததால் அந்தப் பிள்ளைகளைத் தள்ளி நிற்க வைத்துவிட்டு நடத்துநர் விசில் அடித்துவிட்டார்.
அரசுப் பேருந்துகளில் இலவசப்பயணம் செய்வதற்குச் சலுகை பெற்றிருக்கின்ற பள்ளிப் பிள்ளைகளின் பயண அல்லல்கள், கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. தங்களுக்குரிய இலவசப் பயணங்களின்போது அவர்கள் அடைகின்ற ஏமாற்றங்களும், கேட்க நேருகின்ற வசவுகளும், எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற வன்முறைகளும், சகித்துக் கொண்டாக வேண்டிய அவமானங்களும் கணக்கிலடங்காதவை.
பல நேரங்களில் பேருந்துக்குள்ளிருக்கும் பயணிகள் கூட எதன் பொருட்டேனும் அவர்களை அதட்டுவதும் கண்டிப்பதும் உண்டு. சமூகத்தின் பொதுப்புத்தியானது, பள்ளிப் பிள்ளைகளின் கூட்டான பயணங்களையும், குதூகலமான கூச்சல்களையும், அவர்களது சிறு சிறு குறும்புகளையும் எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற முதிர்ச்சியற்றுக் கிடக்கிறது.
கல்வித் தரம், கல்விக் கூடங்களின் தரம், குடும்பப் பொருளாதாரம், உணவுத் தரம் போன்ற தங்களுக்குரிய வளரிளம் பருவத்துத் தேவைகள் எதுவும் சரியாக வாய்க்கப்பெறாத, நமது நாட்டின் பல லட்சக்கணக்கான ஏழை எளிய பள்ளிப் பிள்ளைகள், தங்களின் கல்விப் பயணத்திற்குரிய முறையான போக்குவரத்து வசதியைக் கூடப் பெறாதவர்களாகவே இருக்கின்றனர்.


எவ்விதமான தொலைநோக்குப் பார்வையும், திட்டத் தெளிவுகளும் இல்லாமல், சென்னைப் பெருநகரத்திற்குள் இருந்த பல குடிசைப்பகுதிகள் அகற்றப்பட்டன. இன்றளவும்கூட தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அப்புறப்படுத்தல் நடவடிக்கைகளால் பல்வேறு வகையில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள், மாநகருக்குள் இருக்கும் அரசுப்பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் வளரிளம் பருவத்துச் சிறார்கள்தான். 


அவர்கள் இப்போது சென்னைக்கு வெகுதூரத்தில் செம்மஞ்சேரி, கண்ணகிநகர் போன்ற இடங்களில் அரைகுறை வசதிகளோடு அமைக்கப்பட்டிருக்கின்ற தங்களது புதிய புதிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னை மாநகருக்குள் வந்து படித்துவிட்டுப் போகிறார்கள். அவர்களைப் பொருத்தவரையில், அந்தப் பயணமானது களைப்பையும், வலிகளையும் தரக்கூடிய நெடும்பயணம்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அப்படிப்பட்ட பயணங்களில் அவர்கள் விபத்துகளில் சிக்கிக் காயமடைவதும், உயிரிழக்க நேருவதும் கூட அவ்வப்போது நடக்கிறது. 


கட்டாய வாழ்விட மாற்றத்தால் புதிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்து 46% பிள்ளைகள் பள்ளிகளுக்குச் செல்லாமல் நின்றுவிட்டதாகவும், போக்குவரத்து வசதியின்மையும், உரிய பயணப் பாதுகாப்பின்மையுமே அதற்குக் காரணம் என்றும் "தோழமை' எனும் குழந்தைகளுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் 30% அளவுக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் அப்பகுதிகளின் அரசுப் பள்ளிப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் போனால் போகிறதென்று பணம் கொடுத்துப் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். 


தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தனியார் பள்ளிகளின் பிள்ளைகள், மிகப் பெரும்பாலும் ஒரு கொழுத்த கட்டணத்தைச் செலுத்தித் தங்களது பள்ளி வாகனங்களிலும், பலர் தங்களது பெற்றோர்களின் வாகனங்களிலும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
சென்னை நகரின் ஏழை எளிய பிள்ளைகளுக்கு இதுபோன்ற வசதிகள் ஏதுமில்லை, எனவே அவர்கள், பயண வசதி இல்லாததால் பள்ளிக்குப் போகாத பிள்ளைகளாக மாறுகின்றனர்.
இந்த அவலத்திற்குத் தீர்வு காணும் வகையில், பள்ளிப் பிள்ளைகளுக்கென்றே தனியாகப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இந்த அறிவிப்பு மிக மிகக் காலங்கடந்தவொரு ஞானம் என்றாலுங்கூட, இது நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டின் பல லட்சக்கணக்கான அரசுப் பள்ளிப் பிள்ளைகள் ஓரளவுக்குப் பயன் பெறுவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.


நமது பள்ளிப்பிள்ளைகளின் கல்வியின் பொருட்டான பயணம் என்பது போக்குவரத்துத்துறையின் கரிசனத்தில் நிகழவேண்டுமா? அல்லது கல்வித்துறையின் திட்டங்களில் நிகழவேண்டுமா? என்கின்ற இரண்டு கேள்விகள் இப்போது எழுகின்றன.
நமது அரசின் போக்குவரத்துத் துறையானது, ஏற்கெனவே வரலாறு காணாத அளவுக்குச் சிக்கல்களில் மூழ்கிச் சீர்குலைவுகளின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
போக்குவரத்துத் துறையின் மேம்பாட்டிற்காக ஒரு வல்லுநர் குழுவினரால் தயாரிக்கப்பட்டு அண்மையில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற ஓர் ஆய்வறிக்கை பலகட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் மூத்த குடிமக்கள், பார்வையற்றவர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், மாற்றுத்திறனாளிகள், பள்ளிப் பிள்ளைகள் என்றெல்லாம் பல்வேறு தரப்பினருக்கு இலவசப் பயணச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.


பல பணிமனைகளின் வருவாய் குறைந்து லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு, அந்த இழப்புத் தொகையானது ஆண்டுக்கணக்கில் கோடிகளாக மாறுகிறது. இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், ஒரு தோராயக் கணக்கீட்டின்படி கல்வித்துறையில் இருந்து தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட பணம் அந்தத் துறையால் தரப்படுவதில்லை.
அரசுத் திட்டம் என்பதாலும், தொடர்புடைய எல்லாமே அரசுத்துறைகள் என்பதாலும், ஏதோவொரு புரிதலில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள், போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர்.


நேரடியான வருவாய் இழப்பு என்கிற பின்புலமே, கொத்துக் கொத்தாகப் பேருந்துக்குள் ஏறுகின்ற பள்ளிப் பிள்ளைகளின் மீதான பாராமுகமாகவும் அலட்சியமாகவும் மாறுகிறது என்பது ஓர் உளவியல் உண்மை. தனிப்பட்ட முறையில் பள்ளிப் பிள்ளைகளின் மீது கரிசனம் காட்டி, புன்முறுவலுடன் அவர்களைக் கையாளுகின்ற நல்ல மனநிலையில் போக்குவரத்துத் துறையின் பணியாளர்களை, அந்தத் துறையும் அரசும் வைத்திருக்கவில்லை.
இந்த பிரச்னையின் மீதான பட்டிமன்றத்தில் எந்தத் தரப்பினர் "நியாயமானவர்கள்' எனும் தீர்ப்பினைப் பெற்றாலும், பள்ளிப் பிள்ளைகள் நியாயம் பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும். 


போக்குவரத்துத் துறையில் நிலவுகின்ற இதுபோன்ற சிக்கல்களுக்கிடையேதான் பள்ளிப் பிள்ளைகளுக்கு என்று தனியாக பேருந்துகளை இயக்க பரிசீலனை செய்வதாக அத்துறையின் அமைச்சர் அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு, ஏற்கெனவே அத்துறையில் கொடிகட்டிப் பறக்கின்ற சிக்கல்களும், இயலாமைகளும் எந்த அளவுக்கு இடம் கொடுக்குமென்பது மிகப்பெரிய கேள்விக்குறித்தான். 


சரியாகச் சொல்ல வேண்டுமென்றல், தமிழக அரசின் கல்வித்துறைதான் தமிழகம் முழுவதும் உள்ள 37,141 அரசுப் பள்ளிகளிலும், 8,409 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கின்ற பல லட்சக்கணக்கான பிள்ளைகளின் பாதுகாப்பான இலவசப் பயணத்திற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.


தொலைநோக்குப் பார்வைகளோடு கூடுதல் நிதியை ஒதுக்கி, பள்ளிப் பிள்ளைகளின் பயணத்திற்கென்றே ஆய்வு செய்து வடிவமைப்பு செய்யப்பட்ட பேருந்துகளைக் கொள்முதல் செய்து உரிய வழித்தடங்களில் இயக்க வேண்டும்.


இந்த நடவடிக்கையின் விளைவாக அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும், அவற்றில் பிள்ளைகளின் சேர்க்கையும் இயல்பாகவே அதிகரிக்கும். இப்படிச் செய்தால், அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேருங்கள் என்று விழிப்புணர்வுப் பேரணி நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.
பல்வேறு வகையான தனியார் கல்வி நிறுவனங்களின் பெரும் வளர்ச்சிக்கு, அவை தன்னகத்தே கொண்டுள்ள போக்குவரத்து வாகன வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட அடிப்படைக் கட்டமைப்புவசதி ஆகிய இரண்டே இரண்டு காரணங்கள் தான் என்பதை அரசு உணர வேண்டும்.
தமிழக அரசின் கல்வித்துறையானது மேம்பாட்டுப் பாதைக்குத் திரும்பியிருப்பதற்கான சிறு சிறு சான்றுகள் இப்போது தென்படுகின்றன. அத்தகையச் சான்றுகளின் அடுத்தகட்டமாக, தன்துறையின் பிள்ளைகளுக்கான போக்குவரத்து வசதிகளை மற்ற துறைகளிடம் ஒப்படைக்காமல் அதைத் தன் கையிலும் கட்டுப்பாட்டிலும் தமிழகக் கல்வித்துறை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


விளையாட்டுகள், கோயில் திருவிழாக்கள், பண்டிகைகள், அரசியல் மாநாடுகள், சுற்றுலாப் பொருட்காட்சிகள் போன்ற பல்வேறு வகையான தாற்காலிகத் தேவைகளுக்குக்கூட வேண்டிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கிக் கொண்டிருப்பது ஓர் அரசின் நியாயமான நடவடிக்கை என்றால், படித்துக் கொண்டிருக்கிற பள்ளிப் பிள்ளைகளுக்கான நிரந்தரமான தேவைக்குப் பேருந்துகளைத் தனிப் பேருந்துகளை இயக்க வேண்டியது அதைவிட நியாயமான நடவடிக்கையாகும்.

Monday, January 8, 2018

எசப்பாட்டு 17: காலம்தோறும் துரத்தும் நெருப்பு!

Published : 07 Jan 2018 10:39 IST


ச.தமிழ்ச்செல்வன்






ஆண் - பெண் உறவு குறித்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது ஆண் ஒருவர் சொன்ன கருத்தால் அதிர்ச்சியடைந்த பெண்ணுரிமைப் போராளி ஓவியா, அதுபற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த ஆண், “காம உணர்வோடு ஆண்கள் அலைகின்ற இரவு நேரங்களில் பெண்கள் ஏன் வெளியே வருகிறீர்கள்?” எனச் சொல்லியிருக்கிறார். பொதுவாக, ராத்திரி நேரங்களில் பெண்கள் வெளியேவரக் கூடாது என்பது எழுதப்படாத சட்டமாக நம் நாட்டில் இருந்துவருகிறது. அதனால்தானோ என்னவோ மகாத்மா காந்தி, “நள்ளிரவில் உடல் முழுக்க நகை அணிந்துகொண்ட இளம் பெண் ஒருத்தி ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பத்திரமாக நடந்து செல்லும் நாளே உண்மையான சுதந்திரம் பெற்ற நாள்” என்று அறிவித்தார். பொருளாசையும் பெண் மீதான பாலியல் வன்முறையும் இல்லாத நாட்டை காந்தி கனவு கண்டார்.

ராத்திரி நேரத்தில் காம இச்சையுடன் ஆண்கள் அலைவார்கள் என்ற விளக்கம் அதிர்ச்சி அளித்தாலும், எல்லா ஆண்களுக்கும் அது பொருந்தாது என்றாலும், அதில் பகுதி உண்மையும் இருக்கிறது.

கட்டற்ற பாலுறவுக் காலம் தாண்டி மனித குலம் வரலாற்றில் நடந்தபோது, பகலில் பொருள் உற்பத்திக்கான உழைப்பு, இரவில் மனிதகுல மறுஉற்பத்திக்கான இணைதல் எனக் காலப் பிரிவினை செய்துகொண்டிருக்க வேண்டும்.

பெண்ணுக்கு மட்டும் கற்பு நெறியைத் திணித்த சமூகம் ஆணுக்கு அதைக் கட்டாயமாக்காமல் கண்டும் காணாமல் விட்ட இடைவெளியை இன்றுவரை ஆண் மனம் கண் சிமிட்டலுடன் பயன்படுத்திக்கொண்டுவருகிறது. அதில் இரவென்ன பகலென்ன?

எப்போதும் விழித்திருக்கும் ‘ஆண்’

மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் இன்று உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அவர் சேட்டைகள் அரங்கேறிய காலம் இரவல்லவே? பட்டப் பகலில் பணி நேரத்தில்தானே? கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களில் எல்லாம் ‘ஆண்’ விழித்துக்கொள்வதால்தானே, “கொஞ்சம் தள்ளி நிற்கக் கூடாதா, ஏன் சார் இப்படி இடிச்சிக்கிட்டு நிக்கறீங்க? கண்டக்டர் கொஞ்சம் பஸ்ஸை நிறுத்துங்க..” என்ற பெண் குரல்கள் கேட்டபடி இருக்கின்றன? அது இரவா பகலா என்றில்லாமல் ஒலிக்கின்றன. இன்னும் குறிப்பாகச் சொன்னால் ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் பகல் நேரத்திலேயே இக்குரல்கள் அதிகம் கேட்கும்.

ஒருமுறை அரசுப் பேருந்தில் நீண்ட பயணம் செய்ய பதிவுசெய்து மூன்றாவது வரிசையில் சீட் கிடைத்து ஜன்னல் ஓரமாக உட்கார்ந்தேன். இரண்டாவது வரிசை பெண்களுக்கு என்று அப்போது ஒதுக்கீடு இருந்தது. பெண்களுக்கான அந்த இரண்டாவது வரிசையின் ஜன்னல் ஓர இருக்கைக்கும் ஜன்னலுக்கும் இடையில் இருக்கும் ஒரு கை போகிற அளவுக்கான இடைவெளியைத் தகரத்தைப் பற்றவைத்து அடைத்திருந்தார்கள். மற்ற இருக்கைகளில் அந்த இடைவெளி இயல்பாக இருந்தது. ஒரு கணம் என் உடல் முழுதாக அதிர்ந்தது. ஓர் ஆணாக அந்தப் பின் இருக்கையில் அமர்ந்திருக்க மிகக் கேவலமாக உணர்ந்தேன். சீட்டை மாற்றிக்கேட்டு வேறு இருக்கையில் போய் அமர்ந்தேன். அந்த அடைப்பு ஒரு நெடிய வரலாற்றை என் மனக்கண்ணில் வரைந்து காட்டியது. பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்கள் மனச்செவியில் ஒலித்தன.

எதுதான் ஆணின் பாலுறுப்பாக இயங்குகிறது என்ற கேள்வி மனதில் எழுந்தது. பஸ்ஸில் கை, வேறு சந்தர்ப்பங்களில் முன் சீட்டுக்குக் கீழே நீளும் கால், நெரிசல் நேரங்களில் முதுகும் முழங்கையும் மூக்கும் என எல்லா உறுப்புகளுமே பாலுறவு உறுப்புக்களாகிப் பணியாற்றத் தொடங்கிவிடுகின்றன. ஆண்கள் எல்லோரும் இப்படியல்ல. ஆனால், பொதுவெளியில் ஒரே ஒருவர் இப்படி இருந்தாலே சூழலை நாசம் செய்துவிட முடியும். ஒரு பெண்ணையேனும் இயல்பாக இயங்கவிடாமல் செய்துவிட முடியும். அவள் மனதை வாழ்நாள் முழுமைக்குமாகக் காயப்படுத்திவிட முடியும். ஆண்களைக் கண்டாலே வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிட முடியும்.

பெண்ணைச் சிதைக்கும் வன்மம்

சென்னையில் ஒருமுறை நண்பர் குடும்பத்துடன் கடற்கரைக்குப் போயிருந்தோம். நண்பரின் இணையர், கல்லூரிப் பேராசிரியர். அவரது அறிவாற்றலும் ஆங்கிலப் புலமையும் எப்போதும் நான் வியந்து நோக்குபவை. நாங்கள் கடற்கரையை விட்டுச் சாலைக்கு வந்ததும் வரிசையில் நின்ற வண்டியை எடுக்க நண்பர் சென்றார். நான் குனிந்து என் செருப்புகளில் ஒட்டியிருந்த மணலை உதறிச் சுத்தம் செய்துகொண்டிருந்தேன். பேராசிரியை தன் குழந்தையைத் தோளில் வைத்தபடி நின்றுகொண்டிருந்தார். அப்போது எங்களை பைக்கில் கடந்துசென்ற ஒருவன், “பாப்பா கையிலே பாப்பா” என்ற மாதிரி ஏதோ சொன்னான். சரியாகக் காதில் விழவில்லை. ‘ஏய் நில்லு’ என்று நான் குரல் கொடுப்பதைக் கேட்க வண்டி நிற்கவில்லை. பேராசிரியை சட்டென உடைந்துவிட்டார். கண்களில் கண்ணீர் ததும்ப குழந்தையுடன் நடக்கத் தொடங்கினார். சிரிப்பும் பேச்சுமாகக் கடந்த அந்த மாலைப்பொழுதின் மனநிறைவைச் சிதைக்க ஒருவனால் முடிந்தது. ஒரு பெண்ணைப் பார்த்ததுமே ‘மூடு’ வந்துவிடுகிறதா ஆணுக்கு? பல காலம் கடந்துவிட்டபோதும் அந்தப் பேராசிரியரின் கண்ணீர் இன்றும் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.

காமத்தை என்ன செய்வது?

என் செல்லமான மகள்களில் (நண்பரின் மகள்) ஒருத்திக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்துவைக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது, நண்பர் காலமாகிவிட்டபடியால். நல்ல பையன், நல்ல சம்பளம். பீடி, சிகரெட், மது என எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. ஆனால், எப்போது ‘மூடு’ வரும் என்று சொல்ல முடியாத அளவுக்குத் திளைக்கிற ஆளாக அந்த மாப்பிள்ளை இருந்திருக்கிறான். சமாளிக்க முடியாத கட்டத்தில் அவள் பேசத் தொடங்கினாள். எதிர்ப்புக் காட்டியிருக்கிறாள். பையன் வீட்டார் அவளைத்தான் திருத்த முயன்றார்கள். அவளுடைய அம்மாவிடம் எல்லாவற்றையும் பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் என்னிடம் சொல்லி அழுதாள். “எனக்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி, கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கிறது பெரியப்பா.. அப்போதுகூட அவர் கதவைச் சாத்திவிட்டு…”

பெண்ணை உடம்பாக மட்டுமே பார்க்கும் பார்வைதான் மையம் என்று நாம் முடிவுரை எழுதிவிடலாம் எளிதாக. ஆனால், இதை எப்படிச் சரிசெய்யப் போகிறோம்?

ஆண் மனதின் அரசியல் உணர்வு பத்திரிகைகள், விவாதங்கள், தொலைக்காட்சிகள் மூலமாகச் செதுக்கப்பட்டுச் சீர்படுத்தப்படுகிறது. அவரவர் துறை சார்ந்த, தொழில் சார்ந்த அறிவும் உணர்வும் பயிற்சிகள் மூலம் சீர்பட்டுச் செழுமை பெறுகின்றன. பொருளாதாரம் சார்ந்த அறிவும்கூடச் செதுக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், ஆணின் காமம் சார் உணர்வும் அறிவும் ஆரோக்கியமாகப் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டுச் சீர்செய்யப்படாமல் இருட்டுக்குள் புதர் மண்டிய காடாக வளர்ந்தும் உறைந்தும் கிடக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் எங்கே வேண்டுமானாலும் அது ‘விழித்துக்’கொள்ளும் அபாய நிலையில் நீடிக்கிறது. ரேடியோ அல்லது தொலைக்காட்சியில் சில சேனல்கள் கிடைக்காமல் திருகிக்கொண்டும் ரிமோட்டில் மாற்றிக்கொண்டும் சலித்திருக்கிறோம். ஆணின் காம சேனல் மட்டும் எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் ‘பக்’ கெனப் பற்றிக்கொள்கிறதே, இது சரியா? பொதுத்தளங்களில் போட்டுடைத்துப் பேசிச் சீர்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்லவா?

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு:tamizh53@gmail.com

மொழியின் வழியில்: டோக்கியோவிலிருந்து மதுரைக்கு!

Published : 07 Jan 2018 10:43 IST
 
என்.சன்னாசி





ஜப்பான் தம்பதிக்கு இந்து முறைப்படி மதுரையில் நடந்த திருமணம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பெண், மாப்பிள்ளைக்கான சடங்குகள் முடிந்து மங்கள வாத்தியம் முழங்க யூடோ, சிஹாரு என்கிற அந்தத் தம்பதியின் திருமணம் நடந்தது.

சிஹாரு, டோக்கியோ நகரில் வசிப்பவர்; முதுகலைப் பட்டதாரி. மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் வினோதினி. இவர் தன்னுடைய கணவர் வெங்கடேசனுடன் டோக்கியோவில் வசிக்கிறார். வினோதினி மூன்று ஆண்டுக்கு முன், தமிழ் கற்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என ஆன்லைனில் விளம்பரம் செய்தார். இதன் மூலம் சிஹாருக்கு வினோதினி தோழியானார். மெல்லத் தமிழ் கற்கத் தொடங்கிய சிஹாரு, தமிழின் பெருமை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பற்றித் தெரிந்ததும் தமிழால் ஈர்க்கப்பட்டார். ஜப்பான்-தமிழ் மொழிகளுக்கு இடையேயான ஒற்றுமையை அறிய முற்பட்டார். தமிழ் குறித்த பி.எச்டி. ஆய்வுக்கான தரவுகளைத் தேடி மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், மதுரை நகரங்களுக்கு அடிக்கடி பயணித்தார். தமிழைச் சரளமாகப் பேசவும் கற்றார்.

தமிழால் துளிர்த்த ஆசை

இந்நிலையில் சிஹாருவுக்கும் அவரது காதலர் யூடோவுக்கும் கடந்த ஏப்ரலில் திருமணம் நடந்தது. இருப்பினும் தமிழர்களின் திருமண முறையால் கவரப்பட்ட சிஹாரு, இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். அவரது விருப்பத்தை வினோதினி- வெங்கடேசன் தம்பதி நிறைவேற்றினர். இந்தத் திருமண விழாவுக்கு யூடோவுடன் வந்திருந்த அவரது இரு சகோதரர்கள், அண்ணி, சிஹாருவின் பெற்றோர் என பத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் பட்டு வேட்டி, பட்டுச்சேலை அணிந்து திருமண விழாவில் பங்கேற்றனர்.

“தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, கலைகள், பழக்கவழக்கம் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தன. அதனால் தமிழர்களின் முறைப்படி திருமணம் செய்வது என மூன்றாண்டுக்கு முன்பே முடிவெடுத்தேன். அந்த ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி’’ என்கிறார் சிஹாரு.


ஜப்பானில் தமிழ் கற்க விரும்புவோருக்கு உதவும் வகையில் வினோதினியும் சிஹாருவும் அடிக்கடி தமிழ் விழாக்களை நடத்துகிறார்கள். இதன் மூலம் நட்பு வட்டமும் விரிவடைவதாக வினோதினி குறிப்பிடுகிறார். அனைத்தையும் இணைக்கும் மொழி தமிழ்!
என் பாதையில்: தவிக்கவிட்ட ஆதார்

Published : 07 Jan 2018 10:47 IST
 



மூத்த குடிமகளான நான், பென்ஷன் பணத்தைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் சென்று உயிருடன் இருப்பதற்கான ‘லைஃப் சர்டிஃபிகேட்’ (வாழ்வுச் சான்றிதழ்) தர வேண்டும். முன்பெல்லாம் ஒரு படிவம் தருவார்கள். அதில் நமது விவரங்களைத் தெளிவாக எழுதித் தந்தாலே போதும். ஆனால், கடந்த ஆண்டு முதல் ஆதாருடன் இணைத்துவிட்டதால் ஆதார் எண்ணைத் தந்து கைரேகையைப் பதித்து அதைச் சரிபார்த்து உறுதி செய்யப்பட்ட பின் நம் வங்கிக் கணக்குடன் இணைத்துவிடுவார்கள். ஒவ்வொரு மாதமும் பென்ஷன் நம் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும்.

நவம்பர் முதல் வாரம் மிகவும் கூட்டமாக இருந்ததால் நான் சில நாட்கள் கழித்துச் சென்றேன். என் கைரேகையைப் பதிந்தபோது மேட்ச் ஆகவில்லை எனச் சொன்னதால் கையைத் தண்ணீரில் தொட்டுத் துடைத்துப் பிறகு வைத்தேன். அப்போதும் மேட்ச் ஆகவில்லை என்றே வந்தது. என்ன செய்வது எனக் கேட்டதற்கு பென்ஷன் ஆபீஸுக்குச் சென்று கண் விழித்திரை சோதனை சரிபார்த்து உறுதிசெய்துகொள்ளலாம் என்றனர்.

எங்கள் வீட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருந்த ஆபீஸுக்குச் சென்றால் என்னைப் போலவே நிறையப் பேர் கைரேகை மேட்ச் ஆகவில்லை என வந்திருந்தனர். அவர்களுடன் பேசியபோது பனிக்காலம் என்பதால் கை தோலுரிகிறது, கைரேகை தேய்ந்துவிட்டது எனவும் ஆதார் எடுத்தபோதே 20 சதவீதம் மட்டுமே காட்டியதால் மேட்ச் ஆகவில்லை எனவும் சொன்னார்கள். இது போன்ற பிரச்சினை மூத்த குடிமக்களுக்கு ஏற்படுவது இயற்கையே. அதற்காக அருகில் இருக்கும் வங்கியைவிட்டுத் தூரத்தில் உள்ள பென்ஷன் ஆபீஸைத் தேடிப் போவதும் சிரமமே.

தங்களது வசதிக்காகத்தான் அருகில் இருக்கும் வங்கியை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலேயே ஆதாருக்கான கண்விழி சரிபார்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டால் மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும். ஒருவரின் உதவியையும் எதிர்பார்க்காமல் தங்களது வேலையைச் செய்துகொள்வார்கள். இனி வரும் காலத்தில் வங்கியில் புதிய கணக்கு ஆரம்பிக்கவும் மற்ற தேவைகளுக்கும் ஆதார் வெரிஃபிகேஷன் தேவையெனில் எங்களைப் போன்ற மூத்த குடிமக்களையும் மனதில் கொண்டு கண்விழி சரிபார்க்கும் வசதியை எல்லா வங்கிகளும் செய்துகொண்டால் நல்லது.

ஆதார் இணைப்பு, டிஜிட்டல் இந்தியா நல்லதே. ஆனால், இந்தியாவில் மூத்த குடிமக்களும் வாழவேண்டும்தானே?

- பெ . பானுமதி, சேலம்.

NEWS TODAY 10.06.2026