Saturday, January 20, 2018

அம்மா இருசக்கர வாகனம் வாங்க ஆதார் கட்டாயம்

Added : ஜன 20, 2018 03:13



சென்னை: பெண்கள், அம்மா இருசக்கர வாகனம் பெற ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஐம்பது சதவீதம் மானியத்தில் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும், 'அம்மா இருசக்கர வாகன திட்டத்தில்' பயன்பெற விரும்புவோர் பிப்.,5க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கிராமப்புறம் மற்றும் நகர் புறங்களில் பணி புரியும் எட்டாம் வகுப்பு படித்த 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட, இருசக்கர ஓட்டுநர் உரிமம் பெற்ற, தனிநபர் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட ஏழை மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இலவசமாக பெறலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பிப்.,5 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டத்திற்க ஆதார் கார்டு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா

Added : ஜன 20, 2018 00:29 

பாடகி கொல்லங்குடி கருப்பாயி,Singer Kollangudi Karuppayi,   கிராமிய பாடல் , நாட்டுப்புற பாடல், தெம்மாங்கு பாடல், கலைமாமணி,Kalaimamani,  கொல்லங்குடி , Kollangudi, கருப்பாயி, பாண்டியராஜன் ,Pandiarajan,  கலைமாமணி, நடிகர் சங்கம்,Nadigar sangam, பள்ளி பட்டா, மானாமதுரை,Manamadurai,  சிவகங்கை,Sivagangai,Folk song, மானாமதுரை, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமிய மற்றும் நாட்டுப்புற, தெம்மாங்கு பாடல் மூலம் புகழ் பெற்றுசினிமாவில் நடித்த 'கொல்லங்குடி கருப்பாயி தற்போது ஓட்டுவீட்டில் வசித்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பாயி. 1980ம் ஆண்டில் திருச்சி, மதுரை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான கிராமிய மற்றும்நாட்டுப்புற, தெம்மாங்குப்பாடல் மூலம் பிரபலமடைந்தார்.1985ல் பாண்டியராஜன் இயக்கிய படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின், 'கொல்லங்குடி'கருப்பாயிபுகழ் பெருகத் துவங்கியது.இவரின் திறமையை பாராட்டி 1992ல் முதல்வர் ஜெயலலிதா'கலைமாமணி' பட்டத்தை வழங்கினார்.பள்ளிக்கு பட்டா: அந்த விழாவில் கொல்லங்குடிகருப்பாயிடம் உங்களுக்கு என்ன வேண்டுமென்று முதல்வர் கேட்டுள்ளார்.அப்போது அவர் தனக்கென்று எதுவும் கேட்காமல் தனது ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்துக்கு பட்டா வழங்க வேண்டுமென்று கேட்டுள்ளார்.உடனடியாக ஜெயலலிதாவும் அந்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்.பின் பட வாய்ப்பு குறைந்தும், கணவரின் மறைவை அடுத்தும் முற்றிலும் வீட்டிற்குள் முடங்கினார்.மானாமதுரைக்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர் கூறியதாவது: தற்போது எனக்கு 80 வயதிற்கு மேல் ஆகி விட்டது. வாய்ப்புகள் குறைந்துவிட்டன. உடைந்த ஓட்டு வீட்டில் வசிக்கிறேன். சினிமா மற்றும்பாடல்கள் பாடும்போது அவர்கள் கொடுக்கிற பணத்தை வாங்கி கொள்வேன். இப்போது எனது வீடுஇடியும் தருவாயில் உள்ளது. எனக்கு குழந்தைகள் இல்லாததால் எனது தம்பி மகள் வாசுகி தான்
உணவு வழங்கி வருகிறார்.நடிகர் சங்கத்தில் இருந்து மாதந்தோறும்ரூ.4 ஆயிரம் தருகின்றனர். அதை வைத்து மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொள்கிறேன். எனது காலத்திற்குள் வீட்டை புதுப்பித்துவிடவேண்டுமென்று ஆசையாக உள்ளதுஎன்றார்.

தொடர்புக்கு 88708 96189.
ஆறு ஆண்டுகளுக்கு பின் பஸ் கட்டணம் உயர்வு : இன்று முதல் அமலாகிறது


சென்னை தமிழகத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பின், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 'புதிய கட்டணம், தனியார் பஸ்களுக்கும் பொருந்தும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், 2011 நவ., 18ல், பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின், கட்டணம் உயர்த்தப்படவில்லை. அண்டை மாநிலங்களோ, பல முறை கட்டணத்தை உயர்த்தின. ஏழு ஆண்டுகளில், அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க, தமிழக அரசு, 12 ஆயிரத்து, 59 கோடி ரூபாயை மானியமாக வழங்கி உள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, இதுவரை ஏற்பட்டுள்ள தொடர் நஷ்டம், 20 ஆயிரத்து, 488 கோடி ரூபாய். போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக இயங்கவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கவும், அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி
உள்ளது.அதன்படி, புறநகர் பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம், ஐந்து ரூபாயிலிருந்து, ஆறு ரூபாய்; நகர் மற்றும் மாநகர பஸ்களில், மூன்று ரூபாயில் இருந்து, ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்ச கட்டணம், 12 ரூபாயில் இருந்து, 19 ரூபாயாகவும், சென்னையில், குறைந்த பட்ச கட்டணம், மூன்று ரூபாயில்

இருந்து, ஐந்து ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 14 ரூபாயில் இருந்து, 23 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.வால்வோ பஸ்களில், ஒன்று முதல், 38 நிலை வரை, குறைந்தபட்ச கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 25 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 100 ரூபாயில் இருந்து, 150 ரூபாயாகவும்உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும், 'அண்டை மாநிலங்களை விட, குறைவாகவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய பஸ் கட்டணம், தனியார் பஸ்களுக்கும் பொருந்தும். இந்த கட்டண உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.எதிர்காலங்களில், எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் விலை ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகள் குழு, பஸ் கட்டணத்தை மாற்றி அமைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு

அரசு பஸ்களால் ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு, இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. உயிரிழப்புக்கு, 15 வயது வரை உள்ளோருக்கு, 2.50 லட்சம் ரூபாய்; 16 - 60 வயது உள்ளோருக்கு, ஐந்து லட்சம் ரூபாய்; 60 வயதிற்கு

மேற்பட்டோருக்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
சிறு காயத்திற்கு, 10 ஆயிரம் - 25 ஆயிரம் ரூபாய்; தலை காயம் மற்றும் நிரந்தர உறுப்பு இழப்பிற்கு, ஐந்து லட்சம் ரூபாய்; பெரிய காயம், எலும்பு முறிவுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்; எலும்பு முறிவுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வங்கப்படும்.

பஸ் கட்டணம் உயர்வு ஏன்?

தமிழகத்தில், எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன.

அரசு போக்குவரத்துக் கழகங்கள், 22 ஆயிரத்து, 509 பஸ்கள் மற்றும், 1.40 லட்சம் போக்குவரத்துப் பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.டீசல் மற்றும் மசகு எண்ணெய் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. புதிய பஸ்களின் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளதால், கூடுதல் செலவு ஏற்படுகிறது.
டீசல் விலை உயர்வுக்காக, அரசு மானியம் வழங்கி வரும் நிலையிலும், தினமும், ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போதுள்ள பஸ்களில், 75 சதவீதம், ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவை.
அவற்றின் இயக்கத்திறனும் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, பஸ் கட்டணங்களை, மாற்றி அமைக்க வேண்டிய சூழலுக்கு, அரசு தள்ளப்பட்டுள்ளது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தரிசனம் நிறைவு: இன்று காலை நடை அடைப்பு

Added : ஜன 20, 2018 01:04



சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு கால தரிசனம் நேற்று இரவு நிறைவடைந்தது. இன்று காலை பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படுகிறது.

சபரிமலையில் கடந்த 14-ம் தேதி மகரவிளக்கு விழா நடந்தது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் நடந்தது. 16 முதல் 19 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடந்தது. 18-ம் தேதி காலை 10:00 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று, மதியம் களபபூஜை நடந்தது.நேற்று காலை 3:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடந்தாலும், நெய்யபிஷேகம் நடக்கவில்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் முடிவடைந்தது. பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடந்தது. செவ்வாடை அணிந்த பக்தர்கள் சாஸ்திர முறைப்படி இந்த பூஜையை நடத்தினர்.
இன்று காலை 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் கோயில் நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.,12- மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை

Added : ஜன 20, 2018 06:47



புதுடில்லி: விமானம் பறக்கும்போது, பயணிகள், மொபைலில் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என, 'டிராய்' எனப்படும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

விமான பயணத்தின் போது, மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. விமானத்தில், பயணம் செய்யும்போதே இன்டர்நெட் மற்றும் அலைபேசியில் பேசும் சேவைகளை பயணிகளுக்கு அறிமுகப்படுத்த இந்திய தொலைத் தொடர்பு துறை, முடிவு செய்தது. இதுகுறித்து, 2017, ஆகஸ்டில், 'டிராய்' அமைப்பிடம் கருத்து கேட்டிருந்தது. இது குறித்து, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், நேற்று கருத்து தெரிவித்தது.

'விமானத்துக்குள் அலைபேசியை பயன்படுத்தும்போது, சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டும். இந்திய வான் எல்லையில், 3,000 மீட்டர் உயரத்தில் விமானம் பறக்கும்போது, பயணிகள், இன்டர்நெட் பயன்படுத்தவும், அலைபேசியில் பேசவும் அனுமதி அளிக்கலாம்' என, 'டிராய்' பரிந்துரை செய்துள்ளது.

Friday, January 19, 2018

  Slithering intruder in AC coach gives passengers a fright

S. Vijay Kumar

The reptile surfaced when a passenger tried to shift his baggage under lower berth

Passengers in an air-conditioned coach of Coimbatore-Chennai Central Cheran Superfast Express were in for a horrific experience minutes before the train reached its destination early on Thursday.
A long snake surfaced from beneath a berth in B-3 Three-Tier AC compartment of Train No.12674 when one of the passengers tried to move his baggage. The terrified passengers ran helter skelter on seeing the reptile on board.

“We all hurriedly took our belongings and moved to the end of the coach. As the attendants tried to locate the snake, the train rolled into the platform. It appeared to be a venomous snake,” B. Bhuvana of Coimbatore said. Since it is an AC coach, it looks like the snake had been there in the compartment when the train left Coimbatore on Wednesday night, she said.

The snake was found under a lower berth and it swiftly moved to the side lower berth nearby as passengers raised an alarm.
“I informed a policeman after getting down from the train at Chennai Central. He went in to check...we don’t know what happened after that,” Dr Bhuvana said.

Divisional Railway Manager, Chennai Division, Naveen Gulati, told The Hindu that the snake was removed from the train . How the reptile managed to enter the coach is under investigation, he said.

The rakes of Cheran Express are maintained both at Chennai and Coimbatore.

NEWS TODAY 11.06.2026