Saturday, January 20, 2018


பக்தர்கள் தரிசனம் நிறைவு: இன்று காலை நடை அடைப்பு

Added : ஜன 20, 2018 01:04



சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு கால தரிசனம் நேற்று இரவு நிறைவடைந்தது. இன்று காலை பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படுகிறது.

சபரிமலையில் கடந்த 14-ம் தேதி மகரவிளக்கு விழா நடந்தது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் நடந்தது. 16 முதல் 19 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடந்தது. 18-ம் தேதி காலை 10:00 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று, மதியம் களபபூஜை நடந்தது.நேற்று காலை 3:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடந்தாலும், நெய்யபிஷேகம் நடக்கவில்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் முடிவடைந்தது. பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடந்தது. செவ்வாடை அணிந்த பக்தர்கள் சாஸ்திர முறைப்படி இந்த பூஜையை நடத்தினர்.
இன்று காலை 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் கோயில் நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.,12- மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...