Friday, January 26, 2018

அரசு டாக்டர்கள் போராட்டம்

Added : ஜன 25, 2018 23:26

சென்னை: தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 1,225 மருத்துவ பட்ட மற்றும் டிப்ளமா மேற்படிப்பு இடங்கள் உள்ளன.
இதில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை காரணம் காட்டி, இந்த ஒதுக்கீட்டை, சென்னை உயர் நீதிமன்றம், 2017ல் ரத்து செய்தது. மீண்டும் ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள், பல கட்ட போராட்டங்களை நடத்தியும், எம்.சி.ஐ., விதிப்படியே, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தது. அதில், அரசு டாக்டர்கள், அதிக இடங்கள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த, 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, தமிழக முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள், நேற்று, பணியின் போது, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

அரசு டாக்டர்கள் கூறியதாவது: அரசு டாக்டர்கள், முதுநிலை மருத்துவம் படித்தாலும், தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில், மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். எனவே, ரத்து செய்யப்பட்ட, 50 சதவீத இட ஒதுக்கீட்டை, மீண்டும் செயல்படுத்த வேண்டும். 'நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய மசோதவை திரும்ப பெற வேண்டும்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...