Friday, January 26, 2018

நெல்லுக்கு பதில் உமி மோசடி : ராஜபாளையம் மில் அதிபர் கைது

Added : ஜன 25, 2018 23:41

திருநெல்வேலி: குடோன்களில் நெல் மூட்டைகளுக்கு பதிலாக உமிமூட்டைகளை வைத்து ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடிசெய்த ராஜபாளையம் தொழிலதிபர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொத்தை தெருவை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேஷ் என்ற அர்ஜூன் சந்துரு. மில் அதிபர். இவர் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள குடோன்களில் நெல் மூட்டைகளை சேமித்துவைத்திருப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து தென்காசி ஐ.டி.பி.ஐ., வங்கியில் ஒரு கோடியும், சங்கரன்கோவில் கரூர் வைஸ்யா பாங்கில்ரூ. 18 லட்சமும் கடன் பெற்றுள்ளார்.

இவரது ஆவணங்களின் அடிப்படையில் குடோன்களில் தணிக்கை அதிகாரி வெர்ஜின் பிரின்சஸ் ஆய்வு செய்தார். அதில், குடோன்களில் நெல்மூட்டைகளுக்கு பதில் உமிமூட்டைகள் இருந்தன. அதிர்ச்சியடைந்த அவர் மோசடி குறித்து எஸ்.பி., அருண்சக்திகுமாரிடம் புகார் அளித்தார்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வெங்கடேஷ் என்ற அர்ஜூன் சந்துரு, அவரது கூட்டாளிகள் முக்கூடலை சேர்ந்த சுரேஷ், சங்கரன்கோவில் குடோன் அதிபர் குபேந்திரராஜ், சுரண்டை மாயகிருஷ்ணன், ராஜபாளையம் காளிரத்னம் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அர்ஜூன் சந்துரு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS DIGEST

NEWS DIGEST  SC : Can bar overqualified person from job Sometimes overqualification becomes a disqualification. At a time when highly qualif...