Friday, January 26, 2018

தைப்பூச ஜோதி தரிசனத்துக்கு உரிய வசதிகள் செய்ய உத்தரவு

Added : ஜன 25, 2018 23:01

சென்னை: கடலுார் மாவட்டம், வடலுாரில், தைப்பூச ஜோதி தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்காக, அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினத்தை சேர்ந்த, செல்வகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தில், வரும், ௩௧ம் தேதி நடக்க உள்ள ஜோதி தரிசனத்துக்காக, வடலுாருக்கு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகளை செய்து தர, மவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடும்படி கோரியிருந்தார். இந்த கடிதத்தை, உயர் நீதிமன்றம், வழக்காக விசாரணைக்கு எடுத்தது.

தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்து அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர், மகாராஜா ஆஜராகி, ''பக்தர்களின் வசதிக்காக, ௫௦௦ கழிப்பறை மற்றும் குளியல் அறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரும், ௨௭ம் தேதி நடக்கும் கூட்டத்தில், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், அறநிலைய துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து, இதில் விரிவான முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

சிறப்பு பிளீடரின் வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், தைப்பூச ஜோதி தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்கு, உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டனர்.


No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...