Friday, January 26, 2018

‘ஸ்மார்ட் கார்டு’ இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் கிடைக்கும் மார்ச் 1-ந்தேதி முதல் அமல்





‘ஸ்மார்ட் கார்டு’ இருந்தால் மட்டுமே மார்ச் 1-ந் தேதிக்கு பிறகு ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். #smartcard #TamilNadu

ஜனவரி 26, 2018, 05:45 AM

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 96 லட்சத்து 84 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் (ரேஷன் கார்டு) உள்ளனர். இவர்களுக்கு, பொது மற்றும் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.

விலையில்லா அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, மண்எண்ணெய் ஆகியவை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 6 கோடியே 76 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு ரேஷன் கார்டுகள் புதிதாக அச்சிடப்பட்டு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் உள்தாள் மட்டுமே இணைக்கப்பட்டு வருகிறது. 12 ஆண்டுகளாக ஒரே அட்டை பயன்பாட்டில் இருந்ததால், அவை கிழிந்து மோசமான நிலையில் இருந்தது.

இந்த நிலையில், ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் புதிதாக ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதாவது, ரேஷன் கார்டுகளை நவீனமாக்கும் வகையிலும், போலி கார்டுகளை ஒழிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தப் பணிகளுக்காக ரூ.330 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

அதன்பின்னர், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணையும் ரேஷன் கடை ஊழியர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில், ‘ஸ்மார்ட் கார்டு’ அச்சிடும் பணி தொடங்கியது. ஓரளவு ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அதே நேரத்தில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி 100 சதவீதம் நிறைவடையும் வரை, பழைய ரேஷன் கார்டுகளுக்கும் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதுவரை ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் பேருக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை பதிவு செய்யாத 5 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இம்மாதம் (ஜனவரி) 1-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்தது. ஆனால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி அதற்குள் முடிவடையாததால், கால அவகாசம் வழங்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது. வருகிற பிப்ரவரி மாதம் 28-ந் தேதியை அதற்கான கால அளவாக அரசு நிர்ணயித்துள்ளது.

எனவே, மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று வெளியிட்டார். இது தொடர்பாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய நவீன ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 90 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டது. 5 சதவீதம் பேருக்கு கார்டுகள் வழங்கும் பணி நடக்கிறது. 5 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண்ணை வழங்காததால், அவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பல மாதங்களாக வாய்ப்பு கொடுத்தும் ஆதார் எண்ணை அவர்கள் இணைக்காமல் உள்ளனர்.

வரும் மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை, ஆதார் எண் வழங்காதவர்களுக்கு மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அப்போதும் அவர்கள் ஆதார் எண்ணை வழங்காவிட்டால், அந்த கார்டுகள் அனைத்தும் போலியானவை என்று அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்படும். அவ்வாறு நீக்கப்பட்டால், அரசுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கும் செலவு மிச்சப்படும். இதன் மூலம் மற்றவர்களுக்கு கூடுதலாக உணவுப் பொருள் வழங்க முடியும்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...