Saturday, April 14, 2018

 அக் ஷய திருதி,தங்கம்,பொதுமக்கள்,ஆர்வம்

அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க, பொதுமக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆபரண தங்கம் விலை, கடந்த ஆண்டை விட, சவரனுக்கு, 1,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ள நிலையிலும், அக் ஷய திருதியை மவுசு குறையவில்லை. மாநிலம் முழுவதும், நகைக்கடைகளில், 'புக்கிங்' விறுவிறுப்பாக நடந்து வருவதால், இலக்கை விட விற்பனை அதிகரிக்கும் என, வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



தமிழகத்தில் உள்ள, 35 ஆயிரம் நகைக்கடைகளில், தினமும், 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 7,500 கிலோ தங்க ஆபரணங்கள், நாணயங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி, அக் ஷய திருதியை போன்ற சுப தினங்களில் தங்கம் வாங்கினால், செல்வம் குவியும் என்ற நம்பிக்கை, பலரிடம் உள்ளது. அதனால், இந்த நாட்களில், அவர்கள் தங்கம் வாங்க, ஆர்வம் காட்டுகின்றனர்.

சேமிப்பு திட்டம் :

மொத்த பணமும் செலுத்தி, தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள், நகை கடைகளில் உள்ள

சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து, மாதந்தோறும் பணம் செலுத்தி வருகின்றனர். சேமித்த தொகைக்கு இணையான தங்கத்தை, சுப தினங்களில் வாங்கிக் கொள்கின்றனர்.

நகைக்கடைகளும், வாடிக்கையாளர்களை ஈர்க்க, சலுகைகளை வழங்குகின்றன. இதனால், அக் ஷய திருதியை, தீபாவளிக்கு, தங்கம் விற்பனை, வழக்கத்தை விட அதிகரிக்கிறது.

2017 அக் ஷய திருதியைக்கு, 25 ஆயிரம் கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையாகின. இதன் மதிப்பு, 8,000 கோடி ரூபாய்; 2017ல், ஏப்ரல், 28ம் தேதி, அக் ஷய திருதியை வந்தது. அன்றைய தினம், சென்னையில், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 2,778 ரூபாய்க்கும்; சவரன், 22 ஆயிரத்து, 224 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று, கிராம் தங்கம், 2,960 ரூபாய்க்கும்; சவரன், 23 ஆயிரத்து, 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதாவது, ஓராண்டில், தங்கம் விலை, கிராமுக்கு, 182 ரூபாயும்; சவரனுக்கு, 1,456 ரூபாயும் அதிகரித்து உள்ள நிலையில், வரும், 18ல், அக் ஷய திருதியை வருகிறது. இருப்பினும், நகைகள் வாங்க, மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கட்டுப்பாடு :

இதற்காக, சென்னை, தி.நகர், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, முன்னணி நகை கடைகளில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள பிரபலமான நகை கடைகளிலும், முன்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது. இதனால், கடந்த ஆண்டை விட விற்பனை அதிகரித்து, இலக்கை தாண்டும் என, வர்த்தகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது: கடந்த ஆண்டை விட, தங்கம் விலை தற்போது உயர்ந்துள்ளது. சீட்டு பிடித்தல் உள்ளிட்ட வைப்பு நிதி திட்டங்களுக்கு, மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனால், தங்கம் விற்பனையில் பாதிப்பு வராது என்ற போதிலும், மக்களிடம் அச்சம் காணப்படுகிறது.

தமிழகம் முழுவதும், காவிரி போராட்டம் நடந்து வருகிறது. இதுபோன்ற, பல காரணங்கள் இருந்தாலும், அக் ஷய திருதியைக்கு, தங்கம் வாங்கும் ஆர்வம், மக்களிடத்தில் குறையவில்லை. எனவே, கடந்த ஆண்டை போலவே, விற்பனை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
அஜினோமோட்டோ உற்பத்தி சென்னையில் விரைவில் துவங்கும்

Added : ஏப் 13, 2018 21:14

- எல்.முருகராஜ் -''உணவுக்கு சுவை கூட்டும் பொருளான, 'மோனோ சோடியம் குளூடோமேட்டை' தயாரிக்கும், அஜினோமோட்டோ நிறுவனம், விரைவில், சென்னையில் இருந்தும், உற்பத்தியை துவக்க திட்டமிட்டுள்ளது,'' என, அதன் இந்திய சந்தைப்பிரிவு மேலாளர், கோவிந்தா பிஸ்வாஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: ஜப்பானை சேர்ந்த, அஜினோமோட்டோ நிறுவனம், 'ஹாப்பிமா' என்ற பெயரில் ப்ரைடு ரைஸ் தயாரிக்க உதவும் பவுடர், உடனடியாக காபி, டீ தயாரிக்க உதவும், 'பிளெண்டி' போன்ற, பல்வேறு உணவுப் பொருட்களை தயாரித்து, உலகம் முழுவதும் வினியோகித்து வருகிறது. அஜினோமோட்டோவின் மற்றும் ஒரு தயாரிப்பு தான்,மோனோ சோடியம் குளூடோமேட். இது உப்பு போன்றது; உணவிற்கான சுவையை கூட்டக்கூடியது. ஜப்பானில் ஒரு நுாற்றாண்டிற்கு மேல் புழக்கத்தில் இருந்து வருவது.அஜினோமோட்டோவின் தயாரிப்புகள், கடுமையான தரக் கட்டுப்பாட்டிற்கு பின்பே வெளிவருகின்றன.எங்களுடைய தயாரிப்புகள் மிகத்தரமானவை என்பதை நிரூபிப்பதற்காக, ஒவ்வொரு நாட்டிலும், அந்தந்த நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளோம். இந்தியாவில், எப்.எஸ்.எஸ்.ஐ.,யின் தரச்சான்று பெற்றுள்ளோம்.உணவுக்கு சுவை கூட்டும், மோனோ சோடியம் குளூடோமேட்டை, கரும்பு, சோளம், மரவள்ளிக்கிழங்கு போன்ற இயற்கை மூலப்பொருட்கள் மூலம், நொதித்தல் முறையில் தயார் செய்கிறோம்.ரசாயனம் கலப்பதில்லை. மோனோ சோடியம் குளூடோமேட்டை, அஜினோமோட்டோ என்ற பெயரிலேயே, இந்தியாவில் விற்று வருகிறோம். இப்போது, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து, தயாராகி வருகிறது.அதிகரித்து வரும் இந்தியாவின் தேவையைக் கருதி, விரைவில், சென்னையில் உற்பத்தி செய்யவுள்ளோம்.சென்னையில் செயல்பட்டு வரும் அஜினோமோட்டோ நிறுவனத்தில், தற்போது, 144 பேர் பணியாற்றி வருகின்றனர். இப்போது இங்கு, பிளெண்டி ரெடிமிக்ஸ் காபி, டீ பாக்கெட்டுகள் தயாராகின்றன. ஆண்டுக்கு, 4,100 டன் உற்பத்தி செய்யப்படுகின்றன.தமிழக சந்தையில், 90 சதவீதம் மார்கெட்டை பிடித்துள்ளது; 44 ஆயிரம் கடைகளில் இது கிடைக்கின்றன. அடுத்த ஆண்டு இன்னும், 22 ஆயிரம் கடைகளில் கிடைக்கும். இந்த தொழிற்சாலையில் தமிழகத்தின் தேவை கருதி, விரைவில் அஜினோமோட்டோ உற்பத்தி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இன்ஜி., கவுன்சிலிங் பதிவு : மே முதல் வாரம் துவக்கம்

Added : ஏப் 13, 2018 20:20

சென்னை: அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, மே முதல் வாரத் தில், 'ஆன்லைன்' பதிவுகள் துவங்க உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையின் ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு, மே முதல் வாரத்தில், ஆன்லைன் பதிவு துவங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு, இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என, அண்ணா பல்கலை கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர். ஆன்லைன் கவுன்சிலிங்கில், தொழிற்கல்வி மாணவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, சென்னை யில் நேரடியாக கவுன்சிலிங் நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த விபரங்கள் எல்லாம், அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியாகும்.
சபரிமலையில் நாளை விஷூக்கனி

Added : ஏப் 13, 2018 23:46

சபரிமலை: சபரிமலையில் நாளை விஷூக்கனி தரிசனம் நடக்கிறது. குமரி மாவட்ட கோயில்களில் இன்று கனிதரிசனம் நடக்கிறது. சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டு குமரி மாவட்டத்தில் கேரள முறையை பின்பற்றி விஷூ தினமாக கொண்டாடப்படுகிறது. பூஜை அறையில் கண்ணாடி மற்றும் கிருஷ்ணன் படம் வைத்து காய் கனிகள், தங்க நகைகள் வைத்து வழிபடுவது விஷூ கொண்டாட்டமாகும்.சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் நாளை விஷூ கனிதரிசனம் நடக்கிறது. சபரிமலையில் நாளை விஷூ கனி தரிசனம் நடக்கிறது. அதிகாலை 4.00 மணிக்கு நடை திறந்ததும் கனி தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்குவார். பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். கடந்த 10-ம் தேதி மாலை திறந்த சபரிமலை நடை வரும் 18-ம் தேதி இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும்.
வேறு வேலைகள் தெரியாது “சினிமா பின்னணி பாடகர்கள் கஷ்டப்படுகிறார்கள்” எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேச்சு 
 
daily thanthi  14.04.2018



“சினிமா பின்னணி பாடகர்கள் கஷ்டப்படுகிறார்கள்” என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.

ஏப்ரல் 14, 2018, 05:15 AM

சென்னை,

இந்திய பின்னணி பாடகர்கள் காப்புரிமை சங்கம் சார்பில் பாடகர்களுக்கு ரூ.51 லட்சத்து 77 ஆயிரத்து 704 ‘ராயல்டி’ தொகை வழங்கும் விழாவும் 8-வது முறையாக தேசிய விருது பெற்றுள்ள பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் சென்னையில் நேற்று நடந்தது.

இதில் கே.ஜே.ஜேசுதாஸ் பங்கேற்று கேக் வெட்டினார். பாடகர்கள் அவருக்கு பூங்கொத்து வழங்கினார்கள்.

தியானம் பாவித்தால்...

அப்போது கே.ஜே.ஜேசுதாஸ் பேசியதாவது:-

“தேசிய விருதை 8-வது முறையாக பெறுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றி. பாடல்கள் பாடும்போது பணம் எவ்வளவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இல்லை. சுருதி, உணர்வுகள் பாடலில் நன்றாக இருக்கிறதா என்றுதான் யோசிப்பேன்.

அப்போதுதான் சரஸ்வதி கூடவே இருப்பாள். பாடகர்களுக்கு ராயல்டி கிடைப்பதன் மூலம் மரியாதை வந்து இருக்கிறது. பாட்டுத்தொழிலை தியானமாக பாவித்து செய்தால் எல்லாமே தேடிவரும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

8 முறை தேசிய விருது

விழாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசியதாவது:-

“ஜேசுதாசுக்கு 8-வது முறையாக தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பெல்லாம் பாடல் பதிவின்போது இசைக்கருவிகள், கலைஞர்கள் என்று கல்யாண கச்சேரி மாதிரி இருக்கும். இப்போது அப்படி இல்லை. பாடகர்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலைகள் தெரியாது. பாடத்தான் தெரியும். என்னைப்போன்ற சிலர் டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறோம்.


இந்த நேரத்தில் பாடகர்களுக்கு ராயல்டி தொகை புதையல் மாதிரி கிடைத்து இருக்கிறது. முன்பெல்லாம் பாடகர்களுக்கு இது கிடையாது. பக்தி பாடல்கள் பாடினால் வருடம் தோறும் கொஞ்சம் பணம் தருவார்கள்.”

இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசினார்.

பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், மனோ, எஸ்.பி.பி.சரண் பாடகிகள் பி.சுசீலா, வாணிஜெயராம், சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தலையங்கம்

தூங்கும் நீதிமன்ற உத்தரவுகள்




உலகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ‘ரிப் வான் விங்கிள்’ என்ற ஆங்கில கதை கற்பிக்கப்படுகிறது. ‘ரிப் வான் விங்கிள்’ ஒரு பெரிய சோம்பேறி.

ஏப்ரல் 14 2018, 03:00 AM

உலகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ‘ரிப் வான் விங்கிள்’ என்ற ஆங்கில கதை கற்பிக்கப்படுகிறது. ‘ரிப் வான் விங்கிள்’ ஒரு பெரிய சோம்பேறி. எந்த வேலையையும் செய்யாமல் குழந்தைகள் பிறந்தபிறகும், ஊர் சுற்றிக்கொண்டே ஜாலியாக இருந்தார். ஒருநாள் அவர் மனைவி அதிகமாக திட்டியவுடன், ‘ரிப் வான் விங்கிள்’ கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தெருக்களில் சுற்றி அலைந்தார். அப்போது மதுபான பீப்பாயை சுமந்துகொண்டு ஒரு முதியவர் நடந்துபோனார். அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடல் எதிரொலியாக, ‘என்னோடு மலைக்கு வருகிறாயா?’ என்று கேட்டவுடன், ரிப் வான் விங்கிள் அந்த பீப்பாயை தூக்கிக்கொண்டு மலைக்குச் சென்றார்.


மலையில் ரிப் வான் விங்கிள் மதுவை குடித்துவிட்டு தூங்கிவிட்டார். தூக்கம் கலைந்து எழுந்த அவர், நீண்ட தாடியுடன் இருப்பதை உணர்ந்தார். ஆடைகளெல்லாம் கந்தலாக இருந்தது. மேலும் தன் அருகில் இருந்த துப்பாக்கி துருப்பிடித்து தகரமாக கிடப்பதை பார்த்து விட்டு, மலையில் இருந்து கீழே இறங்கிவந்து பார்த்த போது யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. அவர் 20 ஆண்டுகள் தூங்கி இருக்கிறார். இதே கதையை சென்னை ஐகோர்ட்டில் அரசு ஆணைகளை நிறை வேற்றாத அதிகாரிகளை தொடர்புபடுத்தி, நீதிபதி என்.கிருபாகரன் கூறியிருக்கிறார். 6 ஆசிரியர் களுக்கு பணிநியமனம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமலும், அதை எதிர்த்து அப்பீல் செய்யாமல் இருந்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இதேநிலை நீடித்தால் மக்களுக்கு நீதிமன்றம் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையில்லாமல் போய்விடும். இது நல்லதல்ல என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். உயர்நீதிமன்றம்தான் மாநிலத்தில் உயர்ந்த நீதிமன்றம் ஆகும். உயர்நீதிமன்ற உத்தரவுகளையே அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால், கீழ்கோர்ட்டு உத்தரவுகள் என்னவாகும் என்று கூறியிருக்கிறார்.


நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறை வேற்றாததால், கடந்த 17 ஆண்டுகளில் 30 ஆயிரத்து 840 அவமதிப்பு வழக்குகளும், 2016–ம் ஆண்டு மட்டும் 3 ஆயிரத்து 132 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகாரிகள் மீது தொடரப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க அரசு ரீதியாக அனைத்து முயற்சி களையும் எடுத்து நிறைவேறாத பிறகுதான், உயர்நீதி மன்ற கதவுகளை தட்டுகிறார்கள். அந்த தீர்ப்பும் நிறைவேற்றப்படவில்லை என்றால் வேறு எங்கு செல் வார்கள்?. ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணை யான காவிரி நடுவர்மன்றம் பிறப்பித்த உத்தரவுகள் நிறைவேற்றப்படாததால் மக்களுக்கு நம்பிக்கை இல்லாதநிலை இருக்கிறது. பொதுவாக நீதிமன்ற தீர்ப்புகள் கொஞ்சநாள் அதிகாரிகளால் நிறைவேற்றப் படும். பிறகு அது நிறைவேற்றப்படு வதில்லை. இந்த நிலையை தவிர்க்க, சென்னை ஐகோர்ட்டு இதற்கென தனியாக ஒரு பதிவாளரை நியமித்து, நீதிமன்ற தீர்ப்புக ளெல்லாம் நிறைவேற்றப் படுகிறதா? என்று பார்க்க வேண்டும். அரசு துறைகளிலும் நீதிமன்ற தீர்ப்புகள் வந்தால் அதுகுறித்து ஒருநிலை ஆணை பிறப்பிக்கலாம். அரசு விதிகளில் திருத்தம் கொண்டுவரலாம். தேவைப் பட்டால் சட்டத்திருத்தமும் கொண்டுவரலாம். நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப் படுகிறதா? என்று பார்க்க தனியாக ஒரு அதிகாரியை நியமிக்கலாம். இதில் அரசு முன்உதாரணமாக திகழ வேண்டும். தீர்ப்புகள் நிறை வேற்றப்படமுடியாது என்றால், உடனடியாக மேல்கோர்ட்டில் அப்பீல் செய்யலாம்.
Image result for tamil new years day wishes

NEWS TODAY 27.06.2026