Tuesday, April 24, 2018

மனசு போல வாழ்க்கை- 3: நல்ல எண்ணங்களைப் பயிலலாமே!

Published : 07 Apr 2015 14:30 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன் 

தி  இந்து 



நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது.

ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை. சாதிச் சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம். டி.வி நிகழ்ச்சியில் ஒரு பொருளாதார நிபுணர் பேசினால் அலுப்பு வருகிறது. ஆனால், அதிலேயே ஒரு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தினால் கண் இமைக்காமல் பார்க்கிறோம்.

ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறையத் திறன் தேவைப்படுகிறது.

“உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் உள்ளது” என்று பதற்றமாக யாராவது சொன்னால், “எனக்கு ஏதும் மின்னஞ்சல் வரவில்லையே! வெடி குண்டு வைத்ததற்கு ஏதும் சாட்சி உண்டா? ” என்று எந்த அறிவுஜீவியும் கேட்கமாட்டார். முதல் வேலையாக வெளியே எழுந்து ஓடுவார்.

அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால்தான் மிகச்சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்துவிடுகின்றன.

ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகியுள்ளது. அதுதான் காரணம். அடிப்படையில் நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான். முதுகுத் தண்டின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூளையின் பின் பகுதிதான் புலனறிவுகளின் செயலகம்.

மிருகத்தின் முக்கியத் தேவைகள் தன் உயிர் காப்பதும், இரை தேடுவதும், இனப்பெருக்க உணர்வும்தான். அதற்குத் தேவையான செயல்பாடுகள் அடிப்படையான ஆதார உணர்வுகளைச் சார்ந்தவை. அச்சம்தான் நம் முதல் உணர்ச்சி. கோபம் கூட அடுத்த கட்டத்தில்தான் தோன்றுகிறது. அதனால்தான் அச்சத்தை நம் மூளை தேடிப் பிடித்து உள்வாங்கிக்கொள்கிறது.

“உங்கள் குழந்தையின் உணவில் போதிய போஷாக்கு இருக்குதா? உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்குதா? உங்களுக்குக் கொஞ்சமாவது துப்பு இருக்குதா?” என்றெல்லாம் கேட்கும் விளம்பரங்கள் அடிப்படையில் அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் விற்பனையை வளர்க்க நினைக்கின்றன. காரணம் அச்சம் நமக்குச் சுலபமாக வரும்.

மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின் பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது. சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன.

அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப் படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை.

அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.

இது இரு வழிப்பாதையும் கூட. எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்!

இன்னொரு விஷயமும் உள்ளது. நெருக்கடியான நிலையில் பின் மூளை உடனடி யாகச் செயல்படும். முன் மூளை சற்று நேர மெடுக்கும்.

நீங்கள் உங்கள் மனைவியிடம் சின்ன வாக்குவாதம் செய்கிறீர்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தையில் சற்று நிதானமிழந்து நீங்கள் பதிலுக்கு அவர் குடும்பத்தையும் சேர்த்துத் திட்டிவிடுகிறீர்கள். பின் சில நொடிகளில் செய்த பாதகமும் அதன் பின் விளைவுகளும் புரிகின்றன.

உங்கள் மனைவி ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம். பதிலுக்கு நம் குடும்பத்தினரின் மொத்த வரலாறும் வரிசை மாறாமல் வரலாம். குறைந்த பட்சம் அன்றைய நிம்மதியும் தூக்கமும் போகலாம். இதெல்லாம் புரிந்து, “ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..!”என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறீர்கள்.

ஆனால் உங்கள் பின் மூளை செயல்பாட்டின் தாக்குதல் உங்கள் மனைவியின் பின் மூளையைத் தாக்க, “ எல்லாம் சொல்லிட்டீங்க. உங்க புத்தி தெரியாதா?” என்று கோபத்தில் எழுந்து போகிறார். பின் அவரின் முன் மூளை சற்று பகுத்தறிவுடன் யோசித்து, “குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டா அது அவங்களை பாதிக்கும். ஹூம்.. அவர் எப்பவும் இப்படித்தான் புதுசா என்ன?” என்று சமாதானமாகிறார்.

ஒரு உறவில் ஏற்படும் உரசலின் அனாடமி இது.

அதனால்தான் சொன்னேன். அச்சம், கோபம், போன்ற நெகட்டிவ் எண்ணங்கள் எல்லாம் முந்திக் கொண்டு வருகின்றன. அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, போன்ற பாஸிட்டிவ் எண்ணங்கள் அவ்வளவு இயல்பாக வருவதில்லை. அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதும் என்னென்ன கருத்துகள் வந்தன? “கோஹ்லி சரியில்லை. எல்லாம் அனுஷ்கா ஷர்மா ராசி”. “தோனியே சொதப்பிட்டார்” இப்படி வந்தவைதான் அதிகம். “அன்று ஆஸ்திரேலியா நம்மை விட நன்றாக விளையாடியது” என்று சொல்லியவர்கள் எத்தனை பேர்?

வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன.

நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும். மூளையும் மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்!

இதுதான் உலகின் அத்தனை மதங்களும் ஒரே குரலில் சொல்லும் மந்திரம்!



தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
மனசு போல வாழ்க்கை-1 : முடியும், முடியாது இரண்டும் நிஜம்தான்!

Published : 24 Mar 2015 13:28 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்





ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? வெற்றியைத் தேடித்தான்!

படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியபின் கல்யாணம், வெளி நாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம்.. பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம்...இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா?

மன அமைப்பு

நினைப்பது கிடைப்பது தான் வெற்றி. ஆசைப்பட்டதை அடைய வேண்டும். அதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளனர் நம் மக்கள். நவீனச் சந்தைப் பொருளாதாரமும் அதை ஊக்குவிக்கிறது.

உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனமில்லையா? இதைச் சாப்பிடக் கொடுங்கள். கல்லூரி வளாகத்திலேயே வேலை கிடைக்க எங்கள் கல்லூரி தான் கியாரண்டி. திருமணத் தடையா இந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள். இடுப்பு வலியா எங்கள் ஆஸ்ரமம் நடத்தும் யோகா கிளாஸ் வாருங்கள்.

மன அசதியா? இந்தப் புத்தகம் படியுங்கள். எங்கள் பயிற்சிக்கு வாருங்கள். அதிர்ஷ்டம் வேண்டுமா? இந்தக் கல்லில் மோதிரம் போடுங்கள்! எனும் குரல்களை நாடிப் போகிறவர்கள் அனைவருக்கும் கேட்டது கிடைக்கிறதா? நிச்சயம் இல்லை.

என்ன காரணம்? தருகிறவர் மன அமைப்பை விடப் பெறுகிறவர் மன அமைப்பு இங்கு முக்கியமாகிறது.

சுடுதண்ணீர் சிகிச்சை

ஒரு உளவியல் சிகிச்சையாளனாய் இதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒரே சிகிச்சை முறையை மேற்கொள்ளும் இருவருக்கு மிகுந்த மாறுபட்ட பலன்கள் கிடைப்பது உண்டு. ஒருவர் முழு பலனையும் ஒருவர் மிகக்குறைவான பலனையும் அடைவர்.

அது போலப் பல சமயங்களில் என் வார்த்தைகளும் வழிமுறைகளும் எனக்குப் பயன்படுவதை விட என்னிடம் வருபவர்களுக்கு அதிகம் பயன்படும். ஒரு முறை தீராத தலைவலிக்குச் சிகிச்சைக்கு என்னிடம் வருபவர் ஒருவருக்கு லூயிஸ் ஹேயின் அஃபர்மேஷன் முறை கொண்டு ஒரு சிகிச்சை அளித்தேன்.

நம்ப முடியாத அளவுக்கு வேகமாக முழுமையாகக் குணமானார். என் தலைவலிக்கு நான் முதல் முறையாக அந்த வழிமுறையைப் பயன்படுத்திய போது கூட ஏற்படாத மகத்தான மாறுதல் அது.

ஒரு வேளை இது வெறும் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமா? வீரிய மருந்து என்று சொல்லிச் சுடுதண்ணீரைச் ஊசி மூலம் செலுத்தினால் கூடச் சிலருக்குப் பலன் ஏற்படும். இதை Placebo Effect ஆங்கிலத்தில் சொல்வார்கள். ராசியான டாக்டர் என்று சொல்வது கூட நம்பிக்கை சிகிச்சையின் ஒரு பகுதி தான். கிறிஸ்துவ மதத்தில் Faith Healing மிகப்பிரபலம்.

பெரும் கண்டுபிடிப்பு

நம் கிராமங்களில் அம்மனுக்காகத் தீமிதி சென்று காயம் படாமல் வருவது எப்படி முடிகிறது? தீக்குச்சி நுனி பட்டால் விரல் தீய்ந்து போகுமே! இது பக்தி அல்ல ஆழ்மனச் சக்தி என்று சொல்லும் ஆண்டனி ராப்பின்ஸ் போன்றோர் அமெரிக்காவில் நடத்தும் என். எல்.பி (Neuro Linguistic Programming) பயிற்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரும் நெருப்பில் நடக்கிறார்கள்.

கடவுள் சக்தியோ மனித ஆற்றலோ நம்பிக்கையால் பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்றால் ஏன் இதை இளைஞர்களுக்குப் பள்ளியிலிருந்தே சொல்லித்தரக்கூடாது? உண்மை என்னவென்றால் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை விட நம்பிக்கை குலைந்து கிடக்கிறார்கள் இங்கு.

மனிதக் குலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது: நம் எண்ணத்தை மாற்றினால் நம் வாழ்க்கையை மாற்றலாம் என்பது தான். மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச் சாதிக்க முடியும் என்பதுதான் மனிதக் குல வரலாறு. வேளாண்மை முதல் வாட்ஸ் அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.

இரண்டும் நிஜங்கள்

பிளேடைத் தின்பது, விமானத்தைப் பற்களில் இழுப்பது, தேனீக்களை முகத்தில் வளர்ப்பது, அரிசிக்குள் சித்திரம் வரைவது, பார்வையற்றோர் மலை ஏறுவது, என நிறையச் செய்திகள் படிக்கிறோம். இவை அனைத்தும் எண்ணம் செயலாகிய சாதனைகள் தான்.

இது தவிர மரணத்தை மனப் பலத்தால் வென்றவர்கள் கதைகள் நிறைய நமக்குத் தெரியும். வாழ்க்கையில் சகலத்தையும் இழந்து பின் தன்னம்பிக்கையோடு போராடி ஜெயித்த பலரின் வரலாற்றைப் பாடமாகவே படித்திருக்கிறோம். இருந்தும் எண்ணம் தான் வாழ்க்கை என்பதை நமக்குப் பிரச்சினை வரும் போதெல்லாம் மறந்து விடுகிறோம்.

“எங்க குடும்ப நிலமை மோசம் சார். ஒண்ணுமே பண்ண முடியலை.” “எங்க அப்பா சரியில்லை. இவ்வளவு தான் முடிஞ்சது.” “இந்தக் கோர்ஸ் படிச்சா இது தான் சார் கதி.” “நம்ம நாட்டுல இதுவே ஜாஸ்தி”. “ நம்ம ராசி அப்படி. சாண் ஏறுனா முழம் சறுக்கும்.” “தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இதுக்கு மேல முடியாது!”

இவை எல்லாம் சத்திய வார்த்தைகள். சொன்னவர் வாழ்க்கையில் அவை பலிக்கும். இந்த எண்ணங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் ஏற்படும். இந்த எண்ணங்கள் மீண்டும் வலுப்படும்.

“என்னால் முடியும்” என்று சொன்னாலும் “என்னால் முடியாது” என்று சொன்னாலும் இரண்டும் தனி நபர் நிஜங்கள். இரண்டும் பலிக்கும்.

எண்ணமே வாழ்வு

நம் உள்ளே உள்ள நோக்கமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள். அனைத்து மதங்களும் அனைத்துக் கோட்பாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன.

“என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது? “என்று கேட்கலாம். உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களையே ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?

நம் எண்ணம் எப்படி நம் செயல்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு கிரிக்கெட் உதாரணம் சொல்லலாம். தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆடுவதும் ஜெயிக்கணும் என்ற எண்ணத்தில் ஆடுவதும் வேறு வேறு முடிவைத்தரும்!

எல்லாருக்கும் வெற்றி வேண்டும். ஆனால் உங்கள் மனதில் தோல்வியைத் தடுக்கும் வழி முறைகளை யோசிக்கிறீர்களா அல்லது ஜெயிக்கும் உத்திகளை யோசிக்கிறீர்களா?

உங்கள் படிப்பு, வேலை, காதல், திருமணம், தொழில், செல்வம், குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் உறுதிப்படுத்துவது உங்கள் எண்ணங்கள்.

கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப் பாடல் வரியில் சொல்லிவிட்டார்:

“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”



தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
மனசு போல வாழ்க்கை-2 : எத்தனை விதமாய் எண்ணங்கள்!

Published : 31 Mar 2015 12:52 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 


நம் அனுபவங்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதை முதலில் பார்ப்போம்.

10 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்து பிடிபட்டதால் வங்கி ஊழியர் தற்கொலை என்று படிக்கிறோம். கோடிக்கணக்கில் கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் மந்திரி சாதாரணமாகப் பேட்டி கொடுப்பார். சாலையில் வாகனம் செல்லும் தடத்துக்கு மிக அருகில் ஓரமாகப் படுத்து , எப்போதும் ஆபத்தை எதிர்நோக்கும் உணர்விலும் நன்றாக உறங்குவோர் பலர் நம் நாட்டில்.

இதே நாட்டில் தான் மிக வசதியான இடத்தில் படுத்தும் தூக்கம் வராமல் தூக்க மாத்திரை உபயோகிப்போர் எண்ணிக்கை மிக மிக அதிகம். 1100 மதிப்பெண்கள் எதிர்பார்த்து அது குறைந்ததால் மன அழுத்தத்தில் சிகிச்சைக்கு என்னிடம் வரும் மாணவர்களும் உண்டு. இரு முறை தோல்வி அடைந்தும் பதற்றப்படாமல் இருக்கிறானே என்று மன அழுத்தத்தில் என்னிடம் வரும் பெற்றோர்களும் உண்டு.

பணம் இருந்தால் கடன் அடைக்கலாம் என்பார்கள். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் மைக்ரோ ஃபினான்ஸில் வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பித் தருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும் நிறுவனங்கள் அரசிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் தாமதம். சிக்கல். ஏன்?

எல்லாம் மனசு தான்.

இரண்டு எண்ணங்கள்

விற்பனைப் பயிற்சியில் அதிகம் சொல்லப்பட்ட கதை இது:

காலணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஒரு புதிய தீவில் கிளை பரப்ப எண்ணி 50 ஜோடி காலணிகளுடன் ஒரு விற்பனைக்காரனை அனுப்பியது. சென்றவன் அதே வேகத்தில் திரும்பினானாம். “அங்கு காலணி அணியும் பழக்கம் யாருக்கும் இல்லை. அதனால் கிளை திறக்கும் எண்ணத்தைக் கைவிடலாம். இங்கு விற்பனை சாத்தியமில்லை.”

இரண்டாம் ஆளை அனுப்பினார்கள். அவன் மறு நாளே செய்தி அனுப்பினானாம்: “யாருமே காலணி அணியவில்லை. உண்மை தான். அதனால் இதை விற்கப் போட்டியும் இல்லை. முழு சந்தையையும் நாமே பிடித்துவிடலாம். இன்னும் 200 ஜோடி காலணிகள் அனுப்புங்கள். விரைவில் கிளை திறக்க ஏற்பாடு செய்யுங்கள்!”

வாய்ப்புகளில் பிரச்சினைகளைப் பார்ப்பதும் பிரச்சினைகளில் வாய்ப்புகளைப் பார்ப்பதும் அவரவர் மன நிலையைப் பொறுத்ததே!

எண்ணம் தான் விதை. உணர்வு தளிர். செயல் விருட்சம். இதைப் புரிந்து கொண்டால் அனைத்தும் எளிதாக விளங்கும்.

செயலின் விதை

“ஏன் இப்படிச் செய்யறான்?” என்று கேட்பதற்கு முன் அந்தச் செயலுக்கு விதையான எண்ணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பிரபலப் பத்திரிகையின் கேள்வி - பதில் பகுதியில் இதைப் படித்தேன்:

கேள்வி: “நடிகை ரோஜாவைக் கட்டிப் பிடிக்க ஆசை! ஒரு வழி சொல்லுங்கள்?”

பதில்: “ரோஜாவைக் கட்டிப்பிடிக்க நினைத்தால் முள் குத்தும்!”

அருகே நடிகை ரோஜாவின் படமும் ரோஜாப்பூவின் படமும் இணைந்ததாய் ஒரு கேலிச்சித்திரம். என்ன அரிய கருத்து!

சரி, இதை ஏன் ஒரு வாசகர் கர்மச் சிரத்தையாய்க் கார்டு வாங்கி எழுதி அனுப்புகிறார்? ஆயிரம் கேள்விகளில் ஏன் இதைப் பொறுக்கி எடுத்து அந்த உதவி ஆசிரியர் பதில் எழுதிப் பிரசுரிக்கிறார்? இதை ஏன் மெனக்கெட்டுப் படித்து ஞாபகம் வைத்து நான் இப்போது எழுதுகிறேன்?

ஒவ்வொருவர் எண்ணத்தை அறியவும் முயற்சி செய்யுங்கள். மூவரின் செயலுக்கும் உந்துசக்திக்கும் செயலுக்கும் விளக்கம் கிடைக்கும்.

எண்ணமே ஆதாரம்

“ஏன் முகம் கொடுத்துப் பேச மாட்டேன் என்கிறாள்?” “ஏன் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியாக இல்லை? “ஏன் இவர் செய்கின்ற எல்லாத் தொழிலும் தோல்வியில் முடிகிறது?” “ஏன் இவர் எங்குச் சென்றாலும் பிரபலமாகிறார்?” “எந்த வேலையையும் இவரால் மட்டும் எப்படி சரியான நேரத்தில் செய்ய முடிகிறது?” “இவரால் மட்டும் எப்படி எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?” “இவன் எல்லோரிடமும் சணடை போடுகிறானே, ஏன்?” இப்படி நம்மைச் சுற்றிய மனிதர்களின் செயல்களுக்கு ஆதாரமான எண்ணங்களை ஆராயுங்கள். அவர்களின் செயல்களின் காரணங்கள் புரியும்.

எதிராளியின் எண்ணம் புரியாத போது நாம் நம் உறவுகளைச் சீர் குலைய விடுகிறோம்.

அவர் எண்ணத்தைப் புரிந்து நாம் எடுக்கும் முடிவுக்கும் அடிப்படை நம் எண்ணம் தாம். என்ன விசு பட வசனம் மாதிரி இருக்கா? சரி, கொஞ்சம் எளிமை படுத்தலாம் வாங்க...!

ப்ரமோஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார். மேலதிகாரியான உங்களுக்குக் குழப்பமாக உள்ளது. “எந்தக் கிறுக்கனாவது பணமும் பவரும் வேண்டாம்னு சொல்வானா? என்ன ஆள் இவன்?” என்று யோசிக்கிறீர்கள். பின்பு, விசாரித்ததில் புரிகிறது. தொழிற்சங்க உறுப்பினர் தகுதி ப்ரமோஷனால் பறி போகும். பதவி உயர்வை விடத் தொழிற்சங்க அடையாளம் பெரிது என்று எண்ணி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

இப்போது இந்த அறிதல் உங்கள் எண்ணத்தை இப்படி மாற்றலாம். “சரியான அரசியல்வாதி போல. இங்கேயே இருந்து என்னென்ன பிரச்சினை செய்வானோ? கொஞ்சம் ஜாக்கிரதையா டீல் பண்ணணும்!”

அல்லது இப்படி ஓர் எண்ணம் தோன்றலாம்: “என்ன ஒரு கொள்கைப்பிடிப்பு. அவ்வளவு தீவிரமான ஈடுபாடா? நாமெல்லாம் காசு கிடைச்சா போதும்னு நினைக்கறப்ப இப்படிப் பொதுக் காரணத்துக்கு உழைக்கும் ஆளைப் பாக்கறதே பெரிய விஷயம். அந்த ஆளைப் பாத்து இன்னும் நிறைய தெரிஞ்சக்கணும்!”

எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீகளோ அது அவருடனான உங்கள் உறவை தீர்மானிக்கும்.

ஆம். நீங்கள் உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!

“நீங்கள் உங்கள் வியாதியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!” என்பார் தீபச் சோப்ரா. உங்கள் எண்ணம்தான் உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்றால் நம்புவீர்களா?

“அப்படியா ஆச்சர்யமாக இருக்கே.!” என்பதும் “ரொம்ப கதை விடறார்!” என்பதும் இரு எண்ணங்கள். எந்த எண்ணத்தை இப்பொழுது தேர்ந்தெடுத்தீர்கள் என்று பாருங்கள்.

உங்கள் தேர்வு உங்கள் தேடலை நிச்சயிக்கும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
Mercury touches 40-degree Celsius in Central Tamil Nadu

By M S Thanaraj | Express News Service | Published: 23rd April 2018 02:24 AM |


Image used for representational purpose. (Express File Photo)

TIRUCHY: Temperatures across central Tamil Nadu crossed the 40-degree Celsius mark on Sunday. According to Regional Meteorology Department, Chennai, Tiruchy recorded more than 40.1 degree Celsius midday on Sunday. The dry wind in the central districts increased the impact of searing heat. According to data provided by private weather watchdogs, Ariyalur, Perambalur and Karur registered above temperatures around 40 degree Celsius on Sunday.

The intense heat has given rise to fear of chicken pox, sun stroke, conjunctivitis and other infections. Though the number of patients admitted to hospitals is less, many people are turning up with minor symptoms and the Health department is preparing for prevention of such outbreaks.



Dr G Anitha, dean of Mahatma Gandhi Memorial Government Hospital, Tiruchy, told Express, “Due to the heat, many people are affected with medical conditions like heat stroke, dehydration, skin burns, chickenpox and even brain fever. As people are more aware about basic medical issues, the number of patients seen at the hospital is moderate. Those arriving for heat-related issues are widely seen at the hospital. Though some chicken pox outbreak was seen in the rural parts of the district ahead of summer, proper preventive measures were taken to ensure it did not spread out and was handled well by the city health department.”

She added that people had to be cautious in consuming things with more focus on hygiene. She advised people to avoid getting fully exposed the sun during the mid-day.

Speaking about the increase in ultraviolet rays, Dr M A Aleem, former vice-principal of government medical college in Tiruchy said that sunburns and tanning were the known acute effects of excessive UV radiation exposure.

UV radiation-induced degenerative changes in cells, fibrous tissue, and blood vessels lead to premature skin ageing. UV radiation can also cause inflammatory reactions of the eyes, such as photokeratitis and cataract.


வெடித்துச் சிதறிய தார் ட்ரம்... நாசமான விலை உயர்ந்த கார்கள்! 

எம்.புண்ணியமூர்த்தி
தி.விஜய்

 

கோவை 100 அடி சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தார் ட்ரம் மீது லாரி ஏறியதால், பயங்கர சத்தத்துடன் தார் ட்ரம் வெடித்துச் சிதறியது. இதில், பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த கார்கள் மீது தார் ஊற்றி, கார்கள் நாசமாகின.

கோவை 100 அடி சாலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே தயார்செய்யப்பட்ட ப்ளானில் பாலத்தைக் கட்டாமல், புதிய ப்ளான் தயாரித்து பாலத்தைக் கட்டியது அ.தி.மு.க அரசு. இதை, ஆர்.டி.ஐ மூலம் கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார், ஆர்.டி.ஐ ஆர்வலர், வழக்கறிஞர் லோகநாதன்.

பழைய ப்ளான்படி பாலத்தைக் கட்டினால் வணிக நிறுவனங்கள் இடிபடும் என்ற ஒரே காரணத்துக்காக, அ.தி.மு.க அரசு மாற்றிவிட்டது என்றும் புதிய ப்ளான்படி கட்டும் பாலத்தால் மக்களுக்குப் பயன் இல்லையென்றும் சர்ச்சை வெடித்தது. குறிப்பாக, 100 அடி சாலையின் செங்குத்தான உயரம், வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கதறினார்கள் பொதுமக்கள். அதன்பிறகு, மக்களுக்குப் பயனுள்ள வகையில் பாலம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தது அரசு. மாற்றுவார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

இந்நிலையில், பாதிக்கும் மேற்பட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக மேம்பாலத்தின்மீது தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக, மேம்பாலத்தின்மீது தார் ட்ரம்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இன்று மதியம், கட்டுமானப் பணிக்காக வந்த லாரி ஒன்று பின்பக்கமாக வந்தபோது, எதிர்பாராதவிதமாக தார் டின்மீது ஏறிவிட்டது. பயங்கர சத்தத்துடன் தார் டின் வெடிக்க… அந்தப் பகுதி மக்கள், அந்த சத்தத்தில் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். ட்ரம்மிலிருந்து பீறிட்ட தார்… பாலத்துக்குக் கீழே வழிந்திருக்கிறது.

அப்போது, கீழே சென்றுகொண்டிருந்த வாகனங்கள்மீது தார் ஊற்றியது. இதில், விலை உயர்ந்த எட்டு கார்கள் நாசமடைந்தன. ஆத்திரம் அடைந்த கார்களின் சொந்தக்காரர்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், 100 அடி சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கிறோம், ஸ்டேஷனில் வந்து புகார் கொடுங்கள் என்று கார் உரிமையாளர்களைச் சமாதனப்படுத்தி, போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
அதன் பின்னர், போக்குவரத்து சீர்படுத்தப்பட்டது.

ஆனால், 'இதுவரை தங்களிடம் வந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதுகுறித்துப் பேசவில்லை. இவ்வளவு கவனக்குறைவாக கட்டுமானப்பணியை மேற்கொள்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. காரோடு போய்விட்டது. ஏதாவது உயிர்ப் பலி ஏற்பட்டால், யார் பொறுப்பேற்பார்கள்? ஏண்டா இந்தப் பாதையில வந்தோம்னு இருக்கு. எங்களுக்கு உரிய இழப்பீட்டைத் தர வேண்டும்' என்றனர்.

வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையை திருப்பித்தர வேண்டும்: ஏர்செல்லுக்கு டிராய் உத்தரவு
 
தினகரன் 

 
புதுடெல்லி: போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையை திருப்பித்தர வேண்டும் என ஏர்செல் நிறுவனத்துக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. கடனில் மூழ்கிய ஏர்செல் நிறுவனம், திவால் ஆனதாக அறிவிக்க கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு செய்து, சேவையை நிறுத்திக்கொண்டது. ஏற்கெனவே டவர்கள் இயங்காததால் அவதிப்பட்டு வந்த வாடிக்கையாளர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். வேறு நிறுவனங்களுக்கு மாற போர்ட் கோடு கிடைக்கவில்லை. இன்னமும் ஏராளமான ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற முடியாமல் திண்டா(டுகின்றனர்.

 போர்ட் கோடு பெற்று விண்ணப்பம் சமர்ப்பித்தவர்களில் பலர் வேறு நிறுவனங்களுக்கு மாறாமல் உள்ளனர். வங்கி கணக்கு போன்றவற்றுக்கு ஏர்செல் எண் கொடுத்திருந்த வாடிக்கையாளர்கள், ஒரு முறை பாஸ்வேர்டு பெற முடியாததால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஈடுபட இயலவில்லை. பலர் வேறு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் புதிய எண் வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதுபோல் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் தொகையை நிறுவனம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஏர்செல் நிறுவனத்துக்கு டிராய் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: போஸ்ட் பெய்டு உபயோகித்து வந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலர், தங்களது டெபாசிட் தொகையை நிறுவனம் திருப்பித்தரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

 போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் டெபாசித் செய்த தொகையை இந்த மாதம் 30ம் தேதிக்குள் திருப்பித்தர வேண்டும். டிசம்பரில் இருந்து மார்ச் 10ம் தேதிக்குள் பிற நிறுவனங்களுக்கு மாறியவர்களின் பட்டியலை வழங்க வேண்டும். இதுபோல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் பலர் ரீசார்ஜ் செய்த தொகையை இழந்துள்ளனர். எனவே, பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத தொகை விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தியதற்கான விவரங்களை மே 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
Inspection at GH for accreditation 

Staff Reporter 

 
ERODE, April 24, 2018 00:00 IST

 


 Naveen Kokcha, quality consultant from the Ministry of Health and Family Welfare, discussing the treatment provided to patients at Government Headquarters Hospital in Erode on Monday.M. 

GOVARTHANM_GOVARTHAN 

Eighteen departments will be subjected to check

A three-member team from the Ministry of Health and Family Welfare has begun their assessment at the Government Headquarters Hospital here on Monday for national level accreditation that focuses on improving the standards for better service to people.

Focus

Under the National Quality Assurance Standards (NQAS), assessment is done internally, at district level and State level with main focus on clinical services, treating patients and quality management. Finally, a Central team will inspect the hospital and submit a report for accreditation.

Seven government hospitals in Erode, Namakkal, Pennagaram, Cuddalore, Usilampatti, Ooty and Padmanabhapuram in Kanyakumari district have been selected for the programme.

The hospital should score 70% and above after which accreditation will be given.

Eighteen departments in the hospital will be subjected to inspection for accreditation. Based on the report, facilities at the hospital will be upgraded and specific area improvement will also be recommended.

On Monday, a three-member Quality Consultant team, Naveen Kokcha from Haryana, E. Bijoy from Kozhikode and Arunkumar Cintha from Telangana began their inspection.

Mr. Naveen Kokcha told media persons that government hospitals in the State were doing better service to people and the accreditation would help them serve better.

Earlier, the team held discussions with T. Kanagachala Kumar, Joint Director of Health Services, Prabavathi, Superintendent, and R. Venkadesh, District Nodal Officer, and other doctors.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...