Thursday, May 3, 2018

CB-CID to probe leak of PM April city visit itinerary

TIMES NEWS NETWORK

Chennai: 


03.05.2018
Kancheepuram district crime branch police have registered a case against miscreants who leaked the itinerary of Prime Minister Narendra Modi who visited Chennai to inaugurate the Defence Expo – 2018 held at Thiruvidanthai in Kancheepuram district. He also visited cancer institute on April12.

The DCB police registered a case under various charges including leaking official secret, which is against the Constitution of India, apart from 7 (1) (a) Criminal Law Amendment Act based on the complaint lodged by a sub-inspector of police in Kancheepuram. Despite the case registered at the DCB, Kancheepuram, the case has been forwarded to the CB-CID office for further investigation.

The police said that they strongly believe that leaking of Prime Minister’s itinerary is a breach of security and the probe is on to find out at what level the itinerary leaked to the agitators through media people. A police officer said, “The Prime Minister’s office took it serious after a few television channels and some newspapers carried detailed itinerary of the VVIP.”

It is true that the Press Information Bureau (PIB) will intimate the media people about the VVIP’s visit prior to their office through mail or through fax to intimate the journalists.

A state intelligence officer said, “We normally maintain two lists of VVIP itinerary and normally, we release the fake list, keeping the original one for police officers and officials incharge of the convoy.”

There are more likely that the intermediary officials either from police department or bureaucrat offices may have circulated these information to the agitators through media people to avoid being caught.

“We are also closely monitoring some of the journalists whatsapp groups, which have circulated the PM’s itinerary,” said another senior police officer probing the case.
தனது ஓட்டுநர் ஓய்வு: தானே காரோட்டி வீட்டில் விட்ட கரூர் ஆட்சியர்: குடும்பத்தினர் நெகிழ்ச்சி

Published : 02 May 2018 13:45 IST

மு. அப்துல் முத்தலீஃப் சென்னை
 


ஓட்டுநரை பக்கத்தில் அமரவைத்து காரோட்டும் மாவட்ட ஆட்சியர், ஓட்டுநர் குடும்பத்தாருடன் ஆட்சியர் அன்பழகன் படம் சிறப்பு ஏற்பாடு

தனக்கு கார் ஓட்டிய டிரைவர், பணி ஓய்வு பெற்ற நாளில்,தனது காரில் அமர வைத்து வீடு வரை காரை ஓட்டிச் சென்று விடை கொடுத்த கரூர் ஆட்சியரின் செயலைப் பார்த்து குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருபவர் அன்பழகன். இவரது கார் ஓட்டுநராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பரமசிவம். கரூரில் தொடர்ந்து பல மாவட்ட ஆட்சியர்களுக்கு டிரைவராகப் பணிபுரிந்து வந்தார்.


இந்நிலையில் பரமசிவம் நேற்று பணி ஓய்வு பெற்றார். வழக்கம் போல் நேற்று பணிக்கு வந்தார். மாலை ஆட்சியர் பணி முடித்து அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக ஓட்டுநர் பரமசிவம் காத்திருந்தார்.

மாலை 7 மணிக்கு மேல் பணி முடித்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ஆட்சியர் காரில் ஏறி அமர்ந்தார். சக அதிகாரிகள் அவரை வழி அனுப்ப போர்ட்டிகோவில் நின்றனர். அப்போது ஓட்டுநர் பரமசிவம் ஆட்சியரிடம், 'அய்யா நான் நாளை முதல் பணிக்கு வரமாட்டேன்' என்று தெரிவித்தார்.

'ஏன் என்ன பிரச்சினை?' என்று ஆட்சியர் கேட்க, ’அய்யா நாளை நான் ஓய்வு பெறுகிறேன்’ என்று ஓட்டுநர் பரமசிவம் கூறினார். 'இதை ஏன் முன்னரே சொல்லவில்லை?' என்று கூறிய ஆட்சியர் அனைவரையும் மீட்டிங் ஹாலுக்கு வரவழைத்து ஓட்டுநர் பரமசிவத்தை பக்கத்தில் அமரவைத்து மாலை அணிவித்துப் பாராட்டினார்.

பின்னர் பரமசிவம் அனைவரிடமும் பிரியாவிடைபெற்று ஆட்சியரை கடைசி முறையாக அவரது வீட்டில் விட்டுச் செல்லத் தயாரானார். அப்போது ஆட்சியர், 'பரமசிவம், இன்று நான் உங்களுக்கு கார் ஓட்டப்போகிறேன் உங்கள் வீடு எங்கே சொல்லுங்கள்?' என்று கேட்க, 'அய்யா நீங்கள் போய் எனக்கா? நான் உங்களை வீட்டில் இறக்கிவிட்டு என் வீட்டுக்குப் போகிறேன்' என பரமசிவம் மறுத்துள்ளார்.

'ஒன்றும் பிரச்சினை இல்லை. எங்களுக்காக காலம் முழுவதும் காரோட்டிய உங்களுக்காக சில மணி நேரம் நான் கார் ஓட்டக்கூடாதா?' என்று கூறி, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த ஆட்சியர் அன்பழகன் மறக்காமல் சீட் பெல்ட்டைப் போட்டு 'பரமசிவம் உங்கள் வீடு எங்கே இருக்கிறது சொல்லுங்கள்?' என்று கேட்க, 'சார், சில கிலோ மீட்டர் தள்ளி காந்தி கிராமத்தில் வீடு இருக்கிறது' என்று கூறினார்.

பரமசிவம் முன் இருக்கையில் அமர்ந்துக்கொள்ள, உயர் அதிகாரிகள் பின் இருக்கையில் அமர காரை பரமசிவம் வீட்டை நோக்கிச் செலுத்தினார் ஆட்சியர் அன்பழகன். கார் பரமசிவம் வீட்டில் சென்று நின்றவுடன் வெளியே வந்த அவரது குடும்பத்தார் ஓட்டுநர் இருக்கையில் ஆட்சியர் அமர்ந்திருப்பதையும் பக்கத்து இருக்கையில் பரமசிவம் அமர்ந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒன்றும் பேச முடியாமல் நின்ற அவர்களைப் பார்த்து ஆட்சியர் அன்பழகன், 'வாருங்கள் வீட்டுக்குள் செல்வோம்' என்று அழைத்துச்சென்றார். வீட்டில் அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்த ஆட்சியர் பரமசிவம் பணி ஓய்வு தனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு என்று தெரிவித்து வாழ்த்திவிட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டுக் கிளம்பினார்.

ஆட்சியரின் இந்த அணுகுமுறையைக் கண்ட ஓட்டுநர் பரமசிவத்தின் குடும்பத்தாரும், அக்கம் பக்கத்தவரும் நெகிழ்ந்து போனார்கள். ஆட்சியர் அன்பழகன் சில மாதங்களுக்கு முன் வயதான மூதாட்டி தனக்கு யாருமே இல்லை, நல்ல சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை என்று கூற தனது வீட்டிலிருந்து சாப்பாடு செய்து கொண்டுசென்று மூதாட்டியின் குடிசையில் அவருக்குப் பரிமாறி தானும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார். மூதாட்டிக்கு முதியோர் ஓய்வுத்தொகைக்கான ஆணையையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது அலுவலகத்தில் பணியாற்றிய எஸ்.ஐ. திருஞானம் 37 ஆண்டுகள் பணி முடித்து நேற்று பணி ஒய்வு பெற்றார். இதற்காக நேற்று மாலை பிரிவு உபச்சார விழா நடைபெற்றது . இந்த விழாவில் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அனைவரும் கிளம்பிய பின்னர் எஸ்.பி. செல்வராஜ் தன்னுடைய காரில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. திருஞானத்தை தனக்கு இணையாக அமரவைத்து அவருடைய வீட்டிற்கு நேரடியாக அழைத்துச் சென்று கவுரவப்படுத்தி அங்கு குடும்பத்தினருடன் சில நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.

அதிகாரிகள் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களிடம் காட்டும் சிறிய அங்கீகாரம் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நினைவை விட்டு மாறாது. மேல் நாட்டில் பதவியை வைத்து கீழே உள்ளவர்களை உதாசீனமாக நடத்துவது இல்லை. இங்கே பிரிட்டீஷ் கால மனப்பான்மை காரணமாக அரசுத்துறையில் குறிப்பாக காவல்துறையில் இவ்வாறு நடக்கும் போக்கு அதிகம் உண்டு.

அதை மாற்றும் வகையில் முன்னுதாரணத்தை ஏற்படுத்திய கரூர் ஆட்சியர் அன்பழகன், புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ் இருவரும் போற்றுதலுக்குரியவர்களே.
திருப்பதிக்கு பைக்கில் செல்ல ஹெல்மெட் கட்டாயம்: மீறுவோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கும் போலீஸார்

Published : 03 May 2018 07:23 IST

என். மகேஷ்குமார் திருப்பதி



திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, தமிழகம், கர்நாடகா ஆகிய பக்கத்து மாநிலங்களில் இருந்து பலர் பைக்குகளில் வருகின்றனர். மேலும், கடை வைத்திருப்பவர்களும் தினமும் பைக்கில் செல்கின்றனர். இந்நிலையில், மலை அடிவாரமான அலிபிரியிலிருந்து திருமலைக்கு பைக்கில் செல்வோர் ஹெல்மெட் அணிவது நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் இல்லாமல் பயணிக்க திருப்பதி போலீஸார் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலித்தனர். முன்னறிவிப்பின்றி திடீரென இதை நடைமுறைப்படுத்தியதால் பக்தர்களும் வர்த்தகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்து திருமலைக்கு வந்த பக்தர்கள், தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறிய போதிலும் அவர்களை திருமலைக்கு அனுமதிக்கவில்லை. இதனால், பலர் பைக்குகளை அலிபிரி மலையடிவாரத்தில் விட்டுவிட்டு பஸ்களில் திருமலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.


திருப்பதி மலைப்பாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இதன் காரணமாக, திடீரென ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதாக தெரிகிறது.

பைக்கில் செல்பவர்கள் விபத்தில் இறந்தால் ஹெல்மெட்டை கட்டாயமாக்கும் போலீஸார், ஒரு வாரத்துக்குப் பிறகு கண்டு கொள்வதில்லை. எனவே, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவதை அரசு நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும். அதுவரை அபராதம் வசூலிப்பதை கைவிட வேண்டும். பழகுநர் (எல்) குறியீட்டுடன் வரும் கார்களையும் திருப்பதிக்கு அனுமதிக்கக் கூடாது என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தந்தையின் குடிப்பழக்கத்தால் நெல்லை மாணவன் தற்கொலை

Added : மே 03, 2018 03:10



திருநெல்வேலி:டாக்டராகும் லட்சியத்துடன், 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் விரக்தியடைந்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 'மதுக்கடைகளை இனியாவது மூடவேண்டும்' என, அவர் எழுதிய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி மாடசாமி. இவரது மகன், தினேஷ் நல்லசிவன், 18. பிளஸ் 2 தேர்வு முடித்து, 'நீட்' தேர்வுக்காக பயிற்சி பெற்றார்.தினேஷின் தாய், இசக்கி யம்மாள் சில ஆண்டுக்கு முன் இறந்தார். பின், மாடசாமி இரண்டாவதுதிருமணம் செய்து கொண்டார்.

தினேஷ், மதுரையிலுள்ள பெரியப்பா வீட்டில் தங்கி, 10ம் வகுப்பு படித்தார். பின், நாமக்கல்மாவட்டம் தனியார் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதினார்.தினேஷின் தம்பி இசக்கிராஜா 13, தங்கை தனுஸ்ரீ, 11, ஆகியோர் சொந்த ஊரில் வசிக்கின்றனர். கூலி வேலைக்காக மாடசாமி கேரளா சென்று விட்டார்.தந்தையின் குடிப்பழக்கத்தால் தினேஷ் விரக்தியில் இருந்தார்.மதுரையில் தங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே ரயில்வே மேம்பாலத்தில், இளைஞர் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடலை மீட்ட போலீசார் சோதனை செய்த போது, சட்டைப்பையில் இருந்து கடிதத்தை எடுத்தனர். அதை வைத்து அவர், தினேஷ் என தெரிந்தது.
கடிதத்தில், 'அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்து போனதற்கு அப்புறமாவது நீ குடிக்காமல் இரு. நீ குடிப்பதால், எனக்கு கொள்ளி வைக்காதே. இதுதான், என் ஆசை. அப்போதுதான், என் ஆத்மா சாந்தியடையும்.இனியாவது பிரதமரும், முதல்வரும் மதுக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லையென்றால், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன்' என, எழுதியுள்ளார். தினேஷ் உடல் கே.ரெட்டியபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மதுக்கடைக்கு விதி விலக்கா
நெடுஞ்சாலை அருகே, 500 மீட்டருக்குள் உள்ள மதுக் கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, பல கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால், தினேஷ் தற்கொலை செய்துகொண்ட பாலத்தின் அருகே உள்ள, மதுக்கடை மூடப்படவில்லை.இந்த கடையில், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர், 'பார்' நடத்துகிறார். இதனால், விதிவிலக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவன் இறப்புக்கு பிறகும் மதுக்கடை அடைக்கப்படவில்லை; விற்பனை கனஜோராக நடந்தது.
கடிதம் அனுப்பும் போராட்டம்

Added : மே 03, 2018 03:01

சென்னை:மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் கோரி, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில், டாக்டர்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க பொருளாளர், பெருமாள் பிள்ளை கூறியதாவது:சுகாதாரத் துறையில், தேசிய அளவில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இதற்கு காரணமான டாக்டர்களுக்கு, சம வேலைக்கான ஊதியத்தை அரசு வழங்கவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலருக்கு, மொபைல் போனில், குறுஞ்செய்தி அனுப்பும் போராட்டம் நடத்தினோம்.

இதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழக முதல்வருக்கு, கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நேற்று நடந்த போராட்டத்தில், முதல்வருக்கு, 1,000 கடிதங்கள் அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பல்கலை அதிகாரிகள், 'சஸ்பெண்ட்'

Added : மே 03, 2018 02:47

சென்னை:தமிழக மீன்வள பல்கலையின், இரண்டு அதிகாரிகள், முறைகேடு புகாரில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீன்வள பல்கலையில், 2017ல், பதிவாளர் பொறுப்பு வகித்த, பேராசிரியர் ரத்னக்குமார் மற்றும் மீன் வள பல்கலையின், எஸ்டேட் அதிகாரி, வி.வெங்கடேசன் ஆகியோர் மீது, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், அனந்தபத்மநாபன் புகார் அளித்துள்ளார்.

புகாரில், ரத்னக்குமாரும், வெங்கடேசனும், தங்கள் பதவிக்காலத்தில், கட்டுமான பணிகளில் முறைகேடு செய்து உள்ளதாக தெரிவித்துஇருந்தார்.இந்த புகாரின் மீது, பல்கலை நிர்வாகம், நடத்திய விசாரணையில், முறைகேடுக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
எனவே, விரிவான விசாரணை நடத்தும் வகையில், தற்போது, மீன்வள பல்கலையின், மீன் பதப்படுத்தும் தொழில்நுட்ப தலைவராக உள்ள, ரத்னக் குமார் மற்றும் மாநில சுகாதார சங்கத்தில் பணியாற்றும், வெங்கடேசன் ஆகியோர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தற்போதைய பதிவாளர், சீனிவாசன் பிறப்பித்து உள்ளார்.
நாளை மறுநாள் பால் கிடைக்காது: முகவர்கள் நல சங்கம் அறிவிப்பு

Added : மே 03, 2018 02:22

சென்னை:'வணிகர் தினமான, மே, 5ல், பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால், முதல்நாளே பாலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்' என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் மாநில தலைவர், பொன்னுசாமி கூறியதாவது:தமிழகத்தில், மே, 5 வணிகர் தினத்தை முன்னிட்டு, வணிகர்கள் அனைவரும், தங்களின் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளனர்.இதனால், பால் முகவர்கள், அன்றைய தினம், ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து, 100 சதவீத பாலை கொள்முதல் செய்து, அவற்றை இருப்பு வைத்து, வினியோகிப்பது இயலாத காரியம்.எனவே, பால் முகவர்கள், 5ம் தேதி, பால் நிறுவனங்களிடம் இருந்து, 50 - 60 சதவீத பாலை கொள்முதல் செய்ய மாட்டார்கள்.

இதனால், அன்று, பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பாலை, முதல் நாளே, முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்து கொள்வது நல்லது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கக் கூட்டம், மாநில தலைவர், எஸ்.பி.சொரூபன் தலைமையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மே, 5ல், தமிழகம் முழுவதும் உள்ள, 15 லட்சம் மளிகைக் கடைகளை மூடுவது எனவும், சில்லரை வணிகத்தை மீட்க வணிகர்கள் உறுதி ஏற்கும் நாளாக, வணிகர் தினம் கொண்டாடுவது எனவும், கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...