Thursday, May 3, 2018

பல்கலை அதிகாரிகள், 'சஸ்பெண்ட்'

Added : மே 03, 2018 02:47

சென்னை:தமிழக மீன்வள பல்கலையின், இரண்டு அதிகாரிகள், முறைகேடு புகாரில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீன்வள பல்கலையில், 2017ல், பதிவாளர் பொறுப்பு வகித்த, பேராசிரியர் ரத்னக்குமார் மற்றும் மீன் வள பல்கலையின், எஸ்டேட் அதிகாரி, வி.வெங்கடேசன் ஆகியோர் மீது, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், அனந்தபத்மநாபன் புகார் அளித்துள்ளார்.

புகாரில், ரத்னக்குமாரும், வெங்கடேசனும், தங்கள் பதவிக்காலத்தில், கட்டுமான பணிகளில் முறைகேடு செய்து உள்ளதாக தெரிவித்துஇருந்தார்.இந்த புகாரின் மீது, பல்கலை நிர்வாகம், நடத்திய விசாரணையில், முறைகேடுக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
எனவே, விரிவான விசாரணை நடத்தும் வகையில், தற்போது, மீன்வள பல்கலையின், மீன் பதப்படுத்தும் தொழில்நுட்ப தலைவராக உள்ள, ரத்னக் குமார் மற்றும் மாநில சுகாதார சங்கத்தில் பணியாற்றும், வெங்கடேசன் ஆகியோர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தற்போதைய பதிவாளர், சீனிவாசன் பிறப்பித்து உள்ளார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...