Thursday, May 3, 2018

கடிதம் அனுப்பும் போராட்டம்

Added : மே 03, 2018 03:01

சென்னை:மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் கோரி, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில், டாக்டர்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க பொருளாளர், பெருமாள் பிள்ளை கூறியதாவது:சுகாதாரத் துறையில், தேசிய அளவில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இதற்கு காரணமான டாக்டர்களுக்கு, சம வேலைக்கான ஊதியத்தை அரசு வழங்கவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலருக்கு, மொபைல் போனில், குறுஞ்செய்தி அனுப்பும் போராட்டம் நடத்தினோம்.

இதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழக முதல்வருக்கு, கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நேற்று நடந்த போராட்டத்தில், முதல்வருக்கு, 1,000 கடிதங்கள் அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...