Thursday, May 3, 2018

நாளை மறுநாள் பால் கிடைக்காது: முகவர்கள் நல சங்கம் அறிவிப்பு

Added : மே 03, 2018 02:22

சென்னை:'வணிகர் தினமான, மே, 5ல், பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால், முதல்நாளே பாலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்' என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் மாநில தலைவர், பொன்னுசாமி கூறியதாவது:தமிழகத்தில், மே, 5 வணிகர் தினத்தை முன்னிட்டு, வணிகர்கள் அனைவரும், தங்களின் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளனர்.இதனால், பால் முகவர்கள், அன்றைய தினம், ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து, 100 சதவீத பாலை கொள்முதல் செய்து, அவற்றை இருப்பு வைத்து, வினியோகிப்பது இயலாத காரியம்.எனவே, பால் முகவர்கள், 5ம் தேதி, பால் நிறுவனங்களிடம் இருந்து, 50 - 60 சதவீத பாலை கொள்முதல் செய்ய மாட்டார்கள்.

இதனால், அன்று, பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பாலை, முதல் நாளே, முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்து கொள்வது நல்லது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கக் கூட்டம், மாநில தலைவர், எஸ்.பி.சொரூபன் தலைமையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மே, 5ல், தமிழகம் முழுவதும் உள்ள, 15 லட்சம் மளிகைக் கடைகளை மூடுவது எனவும், சில்லரை வணிகத்தை மீட்க வணிகர்கள் உறுதி ஏற்கும் நாளாக, வணிகர் தினம் கொண்டாடுவது எனவும், கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...