Tuesday, May 8, 2018

Centre issues wrong hall ticket, aspirant lodges complaint

TIMES NEWS NETWORK

Salem: 

 
08.05.2018
Father of a NEET aspirant who was turned away from the exam centre on Sunday after her admit card was found to be fake, has lodged a police complaint against an eseva centre for issuing wrong admitcard.

Navaratnaraj,father of Jeevitha,whowas refused permission by CBSE authorities, said in the complaint that the e–seva centre had issued ‘fake’ admit card. Jeevitha from Rasipuram had one hall ticket with an exam centre allotted at Kondalampattiin Salem and another hall ticket of a centre at Kottayam in Kerala.Jeevitha went to the Salem exam centre from where she was sent away. Authorities said the exam centre number given in the hall ticket was not that of Kondlampatti centre.

Navaratnaraj told the police that he had approached the e-seva centre on Anna Salai in Rasipuram and registered for NEET. After the admit card was uploaded on the CBSE website, he visited the centre where an employee of the centre downloaded the card and gavehim.

“It had Kondalampatti as the exam centre. The next day I got a call from the person from the centre stating that they have received another card which had Kottayam as the exam centre. We were confused andhencewentto Salem centre since as it was closer,” he told reporters. He has blamed the esevacentrefor theconfusion.
NEWS DIGEST

Docs urge TN to block dates for UG med counselling  

08.05.2018

Doctors’ associations have asked the directorate of medical education to announce dates for undergraduate medical counselling. Tamil Nadu Government Doctors’ Association president K Senthil said Anna University has declared dates for engineering counselling and delay in medical counselling will only leave students more confused. State officials said that the counselling can’t be scheduled without a schedule from the Directorate General for Health Services releasing dates for all India quota. “Only when the All India quota seats are filled at least in round 1, we can start our counselling. 6Otherwise it will cause more confusion,” said director of medical education Dr A Edwin Joe. The association has also urged the government to rework offer incentives for doctors working in all government hospitals in rural areas.

Blood bank urges students to donate: The blood bank in Rajiv Gandhi Government General Hospital has urged college students to volunteer and donate blood at the bank. Last year, the bank supplied one lakh blood components in 2017, and 96,000 in 2016 free of cost. The bank also conducted around 360 blood donation camps every year. More than 39,000 people have donated blood voluntarily at the bank or in camps. The collected blood units are separated into blood components using a separator and are stored in a freezer.

Docs urge transparency in transfers: Doctors’ Association for Social Equality (DASE) has urged the government to ensure transparency in counselling for transfers of government doctors. In a statement, Dr G R Ravindranath said complaints had come up, during the ongoing counselling for transfers being held at the Directorate of Medical Services, regarding vacancies not being disclosed to participants in a proper manner. “The government should take steps to disclose all vacant posts to participants at the counselling session,” he added.

Strike threat by transport unions: A group of transport workers’ unions have threatened to go on strike again if the government does not clear their pending dues soon. The Madras high court directed the state to clear dues and increase pay scale of government transport corporation workers after the unions went on strike in January. The government is yet to release funds.

திருமலையில் நாகப்பாம்பு: பக்தர்கள் ஓட்டம்

By திருப்பதி, | Published on : 08th May 2018 12:44 AM

திருமலையில் நாகப்பாம்பைக் கண்ட பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

திருமலையில் கல்யாண மண்டபம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பக்தர்கள் தங்கள் வாடகை அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சீறிப் படமெடுத்தபடி ஒரு நாகப்பாம்பு சென்று கொண்டிருந்தது. அதை கண்ட பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான ஊழியர்கள் பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர் நாயுடுவிற்கு தகவல் அனுப்பினர். ஆனால் அவர் திருமலையில் இல்லை.

எனவே வனத்துறை ஊழியர்கள் கல்யாண மண்டபம் பகுதியில் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுத்து பாம்பைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணிநேரம் போராடி அந்தப் பாம்பைப் பிடித்து பெரிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு மூடி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். அதன்பின் அவ்வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஜூலை 15 முதல் புதுச்சேரியில் இருந்து சென்னை, சேலத்துக்கு விமான சேவை

By DIN | Published on : 08th May 2018 01:19 AM |

புதுச்சேரியில் இருந்து சென்னை, சேலத்துக்கு ஜூலை 15 -ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டு, தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.
நாட்டில் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில் புதிய விமான கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும் உதான் திட்டத்தில் சேர்ந்து, புதுச்சேரியில் இருந்து தடைபட்டிருந்த விமான சேவையை மீண்டும் தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து, கடந்த 2017 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஹைதராபாத்துக்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மீண்டும் பெங்களூருக்கு விமான சேவையைத் தொடங்க அந்த நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த பிப்ரவரி 15 -ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கியது.
இந்த நிலையில், ஏர் ஒடிஸா என்ற நிறுவனம் ஜூலை 15 -ஆம் தேதி முதல் புதுச்சேரியிலிருந்து சென்னை, சேலத்துக்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளது. பயணத்துக்கான முன்பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.55 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மீண்டும் பிற்பகல் 1.15 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் பிற்பகல் 2 மணிக்கு சென்னையை சென்றடையும்.

அதேபோல, காலை 9.10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் 10 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும் மதியம் 12.15 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் ஒரு மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பயண நேரம் 45 நிமிடங்கள்.

கட்டண விவரம்: சென்னை - புதுச்சேரி ரூ.1,940, புதுச்சேரி - சென்னை ரூ.1,470, புதுச்சேரி - சேலம் ரூ.1,550, சேலம் - புதுச்சேரி ரூ. 1,550.

துன்பியல் மகிழ்வு!


By ஆசிரியர் | Published on : 07th May 2018 02:27 AM

கடந்த ஆண்டு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான "நீட்' எனப்படும் தகுதிகாண் நுழைவுத் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து மிகப்பெரிய சர்ச்சை தமிழகத்தில் எழுந்தது என்றால், இந்த ஆண்டு, "நீட்' தேர்வு நடத்தப்படும் விதம் கடுமையான விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்திலிருந்து "நீட்' தேர்வு எழுதும் மாணவர்களில் சிலர் பிற மாநிலங்களில் அலைக்கழிக்கப்பட்ட விதம், "நீட்' தேர்வுக்கு ஆதரவு அளித்தவர்களையேகூட கோபப்படவும், எரிச்சலடையவும் வைத்திருக்கிறது.

தமிழகத்தில் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த பல மாவட்டங்களிலும்கூட மாணவ, மாணவியர் வெளிமாநிலத் தேர்வு மையங்களில் தேர்வு எழுத பணிக்கப்பட்டது ஏன் என்பது புரியவில்லை. தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த 1,07,288 மாணவர்களில் ஏறத்தாழ 5,500}க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநில தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், 1,000 கி.மீ.க்கு அப்பால் உள்ள ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களில் சிலருக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது, மாணவர்களின் மீது கொஞ்சம்கூட கருணையே இல்லாத துன்பியல் உணர்வுள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் மனப்போக்கைத்தான் வெளிப்படுத்துகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை எனத் தெரிகிறது.
தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, மாற்ற முடியாது என்று, அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. உச்சநீதிமன்றத்திற்கும் கூடவா "நீட்' தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் சிரமங்களும், மனஉளைச்சலும் தெரியவில்லை?
வெளிமாநிலங்களில் தேர்வு எழுதச் சென்றவர்கள் அங்கே அனுபவித்த பிரச்னைகளைச் சொல்லி மாளாது. போக்குவரத்துக் குறைபாடு, தங்கும் வசதி குறைபாடு, தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் செல்ல இயலாமை, மொழி தெரியாமல் பட்ட அவஸ்தை, முற்றிலும் புதிய இடம் என்பதால் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் காணப்பட்ட அச்சம், மன அழுத்தம், எல்லாவற்றிற்கும் மேலாக தொலைதூரப் பயணத்துக்கு பெற்றோருடன் சென்று வருவதற்கு நேர்ந்த செலவு என்று என்னென்னவோ பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவந்தது. இதுகுறித்தெல்லாம் நீதித்துறையோ, இந்திய மருத்துவ கவுன்சிலோ, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமோ கொஞ்சம்கூட கவலைப்படாமல் நடந்துகொண்டதை என்னதான் காரணம் கூறினாலும், நியாயப்படுத்திவிட முடியாது.

திருத்துறைப்பூண்டி அருகே பெருகவாழ்ந்தான் கிராமத்தில் நூலகராகப் பணியாற்றி வந்த 47 வயது கிருஷ்ணசாமியின் கனவு, தனது மகன் மருத்துவராக வேண்டும் என்பது. "நீட்' தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள நாலந்தா பள்ளியில் அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. மிகுந்த சிரமத்துடன் தேர்வு மையத்தைக் கண்டறிந்து, தேர்வு மையத்தில் மகனை விட்டுவிட்டு விடுதிக்குத் திரும்பிய கிருஷ்ணசாமி, அந்த மனஉளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டிருக்கிறார். தந்தை இறந்ததுகூட தெரியாமல் கஸ்தூரி மகாலிங்கம் "நீட்' தேர்வு எழுதியிருக்கிறார். இது எத்தனையோ நிகழ்வுகளில் ஒன்று மட்டுமே.

சில மையங்களில் முதலில் இந்தி, ஆங்கில மொழிகளில் வினாத்தாள்கள் தரப்பட்டு, பிறகு தாமதமாக தமிழில் வினாத்தாள் தரப்பட்டிருக்கிறது. தாங்கள் எந்தவிதமான மனஉளைச்சலுக்கும் ஆளாகவில்லை என்று அதிகாரிகள் அந்த மாணவர்களிடம் கடிதம் எழுதி வாங்கியிருக்கிறார்கள். இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது உண்மை. ஆனால், அவர்கள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, கைகளில் அணிந்திருந்த கயிறு ஆகியவற்றை அகற்றிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. மாணவிகளின் தலைமுடியை அவிழ்த்து அதிகாரிகள் சோதனைக்கு உள்படுத்தியதால், சில மாணவிகள் தலைவிரி கோலத்துடன் தேர்வு எழுதினர். அவர்களது மனஉளைச்சல் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்.
சில மையங்களில் பிராமண மாணவர்களின் பூணூல் அறுத்து எறியப்பட்டது.
தமிழகத்தில் எத்தனை எத்தனையோ பொறியியல் கல்லூரிகளில் தேர்வு மையம் அமைப்பதாகக் கூறினால் தங்களது கல்லூரியை இலவசமாகத் தரத் தயாராக இருக்கும் நிலையில், வேற்று மாநிலங்களுக்கு இங்கிருந்து மாணவர்களை அனுப்பித் தேர்வு எழுதச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருந்தது என்பது புரியவில்லை.

தகுதிகாண் தேர்வுக்காக இரவு பகலாக உழைத்துப் படித்த மாணவர்களை, தங்கள் திறமையைத் தேர்வில் வெளிப்படுத்த வசதி செய்து கொடுக்காமல் அச்சுறுத்தி, மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அத்துமீறல்களை யாரும் தட்டிக்கேட்கக்கூட முடியாது. காரணம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடனும் உத்தரவின்படியும் அவர்கள் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிகாண் தேர்வை நடத்துகிறார்கள். இவர்கள் செய்த தவறுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை சிலர் எரிக்க முற்பட்டிருக்கிறார்களே, அதற்குப் பெயர் மாணவர்கள் மீதான அக்கறையல்ல, அரசியல்! கடந்த ஆண்டும் அத்துமீறல்கள் நடந்தன. இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது.

இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?


மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
பணி புறக்கணிப்பு : டாக்டர்கள் முடிவு

Added : மே 08, 2018 00:47

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசிய, அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறியதாவது:மத்திய அரசுக்கு இணையாக, ஊதிய உயர்வு கோரியும், ஐந்தாண்டுகளாக பதவி உயர்வு வழங்காத, 500 பேராசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்கக் கோரியும் போராடி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, சுகாதாரத்துறை செயலர் உறுதி அளித்துள்ளார்.மருத்துவக் கல்லுாரிகளில், எம்.சி.ஐ., அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது, எங்கள் கோரிக்கைகளை முன் வைத்து, பணி புறக்கணிப்பு செய்வோம். இதனால், அரசு மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவக் இடங்கள் ரத்தாகும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : மே 08, 2018 02:05 | Added : மே 07, 2018 14:24 




  சென்னை : தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில், இன்று(மே 8) பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் பரவலாகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகஅளவாகக் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆகிய இடங்களில் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


'Jana Nayagan' audio launch enters the Malaysia Book of Records; Vijay's mother, Shobha's, surprise performance turned fans emotional

'Jana Nayagan' audio launch enters the Malaysia Book of Records; Vijay's mother, Shobha's, surprise performance turned fans ...