Tuesday, May 15, 2018

ஊரை காலியாக்கும் 'ஈ'; வெளியூர் பயணிக்கும் மக்கள்

Updated : மே 15, 2018 02:18 | Added : மே 15, 2018 02:10 | 



சிவகங்கை : சிவகங்கை அருகே 'ஈ'க்கு பயந்து ஊரை காலி செய்ய 8 கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

சிவகங்கை நகராட்சியில் தினமும் 21 டன் குப்பை சேகரமாகிறது. சுந்தரநடப்பு அருகே நவீன குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இக்கிடங்கை சுற்றி சுந்தரநடப்பு, துவங்கால், மணக்கரை, காட்டுநெடுங்குளம், குட்டிதின்னி, உசிலங்குளம், உடையநாதபுரம், கடுக்கா பள்ளம் ஆகிய 8 கிராமங்கள் உள்ளன.

ஐந்தாயிரம் பேர் வசிக்கின்றனர். கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் அப்படியே எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்னை, கண் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் கழிவுகளால் ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது.

அவை கிராமங்கள் முழுவதும் பரவி, வீடுகளில் மொய்க்கின்றன. தண்ணீர் பானை, உணவுப் பொருட்களில் அமர்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பலமுறை போராடியும் நடவடிக்கை இல்லாததால் ஊரைக் காலி செய்ய கிராம மக்கள் தயாராகின்றனர்.

சுந்தரநடப்பு பாண்டி கூறியதாவது: கண்மாய் வரத்துக் கால்வாயில் கிடங்கு உள்ளது. மழைக்காலங்களில் குப்பையில் உருவாகும் கழிவுநீர் கண்மாயில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்துவோம். கழிவுநீர் கலப்பால் மீன்கள் அழிந்து விட்டன. குப்பை கிடங்கை அகற்ற மே 1ல் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அனுப்பினோம். நடவடிக்கை இல்லாவிட்டால் கிராமத்தை விட்டு அனைவரும் வெளியேற உள்ளோம், என்றார்.
பிளஸ் 1 புதிய பாட புத்தகத்தில் 'நீட்' தேர்வுக்கான விடைகள்

Added : மே 15, 2018 00:59

'நீட்' தேர்வின் பல்வேறு சிக்கலான கேள்வி தொடர்பான பாடங்கள், பிளஸ் 1 புதிய பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. எனவே, புதிய பாடத் திட்ட புத்தகம், நீட் தேர்வை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 6ல் முடிந்தது. தமிழகத்தில், 1.07 லட்சம் பேர் உட்பட, நாடு முழுவதும், 13 லட்சம் பேர் பங்கேற்றனர். நீட் தேர்வு கேள்விகள், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் இருந்து எடுக்கப்படுவதாக, தொடர்ந்து குற்றச்சாட்டு நிலவுகிறது.இதனால், தமிழக பாடத் திட்ட மாணவர்களால், நீட் தேர்வில் சாதிக்க முடியவில்லை என, பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர்.

இந்நிலையை மாற்ற, சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையில், தமிழக பாடத் திட்டம் தயாரிக்கப்படுவதாக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார்.இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன், புதிய பாடத் திட்டம் வெளியிடப்பட்டது. இந்த பாடத் திட்டத்தில், சமீபத்தில் நடந்த, நீட் தேர்வின் கேள்விகளுக்கான அம்சம் இடம் பெற்றுள்ளதா என, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பாடத் திட்ட தயாரிப்பு குழுவில் உள்ள பேராசிரியர்கள், சுல்தான் இஸ்மாயில் - விலங்கியல்; ரீட்டா ஜான் - இயற்பியல்; நரசிம்மன் - தாவரவியல், பூபதி - வேதியியல் ஆகியோர், இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். நீட் தேர்வில் மாணவர்களை சிக்கலில் தவிக்க விட்ட பல கேள்விகளுக்கான விடைகள், புதிய பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.இதன்படி, வேதியியலில், 11; தாவரவியலில், 29 மற்றும் விலங்கியலில், 21 சிக்கலான கேள்விகளுக்கான விடைகள், பிளஸ் 1 பாட புத்தகத்தில் உள்ளன. மொத்தத்தில், தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1ல் இருந்து, 96 கேள்விகளும்; பிளஸ் 2வில் இருந்து, 84 கேள்விகளும், நீட் தேர்வில் இடம் பெற்றுள்ளன.

இதன்மூலம், தமிழக பாட திட்ட மாணவர்கள், நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -

கடலூர், வேலூரில் வரும் 19ம் தேதி பாஸ்போர்ட் மேளா

Added : மே 14, 2018 22:17

சென்னை: கடலுார் மற்றும் வேலுார் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், வரும், 19ம் தேதி, சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்பட உள்ளது. பணிக்குச் செல்வோரின் வேண்டுகோளை ஏற்று, விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று நடத்தப்படுகிறது.பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க விரும்புவோர், நாளை மதியம், 2:30 மணி முதல், பாஸ்போர்ட் அலுவலகத்தின், www.passportindia.gov.in என, அதிகாரபூர்வ இணையதளம் வழியாக, ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஏ.ஆர்., எனப்படும், விண்ணப்பப் பதிவு எண் பெற்று, ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, சந்திப்புக்கான முன்பதிவு நேரத்தையும் பெற வேண்டும்.
தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை

Added : மே 14, 2018 22:12

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் தேனி, அல்லிநகரம், அன்னஞ்சி, பெரியகுளம், வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது்.
முடிந்தது பரோல் :சிறைக்கு சென்றார் லாலு

Added : மே 15, 2018 02:59



ராஞ்சி: பரோல் காலம் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார் லாலு.

பீஹாரில். கால்நடை தீவன ஊழல் வழக்குகளில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத், ஜார்க்கண்ட் தலைநகர், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.லாலுவின் மூத்த மகன், தேஜ் பிரதாபுக்கும் சக எம்.எல்.ஏ. மகள் ஐஸ்வர்யா ராய்க்கும், பீஹார் தலைநகர் பாட்னாவில், திருமணம் நடந்தது. .

இதில் பங்கேற்பதற்காக, 10 நாள், 'பரோல்' வழங்கும்படி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 11-ம் தேதி மூன்று நாட்கள் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதைஅடுத்து, சிறையிலிருந்து வெளியே வந்த லாலு, பாட்னாவில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றார்.

இந்நிலையில் திருமணம் நடந்ததையடுத்து அவரது பரோல் காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து மீண்டும் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு 18–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்





தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது.

மே 15, 2018, 04:05 AM

கோவை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. இதற்கு 18–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 13 இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் உள்ளன. 14 உறுப்பு கல்லூரிகளும், 26 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2018– 2019–ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப வினியோகம் 18–ந்தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவ–மாணவிகள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். வருகிற 18–ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவ– மாணவிகள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்படும். இதை பெற்றோர்களும், மாணவ–மாணவிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், தியாகிகளின் வாரிசுகள் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 18–ந்தேதி தொடங்கி ஜூன் 20–ந்தேதி வரை நடைபெறும். மாணவ–மாணவிகளின் விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூன் 22–ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இதைத்தொடர்ந்து முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 9–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை இணையதள வழியாக நடைபெறும். மாணவ– மாணவிகள் தங்கள் அருகிலேயே உள்ள கல்லூரிகளுக்கு சென்றோ அல்லது ஸ்மார்ட் போனிலோ, இணையதளத்தை தேர்வு செய்து எந்தப் பாடப்பிரிவுக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்று முடிவு செய்து தங்களுக்கு வேண்டிய பாடப்பிரிவுகளையும், விருப்பமான கல்லூரிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 7–ந்தேதியும், தொழிற்கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16–ந்தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 மற்றும் 18–ந்தேதிகளிலும் நடக்கிறது. 2–ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி வரை நடைபெறும். கலந்தாய்வுக்காக மாணவர்களும் பெற்றோர்களும், கோவைக்கு வந்து அலைய வேண்டியதில்லை. இருந்த இடத்தில் இருந்தே தங்கள் அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் கலந்தாய்வு முறை இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு விண்ணப்ப படிவத்திலேயே 46 விருப்ப பிரிவு (ஆப்சென்ஸ்) கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் சிறந்த 5 கல்லூரிகளையும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள் ஒரு கல்லூரியை விரும்பி, அது கிடைக்காமல் போகும்போது, கிடைக்கும் கல்லூரியில் சேர்ந்து பின்னர் விரும்பிய கல்லூரியில் சேரும் ‘ஸ்லைடிங் சிஷ்டம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி ஆன்லைன் முறையில் கலந்தாய்வு, ‘ஸ்லைடிங் சிஸ்டம்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 17–ந் தேதி ஆகும். முக்கியமாக பெற்றோர்களும் மாணவர்களும் ஒன்றுக்கு இரண்டு முறை விண்ணப்பங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக வலைத்தளத்தில் www.tnau.ac.in/admission.html அனைத்து விவரங்களும் தரப்பட்டு உள்ளன. ஒரு மாத காலத்தில் பொறுமையாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கடைசிநேரத்தில் பதிவேற்றம் செய்து நெருக்கடிக்கு ஆளாக வேண்டாம்.

26 தனியார் கல்லூரிகள், 14 அரசு கல்லூரிகள் இருக்கின்றன. இதில், புதிதாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட 3 கல்லூரிகள் உள்ளன. பட்டுப்புழு வளர்ப்பு, உயிரிதொழில்நுட்பம், அக்ரி பிஸினஸ் இந்த மூன்று பாடப்பிரிவுகளும் தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. வேளாண் பொறியியலில் புட்பிராசசிங் என்பது மத்திய அரசின் வேண்டுதலுக்கு இணங்க பி.டெக் புட்டெக்னாலஜி என்றும் பி.டெக் தோட்டக்கலை என்பது பி.எஸ்சி ஹானர்ஸ் தோட்டக்கலை எனவும் மாற்றப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் மதிப்பெண் சார்ந்த இடங்கள் மட்டுமே கிடைக்கும். தனியார் கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் மதிப்பெண் அடிப்படையில் கிடைக்கும். மீதி 35 சதவீதத்தை இந்த பதிவேற்றம் செய்த விண்ணப்பங்களில் இருந்து தான் தனியார் கல்லூரிகள் வழங்கவேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் அக்கல்லூரி முதல்வரும், தாளாளரும் தான் பொறுப்பாவார்கள். தனியார் கல்லூரிகளில் இடம் வேண்டுபவர்கள் அவர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

இதுதவிர மத்திய அரசின் சார்பில் தேசிய அளவில் வேளாண் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வென்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மட்டும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இந்த தேர்வு எழுதியும் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேரலாம். ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். ஆகஸ்டு 31–ந்தேதி மாணவர் சேர்க்கை முடிவடையும்.

இந்த விவரங்கள் குறித்தும் பட்டப்படிப்புகளின் வகைகள் குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்வதற்காக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மே 21–ந்தேதி திறந்தவெளி கண்காட்சி நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது டீன் மகிமைராஜா, வேளாண் என்ஜினீயரிங் பிரிவு டீன் வரதராஜன், முதுநிலை கல்வி டீன் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தலையங்கம்

நல்ல திட்டம்; ஆனால் வட்டி போதாது





வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். அதனால்தான் அந்தக்காலங்களில் இருந்தே பெரியவர்கள் சின்னஞ்சிறு வயதில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தார்கள்.

மே 15 2018, 03:00 வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். அதனால்தான் அந்தக்காலங்களில் இருந்தே பெரியவர்கள் சின்னஞ்சிறு வயதில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தார்கள். சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும் என்பதுதான் வாழ்க்கையின் ஒரு முக்கியமான நெறியாகும். எதிர்பாராத செலவுகளுக்காகவும், முதிர் வயதிற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் பணம் வேண்டுமென்றால் சேமிப்பு இருந்தால்தான் முடியும். அந்தவகையில் எல்லோருமே வங்கி டெபாசிட்களை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார்கள். வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் நிரந்தர டெபாசிட்களில் பணம்போட்டு தேவைப்படும் நேரத்தில் அந்தப்பணத்தை எடுத்துக்கொள்வதோ? அல்லது அதிலிருந்து வரும் வட்டியில் செலவுகளை சமாளிப்பதோ? வழக்கமாக இருந்தது. ஆனால், சமீபகாலங்களாக வங்கிகளிலுள்ள பிக்சட் டெபாசிட்களின் வளர்ச்சிவிகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம், வங்கியில் டெபாசிட்களுக்கான வட்டிவிகிதம் குறைந்து கொண்டே போவதுதான். அதனால்தான் மக்களின் பார்வை வங்கி டெபாசிட்களை விட்டுவிட்டு, மியூச்சுவல்பண்டு போன்ற முதலீடுகளை நாடிச்செல்ல வைத்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மியூச்சுவல் பண்டுகளில் ரூ.7 லட்சம் கோடிகளுக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மியூச்சுவல் பண்டுகளிலும் போட்ட தொகைக்கும் மேல் அதிகதொகை கிடைக்கவும், ஒரு சில நேரங்களில் பெரியசரிவை சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், பெரும்பாலான மியூச்சுவல் பண்டுகள் பங்குமார்க்கெட்டை சார்ந்தே இருக்கும். இந்தநிலையில், வயதான காலத்திற்காக சேமித்து வைக்க விரும்புபவர்கள் அதிலும் குறிப்பாக பென்சன் இல்லாத அதாவது மத்திய–மாநில அரசு பணிகளைத் தவிர, மற்ற பணிகளில் உள்ளவர்கள் தங்கள் சேமிப்புகளை நம்பித்தான் முதிர்வயதை ஓட்ட வேண்டும். மூத்த குடிமக்களின் சேமிப்புக்கான ஒரு நல்ல திட்டத்தை 2017–ம் ஆண்டு மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. ‘பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா’ என்ற மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.7½ லட்சம் வரையில் சேமிக்கலாம். இதற்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும். ரூ.7½ லட்சம்வரை முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த ரூ.7½ லட்சம் உச்சவரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உறுதியாக கிடைக்கும். 60 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் இந்தத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்தத்திட்டத்தில் சேரவிரும்புபவர்கள் வங்கிகளிலோ, தபால் அலுவலகங்களிலோ போய் இந்த முதலீட்டை செய்து கொள்ளலாம். ஆயுள் காப்பீட்டுக்கழகம் மூலமாக இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இடையில் உடல்நலக்குறைவு போன்ற கஷ்டமான நேரங்களில் பணம் தேவைப்பட்டால் 98 சதவீத பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். இதுபோல, 3 ஆண்டுகள் கழித்து மொத்தபணத்தில் 75 சதவீதம் கடனாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்தத்திட்டம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பயனளிக்கும் திட்டம்தான். ஆனால் மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பையெல்லாம் போட்டு அன்றாட வாழ்க்கைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணம் என்பதால், இந்த 8 சதவீத வட்டியை உயர்த்தி கூடுதலாக கொடுக்கலாம். இது மூத்த குடிமக்களின் நலனில் அக்கறைக்கொண்டு அரசு எடுக்கும் கருணை நடவடிக்கையாகவே கருதப்படும். எனவே, இந்தத்திட்டத்தின்கீழ் கூடுதல் வட்டிதர அரசும், அரசியல்கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் மூத்த குடிமக்களின் மனமும் குளிரும்.

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...