Thursday, May 17, 2018

நலம், நலமறிய ஆவல் 34: சப்பாத்தி சாப்பிட்டால் அலர்ஜியா?

Published : 12 May 2018 11:50 IST


டாக்டர் கு. கணேசன்

 


எனக்கு வயது 38. வியாபாரம் செய்கிறேன். தினமும் ஒரு ஊரில் சாப்பிடுகிறேன். வெளி மாநிலங்களிலும் சுற்றுவேன். பெரும்பாலும் சப்பாத்திதான் சாப்பிடுகிறேன். சாப்பிட்டதும் வயிறு வலிக்கிறது. வாயு சேர்ந்து வயிறு உப்புகிறது. வயிற்றைக் கலக்குகிறது. மலம் சென்றுவிடுகிறது. மீண்டும் பசிக்கிறது. களைப்பாகவும் உணர்கிறேன். அல்சராக இருக்கும் என்று பல மருந்துகள் சாப்பிட்டும் பலனில்லை. என்னுடைய பிரச்சினைக்கு என்ன காரணமாக இருக்கும், டாக்டர்? நான் என்ன செய்ய வேண்டும்? என்ன சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்?

உங்களுக்கு இரைப்பையில் புண் இருப்பதோடு, உணவு ஒவ்வாமையும் இருக்க வாய்ப்புள்ளது. சப்பாத்தி சாப்பிடும்போது உங்களுக்கு இந்தப் பிரச்சினை ஏற்படுவதாக இருந்தால், குளூட்டன் ஒவ்வாமை இருக்கலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொதுவான உணவு வகைகளில் கோதுமை ஒரு முக்கியமான தானியம். இதில் ‘குளுட்டன்’ (Gluten) எனும் புரதம் இருக்கிறது. இதுதான் பலருக்கு வில்லனாகி, குடல் - செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதற்கு ‘சிலியாக் நோய்’ (Coeliac Disease) என்று பெயர். இது ஒரு தன்தடுப்பாற்றல் நோய் (Auto immune disease). வம்சாவளியாக வருவது.

நோய் ஏற்படும் விதம்

குளுட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு அது உள்ள உணவைச் சாப்பிட்டதும், உணவுப் பாதையில் உள்ள ஐஜிஏ (IgA) எதிரணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன. இவை குளுட்டனைத் தம் எதிரியாகப் பாவித்துக் குடலை விட்டு விரட்டுகின்றன. இந்தப் போரில் குடலில் உள்ள குடல் உறிஞ்சிகள் (Villi) அழிக்கப்படுகின்றன. இப்படி, ஒவ்வொரு முறையும் குளுட்டன் உள்ள உணவை உண்ணும்போதும் இந்தப் போராட்டம் நிகழ்வதால், ஒரு கட்டத்தில் இவர்களுக்குக் குடல் உறிஞ்சிகளே இல்லை என்னும் நிலை உருவாகிறது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சி ரத்தத்தில் சேர்ப்பதற்குக் குடல் உறிஞ்சிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இவர்களுக்குக் குடல் உறிஞ்சிகளே இல்லை என்றபோது, உணவுச் சத்துகள் உறிஞ்சப்படாமல் மலத்தில் வெளியேறிவிடும். இதனால், சத்துக் குறைவு நோய்களும் செரிமானப் பிரச்சினைகளும் ஏற்படும்.

என்ன பரிசோதனை?

நீங்கள் சொல்லும் நோய் அறிகுறிகளை மட்டும் பரிசீலித்து, சிலியாக் நோய் உள்ளது என்று கணிப்பது மிகவும் சிரமம். காரணம், கிரான் நோய் (Chron’s disease), குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome - IBS) போன்ற மற்ற நோய்களின் அறிகுறிகளும் இவ்வாறே இருக்கும். இதனால், மருத்துவர்களுக்கே குழப்பம் உண்டாக்கும். ரத்தத்தில் ‘ஐஜிஏ எதிரணுக்கள் பரிசோதனை’ செய்து. இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றால், சிலியாக் நோய் உள்ளதை உறுதி செய்யலாம். குடலில் ‘பயாப்சி’ எடுத்துப் பரிசோதனை செய்தும் இதை உறுதிப்படுத்தலாம்.

‘கேப்சூல் எண்டாஸ்கோப்பி’ பரிசோதனையில் குடல் உட்சுவரின் தன்மையைப் பார்த்து, இந்த நோயைச் சரியாகக் கணிக்கலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு மரபணுப் பரிசோதனைகளும் வந்துள்ளன. DQ2, DQ8 எனும் மரபணுக்கள் (Genes) ரத்தத்தில் காணப்படுபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவது தெரியவந்துள்ளது. நீங்கள் அனுபவம் நிறைந்த குடல் நல நிபுணரை நேரில் சந்தித்து, எண்டாஸ்கோப்பி மற்றும் மேற்சொன்ன பரிசோதனைகளை மேற்கொண்டு, உங்கள் பிரச்சினைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

என்ன சிகிச்சை?

உங்களுக்கு இருப்பது சிலியாக் நோய்தான் என்பது உறுதியானால், குளுட்டன் இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுவதுதான் இந்த நோய் வராமல் தடுக்கும் ஒரே வழி. காரணம், சிலியாக் நோய்க்கென்று தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. முக்கியமாக, கோதுமை, ஓட்ஸ், பார்லி உணவைத் தவிர்க்க வேண்டும். இரைப்பையில் புண் இருந்தால், அதற்கான சிகிச்சையும் உணவுமுறையில் மாற்றமும் தேவைப்படும்.

அரிசி மாவு, உருளைக்கிழங்கு மாவு, கடலை மாவு, சோயா மாவு, சோள மாவு, மக்காச்சோள மாவு, கம்பு மாவு, கேழ்வரகு மாவு, ஆரோரூட் மாவு ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் உங்களுக்குப் பாதுகாப்பான உணவு வகைகள் என்று பொதுவாகச் சொல்லலாம். பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். காரம், புளிப்பு, மசாலா, எண்ணெய் குறைந்த உணவையே சாப்பிடுங்கள்.

இந்த நோயின்போது வைட்டமின்கள், தாதுக்களின் அளவும் உடலில் குறைவதால், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை, இரும்புச் சத்து மாத்திரை, கால்சியம், வைட்டமின்-டி மாத்திரை, துத்தநாகம், ஃபோலிக் அமிலம், தாமிரம் கலந்த சத்து மாத்திரைகளை மருத்துவரை ஆலோசித்துச் சாப்பிடுவதும் பலன் தரும்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
இனிப்பு தேசம் 05: நடையை மிஞ்சிய மருந்தில்லை!

Published : 12 May 2018 11:49 IST

மருத்துவர் கு. சிவராமன்

 


‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்ற பழமொழி பழசு. ‘யானைக்கும் சுகர் வரும்’ என்பதுதான் புதுசு. வனவிலங்குகளில் நம்மைப் பிரமிக்க வைக்கிற யானைக்கும் உடற்பருமன், நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள் வர ஆரம்பித்திருப்பதால், காட்டுயிர் மருத்துவ உலகம் ரொம்பவே கவலை கொண்டிருக்கிறது. குறிப்பாக, நம் ஊரில் கோயில் யானைகளுக்குப் பொங்கலும் பழமும் கொடுத்துக் கொடுத்து அவற்றை நீரிழிவுக்குள் சிக்க வைத்துவிட்டோம்.

விலங்குக் காட்சிச் சாலையில் உள்ள யானைகள் அதிகம் நடக்காமல், நமக்குக் காட்சிப்படுத்தப்படும் பொருளாகிப் போனதாலும் அதற்கும் நீரிழிவு வர ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் யானையின் ‘லெப்டின் ஹார்மோன்’, அது சுரக்கும் இன்சுலின் அளவு, அதன் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு போன்றவற்றைக் கணக்கிட்டு, ‘கொஞ்சம் யானையை நடக்க விடுங்கப்பா’ எனக் கால்நடை மருத்துவர்களின் குரல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

தன் இரைக்காக சாதாரணமாக 7-15 கி.மீ. தினசரி நடந்த யானை, எப்படிக் கோயில் வாசலிலும் வனவிலங்குக் காட்சிச் சாலையிலும் ‘தேமே’ என நிற்க வைக்கப்பட்டதால் அதற்குத் தொப்பையும் சுகரும் தொற்றிக்கொண்டதோ அதே சிக்கல்தான் மனிதனுக்கும். மோதகப் பிரியர் காட்டில் இருந்தாலும் சரி, நாட்டில் இருந்தாலும் சரி நடந்தாக வேண்டும்.

நடையே முதல் மருந்து

வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களும் கைபேசி ‘ஆப்’பில் வந்ததுவிட்டன. இதனால் நடை மிகவும் அந்நியப்பட்டுப்போனது. இன்றைக்கு நகர்ப்புறங்களில், மிகப் பெரிய அளவில் நீரிழிவு நோய் அதிகரித்தமைக்கு இதுதான் முக்கியக் காரணம்.

நீரிழிவை வராது தடுக்க வேண்டும் என்றாலும் சரி, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றாலும் சரி அல்லது நீரிழிவால் வேறு உறுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றாலும் சரி, மிக மிக முக்கியமான பயிற்சி நடைப்பயிற்சி மட்டுமே. நடைக்கு மாற்றாக உலகில் எந்த மருந்தும் இல்லை.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த இரண்டு முதியவர்கள், நீரிழிவு நோயாளிகளிடம் நான் அடிக்கடி உதாரணம் காட்டும் நபர்கள். இருவரும் வெகு சமீபத்தில் தம் 92 - 93 வயதில் இயற்கை மரணமடைந்தார்கள். இருவரும் 45 - 50 ஆண்டுகளாக நீரிழிவு நோயைக் கொண்டிருந்தவர்கள். அவரவர் குடும்ப மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை மட்டும் எடுத்து வந்ததோடு, தினசரி 4 - 7 கி.மீ. அவர்கள் இருவரும் நடந்தார்கள். அந்த நடைப்பயிற்சியை இறுதிவரை அவர்கள் நிறுத்தவில்லை. அவர்கள் வாழ்க்கையை நலமாக நகர்த்த உதவியது நடைப்பயிற்சி மட்டும்தான் என்பதில் துளியும் ஐயமில்லை.

வியர்வையைக் கவனியுங்கள்!

தினசரி 4 - 5 கி.மீ. நடை, மிகச் சிறப்பு. காலையோ மாலையோ நடக்கலாம். நீரிழிவு நோயாளிகள் மாலையில் நடக்க நினைத்தால், சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் ஆகியிருப்பது நலம். காலையிலும் சிறிய கோப்பைத் தேநீர் எடுத்துவிட்டு அல்லது சற்று ஆற்றல் தரும்படியான சிறு துண்டு கொய்யாவோ சர்க்கரை - மைதா சேர்க்காத தானிய பிஸ்கட்டோ சாப்பிட்டுவிட்டு 20 மணித்துளிக்குப் பின்னர் நடைப்பயிற்சிக்குப் போகலாம்.

காலுறை, காலில் காய்ப்பு ஏற்படுத்தாத காலணி அவசியம். உள்பக்கம் மென்மையாக உள்ள காலணி அணிய வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்குக் கால் பாதங்களைப் பாதுகாப்பது அவசியம் என்பதால் வெறும் காலில் நடைப்பயிற்சிக்குப் போவதைத் தவிர்க்கலாம்.

நடக்கும் 20 மணித்துளிகளுக்கு ஒருமுறை அரைக் கோப்பை நீர் அருந்துவது நலம். உடலில் நீர் குறையாமலிருப்பது நீரிழிவு நோய்க்கு நல்லது. நிறைய வியர்க்கும்பட்சத்தில் ஒரு விஷயத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். வியர்வை சாதாரண நடை வியர்வையா நீரிழிவால், ‘லோ சுகர்’ (தாழ் சர்க்கரை) காரணமாக வரும் வியர்வையா என்பதை உணர வேண்டும். தாழ் சர்க்கரை வியர்வையில், கூடவே மனக்குழப்பம், கிறுகிறுப்பு, வெலவெலப்பு ஏற்படும். இன்சுலின் போடுபவர்கள், ‘இது தாழ் சர்க்கரை நோய் வியர்வையா?’ என்பதை அறியாமலிருக்கக் கூடாது.

நடை என்பது தவம்

ஓட்டத்தைவிட, நடை கூடுதல் பயனளிப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதற்காகச் சாலையில் ‘விண்டோ ஷாப்பிங்’ செய்வது மாதிரியான அன்ன நடை வேண்டாம். கைகளை வீசி நடப்பது நல்லது. சென்னைப் பூங்காக்களில் 8 போட்டு நடப்பது தற்போது பிரபலம். ‘யோகிகள், சித்தர்கள் அப்படி நடந்தார்கள்’ என இதைப் பற்றி பேச்சு உண்டு. எப்படியோ, நடந்தால் சரி.

பங்குச் சந்தை வீழ்ச்சி, சனிப் பெயர்ச்சி, மருமகள் செய்யும் அழிச்சாட்டியம், ‘அரசாங்கம் அப்படீன்னு ஒண்ணு இருக்கா என்ன?’ என்பது போன்ற பல விவாதங்களோடு, கும்பலாய் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். நடை ஒருவித தவம். மனதுக்கினிய பாடல்களைச் சில மணித்துளிகள் கேட்பதும், மனத்தின் எண்ணங்களை ஆகாயத்தில் பரவலாக்கும் விதமாக நினைவுகளைக் கொட்டித் தனியே நடப்பதும்தான் நடைப்பயிற்சியில் கூடுதல் பலனைத் தரும். நடைப்பயிற்சி கோபத்தைக் குறைக்கும். மூளையின் உடனடி துல்லிய செயல்திறனைக் கூட்டும்.

நடையில் நுண்ணிய புற ரத்த நாளங்களுக்கு ரத்தம் பீய்ச்சப்படுவதால், ‘மைக்ரோ வாஸ்குலர்’ பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அதனால் ரத்தச் சர்க்கரை கட்டுப்படுவதோடு கண்கள், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் வெகுவாகப் பாதுகாக்கப்படுகின்றன.

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : 17 May 2018 07:23 IST

சென்னை
 


மாணவிகளிடம் தவறாகப் பேசியதாக கைதான பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

மாணவிகளிடம் தவறாக பாலியல் ரீதியாக பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் அமைத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவும் தனது விசாரணையை முடித்து அறிக்கையை ஆளுநரிடம் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை, நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ நிர்மலா தேவி மீது ஆள்கடத்தல் பிரிவில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிக்கிய முக்கிய நபர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. ஒரே சம்பவத்துக்காக பல விசாரணை நடத்தினால் அதன்மூலம் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க நேரிடும். எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘ஒரு சம்பவம் தொடர்பாக ஒரு அமைப்பு விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதில் நீதிமன்றம் தேவையின்றி தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. விசாரணை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சூழலில் அந்த விசாரணை சரியில்லை என எப்படி கூறமுடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இப்போதைக்கு சிபிஐ விசாரணை தேவையில்லை” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரி ஏற்கெனவே கணேசன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கில் வேண்டுமென்றால் மனுதாரர் தன்னையும் இணைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.
நீட் தேர்வு.. மறக்கப்படும் மறுபக்க நிஜங்கள்!

Published : 07 May 2018 08:05 IST

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

 

ஒருவழியாக, நீட் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. ஏராளமான குளறுபடிகள், சச்சரவுகள், ஒரு தந்தையின் சோக மரணம்.. எல்லாமாகச் சேர்ந்து தமிழகத்தில், நீட் தேர்வை ஒரு போர்க்களமாகவே மாற்றிவிட்டது.

நீட் தேர்வுக்கான எதிர்ப்பில் இருக்கிற நியாயங்களை மறுப்பதற்கு இல்லை. தேர்வு மைய ஒதுக்கீட்டிலும், இத்தனை கடுமையான அணுகுமுறையை மத்திய கல்வி வாரியம் எடுத்திருக்க வேண்டியது இல்லை. வாரியம், உண்மையான அக்கறையுடன் விரைந்து செயல்பட்டிருந்தால், ஆர்வத்துடன் தேர்வு எழுத வந்த பல நூறு மாணவர்களின், அவர்களது பெற்றோரின் பாராட்டுகள் கிடைத்திருக்கும்.

நீட் தேர்வு பற்றிய வாரியத்தின் தகவல் அறிக்கை, பக்கம் 2, முக்கிய குறிப்புகளின்கீழ், 6-வது அம்சம் மற்றும் 4-வது பிரிவு ‘நுழைவுத் தேர்வுக்கான நகர மையங்கள்’ என்ற தலைப்பின் கீழ், 4(a) முதல் 4(h) வரை விரிவாகச் சொல்கிறது: ‘‘தேர்வு மைய ஒதுக்கீடு, கணினி மூலம் செய்யப்படுகிறது. இதில் மனிதக் குறுக்கீடு இல்லை. எந்தச் சூழ்நிலையிலும், வாரியத்தால் தேர்வு மையம் மாற்றப்பட மாட்டது.’’

இத்தனை எதிர்ப்புகளைத் தாண்டி தேர்வு நடத்துபவர்கள், குளறுபடிகள் இல்லாமல் அதைச் செய்ய வேண்டும் என்ற அக்கறையை ஏன் காட்டவில்லை? தன் பக்கத்து வாதத்தை மட்டுமே சொல்லி, தேர்வு வாரியம் தப்பித்துக்கொள்ளக் கூடாது.

இப்பிரச்சினையின் மறுபக்கத்துக்கு வருவோம்.

தமிழகத்துக்கு உள்ளேயே தேர்வு மையம் வேண்டும் என்கிற கோரிக்கை மிகவும் நியாயமானது. இப்போதும்கூட1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்தில்தான் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு வாரியத்தின் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால், சுமார் 5,000 மாணவ, மாணவிகள் வெளி மாநிலத்தில் தேர்வு எழுத நேர்ந்திருக்கிறது.

அதேசமயம், ‘எல்லாமே போயிற்று.. எப்படிப் போவது..? எங்கே தங்குவது..? எவ்வளவு செலவாகும்..?’ என்று சிலர் (மாணவர்கள், பெற்றோர் அல்ல) எழுப்புகிற கேள்விகளில், இதை அரசியலாக்கும் நோக்கம் உள்ள அளவுக்கு, உண்மையான அக்கறை இல்லை என்றே தோன்றுகிறது.

ரயில்வே போர்டு வேலைக்கு போட்டித் தேர்வு நடக்கிற நாட்களில் யாரேனும், தேர்வு மையங்களுக்கு சென்று பார்த்தால் ஓர் உண்மை பளிச்சென்று தெரியும். ஒவ்வொரு மைய வாசலிலும் எத்தனை எத்தனை வட இந்திய இளைஞர்கள், இளம் பெண்கள்?

ரயிலில் முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு பெட்டியில் 2 நாட்கள் பயணம் செய்து, தேர்வுக்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே சென்னைக்கு வந்து, நடைபாதைகளில் உட்கார்ந்து, உண்டு, உறங்கி தேர்வு எழுதுகிறார்கள்.

நம் மாணவர்களும் இப்படி அவதிப்பட வேண்டும் என்பதல்ல இதைச் சொல்லும் நோக்கம். தேர்வு வேறு மாநிலத்தில்தான் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்ட பிறகு, வேறு வழியில்லாமல், அதற்கேற்ப திட்டமிட்டுத்தான் பெரும்பாலான மாணவர்களும், பெற்றோரும் கிளம்பிச் சென்றனர். ஆனால், அவர்கள் சார்பாகப் பேசுவதாகச் சொல்லும் சிலர், பரீட்சைக்கான இந்தப் பயணத்தை பயங்கரமான சித்ரவதையாகச் சித்தரிப்பது எதில் போய் முடியும்?

லட்சியக் கனவோடு இன்னும் பல சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மாணவர்களின் தன்னம்பிக்கையை அல்லவா குலைக்கும்!

உலகின் எந்த மூலைக்கும் சென்று, எந்தப் போட்டியானாலும் வென்று, சதியானாலும் ஜெயித்து, சாதனை படைத்தவர்களாகத்தான் தமிழ் இளைஞர்கள் இருந்து இருக்கிறார்கள்.

இன்றைக்கும் வட இந்தியாவில் பரவலாக சொல்லப்படுவது: ‘மதராஸிகளைப் போல இருக்க வேண்டும். எங்கே போனாலும் சூழலுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, வெற்றி பெறுகிறார்கள்.’

இதுதான் நமது வலிமை.

30 ஆண்டுகளுக்கு முன்பே, கல்லூரியில் படிக்கும்போது, மத்திய அரசுப் பணிக்காக இங்கிருந்து டெல்லி சென்று தேர்வு எழுதியவர்கள் உண்டு. (நானும் அப்படி எழுதியவன்). இன்று டெல்லியிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் புகழ்வாய்ந்த பதவிகளில் இருக்கிற, தமிழகத்தைச் சேர்ந்த பல நூறு அதிகாரிகள், அப்படி வ(ளர்)ந்தவர்கள்தான். டெல்லியில் கொடி நாட்டிய இந்தத் தமிழ் அதிகாரிகளால் தமிழகத்துக்கு விளைந்த நன்மைகள் ஏராளம்.

அடுத்த கேள்வி.. வெளி மாநிலங்களுக்குச் சென்றால், தமிழில் வினாத்தாள் கிடைக்குமா..?

‘கேள்வித்தாள்களின் மொழி’ என்ற தலைப்பில், 5-வது அம்சம் சொல்கிறது: ‘மண்டல மொழி தேர்ந்தெடுத்த தேர்வர்களுக்கு வினாத்தாள், மண்டல மொழி மற்றும் ஆங்கிலத்தில், இரு மொழித் தாளாக இருக்கும்.’

அதாவது, தேர்வர்களின் விருப்பத்தைப் பொறுத்துதான், கேள்வித்தாளின் மொழியே தவிர, தேர்வு மையங்களின் அடிப்படையில் அல்ல. இந்தியாவில் எங்கு எழுதினாலும், தேர்வர்கள் விரும்புகிற மொழியில் வினாத்தாள் கிடைக்கும்.

இனி, தேர்வு மையக் கட்டுப்பாடுகள்..

தகவல் அறிக்கை, அத்தியாயம் - 5, தேர்வு மையக் கட்டுப்பாடுகள் குறித்து, ‘பொது’ என்கிற தலைப்பின்கீழ், 5(a) முதல் 5(r) வரை விளக்குகிறது.

5 (a): தேர்வு மையம் 2மணி 30 நிமிடங்களுக்கு முன்பு திறக்கப்படும். காலை 9.30-க்கு பிறகு, தேர்வு அரங்கத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். போக்குவரத்து இடையூறுகள், தேர்வு மைய (புது) இடம், தட்பவெப்ப நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மையம் திறக்கும்போதே (அதாவது, இரண்டரை மணி நேரம் முன்னதாகவே), தேர்வர்கள் வரவேண்டும் என்று ‘எதிர்பார்க்கப்படுகிறது’. இது கட்டாயம் இல்லை.

5 (b): முறையான அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள், அரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

5 (f): அனுமதிச் சீட்டு, புகைப்படம் தவிர்த்து, வேறு எந்தப் பொருளும் அரங்கத்துள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாது.

5 (g): தடை செய்யப்பட்ட எந்தப் பொருளையும் உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாது.

தடை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன? அத்தியாயம்-11 பட்டியல் இடுகிறது. அதன் விவரம்:

பேப்பர், ஜியாமெட்ரி பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், பேனா, ஸ்கேல், அழிப்பான் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள். செல்போன் உள்ளிட்ட தகவல் சாதனங்கள். வாலெட், கைப்பை, தொப்பி, பெல்ட் உள்ளிட்டவை. மோதிரம், காதணி, மூக்குத்தி, செயின், நெக்லஸ், பெண்டன்ட், பாட்ஜ் உள்ளிட்டவை. கைக்கடிகாரம், பிரேஸ்லெட், கேமரா உள்ளிட்டவை. உலோகப் பொருள் எதுவும். தின்பண்டம் - தண்ணீர் பாட்டில் உட்பட. தகவல் சாதனத்தை மறைத்து எடுத்துச் செல்ல ஏதுவாகிற எதுவும். இவை அனைத்தும் தடை செய்யப்பட்ட பொருட்கள்.

உடைக் கட்டுப்பாடு

பெரிய அளவு பட்டன் இல்லாத இலகுவான உடை அணியலாம். பூக்கள், பாட்ஜ் ஆகியன கூடாது. ஹீல்ஸ் வைக்காத சாண்டல் செருப்புகள், ஸ்லிப்பர் அணியலாம். ஷூ அணியத் தடை. பாரம்பரிய உடை அணிந்து வருவதானால், குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மையத்துக்கு வரவேண்டும்.

நன்றாகக் கருத்தில் கொள்ள வேண்டியது - ‘பாரம்பரிய உடை’ தடை செய்யப்படவில்லை. அவ்வாறு வருவோர், சற்று முன்னதாகவே வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.

இதேபோன்று, பெற்றோர் / காப்பாளருக்கு அறிவுறுத்தல்கள் என்று தனியாகவும் கட்டுப்பாடுகள் பற்றி அத்தியாயம்-10 விரிவாகச் சொல்கிறது. எல்லாம் எதற்காக? தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துவிட்ட இந்த நாளில், ‘மைக்ரோ’ அளவிலான சாதனங்களைத் தேர்வு மையத்துக்குள் கொண்டுசென்று, அதன் மூலம் வெளியில் இருந்து விடைகளை வாங்கி, குறுக்குவழியில் யாரும் தேர்வாகிவிடக் கூடாது என்று! அதாவது, பாடுபட்டுப் படித்துவிட்டுவரும் திறமையுள்ள மாணவர்கள் மட்டுமே இதில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக! உழைப்பிலும், திறமையிலும் சிறந்து நிற்கும் நம் மாணவர்களுக்கு எதிரான கெடுபிடிகள் போலவா இதைச் சித்தரிப்பது?

தமிழகத்துக்கு நீட் கூடாது என்றால், அதைப் போராடித் தடுத்திருக்க வேண்டியவர்கள் அரசியல் தலைவர்கள். அது முடியாது என்றாகிப் போன நிலையில், நம் மாணவர்கள் எதிர்காலத்தின் சிறந்த மருத்துவர்களாக வருவதற்கு ஏற்ப ஆக்கமும், ஊக்கமும் கொடுத்திருக்க வேண்டும்.

உயர்கல்வி பயில வரும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையைக் கூட்டவேண்டிய சமுதாயக் கடமை எல்லாருக்கும் இருக்கிறது.

‘‘என் பொண்ணு, கையில கழுத்துல ஒண்ணும் இல்லாம மூளியா பரிட்சை எழுதப் போறா.. இதுக்காகவா நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சோம்..?’’ என்று கூறுகிறார் ஒரு தாய். இதையும் ஒரு ஊடகம் ஒளிபரப்பியது. மருத்துவராக வர வேண்டியவரை, வெறும் நகைக் கடை பொம்மையாக பார்க்க வேண்டும் என்று நினைப்பது யாருடைய தவறு?

கொள்கை ரீதியாக எதிர்ப்பது வேறு. அதைப் புரிந்துகொள்ள முடிகிறது; ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், நம் இளைஞர்களை, ஆரோக்கியமான பாதையில் போகவிடாமல் தடுப்பது சரிதானா?

அரசியல் கருத்தாகப் பார்க்காமல் சமுதாய நோக்கில் மட்டுமே பார்த்து தீர்வு காண வேண்டியது அவசியம் அல்லவா? நாம் சாதிப்பதற்கு நிறைய இருக்கிறது. சிந்திக்கத்தான் வாய்ப்பு தராமல் அரசியல் தடுக்கிறது. அதையும் மீறி சிந்திப்போம்!

‘ஜூன் 7-ம் தேதி ‘காலா’ ரிலீஸாவது உறுதி; வதந்திகளை நம்ப வேண்டாம்’ - தயாரிப்பு நிறுவனம்

Published : 16 May 2018 19:28 IST

 

ஜூன் 7-ம் தேதி ‘காலா’ படம் ரிலீஸாவது உறுதி என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இதன் இசை வெளியீட்டு விழா கடந்த 7-ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், மணிகண்டன், அஞ்சலி பாட்டீல், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

‘காலா’, ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் எனத் தகவல் பரவியது.



அதாவது, ‘ஜுராஸிக் பார்க்’ ஹாலிவுட் படத்தின் அடுத்த பாகமான ‘ஜுராஸிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்’ ஜூன் 8-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாவதாகவும், இந்தியாவிலும் நிறைய திரையரங்குகளில் வெளியாவதால் ‘காலா’ படத்துக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப் போகிறது என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது, ‘எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். திட்டமிட்டபடி ஜூன் 7-ம் தேதி ‘காலா’ ரிலீஸாவது உறுதி. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன’ என்று பதில் அளித்துள்ளனர். ‘ஜுராஸிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்’ ஜூன் 22-ம் தேதி தான் ரிலீஸாகிறது. அப்படியிருக்கும்போது யார் இந்த வதந்தியைக் கிளப்பிவிட்டது என விசாரித்து வருகின்றனர்.
தவறான சிகிச்சையால் பாதிப்பு : இழப்பீடு வழங்க உத்தரவு

Added : மே 17, 2018 06:15

சென்னை: தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம், 1.90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர், ரேணுகா, 45. உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மேற்கு தாம்பரத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார்.

மன உளைச்சல் ; டாக்டர் பரிசோதனை செய்த போது, கர்ப்ப பையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை பின், அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது.சோதனை செய்த போது, சிகிச்சையின் போது, சிறுநீரக குழாய் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, சரி செய்யப்பட்டது. இதற்கு, 80 ஆயிரம் ரூபாய் செலவானது. தவறான சிகிச்சையால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானேன். மருத்துவச் செலவுடன், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என, செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில், ரேணுகா, 2013ல் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணையில், 'பிரபல அறுவை சிகிச்சை நிபுணரால், சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில், தவறேதும் நடக்கவில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இழப்பீடு : இந்த வழக்கு விசாரணையில், நீதிபதி கலியமூர்த்தி, நீதித் துறை உறுப்பினர்கள் பிரமிளா, பாபு வரதராஜன் பிறப்பித்த உத்தரவு:மருத்துவமனை நிர்வாகம் உரிய சேவை வழங்கவில்லை. மருத்துவச் செலவு தொகை, 80 ஆயிரம் ரூபாயுடன், இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 1.90 லட்சம் ரூபாய், மருத்துவமனை நிர்வாகம், மனுதாரருக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
மது கடைகளை மூட வலியுறுத்தி மரணித்த மாணவர் சாதனை

Added : மே 17, 2018 02:16




திருநெல்வேலி: தமிழகத்தில், மதுக்கடைகளை ஒழிக்க வேண்டி, துாக்கிட்டு தற்கொலை செய்த மாணவர், பிளஸ் 2 தேர்வில், 1,024 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கே. ரெட்டிபட்டியைச் சேர்ந்த மாணவர் தினேஷ் நல்லசிவன். மது பழக்கத்திற்கு அடிமையான, தன் தந்தையின் செயல்பாட்டை நினைத்து, கடந்த சில தினங்களுக்கு முன், திருநெல்வேலி ரயில்வே பாலத்தின் கீழ், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'என் தந்தை போன்றவர்கள், மதுவிற்கு அடிமையாகி குடும்பத்தை நிர்கதியாக்கி வருகின்றனர். 'எனவே, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட, அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை மூடுவேன்' என்று தெரிவித்து இருந்தார்.மாணவர் தினேஷ், நாமக்கல் தனியார் பள்ளி யில், பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு, மருத்துவர் ஆகும் கனவில், 'நீட்' தேர்விற்கும் விண்ணப்பித்திருந்தார். நீட் தேர்விற்கு இரண்டு தினங்களுக்கு முன், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று வெளியான, பிளஸ் 2 தேர்வில் தினேஷ், 1,024 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.தமிழ் - 194, ஆங்கிலம் - 148, இயற்பியல் - 186, வேதியியல் - 173, உயிரியல் - 129, கணக்கு - 194 என, மொத்தம், 1024 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.'மதிப்பெண் வாங்கி என்ன பயன்... அவன் உயிரோடு இல்லையே' என்று அவரது உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...