Sunday, May 20, 2018

திருமலையில் பக்தர்கள் கூட்டம்

Added : மே 20, 2018 01:11

திருப்பதி: திருமலையில், வார விடுமுறையை ஒட்டி, பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க குவித்துள்ளனர். ஆந்திராவின், திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலில், கோடை விடுமுறை மற்றும் பள்ளி இறுதி தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, ஏழுமலையானிடம் வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள், அதை நிறைவேற்ற, திருமலையில் குவிந்து வருகின்றனர்.அதனால், பக்தர்களுக்கு, 26 மணி நேரத்திற்கு பின், தரிசன நேரம் ஒதுக்கப்படுகிறது. காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்களும், 26 மணிநேரத்திற்கு பின், ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர்; எனவே, திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.பக்தர்களின் வருகைக்கு தக்கபடி, தேவஸ்தானமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ளது.
'ஜாக்பாட்!,'கர்நாடகாவில்,37,இடம்,பிடித்த,குமாரசாமி முதல்வராகிறார்
புதுடில்லி:கர்நாடகாவில், மூன்றாவது முறையாக, முதல்வராக பதவியேற்ற, பா.ஜ.,வின் எடியூரப்பா, 75, பெரும்பான்மையை நிரூபிக்க, 112 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கிடைக்காததால், மூன்றாம் நாளான நேற்று, அந்த பதவியில் இருந்து விலகினார். தேர்தலில், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தபோதும், பா.ஜ.,வுக்கு அதிர்ஷ்டம் இல்லாததால், வெறும், 37 இடங்களை பெற்ற, ம.ஜ.த.,வின், குமாரசாமி, காங்., ஆதரவுடன், முதல்வராக, ௨௩ம் தேதி பதவியேற்கிறார். 'இந்த கூட்டணி ஆட்சி நீடிக்குமா' என, அரசியல் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.




கர்நாடகாவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு நடந்த, 222 தொகுதிகளில், 104ல், பா.ஜ., வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், 78 இடங்களிலும், குமாரசாமியின், மதச்சார்பற்ற ஜனதா தளம், 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிற கட்சிகள், மூன்று இடங்களை கைப்பற்றின.எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்தது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், ஆட்சி அமைக்க, பா.ஜ., உரிமை கோரியது.

தேர்தலுக்கு முன், தனித்தனியே போட்டியிட்ட, காங்., - ம.ஜ.த., கட்சிகள், தேர்தல் முடிவுகளுக்குப் பின், கூட்டணி அமைத்து, ம.ஜ.த., தலைவர், குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரின.பா.ஜ.,வைச் சேர்ந்த, எடியூரப்பாவை ஆட்சி அமைக்கும் படி, கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த, காங்., - ம.ஜ.த., தலைவர்கள், எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மறுத்தது

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், கர்நாடக முதல்வராக, எடியூரப்பா பதவியேற்றார்.இதைத் தொடர்ந்து, கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி அமைவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, நேற்று முன் தினம், உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி, ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.


இருதரப்பு வாதங்களுக்கு பின், 'கர்நாடக சட்டசபையில், முதல்வர் எடியூரப்பா, 19ம் தேதி மாலை, 4 மணிக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.கர்நாடக சட்டசபையில், நேற்று காலை முதல், முதல்வர் எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பான அலுவல்கள் நடந்தன.


சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த, காங்., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், பலத்த பாதுகாப்புடன், சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டனர்.இதற்கிடையே, தற்காலிக



சபாநாயகராக, பா.ஜ.,வின் போப்பையா நியமிக்கப்பட்டதை எதிர்த்த, காங்கிரசின் மனு, உச்ச நீதிமன்றத்தில், நேற்று காலை தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்ட அனைத்து, எம்.எல்.ஏ.,க்களுக்கும், தற்காலிக சபாநாயகர் போப்பையா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.




அக்னி போராட்டம்



சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், எடியூரப்பா உரையாற்றினார். அப்போது அவர் கூறிய தாவது:துவக்க காலத்தில், கர்நாடகாவில், பா.ஜ.,வுக்கு, இரண்டு, எம்.எல்.ஏ.,க்களே இருந்தனர். தற்போது, 104 உறுப்பினர் பலம் உள்ள கட்சியாக உருவெடுத்துள்ளது; இதற்காக கடுமையாக உழைத்தேன்.ஏழைகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களுடன் தங்கினேன். என் வாழ்க்கை முழுவதும், அக்னி போராட்டத்தை சந்தித்தேன். என் கடைசி மூச்சுள்ள வரை, ஏழைகளுக்காக உழைப்பேன்.


விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்துள்ளேன். நிலம் வழங்கி, அவர்களின் கண்ணீரை துடைத் தேன். முதல்வர் பதவியில் தொடர்ந்தால், விவசாயிகள் கடனை, தலா, 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி செய்ய விரும்பினேன். ஆனால், இன்று, நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்கொள்ளப் போவதில்லை. மாறாக, முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போகிறேன். கவர்னர் மாளிகை சென்று, ராஜினாமாகடிதத்தை சமர்ப்பிப்பேன். இவ்வாறு அவர்கூறினார்.


பேச்சின் இடையே, ''கர்நாடக மாநில மக்களுக்காக கடைசி வரை உழைப்பேன்,'' என கூறியபோது, திரண்டு வந்த கண்ணீரை அடக்க முடியாமல், எடியூரப்பா தவித்தார்.சிறிது இடைவெளிக்கு பின், சிரமப்பட்டு, மீண்டும் பேசத் துவங்கிய அவர், ''அடுத்த சட்டசபைத் தேர்தலில்,156 இடங்களை, பா.ஜ., கைப்பற்றும்; அதற்காக கடுமையாக உழைப்பேன்,''என்றார்.


எடியூரப்பா, எட்டு முறை, எம்.எல்.ஏ.,வாகவும், இரண்டு முறை, எம்.பி.,யாகவும் பணியாற்றி உள்ளார். 2007ல், நவ., 12ல், எடியூரப்பா, முதல்வர் பதவியை ஏற்றபோது, ஏழு நாட்களில், அவருக்கு அளித்து வந்த ஆதரவை, ம.ஜ.த., விலக்கியதால், ஆட்சி கவிழ்ந்தது. இரண்டாம் முறையாக, 2008ல், கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி அமைத்தபோது, முதல்வராக, எடியூரப்பா பதவியேற்றார்.மூன்று ஆண்டுகள் ஆட்சிக்கு பின், சுரங்க ஊழலில், லோக் ஆயுக்தா குற்றஞ்சாட்டியதை அடுத்து, பதவி விலகினார்.




23ம் தேதி



தற்போது, மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்ற எடியூரப்பா, மூன்றாம் நாளே, பதவி விலகியுள்ளார்.இதனால், 37 இடங்களை மட்டுமே பெற்ற, ம.ஜ.த., தலைவர், குமாரசாமி, 78 எம்.எல்.ஏ.,க்கள் பலம் உடைய, காங்., ஆதரவுடன், வரும், 23ம் தேதி, முதல்வராக பதவியேற்கிறார்.


ஏற்கனவே, 2006ல், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, முதல்வர் பதவியை ஏற்றவர், குமாரசாமி. ஒப்பந்தப்படி, இரண்டு ஆண்டு ஆட்சிக்கு பின், பா.ஜ.,விடம், ஆட்சியை



Advertisement

ஒப்படைக்காமல், காலை வாரிவிட்டார்.'இந்த பின்னணி உடைய குமாரசாமியுடன், காங்., அமைத்துள்ள கூட்டணி, நீண்ட நாள் நீடிக்காது' என, அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




நேரடி ஒளிபரப்புக்கு
சுப்ரீம் கோர்ட் உத்தரவு



பா.ஜ.,வைச் சேர்ந்த போப்பையா, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:


கர்நாடக மாநில சட்டசபையில், முதல்வர் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நிகழ்வுகள் அனைத்தும், நாடு முழுதும், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். சபாநாயகர் குறித்த, காங்., உள்ளிட்ட கட்சிகளின் கவலையை, இந்த நடவடிக்கை போக்கும்.


சட்டசபை செயலர், சபை நடவடிக்கைகளை நேரடியாக பதிவு செய்வார். இந்த பதிவுகள், அனைத்து, 'டிவி' சேனல்களுக்கும், உடன் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, தற்காலிக சபாநாயகராக, போப்பையா நியமிக் கப்பட்டதை எதிர்த்து, காங்., தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள்தள்ளுபடி செய்தனர்.



'ஆடியோ'வால் பரபரப்பு

கர்நாடக சட்டசபையில், எடியூரப்பா, உரையாற்றுவதற்கு சில மணி நேரம் முன், இரண்டு 'ஆடியோ'க்களை, காங்., வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது.அவற்றில் ஒன்றில், எடியூரப்பாவும், மற்றொன்றில், பா.ஜ., தலைவர்கள், ஸ்ரீராமுலு, முரளிதர ராவ் ஆகியோரும், காங்.,கைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ.,வுக்கு இழுக்கும் நோக்கில், தொலைபேசியில் வலை விரித்ததாக, காங்கிரசார் குற்றஞ்சாட்டினர்.

மற்றொரு ஆடியோவில், 'கொச்சிக்கு செல்லாதீர்கள்; திரும்பி வாருங்கள்; உங்களை அமைச்சர் ஆக்குகிறோம்; நீங்கள் விரும்பிய எதையும் அளிக்க தயாராக உள்ளோம்' என, காங்., - எம்.எல்.ஏ.,வான, பி.சி.பாட்டீலிடம், எடியூரப்பா கூறுவதாக, காங்கிரசார் புகார் கூறியுள்ளனர்.

குமாரசாமிக்கு 15 நாள் அவகாசம்!

கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்த பின், ம.ஜ.த.,வின் குமாரசாமி, செய்தியாளர்களிடம் நேற்றிரவு கூறியதாவது:ஆட்சி அமைக்கும்படி, கவர்னர் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மை நிரூபிப்பதற்கு, 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார்; அதற்கு முன்ன தாகவே பெரும்பான்மையை நிரூபிப்போம். ௨௩ம் தேதி, பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது.

ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, ஐந்தாண்டு நீடிக்கும் வகையில், ஒருங் கிணைப்பு குழு அமைப்போம். பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு, பல்வேறு மாநில கட்சி தலைவர் கள் வருவதாக உறுதி அளித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


பிரதமர் மீது ராகுல் பாய்ச்சல்

முதல்வர் பதவியில் இருந்து, எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து, காங்., தலைவர், ராகுல், டில்லியில், நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக மாநிலத்தில், எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் செயலுக்கு, பிரதமர் நேரடியாக அங்கீகாரம் அளித்ததை எல்லாரும் பார்த்தீர்கள். ஊழலை ஒழிப்பதற்காக, பிரதமர் போராடுகிறார் என, கூறப்படுவது, முழு பொய் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.


கர்நாடகாவில், பா.ஜ.,வை தோற்கடிப்பதில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் உறுதியாக, ஓரணியில் நின்றன. இந்த ஒற்றுமை இனியும் தொடரும். இந்தியாவில், மக்களின் விருப்பமே முக்கியம்.

கர்நாடக சட்டசபையில், எல்லா நடைமுறை களும் முடிந்தபின், தேசிய கீதம் இசைக்கப் பட்டது. அதற்கு மரியாதை தராமல், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும், சபாநாயகரும், சபையை விட்டு வெளியேறியதை நீங்கள் பார்த்திருப்பீர் கள். ஜனநாயக அமைப்புகளை இழிவுபடுத்தும் செயலை, பா.ஜ., தொடர்ச்சி யாக செய்து வருகிறது. இதை எதிர்த்து தான், நாம் போராடி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

குறைகிறது!


பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண் மவுசு...   20.05.2018


 நுழைவு தேர்வுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்  

இன்ஜி., படிப்புகளுக்கும் அதிகம் தேவையில்லை

'நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் காரணமாகவும், அவற்றுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாலும், பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கான மவுசு, குறைந்து வருகிறது. இன்ஜி., கல்லுாரிகளிலும், ஏராளமான இடங்கள் இருப்பதால், 'கட் ஆப்' மதிப்பெண்கள் அவசியமற்றதாக மாறி வருகின்றன.




தமிழகத்தில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில், மாணவர்களை சேர்க்க, 1984ல், நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வு, அண்ணா பல்கலை மற்றும் மருத்துவ பல்கலையால் நடத்தப்பட்டது. ஆனால், இந்த தேர்வில், கிராமப்புற மாணவர்களால், பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பாலும், உயர் நீதிமன்ற உத்தரவாலும், நுழைவு தேர்வு முறை, 2006ல், ரத்து செய்யப்பட்டது.

நாளுக்கு நாள்

இதையடுத்து, ஒற்றை சாளர கவுன்சிலிங் வழியாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த கவுன்சிலிங் முறைக்கு, பிளஸ் 2

தேர்வில், முக்கிய பாடங்களில், மாணவர்கள் பெறும்மதிப்பெண்களை கணக்கிட்டு, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, கட் ஆப் மதிப் பெண்ணை கணக்கிட்டு, இடங்கள் ஒதுக்கப் படுகின்றன.

இந்நிலையில், மீண்டும் நுழைவு தேர்வு வந்துள்ள தால், கட் ஆப் மதிப்பெண்ணுக்கான மவுசும், நாளுக்கு நாள் குறைந்தவண்ணம் உள்ளது. மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வு அமலுக்கு வந்துள்ளது. நீட் தேர்வை எழுத, பிளஸ் 2 தேர்ச்சி யுடன், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில், பொதுப் பிரிவினர், 50 சதவீதமும், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள், 45 சதவீதம், மற்ற இனத்தவர், 40 சதவீதமும் மதிப்பெண் பெற வேண்டும்.

'ரேங்க்' பட்டியல் தயாரிப்பில், பிளஸ் 2 தேர்வின், கட் ஆப் எவ்வளவு என்ற கேள்விக்கே இடமில்லை. நீட் நுழைவு தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது. இதனால், மருத்துவத்தில், கட் ஆப் தேவை இல்லாமல் போய் விட்டது. அதேநேரம், 'பாரா மெடிக்கல்' என்ற மருத்துவ சார் படிப்புகளுக்கு, கட் ஆப் பார்க்கப்படுகிறது.

இன்ஜினியரிங்

இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க் கையை பொறுத்தவரை,மாணவர்களின் எண்ணிக் கையை விட, இரண்டு மடங்கு அதிகமாக, இடங்கள் உள்ளன. தற்போது, இன்ஜினியரிங் படிப்பிற்கு தகுதியான, கணித பாடப் பிரிவில், நான்கு லட்சம் பேர் படித்து, பிளஸ் 2 தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், மற்ற

படிப்புகளுக்கும்செல்கின்றனர். 1.50 லட்சம் மாணவர்கள், இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு படிப்பு களில், தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேருவர்.

மீதமுள்ள, 1.50 லட்சம் பேர் மட்டுமே, இன்ஜி., கவுன்சிலிங்குக்கு வருகின்றனர். அவர்களுக்கும், தேவையை விட பல மடங்கு அதிகமாக இடங்கள் உள்ளதால், கட் ஆப் இருந்தால் தான், இன்ஜினியரிங் இடம் கிடைக்கும் என்ற, தேவை இல்லாமல் போய்விட்டது.

மொத்தம் உள்ள, 550 கல்லுாரிகளில், முன்ன ணியில் உள்ள, 50 கல்லுாரிகளுக்கு மட்டுமே, கட் ஆப் மதிப்பெண் அதிகமாக தேவைப்படு கிறது. சிலர், கட் ஆப் அதிகம் பெற்றிருந் தாலும், தங்கள் சொந்த மாவட்டம் மற்றும் தங்களுக்கு பிடித்த கல்லுாரியை, ஏற்கனவே முடிவு செய்து, அதில் சேர்ந்து விடுகின்றனர். எனவே, கட் ஆப் மதிப்பெண்ணுக்கான மவுசு குறைந்த வண்ணம் உள்ளது.

- நமது நிருபர் -
மாவட்ட செய்திகள்

சேலம் மாநகரில் பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை: 100 மரங்கள் சாய்ந்தன-கார்கள் சேதம்



பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 100 மரங்கள் சாய்ந்து விழுந்தன.

மே 20, 2018, 04:10 AM
சேலம்,

சேலம் மாநகரில் நேற்று மாலை பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 100 மரங்கள் சாய்ந்து விழுந்தன. கார்கள் சேதம் அடைந்தது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மதியம் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மாலையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.

சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கிச்சிபாளையம், அம்மாபேட்டை, குகை, அழகாபுரம், புதிய மற்றும் பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. ஒருபுறம் மழை பெய்து கொண்டிருந்தாலும், மறுபுறம் காற்று பலமாக வீசத்தொடங்கியது. இதனால் சாலையில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை தொடர்ந்து இயக்கமுடியாமல் ஆங்காங்கே அவை நிறுத்தப்பட்டன. சில வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றதை காணமுடிந்தது.

சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. சேலம் சங்கர் நகரில் 3 இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் தமிழ் அண்ணல் சாலையில் பழனியப்பன் என்பவர் சாலையில் நிறுத்தியிருந்த கார் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் அவரது காரின் முன்பக்கம் சேதமானது.

நடேசன் காலனியில் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவரின் கார் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சேலம் அண்ணா பூங்காவில் மிகவும் பழமையான மரம் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் அங்கிருந்த அப்பளம் கடை மீது சாய்ந்து விழுந்தது. அப்போது கடையில் வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

மேலும், சங்கர் நகருக்கு செல்லும் வழியில் ஜங்ஷனில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் இருந்த மரத்தின் ஒருபகுதியின் கிளை திடீரென முறிந்து மின்சார கம்பி மற்றும் அந்த பஸ்சின் மீது விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 3 ரோடு அருகே ஒரு கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கார் பயங்கர சேதமானது.

மக்கான் தெரு, அஸ்தம்பட்டி, பழைய நாட்டாண்மை கட்டிடம், கிச்சிபாளையம், அழகாபுரம், காந்தி மைதானம், அம்மாபேட்டை, சூரமங்கலம், களரம்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரங்களும், மரக்கிளைகளும் சாய்ந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்சாரம் அடியோடு தடைப்பட்டது. அந்த பகுதியில் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், மின்சாரம் தடை ஏற்பட்ட பகுதிகளில் மின்சப்ளை கொடுக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இருப்பினும், பல இடங்களில் மின்வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சேலம் கோரிமேடு பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இதை பார்த்தவுடன் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து, தெருவிற்கு வந்து ஆலங்கட்டிகளை பாத்திரங்களில் எடுத்து சேகரித்ததை காணமுடிந்தது.

இளம்பிள்ளை, சின்னப்பம்பட்டி சுற்று வட்டார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. வீதிகளில் எங்கு பார்த்தாலும் ஆலங்கட்டிகள் சிதறி கிடந்தன. இதே போல அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, வரகம்பாடி ஆகிய பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எடப்பாடி-குமாரபாளையம் ரோட்டில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்ட செய்திகள்

சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு



சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் அடையார் ஆனந்தபவன் ஓட்டலில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியாயினர்.

மே 20, 2018, 04:22 AM
சேலம்,

சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் அடையார் ஆனந்தபவன் ஓட்டலில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நெய்காரப்பட்டியில் அடையார் ஆனந்தபவன் என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இங்கு உணவகம், தங்கும்விடுதி, ஐஸ்கிரீம் பார்லர், காபி ஷாப் ஆகியவை செயல்பட்டு வருகிறது. 35 பெண்கள் உள்பட 90 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஓட்டலில் வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஓட்டல் ஊழியர்கள் உணவு பரிமாறிக்கொண்டிருந்தனர்.

அப்போது, சேலம் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு ஓட்டலின் மேல்பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் தாக்குபிடிக்காமல் திடீரென சாய்ந்து, மேற்கூரையின் மீது சரிந்து விழுந்தது. அப்போது, ஓட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது இரும்பு தகடுகள் மற்றும் ஹாலோபிரிக்ஸ் கற்கள் விழுந்ததால் அவர்கள் இடிபாடுக்குள் சிக்கிக்கொண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற அறைகளில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், கொண்டலாம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் அங்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டலின் முன்பகுதியில் பலத்த சேதம் அடைந்ததால் இடிபாடுக்குள் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஓட்டலின் காபி மாஸ்டராக பணியாற்றிய பீகார் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் (வயது 25), ஓட்டலுக்குள் சாப்பிட்டு கொண்டிருந்த ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பெருமாநகரை சேர்ந்த நூர்அமீன் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அவர்களின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நூர்அமீன் நண்பரான ஈரோட்டை சேர்ந்த சையதுஅலி (41), ஓட்டல் ஊழியர் சேலம் சின்னசீரகாபாடி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் சையது அலி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து, சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், சேலம் மேற்கு தாசில்தார் சுந்தரராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்து விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் கட்டிட சுவர் இடிந்து விழாமல் இருப்பதற்காக ஓட்டலின் ஒருபகுதி முழுவதும் பொக்லைன் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஓட்டலில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் இறந்த தகவலை அறிந்த நெய்காரப்பட்டி, கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து ஓட்டலின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய செய்திகள்

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்பு



கவர்னர் அழைப்பை தொடர்ந்து கர்நாடக மாநில புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி(புதன்கிழமை) பதவி ஏற்கிறார்.

மே 20, 2018, 05:30 AM
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து குமாரசாமியை ராஜ்பவனுக்கு வருமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன் பேரில் கவர்னரை குமாரசாமி நேற்று இரவு 7.30 மணிக்கு சந்தித்தார்.

அப்போது ஆட்சி அமைக்க வருமாறு குமாரசாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதை அவர் ஏற்றுக்கொண்டார். சுமார் அரை மணி நேர சந்திப்புக்கு பின் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு பெரும்பான்மையை நிரூபிக்காததால், அதன் முதல்-மந்திரி எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க கடந்த 15-ந் தேதி நான் உரிமை கோரினேன். அதன் அடிப்படையில் நேரில் வந்து சந்திக்குமாறு கவர்னர் எனக்கு அழைப்பு விடுத்தார்.

அதன் பேரில் கவர்னரை சந்தித்து பேசினேன். கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு எனக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் பதவி ஏற்பு விழா 23-ந் தேதி(புதன்கிழமை) நடைபெறும்.

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை கவர்னர் கொடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் தேவை இல்லை. அதற்குள்ளாகவே பெரும்பான்மையை நிரூபிப்போம்.

எங்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க இன்னமும் பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. அதனால் நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவிலேயே தங்கி இருப்பார்கள். இந்த கூட்டணி அமைய காரணமான சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

எங்கள் பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ்யாதவ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம்.

மந்திரி பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) இணைந்து ஆட்சி அதிகாரத்தை நடத்த ஏதுவாக ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுவோம். இதற்காக ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தலைவர்களின் ஆலோசனை கூட்டம் குலாம்நபிஆசாத் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பதவி ஏற்பு விழா, மந்திரி பதவிகளை எவ்வாறு பகிர்ந்து கொள்வது, ஆளுக்கு எத்தனை மந்திரி பதவிகள், யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் குறைந்தபட்ச செயல் திட்டம், ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

Saturday, May 19, 2018

Harassment: Panel for colleges, universities 

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN


Published May 19, 2018, 1:37 am IST


The universities were asked to sensitise the colleges regarding sexual harassment complaints. 



Anna University Vice-Chancellor M.K. Surappa said he is yet to go through the circular. “Anna University is having a committee to deal with sexual harassment complaints. But, I am not sure whether engineering colleges have these committees,” he said.

Chennai: Taking a serious note of the sex scandal at Aruppukottai College, the higher education department on Wednesday sent a circular urging the universities and colleges to set up Internal Complaints Committee (ICC) to prevent sexual harassment of women in educational institutions as per UGC regulations.

Adopting the UGC regulations 2015 for prevention, prohibition and redressal of sexual harassment of women employees and students in higher educational institutions, the higher education department asked the Vice-Chancellors of Universities to sensitise the colleges on preventing sexual harassment on campuses.

As per the regulations, the committee shall have a woman faculty member as a presiding officer (not below a professor in case of university and not below an associate professor or reader in case of a college) at the educational institution, nominated by Vice-Chancellor or Principal. If the matter involves students, it also needs to have three students on the committee elected through a transparent democratic procedure. At least, half of the committee members shall be women.

However, senior administrators such as Vice-Chancellors, Pro Vice-Chancellors, Rectors, Registrar, Deans, Heads of Departments shall not be members of the ICCs in order to ensure the autonomy of their functioning. “In our university, the ICC was already has already been set up and it is very much active in the last few years,” said P.Duraisamy, Vice-Chancellor, Anna University. The committee has also enquired into a few harassment complaints as well.

“The colleges also have to follow UGC norms. In reality, affiliated colleges may not have an active committee to deal with such complaints. So, the universities were asked to sensitise the colleges regarding sexual harassment complaints,” he said.

Bharathidasan University Vice-Chancellor P.Manisankar has confirmed the university has received circular from the higher education department. He said the university will forward the circular to all the affiliated colleges to set up committees.

Anna University Vice-Chancellor M.K. Surappa said he is yet to go through the circular. “Anna University is having a committee to deal with sexual harassment complaints. But, I am not sure whether engineering colleges have these committees,” he said.

Despite All India Council for Technical Education (AICTE) making it mandatory for all engineering colleges to have internal complaints committee to deal with sexual harassment complaints, many colleges have these committees only for the sake of it and students are also not complaining to these committees.

“We need to make colleges students friendly. Only if we are able to gain their confidence they will come out and complain about these kinds of harassments,” a principal from a city engineering college said.

Another city college principal, who spoke on condition of anonymity, said, “The order will create awareness and motivate the colleges to set up an internal complaints committee. The colleges need to be reminded about it periodically.”

In a 19-minute audio clip that emerged over a month ago, Nirmala Devi, an assistant professor of Devanga Arts College in Aruppukottai, was heard luring four of her girl students to do sexual favours in return for money and academic progress. It stirred huge controversy and sent shock waves across the country.

NEWS TODAY 25.07.2026