Thursday, June 21, 2018

இருக்கும் இடத்தை விட்டு...

By வாதூலன் | Published on : 19th June 2018 01:18 AM |

சில வாரங்கள் முன் ஒரு உறவினரின் வீட்டுத் திருமணத்துக்குப் போக வேண்டியிருந்தது. காலை வேளையில் முகூர்த்தம். மண்டபம் இருக்கும் இடத்தின் வரைபடம் அழைப்பிதழின் பின்புறம் அச்சிடப்பட்டிருந்தது. ஆனாலும் மண்டபம் தட்டுப்படவேயில்லை. எரிச்சலும், அலுப்பும் மேலிட (அதிகாலை தூக்கம் கெட்டதனால்) கைப்பேசியில் விசாரித்தால், மேள சப்தம்தான் பெரிதாக ஒலித்தது. கொஞ்சம் தொலைவு போய் ஒருவரிடம் கேட்டபோது, அட, அதைத் தாண்டி வந்திட்டீங்களே' என்று கூறினார். என்ன ஆயிற்றென்றால், கல்யாண மண்டபத்தின் வாசலில் ஏராளமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்ததால், மண்டபத்தின் பெயர் சிறிதாகக் குறிக்கப்பட்டிருந்தது கண்களுக்குத் தெரியவில்லை.

இது போன்று பல சமயங்களில் நடந்திருக்கிறது. ஆட்டோ, வாடகைக் கார் என எதுவானாலும் வேகமாகத்தான் செல்லும். அந்த விரைவில், ஏற்கனவே தெரிந்த பல கடைகள், கட்டடங்களைக்கூட தவறவிடச் சந்தர்ப்பங்கள் அதிகம். மேலும் நம்மூரில் திடீரென்று நடைமுறைப்படுத்தப்படும் ஒரு வழிப்பாதையை நீக்குவது', இரு வழித்தடத்தை அனுமதி இல்லாத' வழியாக மாற்றுவது போன்ற விதிமுறைகள் பிரச்னையைக் கூடுதலாக்குகின்றன.
இவை யாவும் வீட்டுக்கு வெளியே பயணம் போகும்போது ஏற்படும் நிகழ்வுகள். ஆனால் இல்லத்துக்குள்ளேயே பல பொருள்களைத் தேடித் திணறுகிற சங்கடங்கள் அவ்வப்போது உண்டாகும். இதில் முதலாவதாக நிற்பது கைப்பேசி. அதை அவசரத்தில் எங்காவது வைத்துவிட்டுப் பின்னர் தேடாத இடமே இருக்காது. வேறு கைப்பேசி மூலம் அழைத்தால், ஓசை வரும் திசை தெரியும். அப்போது அது மெளன நிலையிலிருந்தால் கண்டுபிடிப்பது கடினம்.

அடுத்ததாக வருவது, அட்டைகள். வங்கி அட்டைகள், அரசு தொடர்பான ஆதார், பான், ரேஷன் அட்டைகள் போன்ற பல. இப்போதெல்லாம் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும்போதே கணினி குற்றங்கள் நேர்கின்றன. ஒரு முறை பற்று அட்டையைத் தேடுவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே. நிதானமாக, வரிசை கிரமமாக முன்தின நிகழ்வுகளை யோசித்துப் பார்த்தேன். சட்டென்று ஞாபகம் வர அவசரமாகச் சென்று பார்த்தேன். துவைக்கப் போட்டிருந்த சட்டைப் பைக்குள் அது இருந்தது. நல்ல காலம், துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் போகவில்லை.

மற்றொன்று, இப்போதெல்லாம் கடைகளில் வாங்கும் கருவிகளுக்கோ, மின்னணு சாதனங்களுக்கோ கனமான உத்தரவாத அட்டை கொடுப்பதில்லை. கணினியில் அச்சிடப்பட்ட ரசீதே தருகிறார்கள். அதன் கீழ் பொடி எழுத்தில் உத்தரவாத வாசகம் அச்சாகி இருக்கும். கருவியில் ஏதேனும் பழுது வந்தால், இந்த ரசீதைத் தேட வேண்டும்.

இந்தத் தேடல் படலம், வயதானவர்களும், சிறு குழந்தைகளும் இருக்கிற இல்லங்களில் கூடுதல் பிரச்னையைத் தருகிறது. அந்த நாளில் அறுபது பிளஸ் வயதுக்காரர்கள் மூக்குக் கண்ணாடியையும், பேனாவையும் மட்டுமே தேடுவார்கள். இப்போது வயது அதிகரிக்கும்போது, மாத்திரைகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. அதுவும் சில மாத்திரைகளைப் பிய்க்கும்போது, அவை கீழே விழுந்து ஓடி விடுகின்றன. குனிந்து தேடுவதற்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது.

காலையில் பூஜையின்போது பால் வைக்கிற வெள்ளிக்கிண்ணத்தை எங்கேயோ வைத்து விட்டுத் தேடுகையில், மனத்துக்குள் சஞ்சலம் புகுந்தது. அதைப் பற்றி மறந்தே போய் நிச்சலனமாய் அமைதியாய் இருந்த சமயம், மிகத் தற்செயலாய்க் கிடைத்தது. குழந்தையின் கைங்கரியம்!
உணர்வு பூர்வமான பல அம்சங்களும் பொருளைத் தேட நம்மை அலைக்கழிக்கின்றன. அதுதான் ராசி'. வீட்டில் ஏதாவது விசேடம் நிகழும்போது முதன் முதலில் வைக்கிற வெள்ளிப் பாத்திரம், மருத்துவரைப் பார்க்கப் போகிற போது உடுத்துகிற பழைய புடவை இப்படிப் பல. ஒரு முறை, மனைவி ராசியான மஞ்சள் புடவையைத் தேடிப் பிடித்து டாக்டரைச் சந்திப்பதற்குத் தாமதமாகி விட்டது. நல்ல காலமாக, அவர் கடைசி நோயாளியைப் பரிசோதிக்கும் தருணத்தில் போய்ச் சேர்ந்தோம்.
இந்தக் காலகட்டத்தில், சுயதொழிலுக்கும், சுய முன்னேற்றத்துக்கும் கூட ஒரு தேடல் வேண்டியிருக்கிறது. உன்னிடம் மறைந்திருக்கும் திறமையைத் தேடித் தெரிந்து கொள்' என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். சுயதொழிலில் முன்னுக்கு வர வேண்டுமானால் சுற்றுப் புறத்திலுள்ள நுகர்வோரின் தேவைகளைத் தேடுவதுதான் முதற்படி என்று கூறுகிறார்கள்.

இறுதியாக ஆன்மிகத் தேடல். இது யாருக்கும் எளிதில் கைவரப் பெறாத ஒன்று. இமயம் முதல் குமரி வரை பல கோயில்களுக்குச் சென்று வந்தும், ஏதோவொரு வெறுமையை உணரும் முதியோர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த ஊரிலில்லை யென்று எங்கு நாடி யோடுறீர்? அந்த வூரிலீசனும் அமர்ந்து வாழ்வதெங்ஙனே?''என்கிற சிவவாக்கியர் பாடல்தான் ஞாபகம் வருகிறது.
இல்லற ஆசாபாசங்களிலிருந்து முற்றுமாக விலகித் துறவு நிலை எய்வதற்கு அசாத்திய மனப் பக்குவம் வேண்டும். அது மதுரையைச் சார்ந்த வெங்கட்ராமனுக்கு எட்டு வயதிலேயே கிடைத்ததால் அவர் ரமண மகரிஷியாகப் புகழ் பெற்றார். சின்மயானந்தாவின் சீடரான நடராஜன் வாலிபரான பின்னர் தயானந்த சரஸ்வதியாக மாறினார்.
எல்லாம் கிடக்கட்டும். ஓர் அம்சம் இன்றைய நாளில் ரொம்பவும் உறுத்தவே செய்கிறது. எந்த நாளேட்டைப் பிரித்தாலும், முதலில் எதிர்மறை செய்திகள்தான் கண்ணில் படுகின்றன. தொழிலதிபர் கடத்தல், சைபர் குற்றங்கள், அரசியல் குதிரை பேரம் இத்யாதி. நற்செய்திகளை தாளின் உள்ளே தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த நிலைமை மாறி, நல்ல செய்திகளை முதல் பக்கத்தில் இடம் பெறும் நாள் விரைவில் வர வேண்டும்.
யோகா: உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை

By ப. நாகேந்திரன் | Published on : 21st June 2018 01:30 AM |

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் மனத்தையும் உடலையும் செம்மையாக்க தவறிவிட்டான். அதனாலேயே பல்வேறு இன்னல்களும் நோய்களும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. அவற்றிலிருந்து விடுபட செய்வதறியாது தவிக்கின்றான்.

இந்தியா உலகிற்கு வழங்கிய கொடைகளுள் குறிப்பிடத்தக்கது யோகக் கலையாகும். மனிதனின் ஒருங்கிணைந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவது இந்த யோகக் கலையே. பலரும் நினைக்கிறார்கள் யோகா இறைநிலையை அடைவதற்கென்று. அது ஒரு வகையில் சரியென்றாலும், அதன் உடல்ரீதியான் பயன்கள் ஏராளம். ஆம், யோகா என்பது வெறும் உடல் பயிற்சி, மனப் பயிற்சி மட்டுமல்ல; அதுவொரு நோய் தீர்க்கும் நிவாரணியும்கூட.

யோகா என்பது ஓர்அறிவியல். நம்முள் மறைந்துள்ள ஆற்றல்களை வெளிக்கொணரும் ஒருங்கிணைந்த முறை. நம்முள் இருக்கும் குணாதிசயங்களான அன்பு, அறிவு, திறமை, மகிழ்ச்சி, பாதுகாப்பு, நம்பிக்கை, விழிப்புணர்வு, உள்ளுணர்வு ஆகிய அனைத்தும் யோகப் பயிற்சியினால் விரிவடைகின்றன. இதுவே பண்டைய காலத்தில் யோகாவின் நோக்கமாகவும் பயன்பாடாகவும் கருதப்பட்டது. இன்னொரு முக்கிய அம்சம், உடலில் நோய் வரக் காரணமான பல பிரச்னைகளை வெளியேற்றுகிறது.
உடல் ஆரோக்கியம் பெறவும், அதைப் பராமரிக்கவும் ஆற்றல் மிகுந்த, சாந்தமான மற்றும் சீரான மனநிலையை யோகா உருவாக்குகிறது. இதுவே யோகத்தின் ரகசியம். எங்கு ஆரோக்கியமும் ஆற்றலும் அமைதியும் நிலவுகின்றதோ அங்கு நோய்க்கு இடமில்லை. எனவேதான் இன்று யோகா பல பிரச்சினைகளுக்கு தீர்வாகக் கருதப்படுகிறது; பல்வேறு மருத்தவமனைகளிலும் யோகா ஒரு சிகிச்சை முறையாக உள்ளது.
யோகாசனம் மூலம் ஆஸ்துமா, ஆர்த்ரைடீஸ், இதயக் கோளாறு, குடல் பிரச்னை, இடுப்பு வலி, தலைவலி, மூளைக் கோளாறு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குணமாகின்றன.

யோகா எப்படி இவ்வளவு நோய்களை குணப்படுத்துகின்றது? எந்தவொரு நோய்க்கும் அதற்கான மூலக்காரணத்தை அறியாமல் சிகிச்சை அளிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

நோய்நாடி நோய் முதல்நாடி அதுதனிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்பது குறள்.

பொதுவாக, இன்றைக்கு வரக்கூடிய நோய்கள் அனைத்தும் மனிதர்களின் தவறான பழக்கங்களால் மட்டுமே ஏற்படுகின்றன. குறிப்பாக, தவறான உணவுப்பழக்கம், தேவையற்ற சிந்தனை மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் வருகின்றன.

இப்படி வரும் நோய்களின் தாக்கம், நம் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கின்றன. மேலும் அவை வளர்ந்து மருத்துவர்களால்கூட குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில்தான் பல மருத்துவர்களும் நோயாளிகளை யோகாசனம் செய்யப் பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய மருத்துவ ஆய்வு, யோகாவைப் போன்ற ஒரு பன்முறை நிவாரணி இல்லை என்பதை நிரூபித்துள்ளது. எனவேதான் ஏனைய மருத்துவ முறைகளுக்குச் சவாலாக யோகா உருவெடுத்துள்ளது.

பொதுவாக, தவறான வாழ்க்கைமுறையால் முதலில் பாதிப்படைவது மனம்தான். நமது முழு ஆளுமைத் திறனும் நமது உடல் மற்றும் மனத்தை மையமாக வைத்தே உள்ளது. மனத்தை ஒரு மரத்தின் வேருக்கு இணையாகக் கூறலாம். ஒரு மரத்தின் வேரானது எப்படி நிலத்திலிருந்து சத்துகளை உறிஞ்சி அதன் தண்டு, இலை, கிளை, பூ மற்றும் கனிகளுக்குக் கடத்துகின்றதோ அவ்வாறே மனமானது உடலின் ஆதரமாக இருக்கக்கூடிய உயிர்சக்தியிலிருந்து ஆற்றலை உறிஞ்சி உடலின் அனைத்து பாகங்களுக்கும் கடத்துகின்றது. வேரானது செயலிழந்தாலோ அல்லது அதற்கு தேவையான ஆற்றல் கிடைக்வில்லையேன்றாலோ முழு மரமும் பட்டுப்போகின்றது. அதேபோன்று மனம் பலவீனமடைந்தால் உடல் வலிமையிழந்து நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறது. அதுவே பின்பு சுவாசம், நரம்பு மற்றும் ஜீரண மண்டலங்களை பாதித்து பல்வேறு வியாதிகள் வரக் காரணமாகிறது. இவற்றை தடுக்க வேண்டுமானால் மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்துதல் மற்றும் தியானம் செய்வதன் முலம் நோயற்ற, மகிழ்ச்சியான,நிம்மதியான வாழ்க்கை அமைகிறது.

இன்று நோய் இல்லாத மனிதரே இல்லை என்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம். மருத்துவரை அனுகி அதற்கான மருந்துகளை உட்கொள்கிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால் அம்மருந்துகளுக்கே அடிமைப்பட்டு கிடப்பது என்பது தவறு.

மற்ற மருத்துவமுறைகளிலிருந்து யோகா முற்றிலும் மாறுபடுகிறது. பிற மருத்துவமுறைகளில் வெளியில் இருந்து ஏதேனும் ஒரு பொருளை மருந்தாகக் கொடுக்க வேண்டும். ஆனால், யோகாவில் அந்த மருந்துப் பொருளை உடலிலேயே உற்பத்தி செய்கிறோம். உடலில் ஏதேனும் ஒரு பகுதி சரிவர வேலை செய்யாமல் இருந்தாலோ அல்லது அதன் மூலம் கிடைக்கவேண்டிய ஹார்மோன்கள் கிடைக்காமல் இருந்தாலோ குறைபாடு ஏற்பட்டு பிறகு அது நோயாக மாறுகிறது.

உதாரணத்திற்கு, உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய இன்சுலின் கணையத்தில் சுரக்கிறது. கணையம் சரியாக வேலை செய்யவில்லையெனறால் இன்சுலின் சுரப்பு குறைந்து சர்க்கரையில் சமமின்மை ஏற்பட்டு சாக்கரை நோய் ஏற்படுகிறது. சூரிய நமஸ்காரம் மற்றும் உடலை முறுக்கி செய்யும் சில யோகாசனங்கள் மூலம் கணையத்தை நங்கு செயல்பட வைத்து இன்சுலின் சுரப்பை அதிகரிக்க முடியும்.
அதேபோன்று, இன்றைக்கு பெரும்பாலான இருதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணம் மன அழுத்தம் மற்றும் சரியான முறையில் ரத்த சுழற்சி இல்லாததுதான். இதன் விளைவாக ரத்தம் உறைந்து போதல், இருதய அடைப்பு மற்றும் செயலிழப்பு ஏற்படுகின்றன. ஆனால் முறையான ஆசனங்கள் மற்றும் பிராணயாமம் செய்வதால், மன அழுத்தம் குறைவதோடு ரத்த குழாய்களில் ஆக்ஸிஜன் அதிகரிப்பதால் ரத்த ஓட்டமும் சீராகிறது. இதனால், இருதயத்திற்கும் தேவையான ரத்தம் பாய்ச்சப்பட்டு இருதயம் நன்கு செயல்பட்டு ஆரோக்கியம் பெருகுகிறது.

அதேபோன்று, சுவாச மற்றும் நுரையீரல் சம்பந்தபட்ட பிரச்னைகள் எற்படுவதற்கு முக்கிய காரணம் சுவாச மண்டலத்தில் ஏற்படக்கூடிய நரம்பு கோளாறு, மாசுபட்ட சுற்றுச்சூழல் போன்றவையே. இதற்கு தொடர்ச்சியான யோகபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் மார்பு மற்றும் உதரவிதானம் நன்கு சுருங்கி விரிவதால் சுவாச மண்டலம் புத்துணர்ச்சியடைகிறது. அப்பகுதிகளுககு தேவையான ரத்த ஒட்டம் அதிகரிப்பதால் செயலற்ற நரம்புகள் செயல்படத் தொடங்குகின்றன. அதன்மூலம் நுரையீரலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதால் ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறுகள் குணமாகின்றன.

மேலும், மூட்டுவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஸயனோவியல்' என்கின்ற திரவத்தின் பற்றாக்குறைதான். சில பயிற்சிகள் மூலம் அத்திரவத்தை நம் மூட்டுகளிலேயே சுரக்கச்செய்து, மருந்து மாத்திரையின்றி மூட்டு வலியை சரிசெய்ய முடியும்.

மேலும், தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு வியாதி புற்றுநோய். இதனை யோகா மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. புற்றுநோய் ஏற்படக் காரணம், உடலில் நிணநீர் ஓட்டம் சரியாக இல்லாததுதான். வயிற்றை நன்கு உள்ளே அழுத்தி செய்யப்படும் கிரியா மற்றும் பிராணாயாமம் மூலம் உடலின் நிணநீர் ஓட்டத்தை முறைப்படுத்த முடியும்.

யோகப் பயிற்சியில் சவாசனம்' முக்கிய பங்கு வகிக்கிறது. இது பயிற்சியின்போது கடைசியாக செய்யப்படுவது. உணர்ச்சிவசப்படுவதால் வரக்கூடிய மன அழுத்தத்தை சரிசெய்து உயர் ரத்த அழுத்தம் வராமல் இது பாதுகாக்கிறது. சவாசனத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்துவந்தால் பல வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

ஆக, வெளியிலிருந்து எந்த பொருளையும் மருந்தாக கொடுக்காமல் உள் ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்தே அனைத்து நோய்களையும் குணமாக்குவதால் யோகா ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.

இன்று ஒருவர் யோகா பயிற்சிக்கு வந்தால் அவர் கேட்கும் முதல் கேள்வி எத்தனை நாளில் எனது பிரச்னை சரியாகும்' என்பதே. அப்படிப்பட்டவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். பல ஆண்டுகளாக சிறிது சிறிதாக உடலில் சேர்ந்த அமிலம் மற்றும் நச்சுப் பொருள்கள் சரியாக வெளியேறாததால் நோய்களின் தாக்கம் ஆழமாக உள்ளது. இவற்றை குணப்படுத்த சற்று காலம் பிடிக்குமல்லவா?

சத்கர்மா' எனப்படும் யோக முறை மூலம் உடலிலுள்ளஅனைத்து விதமான நச்சுப் பொருள்களையும் வெளியேற்றி பக்கவிளைவு ஏதுமின்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.

ஆக ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனத்தின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள். சரியான உணவுப்பழக்கம், நல்ல செயல்கள், தூய்மையான சிந்தனை, தினசரி யோகா என வாழ்க்கையை மாற்றியமைத்தால் நோய் நம்மை அண்டவே அண்டாது. ஆரோக்கியம் பெருகும்... மகிழ்ச்சி நிலைக்கும்!
ஈரானிய கொள்ளையர் 5 பேர் கைது : தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டோர் சுற்றிவளைப்பு

Added : ஜூன் 21, 2018 00:33

சென்னை: சென்னையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு, போலீசாரை கதிகலங்க செய்து வந்த, ஈரானிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களிடமிருந்து, 40 சவரன் நகை, கார் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சென்னையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், காலை, 6:00 மணியில் இருந்து, 11:00 மணி வரை, ராயப்பேட்டையில், செவிலியர், கவிதாவிடம், 9 சவரன், புளியந்தோப்பு, சுந்தர காண்டம், 60, என்ற மூதாட்டியிடம், 13 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்தனர்.மேலும், அண்ணா நகரில், ஜெயா, 65, என்ற மூதாட்டியிடம், 9 சவரன், புழலில், சுதர்சனம்மாள், 70, என்பவரிடம், 7 சவரன், மாதவரத்தில், குமாரி, 70, என்பவரிடம், 6 சவரன் செயின் ஆகியவற்றை, மர்ம நபர்கள் பறித்து தப்பினர்.

கேமரா பதிவு : போலீசார், சம்பவம் நடந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரே கும்பலைச் சேர்ந்த, ஐந்து பேர், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள், மாதவரத்தில், குமாரியிடம் செயின் பறித்த பின், இரு சக்கர வாகனத்தில், ஆந்திரா நோக்கி செல்லும் காட்சிகளும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன.இதையடுத்து, சென்னை மாநகர போலீசார், ஆந்திர மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அம்மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.அதேபோல், சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர், பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான தனிப்படை போலீசார், ஆந்திரா விரைந்தனர். அவர்கள், நேற்று முன்தினம் இரவு, ஆந்திர மாநிலம், கர்னுார் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சந்தேகப்படும்படி சிவப்பு நிற கார் சென்றுள்ளது.மின்னல் வேகத்தில் பறந்த அந்த காரை, தனிப்படை போலீசார் துரத்தினர். ஒரு கட்டத்தில், அந்த காரில் இருந்த மர்ம நபர்கள், சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, ஆளுக்கு ஒரு திசையில் ஓட்டம் பிடித்தனர்.அவர்களை போலீசார் துப்பாக்கி முனையில் பிடித்தனர். விசாரணையில், அவர்கள், மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும், ஈரானிய கொள்ளையர், அப்பாஸ், 39, நவாப் அலி, 38, அம்படாஸ் உள்ளிட்ட ஐந்து பேர் என்பது தெரியவந்தது.இதையடுத்து, அவர்களை சென்னைக்கு அழைத்து வந்துள்ள போலீசார், அண்ணாநகரில், ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:ஈரான் நாட்டில் இருந்து, 50 ஆண்டுகளுக்கு முன், மஹாராஷ்டிரா மாநிலம், அம்புவேலி உள்ளிட்ட இடங்களுக்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இடம் பெயர்ந்துள்ளனர்.தமிழகத்தில், காரமடை, திருப்பத்துார், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். போலீஸ் போல் நடித்து, செயின் பறிப்பில் ஈடுபடுவதே இவர்களது பாணியாகும்.

காரில் வருகை ; விமானத்தில் பறந்து வந்து, ஒரு வாரம் தங்கி, வேலை முடிந்ததும், மீண்டும் பறந்து விடுவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகள் இவர்களுக்கு அத்துப்படி. இந்த முறை, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, சென்னைக்கு காரில் வந்து உள்ளனர்.காரை மாதவரத்தில் நிறுத்திவிட்டு, இரு சக்கர வாகனத்தை திருடியுள்ளனர். அந்த வாகனத்தில், செயின் பறிப்பு நடத்திய பின், மாதவரத்தில் நிறுத்திவிட்டு, மீண்டும் காரில், ஆந்திராவில் செயின் பறிப்பு நடத்த சென்றுள்ளனர்.இவர்கள், பல மாதங்களாக, 100க்கும் மேற்பட்ட இடங்களில், செயின் பறிப்பு நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 40 சவரன் நகை, கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Felicitation



M S Swaminathan felicitated with 84th doctorate at 92


TIMES NEWS NETWORK

Chennai: 21.6.2018

Agriculture scientist M S Swaminathan was on Wednesday conferred the Doctor of Letters degree by ITM University, Gwalior, for his pioneering contributions to sustainable agriculture and global food security.

This was the 84th honorary doctorate received by the 92-year-old geneticist, including 24 from international institutions. He was given the award at a special convocation held at the M S Swaminathan Research Foundation premises in Taramani.

Dr Kamal Kant Dwivedi, vice chancellor of ITM University, Gwalior, presented the degree to Swaminathan.

“Zero hunger can be achieved only through sustainable agriculture,” Swaminathan said in his acceptance speech.

He expressed his joy over the fact that ITM University had produced 1,000 agricultural degree holders.

ONE MORE LAUREL: M S Swaminathan (right) at the special convocation ceremony with Dr Kamal Kant Dwivedi, VC of ITM University, Gwalior

Bird Hit


AI flight grounded in 20 minutes, bird hit suspected to be cause


TIMES NEWS NETWORK

Chennai:

A Chennai-Delhi Air India flight (AI 440) was forced to return around 20 minutes after taking off from Chennai airport on Wednesday due to a suspected bird hit.

The A321 aircraft took off at 6.47am with 130 passengers from the main runway in the direction of Pallavaram. It climbed to 6,000ft and was cruising at 500kmph over Gummidipoondi when the pilot suspected some trouble with an engine and reported the same to the air traffic control. Sources said that the pilot requested for a return and asked for priority landing.

The flight landed safely and the aircraft had been grounded. The passengers disembarked and were brought to the terminal. They were accommodated in other flights belonging to the airline.

An airport official said that the pilot did not report a bird strike but said he felt some vibration on the right engine. An inspection revealed that three blades of the engine were damaged.

“The blades were bent a little and the engineers suspect that it may be because a bird hit the engine. However, the engine was free of remains. Since there is no other way an engine can be damaged, authorities believe that it was a case of bird strike. But the pilot has not reported spotting any birds,” he added.

சிங்கப்பூர் செல்லும் மண் பானைகள்

Added : ஜூன் 21, 2018 01:46




மானாமதுரை: மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண் பொங்கல் பானைகள், மற்றும் குழம்பு சட்டிகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருள்கள் உலகப்புகழ் பெற்றவை ஆகும். இங்கு சீசனிற்கு தகுந்தாற் போல் தயாரிக்கபடும் பொருள்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் மானாமதுரையில் 3 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினரால்தயாரிக்கப்படும், கர்நாடக இசைக்கருவியான 'கடத்தை' இசைக்கலைஞர்கள் இங்கு தான் வாங்கி செல்கின்றனர்.சிங்கப்பூரில் உள்ள அம்மன் கோயில்களில் நடக்கும் பொங்கல் விழாவிற்காக தற்போது மானாமதுரையில்பொங்கல் பானைகளை செய்வதற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். இதற்காக மண்பாண்ட கலைஞர்கள்சிறிய அளவிலான பொங்கல் பானைகளை தயாரித்து அனுப்பி வருகின்றனர்.மேலும் தற்போது வெளிநாடுகளில் பலர் மண்பாண்ட சமையலுக்கு திரும்பியுள்ளதால் குழம்பு சட்டிகளும் அதிகளவில் தயாரித்து அனுப்பி வருவதாகவும் தெரிவித்தனர்.
அண்ணாமலை பல்கலை ஊழியர்களுக்கு, 'ஜாக்பாட்'

Added : ஜூன் 21, 2018 01:28

சென்னை: அண்ணாமலை பல்கலையின் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி, ஊதியத்தை உயர்த்த, அரசு உத்தரவிட்டுள்ளது.அண்ணாமலை பல்கலையில், உபரியாக பணியாற்றிய, 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இயங்கும், கல்வி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஏழாவது ஊதிய கமிஷனின் பரிந்துரைப்படி, ஊதியத்தை உயர்த்துவது குறித்து, பல்கலையின் சிண்டிகேட் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும், அண்ணாமலை பல்கலையின், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, ஊதியத்தை உயர்த்தி வழங்க, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...