Sunday, September 16, 2018

உலகிலேயே அழகான கையெழுத்தைக் கொண்ட பிரக்ரிதி மாலா: கணினி எழுத்தைவிட மேம்பட்ட கையெழுத்துக்குச் சொந்தக்காரி

Published : 15 Sep 2018 12:59 IST

க.சே.ரமணி பிரபா தேவி
 


பிரக்ரிதி மாலா. | இணையத்தில் வைரலான அவரின் கையெழுத்து

''கையெழுத்தா இது...? தலையெழுத்து மாதிரி இருக்கு!''

''உன்னோட கையெழுத்து மாதிரி மோசமான எழுத்தை எங்கேயுமே பார்த்ததில்லை..!'' - இவையெல்லாம் நம்முடைய, நம் நண்பர்களுடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கேட்டும் கடந்தும் வந்தவை...

ஆனால் நேபாளத்தைச் சேர்ந்த பிரக்ரிதி மாலா அத்தகைய விமர்சனங்களைக் கண்டிப்பாக எதிர்கொண்டிருக்க மாட்டார். ஆம், அவரின் கையெழுத்து உலகிலேயே அழகான கையெழுத்தாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் வோர்டைக் காட்டிலும் அழகான கையெழுத்தைப் பெற்றிருக்கிறார் பிரக்ரிதி.

9-ம் வகுப்பு படிக்கும் பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து கணிப்பொறியில் இருந்து பிரிண்ட் எடுத்தது போல அத்தனை சரியாக, நேராக இருக்கிறது. எழுத்துகளுக்கு இடையேயான இடைவெளியும் சீராக உள்ளது.

அழகான, தெளிவான எழுத்துகள்தான் படிப்பவரின் மனநிலையைத் தீர்மானிக்கின்றன என்றும் சொல்லப்படுவதுண்டு.



பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து

நேபாளத்தில் உள்ள பிரபல பள்ளியான சைனிக் அவசியா மகாவித்யாலாயா பள்ளி மாணவியான பிரக்ரிதி மாலா, குறிப்பிடத்தகுந்த தன்னுடைய கையெழுத்துக்காக நேபாளி ஆயுதப் படையிடம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களிலும் அவரின் கையெழுத்து வைரலாகப் பரவி வருகிறது.
எழுவர் விடுதலை நம் கரிசனத்தின் தொடக்கம் ஆகட்டும்!

Published : 12 Sep 2018 09:02 IST

  hindu tamil

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு. முதல்வர் பழனிசாமியின் ஆட்சிக் காலகட்டத்தில், தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும்வகையில் எடுக்கப்பட்டிருக்கும் வரலாற்று முடிவு இது என்று சொல்லலாம்.

ராஜீவ் காந்தி 1991 மே 21 அன்று ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு ரத்தக்கறையாகவே படிந்துவிட்டது. பொதுவாக வன்முறைக்கு எதிரான பாதையிலேயே பயணித்து வந்திருக்கும் நவீன தமிழக வரலாற்றில், துயரமான ஒரு கரும்புள்ளி என்றே இந்த அரசியல் படுகொலையைச் சொல்ல வேண்டும். ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள் தொடர்பான தமிழக மக்களின் பார்வையிலேயே மாற்றம் உண்டானது. பின்னாளில், ஈழப் போராட்டத்தின் மிக மோசமான தோல்விக்கும்கூட இதுவும் ஒரு காரணமாகிவிட்டது.

ராஜீவ் படுகொலையின் பிரதான குற்றவாளிகள் என்று இந்திய அரசால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாத நிலையில், அந்தக் கொலையின் முழுப் பின்னணியும்கூட பொதுச் சமூகத்தின் முன் கொண்டுவரப்படாமலேயே போனது இன்னொரு துயரம். இந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத சூழலில், பிடிபட்டவர்களைக் கடும் குற்றவாளிகளாக்கும் போக்கு, இந்த வழக்கின் தொடக்கத்திலிருந்தே வெளிப்பட்டது. முன்னாள் பிரதமர் கொலை இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் பார்க்கப்பட்ட நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டாலும் விடுதலைக்கான சாத்தியம் என்பது எழுவருக்கும் மறுக்கப்பட்டே வந்தது. ராஜீவ் கொலை வழக்கின் அடுத்தடுத்த நிலைக் குற்றவாளிகள் 14 ஆண்டுகளுக்குள் விடுவிக்கப்பட்ட நிலையில், 26 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் சிறையிலேயே வாட வேண்டியிருப்பது இங்கு ஒப்பிடப்பட வேண்டியதாகிறது.

இந்நிலையில், ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்று சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூடி எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உட்பட பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இவ்விஷயத்தில் ஒருமித்த முடிவை எடுத்திருப்பது ஆக்கபூர்வமான விஷயம். 2014-ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய துணிச்சலான சட்ட மன்றத் தீர்மானம் இங்கு நினைவுகூரப்பட வேண்டியது. மறைந்த முதல்வரின் எண்ணத்தை நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. தமிழக அரசின் இந்தப் பரிந்துரையைத் தாமதிக்காமல் ஆளுநர் செயல்படுத்த வேண்டும்.

இந்த எழுவரும் விடுவிக்கப்படுவது தமிழகத்தைத் தாண்டியும் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னெடுக்கும் மிக முக்கியமான செயல்பாடாக இருக்கும். அது என்னவென்றால், சிறைகளில் உரிய விசாரணை இல்லாமலும் இந்த எழுவரைப் போலத் தொடர் மேல்முறையீடு, ஊடக கவனம், அரசியல் அழுத்தம் இல்லாமலும் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் லட்சக்கணக்கான கைதிகளின் எதிர்காலம் மீதான கரிசனம்.

விசாரணைகளை விரைந்து நடத்தி நீதி வழங்கும் அமைப்பாக இன்னும் நம்முடைய நீதித் துறை வளரவில்லை. நாடு முழுவதும் விசாரணைக் கைதிகளாக 2.8 லட்சம் பேர் சிறைத்தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்திய நீதிக் கட்டமைப்பின் மிக மோசமான நிலை என்றே இதைச் சொல்ல வேண்டும். நீதித் துறை விசாரணைக்காக சாமானியர்கள் கொடுக்கும் விலை இந்நாட்டில் இன்னும் கொடூரமானதாகவே இருக்கிறது. அவர்கள் மீதான கரிசனத்தின் தொடக்கப்புள்ளியாக இந்த எழுவரின் விடுதலை அமையட்டும்.
கும்பகர்ண தூக்கத்தில் இருந்து அரசு விழிக்கும்: ஐகோர்ட் நம்பிக்கை

Added : செப் 16, 2018 02:34

சென்னை, 'கும்பகர்ண துாக்கத்தில் இருந்து விழித்து எழுந்து, நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, தமிழக அரசு தாமதமின்றி நிறைவேற்றும்' என, சென்னை உயர் நீதிமன்றம்நம்பிக்கை தெரிவித்துள்ளது.மாவட்ட நுாலக அதிகாரிகளாக பணியாற்றி வந்த, மணிகண்டன் என்பவர் உட்பட சிலர், 'கிரேடு - ௧' மற்றும், 'கிரேடு - ௨' நுாலகர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை, ௨௦௧௫ம் ஆண்டில், பொது நுாலக இயக்குனரகம் பிறப்பித்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், 'மாவட்ட நுாலக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டதன் வாயிலாக, மாவட்ட நுாலக பணியில் இருந்து, மாநில கல்வி பணிக்கு மாறி விட்டோம். சீனியாரிட்டி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம், எங்களை பாதிக்காது. எனவே, பதவி இறக்கத்தை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டது.அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'மாவட்ட நுாலக அதிகாரிகளாக, மனுதாரர்கள் நியமிக்கப்பட்டது, தற்காலிக அடிப்படையில் தான்; அதனால், மனுதாரர்கள் உரிமை கோர முடியாது. சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால், மற்றவர்களை விட, ஜூனியர் நிலையில் மனுதாரர்கள் உள்ளனர்' என, கூறப்பட்டது.இதையடுத்து மனுக்களை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடன், உயர் நீதிமன்றத்தில், மணிகண்டன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஆர்.சுப்ரமணியன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:நுாலகத்துறை, ஒரே பிரிவாக இயங்க துவங்கிய பின், கிரேடு - ௧ நுாலகர்களாக பணியாற்றிய சிலர், கிரேடு - ௩க்கு மாற்றப்பட்டனர். இதை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. கால தாமதமின்றி, பணி விதிகளில் திருத்தம் கொண்டு வர, தீர்ப்பாயம் பரிந்துரைத்தது.கடந்த, ௧௯௮௧ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, நேரடி தேர்வு மூலம், மாவட்ட நுாலக அதிகாரிகளாக, மனுதாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கல்வித் துறையில், மாவட்ட நுாலக அதிகாரிகளாக, இவர்கள் சேர்ந்து விட்டனர். பதவி உயர்வு மூலம், மாவட்ட நுாலக அதிகாரிகளாக, இவர்கள் வரவில்லை. அதனால், இவர்களை பதவி இறக்கம் செய்ய முடியாது.எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. பதவி இறக்கம் செய்த உத்தரவும், ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, ௨௫ ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகை வழங்கப்பட வேண்டும்.இந்தப் பிரச்னையை, மாநில அரசும், அதிகாரிகளும் கையாண்ட விதத்தில், எங்களுக்கு திருப்தி இல்லை. நுாலக துறையை, ஒரே பிரிவாக கொண்டு வர, ௧௯௮௯ல், கொள்கை முடிவு எடுக்கப்பட்டும், ௧௭ ஆண்டுகளுக்கு பின், ௨௦௦௬ல் தான், இடைக்கால விதிகள் ஏற்படுத்தப்பட்டன. கால தாமதமின்றி, விதிகளை உருவாக்கும்படி, தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.இருந்தும், விதிகளை உருவாக்க, அரசுக்கு, ௧௭ ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனால், மனுதாரர்கள் அலைக்கழிக்கப்பட்டு உள்ளனர். அரசு இயந்திரத்தின் செயல்பாடு, வேதனை அளிக்கிறது. அரசு இயந்திரம் கடமை தவறுவதால், பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டிக்காக வழக்கு தொடுப்பதும், அதனால், நீதிமன்ற நேரம் வீணாவதும் நடக்கிறது.இனிமேலாவது, கும்பகர்ண துாக்கத்தில் இருந்து, அரசு விழித்து எழும் என, நாங்கள் நம்புகிறோம். நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, தாமதமின்றி பின்பற்றினால், இதுபோன்ற வழக்குகளை, எதிர்காலங்களில் தவிர்க்கலாம்.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
படிப்பை பாதியில் விட்ட மாணவன்: டி.சி., வழங்க உத்தரவு

Added : செப் 15, 2018 23:16

சென்னை, : ஹோமியோபதி மருத்துவ படிப்பை, பாதியில் கைவிட்ட மாணவனுக்கு, மாற்று சான்றிதழ் வழங்கும்படி, கல்லுாரி நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உயர் நீதிமன்றத்தில், கபில்தேவ் என்பவர் தாக்கல் செய்த மனு:கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே உள்ள, மரியா ஹோமியோபதி மருத்துவ கல்லுாரியில், ௨௦௧௬ - ௧௭ம் ஆண்டில் சேர்ந்தேன்.முதல் ஆண்டு முடித்த பின், உடல் நல பிரச்னை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, இரண்டாம் ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால், படிப்பை தொடர முடியவில்லை.மாற்று சான்றிதழ்மாற்று சான்றிதழ் வழங்கும்படி, கல்லுாரி நிர்வாகத்திடம் கேட்டேன். மீதி உள்ள மூன்றரை ஆண்டுகளுக்கான கட்டணத்தை யும் செலுத்தும்படி, நிர்வாகம் கூறியது.மேலும், அபராத தொகையை செலுத்திய பின், மாற்று சான்றிதழ் பெற்று கொள்ளும்படி, என் பெற்றோரையும், நிர்வாகம் வற்புறுத்தியது.கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருக்கு, ௨௦௧௮ ஜூனில் மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாற்று சான்றிதழ் வழங்கும்படி, கல்லுாரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மரியா கல்லுாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'கவுன்சிலிங்கில், மனுதாரருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டில், கல்லுாரியை விட்டு சென்று விட்டார்.'படிப்பை பாதியில் விட்டு சென்றால், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, விளக்க குறிப்பேட்டில் உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.மனுவை, நீதிபதிபாரதிதாசன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எம்.ராஜேந்திரன் ஆஜரானார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கல்லுாரியை விட்டு பாதியில் சென்றால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, விளக்க குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.ஆனால், அபராத தொகையை செலுத்தத் தவறினால், மாணவர்களின் சான்றிதழ்களை தக்க வைத்துக் கொள்ள, கல்லுாரிக்கு அதிகாரம் உள்ளது என்று, விளக்கக் குறிப்பேட்டில், எந்த விதியும் இல்லை.வழக்குஎனவே, மனுதாரரின்சான்றிதழ்களை, கல்லுாரிவசம் வைத்துக் கொள்ள முடியாது. அபராத தொகையை வசூலிக்க விரும்பினால், உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.இரண்டு வாரங்களில், மாற்று சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை, மனுதாரருக்கு, கல்லுாரி நிர்வாகம் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டார்.
கிளீனிக்கில் சிறுவன் பலி: அரசு டாக்டர் கைது

Added : செப் 16, 2018 02:46

காட்பாடி, தனியார் கிளீனிக்கில் சிறுவன் இறந்ததால், அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார்.வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக அர்ச்சுணன், 50, பணியாற்றி வருகிறார். திருவலத்தில், ஜீவன் என்ற கிளீனிக்கையும், அவர் நடத்தி வருகிறார்.கார்ணாம்பட்டு அடுத்த, ஆழ்வார்தாங்கலைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் கரண்குமார், 11.வயிற்று வலியால் அவதிப்பட்ட கரண்குமாரை, ஜீவன் கிளீனிக்குக்கு, பெற்றோர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அர்ச்சுணன், சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.பெற்றோர் சம்மதத்துடன், நேற்று முன் தினம் மாலை, 4:00 மணிக்கு, கரண்குமாருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், பெற்றோருக்கு தெரிவிக்காமல், தன் காரில், மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு, அர்ச்சுணன் கொண்டு சென்றார்.அங்கு, சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் இறந்து விட்டதாக, தெரிவித்தனர்.தன் காரில் சிறுவனின் உடலை வைத்துக் கொண்டு, வேலுார், கார்ணாம்பட்டு என, அர்ச்சுணன் சுற்றிக் கொண்டே இருந்தார்.இதையறிந்த, சிறுவனின் பெற்றோர், உறவினர்கள், பைக்கில் விரட்டிச் சென்று,கார்ணாம்பட்டு குளம் அருகே, இரவு, 10:00 மணிக்கு, காரை மடக்கினர். சடலத்தை காரிலேயே விட்டு விட்டு, வேறொரு காரில், டாக்டர் தப்பினார்.நேற்றிரவு, 11:00 மணிக்கு, சடலத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். டாக்டரை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததால், நேற்று காலை, 2:00 மணிக்கு, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். நேற்று மதியம், 2:00 மணிக்கு, வேலுாரில் பதுங்கியிருந்த டாக்டர் அர்ச்சுணனை, திருவலம் போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் நாளை முதல் மின் தடை 

dinamalar 16.09.2018

அனல் மின் நிலையங்களில், 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டும் இருப்பு உள்ளதால், நாளை முதல், கிராமங்களில், அதிக நேரம் மின் தடை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.



மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 3,500 மெகா வாட்; கோடை காலத்தில், 4,000 மெகா வாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மே முதல், காற்றாலைகளில் இருந்து, தினமும் சராசரியாக, 3,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்தது. இதனால், அனல் மின் உற்பத்தியை, மின் வாரியம் குறைத்தது. இம்மாத இறுதியில், காற்றாலை சீசன் முடிவடைய உள்ளதால், தற்போது, அவற்றில் இருந்து, 300 - 400 மெகா வாட் மட்டுமே கிடைக்கிறது. வெயிலும் சுட்டெரிப்பதால், மின் வாரியம், அனல் மின் உற்பத்தியை, மீண்டும், அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து, தமிழகத்திற்கு,
நிலக்கரி வரத்து பாதித்துள்ளதால், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் மின் நிலையங்களில், முழு அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை. மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 6,138 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 2,500 மெகா வாட் வரை குறைவாகவே கிடைக்கிறது. இதனால், மின் வாரியத்தால், மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நெருக்கடி அதிகம் இருந்த, 8, 9, 10ம் தேதிகளில், கிராம பகுதிகளில், ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை, மின் தடை செய்யப்பட்டது.

இந்த பிரச்னையை, எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதனால், நிலக்கரி தட்டுப்பாட்டால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள, 600 மெகா வாட் அலகில், 11ம் தேதி முதல், மீண்டும், மின் உற்பத்தி துவங்கப்பட்டது. இதையடுத்து, மின் தடை நேரம், ஒரு மணி முதல், இரண்டு மணி வரை என, குறைக்கப்பட்டது. இந்நிலையில், 'மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது; அனல் மின் நிலையங்களில், தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய, தினமும், 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. அதை, உடனே வழங்கவிட்டால், அனல் மின் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி, அவசர கடிதம் எழுதியுள்ளார். நேற்று காலை நிலவரப்படி, அனல் மின் நிலையங்களில், 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது. அதை பயன்படுத்தி, நாளை வரை மின் உற்பத்தி செய்யலாம். ஒடிசாவில் உள்ள, பரதீப் துறைமுகத்தில் இருந்து, நிலக்கரி வருவதிலும்
தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை முதல், அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதித்தால், மின் தடை நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிலக்கரி தட்டுப்பாட்டால், அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதித்தால், மின் தடை செய்வதை தவிர, வேறு வழியில்லை' என்றார்.

மிச்சமாகி இருக்கும்! :

நடப்பு காற்றாலை சீசனில், எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிக மின்சாரம் கிடைத்தது. கடந்த காலங்களை விட, மின் வாரியம், இந்த சீசனில், அதிக காற்றாலை மின்சாரத்தை வாங்கினாலும், முழுவதுமாக பயன்படுத்தவில்லை. அவ்வாறு, அந்த மின்சாரத்தை முழுவதும் பயன்படுத்தி இருந்தால், அனல் மின் உற்பத்தியை வெகுவாக குறைத்திருக்கலாம். இதன் வாயிலாக, நிலக்கரியை மிச்சப்படுத்தியிருக்க முடியும். தற்போது, அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.- நமது நிருபர் -
எம்.எட்., படிப்பில் முறைகேடு: மாணவர்கள் தில்லுமுல்லு

Added : செப் 15, 2018 23:21

 
எம்.எட்., படிப்பில், தனியார் கல்லுாரிகளில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக, பல்கலை கண்டுபிடித்துள்ளது.பி.எட்., - எம்.எட்., படிப்பில் சேரும் மாணவர்கள், கல்லுாரிகளில் நடக்கும் வகுப்புகளில், தினமும் பங்கேற்க வேண்டும்; பின் தேர்வு எழுதி, சான்றிதழ் பெற வேண்டும். அப்படி பட்டம் பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணியில் முன்னுரிமை தரப்படுகிறது.இரண்டு ஆண்டு காலம்ஆனால், ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கான, இரண்டு ஆண்டு காலத்தை, படிப்புக்கு மட்டும் பயன்படுத்தாமல், பள்ளிகளில் வேலை செய்து கொண்டே, பலர் படிக்கின்றனர். அதனால், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பில் சேருவோர், கல்லுாரிக்கு தினமும் செல்லாமல், வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே செல்கின்றனர். இருப்பினும், தினமும் வகுப்புகளில் பங்கேற்றதாக, போலி சான்றிதழ் பெற்று, தனியார் கல்லுாரிகள் வழியாக, தேர்வு எழுதி வந்தனர்.

முறைகேடு

பி.எட்., படிப்பில், இந்த முறைகேடு நடந்ததாக, ஆசிரியர் கல்வியியல் பல்கலை, கடந்த கல்வி ஆண்டில் கண்டுபிடித்தது. இதையடுத்து, மாணவர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு முறை அமலானது.இந்நிலையில், எம்.எட்., படிப்பிலும், இதே தில்லுமுல்லு நடந்திருப்பதை, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை கண்டுபிடித்துள்ளது. எம்.எட்., படிப்புக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, தனியார் சுயநிதி கல்லுாரிகளில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இருந்தும், கடந்த கல்வி ஆண்டில், அதிக கட்டணம் வசூலித்த சுயநிதி கல்லுாரிகளில், எம்.எட்., படிப்பில், காலியிடங்களே இல்லாத அளவுக்கு, அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். குறைந்த கட்டணம் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தது.பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், மாணவர்கள் இன்றி, இடங்கள் காலியாக இருந்தன. குறைந்த கட்டணத்தில் உள்ள, அரசு கல்லுாரிகளில் சேராமல், தனியார் கல்லுாரிகளில் சேர்ந்தது ஏன் என, பல்கலை நிர்வாகம் விசாரணை நடத்தியது.

தனியார் கல்லுாரிகள்

இதுகுறித்து, பல்கலை துணை வேந்தர் தங்கசாமி உத்தரவில், அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். அதில், தனியார் கல்லுாரிகள் சிலவற்றில், எம்.எட்., படிப்பில் முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. அதாவது, பட்டதாரிகள் பலர், பள்ளிகளில் பணியாற்றிபடி, தனியார் கல்லுாரிகளில் எம்.எட்., சேர்ந்து, வகுப்புக்கு வராமல் இருந்துள்ளனர்.அவர்களுக்கு, தினமும் வகுப்புக்கு வந்தது போல, போலி வருகைப்பதிவு அளித்து, தேர்வு எழுத வைத்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து, சில கல்லுாரிகளுக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. விரைவில், அந்த கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. - நமது நிருபர் -
புதிய கட்டுப்பாடு அமல்!

மோசடியை கட்டுப்படுத்த, புதிய கட்டுப்பாட்டை, கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு கல்லுாரியிலும், எம்.எட்., படிப்பை நடத்துவதற்கு, குறைந்தபட்சம், 10 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த, 10 பேரின் பட்டியலுடன், அவர்களின் கல்வி சான்றிதழ்களையும், பல்கலையில் தாக்கல் செய்ய வேண்டும்.பின், பல்கலைகளின் அனுமதியை பெற்று, அவர்களை கல்லுாரிகளில் நியமிக்க வேண்டும். அதற்கு பிறகே, மாணவர்களை சேர்க்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியையும், கல்லுாரிகள் பெற வேண்டும் என, பல்கலை பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் கூறியுள்ளார்.

NEWS TODAY 01.07.2026