Sunday, September 16, 2018

படிப்பை பாதியில் விட்ட மாணவன்: டி.சி., வழங்க உத்தரவு

Added : செப் 15, 2018 23:16

சென்னை, : ஹோமியோபதி மருத்துவ படிப்பை, பாதியில் கைவிட்ட மாணவனுக்கு, மாற்று சான்றிதழ் வழங்கும்படி, கல்லுாரி நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உயர் நீதிமன்றத்தில், கபில்தேவ் என்பவர் தாக்கல் செய்த மனு:கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே உள்ள, மரியா ஹோமியோபதி மருத்துவ கல்லுாரியில், ௨௦௧௬ - ௧௭ம் ஆண்டில் சேர்ந்தேன்.முதல் ஆண்டு முடித்த பின், உடல் நல பிரச்னை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, இரண்டாம் ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால், படிப்பை தொடர முடியவில்லை.மாற்று சான்றிதழ்மாற்று சான்றிதழ் வழங்கும்படி, கல்லுாரி நிர்வாகத்திடம் கேட்டேன். மீதி உள்ள மூன்றரை ஆண்டுகளுக்கான கட்டணத்தை யும் செலுத்தும்படி, நிர்வாகம் கூறியது.மேலும், அபராத தொகையை செலுத்திய பின், மாற்று சான்றிதழ் பெற்று கொள்ளும்படி, என் பெற்றோரையும், நிர்வாகம் வற்புறுத்தியது.கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருக்கு, ௨௦௧௮ ஜூனில் மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாற்று சான்றிதழ் வழங்கும்படி, கல்லுாரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மரியா கல்லுாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'கவுன்சிலிங்கில், மனுதாரருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டில், கல்லுாரியை விட்டு சென்று விட்டார்.'படிப்பை பாதியில் விட்டு சென்றால், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, விளக்க குறிப்பேட்டில் உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.மனுவை, நீதிபதிபாரதிதாசன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எம்.ராஜேந்திரன் ஆஜரானார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கல்லுாரியை விட்டு பாதியில் சென்றால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, விளக்க குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.ஆனால், அபராத தொகையை செலுத்தத் தவறினால், மாணவர்களின் சான்றிதழ்களை தக்க வைத்துக் கொள்ள, கல்லுாரிக்கு அதிகாரம் உள்ளது என்று, விளக்கக் குறிப்பேட்டில், எந்த விதியும் இல்லை.வழக்குஎனவே, மனுதாரரின்சான்றிதழ்களை, கல்லுாரிவசம் வைத்துக் கொள்ள முடியாது. அபராத தொகையை வசூலிக்க விரும்பினால், உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.இரண்டு வாரங்களில், மாற்று சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை, மனுதாரருக்கு, கல்லுாரி நிர்வாகம் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...