Sunday, September 16, 2018

கிளீனிக்கில் சிறுவன் பலி: அரசு டாக்டர் கைது

Added : செப் 16, 2018 02:46

காட்பாடி, தனியார் கிளீனிக்கில் சிறுவன் இறந்ததால், அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார்.வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக அர்ச்சுணன், 50, பணியாற்றி வருகிறார். திருவலத்தில், ஜீவன் என்ற கிளீனிக்கையும், அவர் நடத்தி வருகிறார்.கார்ணாம்பட்டு அடுத்த, ஆழ்வார்தாங்கலைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் கரண்குமார், 11.வயிற்று வலியால் அவதிப்பட்ட கரண்குமாரை, ஜீவன் கிளீனிக்குக்கு, பெற்றோர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அர்ச்சுணன், சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.பெற்றோர் சம்மதத்துடன், நேற்று முன் தினம் மாலை, 4:00 மணிக்கு, கரண்குமாருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், பெற்றோருக்கு தெரிவிக்காமல், தன் காரில், மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு, அர்ச்சுணன் கொண்டு சென்றார்.அங்கு, சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் இறந்து விட்டதாக, தெரிவித்தனர்.தன் காரில் சிறுவனின் உடலை வைத்துக் கொண்டு, வேலுார், கார்ணாம்பட்டு என, அர்ச்சுணன் சுற்றிக் கொண்டே இருந்தார்.இதையறிந்த, சிறுவனின் பெற்றோர், உறவினர்கள், பைக்கில் விரட்டிச் சென்று,கார்ணாம்பட்டு குளம் அருகே, இரவு, 10:00 மணிக்கு, காரை மடக்கினர். சடலத்தை காரிலேயே விட்டு விட்டு, வேறொரு காரில், டாக்டர் தப்பினார்.நேற்றிரவு, 11:00 மணிக்கு, சடலத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். டாக்டரை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததால், நேற்று காலை, 2:00 மணிக்கு, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். நேற்று மதியம், 2:00 மணிக்கு, வேலுாரில் பதுங்கியிருந்த டாக்டர் அர்ச்சுணனை, திருவலம் போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...