Saturday, September 22, 2018

அவர்கள் பாக்கியசாலிகள்

By ம. அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 21st September 2018 01:51 AM 

நம் மக்கள் கையில் அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்') கிடைத்தாலும் கிடைத்தது, சமூக வலைதளங்கள் மூலம் ஒருவரையொருவர் தூற்றிக் கொள்வதற்கும், விமர்சனங்களை அள்ளி விடுவதற்கும் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல சாடுவதற்கும், தூற்றுவதற்கும் தயாராகி விடுகின்றனர். ஒரு சிறு செய்தி கிடைத்தால் போதும், அவரவர் தாங்களே பஞ்சாயத்து தலைவர் போலவும், நீதிபதி போலவும் தீர்ப்பு சொல்ல ஆரம்பித்துவிடுகின்றனர்.
சம்பந்தப்பட்டவர்களை இவர்கள் நார், நாராய்க் கிழிப்பது போதாதென்று, காட்சி ஊடகங்களும் தங்கள் பங்குக்கு காலையில் இருந்து இரவு வரையிலும், சில நேரங்களில் நாட்கணக்கிலும்கூட அந்த சாதாரண செய்தி பற்றியே பேசித் தீர்க்கின்றனர். இழந்துவிட்டால் திரும்பக் கிடைக்க முடியாத நேரம் வீணாகப் போகிறதே என்று யாரும் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. 

அடுத்தவர் விவகாரங்களை அறிவதில்தான் மக்களுக்கு எத்துணை ஆர்வம்? யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று கூறுவதுபோல இம்மாதிரியான தகவல்களை தாங்கள் பார்த்து ரசிப்பது மட்டுமின்றி இதனை ஒரு சேவையாகக் கருதி மற்றவர்களுக்கும் பகிர்கிறார்கள். பெரியவர்கள் இம்மாதிரியான செய்திகள், விவாதங்களை குழந்தைகளுடன் பார்க்கும்பொழுது கொலை, கொள்ளை, கூடாவொழுக்கம் ஆகியவை பற்றி எதுவுமே தெரியாத இளம் சிறார்கள் மனதில் படிப்படியாக நச்சு விதை விதைக்கப்படுகிறது. 

நல்ல விஷயங்களை நாள் கணக்கில் பேசுவதிலும், விவாதிப்பதிலும் தவறொன்றும் இல்லை. அதனால் நன்மைகள் விளையவில்லையென்றாலும், தீமைகள் ஏற்படப்போவதில்லை. செல்லிடப்பேசியில் அழைப்பொலி கேட்கவேண்டாம் என்று நாம் நினைக்கும் போது சப்தத்தை முடக்கும் (வைப்ரேஷன்') முறையைத் தேர்வு செய்கிறோம்.

அது போல நல்ல செய்திகளை மூளை உடனே பதிவு செய்தாலும், செயல்படுத்துவதற்கான வழியை மனம் அவ்வளவு சீக்கிரம் தெரிவு செய்வதில்லை. ஆனால் கெட்ட விஷயங்களை மூளை பதிவு செய்துவிடும் அதே வேகத்தில் செயல்படுத்தத் தயாராகி விடுகிறது. திரும்பத் திரும்ப அவற்றைக் கேட்கும்போது, பார்க்கும்போது தவறு அரங்கேறிவிடுகிறது.
தவறு செய்பவர்களைத் தண்டிக்க, சட்டம் இருக்கிறது, காவல்துறையினர் இருக்கின்றனர். சட்டம் தரும் தண்டனையை விடக் கொடுமையானது இவர்களைப் பற்றிய மக்களின் விமர்சனங்கள்தாம். தவறு நடந்ததை நேரில் பார்த்தது போல் தவறு செய்து பிடிபட்டவர்களின் மீது ஆங்காரம் கொள்கிறார்கள். அத்துடன் நில்லாமல் அவர்களின் அந்தரங்களை பொதுவெளியில் விவாதப் பொருளாக்குகிறார்கள். இது நாகரிக வளர்ச்சி அடைந்த சமுதாயத்திற்கு அழகல்ல. 

இப்படிப்பட்ட விமர்சனங்களால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மனம் என்ன பாடுபடும் என்றும் அவர்கள் வெளியில் எப்படித் தலை காட்டுவர் என்பதையும், மற்றவர்களின் கேலியும், கேள்விக்கணைகளும் அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சளைத் தரும் என்பதையும் மனிதநேயத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படிப்பட்ட அணுகுமுறை தவறு செய்பவர்களைத் திருத்துவதற்கு நிச்சயமாக உதவாது. தவறு செய்யாதவர்களையும், தவறு செய்யத் தூண்டுவதாகவே அமையும். 

தாயன்பிற்கு ஈடு இணை கிடையாது. இதற்கு, களங்கம் கற்பிக்கும் வகையில் மோக வலையில் சிக்கி பெற்ற குழந்தைகளைக் கொன்ற தாய், தன் கவனக்குறைவால்தான் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தண்ணீரில் தவறி விழுந்து இறந்து விட்டனர் என்ற குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்து கொள்ளும் தாய், குழந்தைகளின் மனம் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்பதற்காக கொடூரமான கணவனைச் சகித்துக் கொண்டு வாழும் பெண்கள் என முற்றிலும் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட கலப்பு (கலப்பட) சமுதாயமாக நம் சமுதாயம் மாறி விட்டது.

முன்பெல்லாம் ஒருவரிச் செய்தியாக பத்திரிகைகளில் வலம் வந்தவை இன்று பக்கம், பக்கமாக, அடுத்தடுத்த நாட்களில் கூட விரிவாகப் பேசப்படுகிறது. தான் மட்டும் சரியாக நடப்பதாக ஒவ்வொருவரும் எண்ண ஆரம்பித்துவிட்டதால், பக்கத்து வீட்டுக்காரர்கள் முதற்கொண்டு சொந்தக்காரர்கள், அரசியல்வாதிகள் வரை யாருமே சரியில்லை என்று புலம்புகிறார்கள். தம் முதுகில் என்ன இருக்கிறதென்பது யாருக்கும் தெரியாது என்னும் சொலவடை, நாம் செய்யும் தவறுகளை நாம் உணர்ந்து கொள்வதில்லை என்பதைத்தான் குறிப்பிடுகிறது. 

அடுத்தவர் மீது குற்றம் சாட்டுவோர், தாம் சரியாக இருக்கின்றோமா என்பதை மட்டும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் மீது கல்லெறிவதற்கு தயாரான கூட்டத்தினரிடம் உங்களில் யார் எந்தத் தவறுமே செய்யவில்லையோ அவர்கள் மட்டுமே கல்லெறியட்டும்' என்று இயேசுநாதர் சொல்வதாக பைபிள் கதை ஒன்று உண்டு. 

ஒவ்வொருவரும் தத்தம் குறைகளை சீர் தூக்கிப் பார்த்துக் களைந்து கொண்டால் நாட்டில் குறை சொல்வோர் கூட்டம் குறைந்துவிடும்.
நம் நேரத்தை வீணடிக்கக்கூடிய மனதைப் பாதிக்கக்கூடிய இது மாதிரியான விமர்சனம், விவாத அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து தப்பிப்பவர்கள் தொலைக்காட்சி, அறிதிறன்பேசி போன்ற வசதிகள் இல்லாதவர்கள்தாம். அவர்கள் பாக்கியசாலிகள்.

போ சான்றிதழ் கொடுத்து டில்லியில் படிக்கும் மாணவர்

Added : செப் 22, 2018 05:37

வேலுார்: போலி சான்றிதழ் கொடுத்து, டில்லியில் படித்து வரும் மாணவன் குறித்து, திருவள்ளுவர் பல்கலை அம்பலப்படுத்தியுள்ளது.டில்லியை சேர்ந்த, ஹன்கிவ் பைசோயா, 22, என்ற மாணவன், டில்லி பல்கலைக்கழகத்தில், புத்த மத சம்பந்தமான, எம்.ஏ., படிப்பு படித்து வருகிறான். இவன், இளங்கலை, பி.ஏ., படிப்பு சான்றிதழ் மூலம், டில்லி பல்கலையில் சேர்ந்துள்ளான். இவனது இளங்கலை சான்றிதழ், வேலுார், திருவள்ளுவர் பல்கலையில் படித்து வாங்கப்பட்டதாக உள்ளது.கடந்த மாதம் நடந்த தேர்தலில், இவன் பல்கலை மாணவர் அமைப்பு தலைவனாக தேர்வு செய்யப்பட்டான்

. அப்போது, இவனது சான்றிதழ்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பி.ஏ., கல்வி சான்றிதழில், சில முரண்பாடு இருப்பது தெரிந்தது.இந்த விபரம், அங்குள்ள இந்திய தேசிய மாணவர் அமைப்பு மூலம், தமிழ்நாடு, காங்., கமிட்டிக்கு தெரிந்தது.இதனால், மாணவனின், பி.ஏ., சான்றிதழ் உண்மை தன்மை குறித்து தகவல் தெரிவிக்கும்படி, தமிழ்நாடு, காங்., கமிட்டி, எஸ்.சி., பிரிவில் இருந்து, வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.அதில் மாணவனின், பி.ஏ., சான்றிதழ் நகல் இணைக்கப்பட்டிருந்தது. அதை பரிசோதித்ததில், போலி என, தெரிந்தது.இது குறித்து, திருவள்ளுவர் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்குமார், நேற்று கூறியதாவது:டில்லி மாணவர் வைத்துள்ள, பி.ஏ., சான்றிதழ் போலியானது. 

அவர், 2013 - 16ம் ஆண்டு வரை திருவள்ளுவர் பல்கலையில் படித்து, சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.அந்த காலத்தில், அவர் இங்கு படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பெயர், பதிவு எண் இல்லை. அவர், எந்த பிரிவை தேர்வு செய்து படித்தார் என்ற விபரமும் இல்லை.இதன் மூலம் மாணவர், திருவள்ளுவர் பல்கலை பெயரில் போலியான சான்றிதழ் தயாரித்து, டில்லி பல்கலையில் சேர்ந்துள்ளார். இந்த விபரம், மாநில, காங்., கமிட்டி, எஸ்.சி., பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.பூதாகரமாக கிளம்பியுள்ள இந்த விவகாரம் குறித்து, டில்லி போலீசார், டில்லி பல்கலைக்கழகம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது.விரைவில், மாணவன் சமர்ப்பித்த, பி.ஏ., சான்றிதழுடன், பல்கலை அதிகாரிகள், டில்லி போலீசார், வேலுாருக்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாணவர் அமைப்பு தலைவன் பதவியில் இருந்து, ஹக்கிவ் பைசோயா நீக்கப்படுவான் என, தெரிகிறது.
ராஜகம்பீரத்தில் 25 மயில்கள் பலி

Added : செப் 22, 2018 00:16

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் 25 க்கும் மேற்பட்ட மயில்கள் பலியாகி கிடந்தன. ராஜகம்பீரத்தில் சந்திரன், 50, என்பவர் 3 ஏக்கரை குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் செய்து வருகிறார். நேற்று அந்த பகுதியில் 25 க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனை பார்த்தவர்கள்மயில்களை ஒரே இடத்தில் குவித்து விட்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இரவு 7:00 மணிக்குள் மர்ம நபர்கள் மயில்களை அப்புறப்படுத்தி விட்டனர். வனத்துறையினர் நடவடிக்கை கோரிக்கை எழுந்துள்ளது.
கூரியர் நிறுவனம் சேவை குறைபாடு இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

Added : செப் 22, 2018 00:54


கோவை:சேவை குறைபாடு செய்த கூரியர் நிறுவனம் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவை, ராமநாதபுரம், திருச்சி ரோட்டை சேர்ந்த வக்கீல் முத்துவிஜயன், பங்கஜா மில் ரோட்டில் உள்ள, 'புரொபஷனல்' கூரியர் மூலமாக, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியை சேர்ந்த ஜேக்கப் என்பவருக்கு, 2014, ஜூலை, 25ல் தபால் அனுப்பினார். குறிப்பிட்டதேதியில் கடிதம் சென்றடையவில்லை. கூரியர் நிறுவனத்தினர், 28ம் தேதிக்குள் கிடைத்து விடும் என்றனர். அந்த தேதியிலும் கூரியர் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட முத்துவிஜயன், கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.ஜேக்கப் என்பவருக்கு கூரியர் கிடைக்காததால்,சென்னையில் நடக்க இருந்த நேர்முக தேர்வில், அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக, மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.விசாரித்த நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரன் அளித்த தீர்ப்பில், 'கூரியர் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மனுதாரருக்குஇழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு தொகை 2,500 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

இன்று புரட்டாசி 'முதல்' சனி: பெருமாளை தரிசிக்கலாம் வாங்க

Added : செப் 22, 2018 01:20



ஸ்ரீவில்லிபுத்துார்:புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு மிக்கது. அதிலும் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாசபெருமாளை தரிசிப்பது என்பது அதனினும் சிறப்பு. 

புரட்டாசி மாதத்தில் பல்லாயிரம் மக்களுக்கு மத்தியில் தரிசிப்பது வாழ்வின் பெரும்சிறப்பு. மாதங்களில் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் தான் பிரம்மோத்ஸவ விழா 108 திவ்யதேசங்களில் வெகுசிறப்புடன் நடக்கிறது. இம்மாதத்தில் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து பெருமாளை வணங்கினால் வாழ்வில் வளம் பெருகும். உடல் நலன் மேம்படும். வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

இத்தகைய சிறப்பு மிக்க புரட்டாசி சனி உற்சவங்கள் இன்று துவங்குகிறது. அதிலும் தென்திருப்பதி என்றழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாளை படியேறி பக்தியுடன் தரிசித்தால் வாழ்வில் மேலும் நன்மைகள் உண்டாகும். அதனால் தான் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள், ஐந்து சனிக்கிழமைகள் தோறும் பெருமாளை தரிசிக்க படியேறி வருகின்றனர். 

அதிலும் அதிகாலையில் நடை திறந்தவுடன் பெருமாளின் திவ்யதரிசனம் காண்பதற்கு, அளவில்லா பக்தியுடனும், ஆனந்த மகிழ்வுடனும், கோவிந்தா, கோபாலா கோஷத்துடனும் தரிசிப்பது பக்தியின் உயர்ந்த மாண்பை வெளிப்படுத்துகிறது.பெருமாளை சில நிமிடம் தரிசித்தாலே வாழ்வின் பெருவளங்கள் பெறலாம்.
தமிழக அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வுக்கு புது முடிவு

Added : செப் 21, 2018 23:52

சென்னை: அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில், பிற மாநில டாக்டர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு பார்க்க, ஆய்வு கமிட்டி முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு கோரி, தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், 20 ஆயிரம் டாக்டர்கள், போராடி வருகின்றனர். இதையடுத்து, அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு குறித்து ஆராய, சுகாதாரத் துறை கூடுதல்செயலர், நாகராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு டாக்டர்களால், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றவோ, கிளினிக் நடத்தவோ முடியாது. தமிழக அரசு டாக்டர்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பின், தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றுகின்றனர்.இதனால் அவர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் அளிப்பது சாத்தியமில்லை.எனவே, மற்ற மாநிலங்களில், அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், தமிழக அரசு டாக்டர்கள் பெறும் சம்பளத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். அதன்பின், அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு குறித்து, தமிழக நிதித்துறைக்கு பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மாணவர் பிறந்த தேதி சரிபார்க்க உத்தரவு

Added : செப் 21, 2018 23:48

சென்னை: பொது தேர்வு எழுதவுள்ள, மாணவர்களின் பிறந்த தேதியை சரிபார்க்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களே, ஒவ்வொரு மாணவருக்கும், அவரது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு கணக்கில் எடுக்கப்படுகிறது. இந்த சான்றிதழில் உள்ள, பிறந்த தேதி அதிகாரபூர்வமானதாக கருதப்படுகிறது. எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ்களில், பிறந்த தேதி தவறாக உள்ளவர்கள், திருத்தம் கேட்டு, தேர்வுத்துறைக்குவிண்ணப்பிக்கின்றனர்.இந்நிலையில், புதிய சான்றிதழ்களை, தவறுகள் இன்றி வழங்க, அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் மற்றும் சுய விபரங்களை, அரசு தேர்வுத்துறையின் இணையத்தில், சரியாக பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு, 2019 மார்ச், 1ல், 14 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.அதேபோல, பிறந்த தேதியை பல முறை சரிபார்த்து, தவறின்றி பதிவு செய்ய வேண்டும். வரும் காலங்களில், சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்ற அனுமதிக்கப்படாது. எனவே, தலைமை ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...