Saturday, September 22, 2018

ராஜகம்பீரத்தில் 25 மயில்கள் பலி

Added : செப் 22, 2018 00:16

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் 25 க்கும் மேற்பட்ட மயில்கள் பலியாகி கிடந்தன. ராஜகம்பீரத்தில் சந்திரன், 50, என்பவர் 3 ஏக்கரை குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் செய்து வருகிறார். நேற்று அந்த பகுதியில் 25 க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனை பார்த்தவர்கள்மயில்களை ஒரே இடத்தில் குவித்து விட்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இரவு 7:00 மணிக்குள் மர்ம நபர்கள் மயில்களை அப்புறப்படுத்தி விட்டனர். வனத்துறையினர் நடவடிக்கை கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...