Saturday, September 22, 2018


போ சான்றிதழ் கொடுத்து டில்லியில் படிக்கும் மாணவர்

Added : செப் 22, 2018 05:37

வேலுார்: போலி சான்றிதழ் கொடுத்து, டில்லியில் படித்து வரும் மாணவன் குறித்து, திருவள்ளுவர் பல்கலை அம்பலப்படுத்தியுள்ளது.டில்லியை சேர்ந்த, ஹன்கிவ் பைசோயா, 22, என்ற மாணவன், டில்லி பல்கலைக்கழகத்தில், புத்த மத சம்பந்தமான, எம்.ஏ., படிப்பு படித்து வருகிறான். இவன், இளங்கலை, பி.ஏ., படிப்பு சான்றிதழ் மூலம், டில்லி பல்கலையில் சேர்ந்துள்ளான். இவனது இளங்கலை சான்றிதழ், வேலுார், திருவள்ளுவர் பல்கலையில் படித்து வாங்கப்பட்டதாக உள்ளது.கடந்த மாதம் நடந்த தேர்தலில், இவன் பல்கலை மாணவர் அமைப்பு தலைவனாக தேர்வு செய்யப்பட்டான்

. அப்போது, இவனது சான்றிதழ்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பி.ஏ., கல்வி சான்றிதழில், சில முரண்பாடு இருப்பது தெரிந்தது.இந்த விபரம், அங்குள்ள இந்திய தேசிய மாணவர் அமைப்பு மூலம், தமிழ்நாடு, காங்., கமிட்டிக்கு தெரிந்தது.இதனால், மாணவனின், பி.ஏ., சான்றிதழ் உண்மை தன்மை குறித்து தகவல் தெரிவிக்கும்படி, தமிழ்நாடு, காங்., கமிட்டி, எஸ்.சி., பிரிவில் இருந்து, வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.அதில் மாணவனின், பி.ஏ., சான்றிதழ் நகல் இணைக்கப்பட்டிருந்தது. அதை பரிசோதித்ததில், போலி என, தெரிந்தது.இது குறித்து, திருவள்ளுவர் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்குமார், நேற்று கூறியதாவது:டில்லி மாணவர் வைத்துள்ள, பி.ஏ., சான்றிதழ் போலியானது. 

அவர், 2013 - 16ம் ஆண்டு வரை திருவள்ளுவர் பல்கலையில் படித்து, சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.அந்த காலத்தில், அவர் இங்கு படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பெயர், பதிவு எண் இல்லை. அவர், எந்த பிரிவை தேர்வு செய்து படித்தார் என்ற விபரமும் இல்லை.இதன் மூலம் மாணவர், திருவள்ளுவர் பல்கலை பெயரில் போலியான சான்றிதழ் தயாரித்து, டில்லி பல்கலையில் சேர்ந்துள்ளார். இந்த விபரம், மாநில, காங்., கமிட்டி, எஸ்.சி., பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.பூதாகரமாக கிளம்பியுள்ள இந்த விவகாரம் குறித்து, டில்லி போலீசார், டில்லி பல்கலைக்கழகம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது.விரைவில், மாணவன் சமர்ப்பித்த, பி.ஏ., சான்றிதழுடன், பல்கலை அதிகாரிகள், டில்லி போலீசார், வேலுாருக்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாணவர் அமைப்பு தலைவன் பதவியில் இருந்து, ஹக்கிவ் பைசோயா நீக்கப்படுவான் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...