Tuesday, September 25, 2018


பெண்களும் பணி வாய்ப்பும்

By பா. ராஜா | Published on : 25th September 2018 01:36 AM |

 பெண்கள் பள்ளிப் படிப்போடு நின்றுவிட்ட காலம் போய், ஆராய்ச்சிப் படிப்பு வரை பயின்று, உயர்நிலையை அடைந்து வருகின்றனர்; குடும்ப நிர்வாகத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ அனைத்திலும் ஆண் பணியாளர்களைவிட பெண் பணியாளர்களே அதிகம். நிர்வாகங்களும், பெண் பணியாளர்களால் பிரச்னை ஏதும் ஏற்படாது என்பதால், பெண் பணியாளர்களையே அதிகம் பணியமர்த்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றன. அப்படி இருந்தும், பெண்களுக்குப் பணியிடங்களில் பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதை மெய்ப்பிக்கும் விதமாக, பல்வேறு பணியிடங்களிலும் பணிபுரியும் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

முன்பு மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கையில் 30 சதவிகிதமாக இருந்த பெண் பணியாளர்கள், கடந்த ஓராண்டில் சுமார் 25 சதவிகிதமாகக் குறைந்துள்ளனர் என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார்

கங்குவார் தெரிவித்துள்ளார். நாட்டில் பணிபுரிவோர்-வேலையில்லாதோர் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த ஆய்வில், 2015-16-ஆம் நிதியாண்டில் 29.6 சதவிகிதமாக இருந்த பெண் பணியாளர்கள் எண்ணிக்கை 2016-17-ஆம் நிதியாண்டில் 25.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, ஹிமாசலத்தில் ஓராண்டில் சுமார் 45 சதவிகித அளவுக்கு பெண்கள் பணியிலிருந்து விலகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் ஓராண்டில் 18 சதவிகித அளவுக்கு பெண்கள் பணியிலிருந்து விலகியுள்ளனர். இந்தப் பெண் பணியாளர்கள் எதற்காக பணியைத் துறந்தனர் என்ற காரணம் முழுமையாகத் தெரியவில்லை என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் அதிக அளவில் பெண் பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, நாகாலாந்து, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்களே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெண் பணியாளர்கள் எண்ணிக்கையில் மிசோரம் முதலிடத்திலும், ஜம்மு-காஷ்மீர் கடைசி இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த சரிவு இப்போது ஏற்பட்டதல்ல, கடந்த 20 ஆண்டுகளாகவே பெண் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்தியாவில் 2007-இல் 33.34 சதவிகிதமாக இருந்த பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 2010-இல் 28.58 சதவிகிதமாகவும், 2014-இல் 26.69 சதவிகிதமாகவும், 2016-இல் 26.91 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. இந்தியாவில், விவசாயப் பணி, பொருள் உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறை, சுரங்கத் தொழில், கட்டுமானம், போக்குவரத்து என பல்வேறு துறைகளிலும் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரேசில், ரஷியா, நேபாளம், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. பெண்கள் அன்பு, கருணை கொண்டவர்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்கள். தற்போது, குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு ஆகியவை பெரிய அளவில் தொழிலாக வளர்ந்து வருகிறது. வீடுகளில் இதை ஊதியமில்லாத் தொழிலாக பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும், இந்தப் பராமரிப்பு சேவைத் தொழிலுக்கு வளமான எதிர்காலம் உள்ளது என்று பன்னாட்டு தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

2030-இல் குழந்தை, முதியோர் பராமரிப்புப் பணிகளில் பன்னாட்டு அளவில் சுமார் 27 கோடி பேர் ஈடுபடுவர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகள், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாகும். இந்நிலையில், பெண் பணியாளர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.

பெண்கள், கல்வி, வேலைவாய்ப்பில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்களை மானிய உதவியுடன் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் ஒரு திட்டம்தான் தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (தீனதயாள் அந்த்யோதயா யோஜனா). பெண்கள் திட்டங்களைத் தொடங்கி, வருவாய் ஈட்டுவதற்கு இத்திட்டம் வழிவகை செய்கிறது. ஆயினும், இத் திட்டத்தின்கீழ் பெண்கள் தொழில்களைத் தொடங்கினாலும், அவர்களுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள இத்தகைய திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், பெண்கள் தங்களது வருவாயைப் பெருக்கி, கடன் பிரச்னையில் இருந்து விடுபடுகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இடையே ஏற்படும் கசப்பான அனுபவங்கள் அவர்கள் ஈடுபட்டு வரும் தொழில் திட்டத்தைப் பாதியில் விடத் தூண்டுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பணி வாய்ப்புப் பெற்று, பொருள் ஈட்டுவதற்குத்தான் கல்வி என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதைக் கருத்தில் கொண்டே, ஏராளமான இளைஞர்களும் இளம்பெண்களும் உயர் பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு, பணி வாய்ப்பு இல்லாமல், கிடைத்த பணிகளைச் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏற்கெனவே பணியில் இருக்கும் பெண்களும் பணி விலகிச் செல்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் பணி விலகிச் செல்வதற்கான காரணத்தை உடனே கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண வேண்டும்.
பெரும்பாக்கம் கு.மா.வா., வீடுகளில் பரவுது மர்ம காய்ச்சல்!'சுகாதாரம்னா என்ன'ன்னு கேட்கும் மக்கள்

Updated : செப் 24, 2018 22:29 | Added : செப் 24, 2018 22:27





பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், துப்புரவு, சுகாதார பணிகள் சரியாக இல்லாததால், மக்கள் மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதி மக்கள், ஊராட்சிக்கு வரி செலுத்தி வரும் நிலையில், மாநகராட்சி துப்புரவு பணி செய்வதால், பணி சரியாக நடக்காமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களை, மாநகராட்சியுடன் இணைத்தால் தான் பிரச்னை தீரும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பொருளாதாரத்தில் நலிவடைந்து, வீடுகளின்றி, அரசு புறம்போக்கு நிலங்கள், ஏரி, கால்வாய், ஆற்றங்கரை பகுதிகளை ஆக்கிரமித்து, குடிசை அமைத்தவர்களுக்கு, மாற்று இடம் வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி, குடிசை மாற்று வாரியம் மூலம், பெரும்பாக்கத்தில், 200 ஏக்கர் பரப்பளவில், 1,200 கோடி ரூபாயில், 20 ஆயிரத்து, 376 வீடுகளுடன் கூடிய, மெகா மறுகுடியமர்வு திட்டம், 2009ல் துவங்கப்பட்டது.இதன்படி, 2015- - 16ல், தெற்கு பகுதியில் உள்ள, 6,000 வீடுகளில், பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுத்த பயனாளிகள், மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு பகுதியில், 2017- - 18ல், 3,000 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, சமுதாயக்கூடம், பேருந்து நிலையம், வணிக வளாகம், ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.பள்ளி, வணிக வளாகம் கட்டும் பணி, நிலுவையில் உள்ளது. அனைத்து வசதிகள் இருந்தும், துப்புரவு, சுகாதார பணியில், போதிய கவனம் செலுத்தாததால், நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.
பிரச்னைகள்

 இங்குள்ள அனைத்து வீடுகளிலும், மறுகுடியமர்வு வரும்போது, குடிசை மாற்று வாரிய பகுதியில் மட்டும், மக்கள் தொகை ஒரு லட்சத்தை தாண்டும். இது, ஒரு நகராட்சியின் மக்கள் தொகை. இந்த குடியிருப்புகள், காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி எல்லையில் உள்ளது. அங்குள்ள, 23 ஊழியர்களை கொண்டு, ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட, குடிசை மாற்று வாரிய மக்களுக்காக சேவை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மறுகுடியமர்வு செய்ய துவங்கியபோது, துப்புரவு மற்றும் சுகாதார பணியை, மாநகராட்சி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதுவும், 2015ல், குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரிகளின், வாய்மொழி உத்தரவில், மாநகராட்சி இந்த பணியை செய்ய துவங்கியது. சோழிங்கநல்லுார் மண்டலத்தில் உள்ள, 200வது வார்டில் உள்ள, துப்புரவு ஊழியர்கள் மூலம், இந்த பணி நடக்கிறது. நாள் ஒன்றுக்கு, 6 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனால், முழுமையான துப்புரவுபணி நடைபெற வில்லை. மலேரியா ஊழியர்கள் குறைவாக உள்ளதால், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு, சுகாதார பணி மேற்கொள்ள முடியவில்லை. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. சுற்றி உள்ள, வடிகால், கால்வாயில் கழிவுநீர் அதிகமாக தேங்கி உள்ளதால், தொற்று நோய் பரவி வருகிறது. கடந்த இரண்டு மாதமாக, 25க்கும் மேற்பட்டோர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இணைப்பு என்னாச்சு? முழுமையான சேவை வழங்க, பெரும்பாக்கம் ஊராட்சி எல்லையில் உள்ள, 200 ஏக்கர் பரப்பளவில் கட்டிய குடியிருப்புகள் மற்றும் அதை சார்ந்த சேவை துறைகளை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கோப்புகள், தலைமை செயலகத்தில் துாங்கிக் கொண்டிருக்கின்றன. வீடு, பள்ளி, கல்லுாரி என, அனைத்து வசதிகளையும் செய்து, சுகாதாரத்தில் கவனம் செலுத்தாமல் நோய் பாதிப்பு அதிகரித்தால், மொத்த திட்டமும் கேள்விக்குறியாகி விடும். நிலைமையை உணர்ந்து, சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, முழு சேவை வழங்க வேண்டும் என, அங்கு வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போதுமான வசதிகள் இருந்தும், கொசு தொல்லை தாங்க முடியவில்லை. திறந்தவெளியில் கிடக்கும் பொருட்களில், தண்ணீர் தேங்கி கொசு அதிகரித்துள்ளது. ஊராட்சியில் வரி கட்டுகிறோம்; சேவை தருவதில்லை. குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. துப்புரவு பணியும், மேலோட்டமாக தான் நடக்கிறது.மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்கள்ஒரு கோடி ரூபாய்குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், மாநகராட்சியுடன் இணைந்தால், சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு, 1 கோடி ரூபாய்க்கு மேல், கூடுதல் வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆட்சியாளர்களுக்கு பயந்து, வாய்மொழி உத்தரவில் குப்பை அள்ளி வருகிறோம். இதனால், 200வது வார்டு பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆட்கள் அதிகரிக்கும் போது, பிரச்னை அதிகரிக்கும். உரிய உத்தரவு பிறப்பித்து, கூடுதல் ஊழியர்களை நியமித்தால் தான் நிலைமை சீராகும்.மாநகராட்சி அதிகாரிகள்

கட்டமைப்புகள் செய்து கொடுக்கத் தான் எங்களுக்கு உத்தரவு. இதர சேவைகளை, உள்ளாட்சி அமைப்பு தான் செய்ய வேண்டும். மாநகராட்சியுடன் இணைந்தால் தான், துப்புரவு, சுகாதார பிரச்னைக்கு விடிவு கிடைக்கும்.குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்

வரி ஊராட்சிக்குமறுகுடியமர்வு செய்யப்பட்ட, ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும், பெரும்பாக்கம் ஊராட்சியில், 330 ரூபாய் வீட்டு வரி கட்டி வருகின்றனர். ஊராட்சியில் இருந்து, எந்த அடிப்படை சேவையும் கிடைக்காமல், வரி மட்டும் கட்டுவதால், மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.-- நமது நிருபர்- -
மனைவியரை கைவிடும் என்.ஆர்.ஐ.,க்கள்

Added : செப் 25, 2018 06:35




புதுடில்லி: என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்கள் மனைவியரை கைவிடும் சம்பவங்கள், கவலை அளிப்பதாக, டில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சகங்களிடம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, கருத்து கேட்டுள்ளார்.

போலி சான்றிதழ் விவகாரம்; அரசு டாக்டர்களுக்கு, 'சம்மன்'

Added : செப் 25, 2018 03:57

கோவை : போலி சான்றிதழ் விவகாரத்தில், அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர், விசாரணைக்கு ஆஜராக, கோவை அரசு மருத்துவமனைக்கு, போலீஸ், 'சம்மன்' அனுப்பியது.

போதை ஊசிகளை கடத்தி விற்றதாக, கோவையைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், முகமது ஷிகாப்புக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறி, ஜாமினில் விடுவிக்க தாக்கல் செய்த மனுவுடன், மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்பட்டது. அச்சான்றிதழ் போலி என தெரிந்ததால், தனியார் டாக்டர் ராமகிருஷ்ணன், அரசு டாக்டர்கள் உஷா, மன்சூர், மருத்துவமனை ஊழியர் பீர் முகமது, வக்கீல் ஜக்காரியா, முகமது ஷிகாப் சகோதரர் முகமது ஷாகித் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது.

அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர், விசாரணைக்கு ஆஜராக, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு, சம்மன் அனுப்பப்பட்டது.

அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக, டாக்டர்கள் இன்று ஆஜராகும்படி, போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். மருத்துவமனை ஊழியர், தலைமறைவாக உள்ளார். டாக்டர் மன்சூர், மருத்துவ விடுமுறையில் உள்ளார். டாக்டர் உஷாவும் விடுமுறையில் இருக்கிறார்.

இவர்களது விடுப்பு ரத்து செய்யப்பட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியரது முகவரி, மொபைல் எண்களும் வழங்கப்பட்டுள்ளன. போலீசார், சம்மன் குறித்து, டாக்டர்கள், ஊழியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


மதுரைக்கு வருமா 'எய்ம்ஸ்'; கிடைக்குமா உயர் சிகிச்சை :
முட்டுக்கட்டை போடுகிறதா தமிழக அரசு 


dinamalar 25.09.2018

மதுரை:மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை துவக்க மத்திய அரசு கேட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற மாநில அரசு அக்கறை செலுத்தாமல் முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது. மதுரைக்கு வருமா எய்ம்ஸ், தருமா உயர் சிகிச்சை என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.



மதுரை தோப்பூரில் இம்மருத்துவமனை துவங்கும் அறிவிப்பு மூன்று மாதங்களுக்கு முன் வெளியானது. அரசு நிலம் 200ஏக்கரில் மருத்துவமனை, டாக்டர்கள், ஊழியர்கள் குடியிருப்பு கட்ட முடிவு செய்து எச்.எல்.எல்., நிறுவனம் தர ஆய்வுக்காக மண் எடுத்து நாக்பூர் அனுப்பியது. இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1.6 கி.மீ., துாரமுள்ள பெட்ரோல் குழாய் பகுதியில் கட்டுமான பணிக்கு தடையில்லா சான்று வழங்கியது.இதற்கு பிறகும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிடவில்லை. இதற்கான காரணத்தை அறிந்து நிவர்த்தி செய்யும் பணியில் தமிழக அரசு இறங்காமல் சுணக்கம் காட்டுகிறது.

மாநில அரசு முட்டுக்கட்டை

இங்கு கட்டுமான பணியை துவக்க 200 ஏக்கர் அரசு நிலத்தை எய்ம்ஸ் மருத்துவமனை பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும். மதுரை துாத்துக்குடி நான்கு வழிச்சாலை - தோப்பூருக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் கிடைக்க 20 மெகாவாட் திறனுள்ள துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை நிறைவேற்றித்தர மத்திய அரசு, மாநில அரசிடம் கோரியது.இவற்றை நிறைவேற்ற மாநில அரசு அக்கறை காட்டாததால், மத்திய அரசு அரசாணை வெளியிடவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.தோப்பூர் மருத்துவ மனைக்காக தேர்வான இடத்தில் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

நிலம் தேர்வு அரசாணை

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: எய்ம்ஸ் துவக்க தேவையான நிலம், இணைப்பு சாலை, மின்வசதி எங்கிருந்து பெறப்படும், ரயில்வே ஸ்டேஷன் இணைப்பு சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தடையில்லா சான்று உட்பட அனைத்து ஆவணங்களையும் சுகாதாரத்துறை மூலம் மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டோம். முதல்வர் பழனிசாமியும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார். நிலம் தேர்வு செய்ததற்கான அரசாணை கூட வெளியானதால் மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி கூறியுள்ளார். எய்ம்ஸ் வருவதற்கு முழுமூச்சாக செயல்படுகிறோம்.

'எய்ம்ஸ்' உறுதி

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்: எய்ம்ஸ்க்கு ஒதுக்கிய 200 ஏக்கரை சர்வே செய்து, மண் ஆய்வும் நடத்தி விட்டனர். கட்டுமான பணிக்காக 1,500 கோடி ரூபாய் ஒதுக்குவது குறித்து, மத்தியநிதித்துறையின் ஒப்புதலுக்கு ஆவணங்கள் உள்ளன. மத்திய அமைச்சரவையில் அனுமதி பெற்று நிதி ஒதுக்கிய பின் கட்டுமான பணி துவங்கும். மதுரைக்கு எய்ம்ஸ் உறுதி. அதில் மாற்றமில்லை.மாநில அரசுக்கு

 அக்கறையில்லைவி.எஸ்., மணிமாறன், ஒருங்கிணைப்பாளர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்:மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியிட்டதும், அமைச்சர்கள் உட்பட பலர் தடபுடலாக பொதுக் கூட்டங்களில் பேசினர். அதற்கு பின் மாநில அரசு இம்மருத்துவமனையை துவக்க செய்வதில் அக்கறை காட்டவில்லை. இத்திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. செப்.,15 பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்றனர். மத்திய அரசு நிபந்தனைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசே முட்டுக்கட்டை போடுவதாக உள்ளது. அறிவிப்பு வெளியாகி 3 மாதங்களுக்கு மேலாகியும் பூர்வாங்க பணிகள் கூட துவக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.முனைப்பு காட்டாத மாநில அரசுஸ்ரீநிவாசன், மாநில செயலர், பா.ஜ.,: மதுரையில் எய்ம்ஸ் அமையும் என மத்திய அரசு அறிவித்தவுடன் பா.ஜ., சார்பில் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலம் அரசிதழில் வெளியிட வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு நிபந்தனைகளான இணைப்பு ரோடு, நில ஒப்படைப்பு, மின்வசதி குறித்து எந்த பணிகளையும் மாநில அரசு தோப்பூரில் மேற்கொள்ளவில்லை. சுகாதார அமைச்சர் டில்லி சென்று மத்திய அரசிடம் பேசி அரசிதழில் வெளியிட வைத்து நகல் பெற்று வர வேண்டியது தானே. இவர்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாகி விடுகிறது. பிறகு எப்படி எய்ம்ஸ் திட்டங்களுக்கு உதவ முடியும்.

காசி யாத்திரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்


Added : செப் 25, 2018 05:10

சென்னை : மகாளய அமாவாசையை முன்னிட்டு, காசி யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், அக்., 4ம் தேதி, மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை - சென்ட்ரல் வழியாக, மதுரா வரை செல்லும். இந்த யாத்திரை ரயிலில் பயணிப்போர், மகாளய அமாவாசை அன்று, பீஹார் மாநிலம், கயாவில் உள்ள விஷ்ணு கோவிலில், முன்னோருக்கு மரியாதை செலுத்தலாம். காசியில் உள்ள கங்கை யில் நீராடலாம். விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களுக்கு சென்று வரலாம்.

உ.பி., மாநிலம் - அலகாபாதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சேரும், திரிவேணி சங்கமத்திலும் நீராடலாம். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில், மானசாதேவி கோவிலில், தரிசனம் செய்யலாம். டில்லியில், குதுப்மினார், 'லோட்டஸ்' கோவில், தீன்மூர்த்தி பவன், இந்திரா நினைவகம் மற்றும், 'இந்தியா கேட்' செல்லலாம்.

மதுரா, கிருஷ்ண ஜென்ம பூமி கோவிலுக்கும் சென்று வரலாம். 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, நபருக்கு, 11 ஆயிரத்து, 340 ரூபாய் கட்டணம். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கட்டண சலுகை உண்டு. மேலும் தகவலுக்கு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின், சென்னை - சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்துக்கு, 90031 40681, 90031 40682 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

எங்கே என் ஜீவனே இன்று (செப்.25 )- மகாளயபட்சம் ஆரம்பம்

Added : செப் 24, 2018 21:36




உடலை விட்டு பிரிந்த பின் உயிரானது 13 நாள் வரை தனது வீட்டு வாசலில் நிற்கும். முதல் மூன்று நாள் நீரிலும், அடுத்த மூன்று நாள் நெருப்பிலும், அடுத்த மூன்று நாள் காற்றிலும் தங்கும். துக்கம் கேட்க வருவோரை எல்லாம் பார்த்தபின், 10ம் நாளன்று வீட்டிற்குள் கண்ணுக்குத் தெரியாமல் நுழையும். 11,12ம் நாளில் கொடுக்கப்படும் பிண்டங்களை ஏற்கும். இறுதி காரியத்தின் போது இறந்தவர் உருவமாக நியமிக்கப்படுபவரை (ஆவாஹனம் செய்யப்படுபவரை) கூர்ந்து பார்த்தால் அவர் சாப்பிடும் முறையில் இறந்த உயிரின் சாயல் தெரியும். 13ம் நாள் யமதுாதர்களான கிங்கரர்கள் உயிரை கட்டி இழுத்துச் செல்வர். பகலிலும், இரவிலுமாக நடந்து யமபுரத்தை உயிர் அடைய ஓராண்டாகும். அதுவரை உயிருக்கு பசி, தாகம் ஏற்படும் என்பதால் மாதத்தில் ஒருநாள் அதாவது இறந்த திதியன்று வழியில் தங்க அனுமதியளிப்பர். இந்த ஓராண்டு வரை மாதம் தோறும் இறந்த திதியன்று உயிரின் பசியைப் போக்க பிண்டம் கொடுக்க வேண்டும். இக்காலத்தில் சுபநிகழ்ச்சி நடத்தக் கூடாது. இறந்தவர்கள் பாவி என்றால் யமபுரத்திற்கும், புண்ணியம் செய்திருந்தால் பிரம்மலோகத்திற்கும் செல்வர்.

 அவர்கள் தங்களின் வாரிசுகளை பார்க்க பூமிக்கு வரும் காலம் மகாளயபட்சமாகும். அதாவது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள 15 நாட்கள். அப்போது தமக்குரிய பிண்டத்தை வழங்குமாறு நம் வீட்டு வாசலில் காத்திருப்பர். முன்னோர் இறந்த மாதம், பட்சம், திதியன்று ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தில் சிரமம், பிரச்னை, துர்சம்பவம் ஏற்படும். மீண்டும் முன்னோர் வழிபாட்டை மேற்கொண்டால் துன்பம் தீரும். சிலருக்கு முன்னோர்கள் இறந்த திதி தெரிவதில்லை. அவர்களும் மகாளயபட்சத்தில் திதி கொடுக்கலாம். மகாளயபட்ச தர்ப்பணத்தால் ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் சேரும். மற்ற மாதங்களில் அமாவாசை தர்ப்பணம் செய்யும் வழக்கம் உள்ளவர்களும் இதை தவிர்க்கக் கூடாது.

தந்தை இறந்த திதியில் இந்த தர்ப்பணம் செய்வது நல்லது. தர்ப்பணத்தின் போது மூன்று தலைமுறையினர் அதாவது தந்தை, தாத்தா, முப்பாட்டனார், தாயார், பாட்டி, முப்பாட்டியின் பெயர்களை குறிப்பிட வேண்டும். திதி தெரியாதவர்கள் அஷ்டமி அல்லது பரணி நட்சத்திரத்தில் செய்யலாம். இக்காலத்தில் அசைவம், வெங்காயம், பூண்டு சேர்க்காமல் வீட்டில் மட்டும் சாப்பிட வேண்டும். எண்ணெய்க் குளியல், தாம்பத்யம் தவிர்க்க வேண்டும். இன்று மகாளய பட்சம் துவங்குகிறது. செப். 28ல் மகாபரணி, அக்.2ல் மத்யாஷ்டமி அக்.8ல் மகாளய அமாவாசை வருகின்றன. தவறாமல் முன்னோரை வழிபடுங்கள். வாழ்வில் முன்னேற்றம் காணுங்கள். எஸ்.சந்திரசேகர்


Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...