Monday, October 1, 2018

தமிழக கண் டாக்டருக்கு கூகுள் கவுரவம்

Added : அக் 01, 2018 06:28 |

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி கண் டாக்டரும் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனருமான கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்தநாளையொட்டி, கூகுள் டூடில் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. 1918 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, விருதுநகர் மாவட்டம் வடமாலபுரத்தில், கோவிந்தப்பா வெங்கடசாமி பிறந்தார். தேவையில்லாத குருட்டுத்தன்மையை அகற்றுவதற்காக, தம் வாழ்நாளையே அர்ப்பணித்தார். அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் இதுவரை 6.8 மில்லியன் கண் ஆபரேசன்கள் நடைபெற்று 55 மில்லியன் பேர் கண்பார்வை திறன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கவில்லை சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்





மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:00 AM

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உரிமை சட்டம்

தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழகத்தில் எங்கு அதனை அமைப்பது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளது.

ஒதுக்கீடு

மதுரை கீழவெளி வீதியை சேர்ந்த ஹக்கீம் காசிம் என்பவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 8 கேள்விகளை கேட்டு இருந்தார். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை நாடு முழுவதும் எத்தனை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்து அரசாணை எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா?. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடக்க விழா எப்போது நடைபெறும். மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணியை எந்த நிறுவனம் மேற்கொள்கிறது. இதுவரை மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவதற்கு எவ்வளவு தொகை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தொகை ஒதுக்கீடு செய்தது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளை கேட்டு இருந்தார்.

அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் 14 இடங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மந்திரிசபை ஒப்புதல்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது குறித்து மத்திய மந்திரிசபை மற்றும் மத்திய செலவினங்களுக்கான நிதி குழு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. அதன் காரணமாக மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும், எந்த நிறுவனம் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் என்பது குறித்தும் எங்களிடம் தகவல்கள் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மாநில செய்திகள்

கணவன் மட்டுமே மனைவியின் வாரிசு: சான்றிதழ் அளித்த தாசில்தாரும், தீர்ப்பு அளித்த நீதிபதியும் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு




கணவனுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்த நீதிபதியும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:10 AM

சென்னை,

விபத்தில் பலியான பெண்ணுக்கு கணவன் மட்டுமே வாரிசு என்று சான்றிதழ் கொடுத்த நாமக்கல் தாசில்தாரும், அதனடிப்படையில் கணவனுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்த நீதிபதியும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.கணவனுக்கு இழப்பீடு

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பரிமளா என்ற பாப்பாத்தி. இவர் வாகன விபத்தில் பலியானார். இதையடுத்து அவரது கணவர் முருகேசன், பெற்றோர் சின்னம்மாள், நடேசன் ஆகியோர் இழப்பீடு கேட்டு நாமக்கல் மோட்டார் வாகன விபத்துக்களை விசாரிக்கும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி வி.சம்பத்குமார் விசாரித்து, கடந்த 2015–ம் ஆண்டு ஜனவரி 4–ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

அந்த தீர்ப்பில், ‘இறந்துபோன பரிமளா திருமணம் ஆனவர். அவரை நம்பி அவரது பெற்றோரும், கணவரும் உள்ளனர். இருந்தாலும், நாமக்கல் தாசில்தார் கொடுத்துள்ள வாரிசு சான்றிதழில், கணவர் முருகேசன் மட்டுமே வாரிசு என்று கூறப்பட்டுள்ளது. அதனால், விபத்துக்குள்ளான வாகனம் காப்பீடு செய்திருந்த ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், முருகேசனுக்கு ரூ.13 லட்சத்து 71 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.கடும் கண்டனம்

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இன்சூரன்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். அப்போது நாமக்கல் (தாலுகா) தாசில்தாருக்கும், தீர்ப்பு வழங்கிய கீழ்கோர்ட்டு நீதிபதி சம்பத்குமாருக்கும், நீதிபதி எம்.வி.முரளிதரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி, திருமணமான ஒருவர் இறந்து விட்டால், அவரது வாழ்க்கை துணையும், குழந்தைகளும் முதல்நிலை வாரிசுகள் ஆவர், அவரது பெற்றோர் உயிரோடு இருந்தால், அவர்கள் 2–ம் நிலை வாரிசு ஆவர். வாரிசு சான்றிதழ் கொடுக்கும்போது, இவர்கள் அனைவரையும் வாரிசுகளாக தாசில்தார் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.ஒரே வாரிசு

ஆனால், இந்த வழக்கில், கணவன் மட்டுமே வாரிசு என்று நாமக்கல் தாசில்தார் சான்றிதழ் கொடுத்துள்ளார். இதை கீழ்கோர்ட்டும் ஏற்றுக்கொண்டு, கணவனுக்கு மட்டுமே மொத்த இழப்பீடு தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. இறந்தவரின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மறுத்துள்ளது.

தாசில்தார் இந்த வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு முன்பு, முறையான விசாரணை எதுவும் செய்யவில்லை என்பது தெரிகிறது. அதேபோல, நீதிபதி சம்பத்குமாரும், இந்த சான்றிதழை முழுமையாக பரிசீலிக்காமல், அதன் அடிப்படையில், முழு இழப்பீடு தொகையை கணவனுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார்.விளக்கம் வேண்டும்

எனவே, இந்த வழக்கில் நாமக்கல் தாசில்தாரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். அவர் வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராகி, எவ்வாறு இந்த வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது? என்பதை விளக்கி கூற வேண்டும்.

அதேபோல, நீதிபதி வி.சம்பத்குமாரும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராகி, எந்த அடிப்படையில் கணவனுக்கு மட்டும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட செய்திகள்

சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் பஸ் மாறி ஏறிச்சென்ற கண்டக்டர் நடிகர் வடிவேலு பட நகைச்சுவை காட்சி போல் ருசிகரம்






சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் ஆத்தூரில் பஸ் மாறி ஏறிச்சென்ற அரசு பஸ் கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:45 AM

ஆத்தூர்,

சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் ஆத்தூரில் பஸ் மாறி ஏறிச்சென்ற அரசு பஸ் கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் வடிவேலு நகைச்சுவை காட்சி

ஏ.பி.சி.டி. என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பஸ் கண்டக்டராக நடித்த ஒரு நகைச்சுவை காட்சி வரும். அதில், ஒரே மாதிரியாக இருக்கும் 2 அரசு பஸ்களில் ஒன்றில் ஏறி பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும்போது, மற்றொரு நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவிடம் தகராறு ஏற்பட்டு வடிவேலுவை அவர் விரட்டுவது போன்ற காட்சி இருக்கும். சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த நகைச்சுவை காட்சி போன்ற ருசிகர சம்பவம் சேலம் மாவட்டம், ஆத்தூரில் நேற்று நடந்தது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து தினமும் காலை 6.25 மற்றும் 6.40 மணிக்கு 2 அரசு பஸ்கள் சேலத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட இந்த இரு அரசு பஸ்களும், சேலம் வரும் வழியில் ஆத்தூருக்கு காலை 9.15 மற்றும் 9.25 மணிக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

அதுபோல் நேற்று முன்தினம் காலையில் சிதம்பரத்தில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஆத்தூருக்கு காலை 9.15 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர். பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர், அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தார்.

தனியார் பஸ்சில் ஏறினார்

சிறிது நேரத்தில் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம்-சேலம் என்று போர்டு வைத்திருந்த அரசு பஸ் வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கண்டக்டர், தான் இல்லாமல் பஸ்சை டிரைவர் ஓட்டிச்செல்வதாக கருதி அந்த பஸ்சை பிடிக்க ஓடினார். அதற்குள் அந்த பஸ் அங்கிருந்து சென்று விட்டது. இதையடுத்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறிய அந்த கண்டக்டர், முன்பு செல்லும் அரசு பஸ்சின் கண்டக்டர் தான் என்றும், அந்த பஸ்சை பிடிக்குமாறும் கூறி உள்ளார். தனியார் பஸ் டிரைவரும் வேகமாக சென்று பெத்தநாயக்கன்பாளையத்தில் அரசு பஸ்சை முந்திச்சென்று நிறுத்தினார்.

அதிர்ச்சி அடைந்த கண்டக்டர்

அந்த பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர் உடனடியாக சேலம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி டிரைவரிடம் பஸ்சை நிறுத்தாமல் சென்றது குறித்து கேட்க முயன்றார். அப்போது அதில் இருந்த டிரைவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அந்த கண்டக்டர்.

அவர் பணியில் இருந்தது 9.15 மணிக்கு ஆத்தூர் வந்த பஸ். அவர் விரட்டிப்பிடித்து ஏறிய பஸ் சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு 9.25 மணிக்கு வந்த பஸ். தன் தவறை உணர்ந்த அந்த கண்டக்டர் செய்வதறியாது விழித்தார்.

சிதம்பரத்தில் இருந்து 2-வதாக புறப்பட்ட பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால் அந்த பஸ் ஆத்தூரில் அதிக நேரம் நிற்காமல் 9.15 மணிக்கு பஸ் புறப்படுவதற்கு முன்பாக புறப்பட்டதால் அவருக்கு இந்த குழப்பம் ஏற்பட்டது பின்னர் தெரியவந்தது. அதன்பிறகு அந்த கண்டக்டர், தான் வந்த பஸ் ஆத்தூரில் நிற்கும் விவரம் தெரிந்து அங்கிருந்து வேறு ஒரு பஸ்சில் மீண்டும் ஆத்தூருக்கு புறப்பட்டு வந்தார்.

வேறு பஸ்சில் பயணிகள்

இதற்கிடையே ஆத்தூர் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் 9.15 மணி பஸ் நின்றதால், அதில் இருந்த 28 பயணிகளும் பரிதவிப்புக்குள்ளானார்கள். மேலும் அவர்கள் ஆத்தூர் பயணிகள் நேர காப்பாளரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த பஸ் டிரைவரும், கண்டக்டர் வேலைக்கு வந்து ஓராண்டே ஆகும் புதியவர் என்பதால் அவரின் செல்போன் எண் கையில் இல்லை என்றதுடன், அவர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடையில் சாப்பிட்டு கொண்டு இருக்கலாம் என்றும் கூறி தேடிச்சென்றார்.

பயணிகளின் கோரிக்கை காரணமாக, அவர்கள் ஆத்தூரில் இருந்து சேலம் செல்லும் மற்றொரு அரசு பஸ்சில் 28 பயணிகளும் ஏற்றி சேலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு அரை மணி நேரம் கழித்து வந்து சேர்ந்த பஸ் கண்டக்டரிடம் சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


Sunday, September 30, 2018

ஆன்மீகம். பிதுர் தோஷம்

கடுமையான பிதுர்தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஹோமம்!

Published on : 29th September 2018 11:27 AM  

இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை. முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீயச் சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் அமாவாசை வழிபாடு செய்கிறோம். 

ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மஹாளய பட்சம் என்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களான தத்தா, பாட்டி ஆகியோர் மேல் உலகத்தில் இருந்து அமுது பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருவதாக ஐதீகம். 

ஒரு சிலர் வெளிநாடுகளில் சென்று வேலை செய்யும் நிலை ஏற்படும் பட்சத்தில், தன் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் என்று எதுவுமே கொடுக்காமல் அப்படியே விட்டுவிடுவர். அதனால், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், நாளடைவில் அது பிதுர் தோஷமாகவும், கால சர்ப்ப தோஷமாகவும் மாறி அவர்களது சந்ததியினரை பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்திவிடும். 

இதனால், வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்படுதல், திருமணத்தடை, உத்தியோக தடை, குழந்தைபேறு தாமதமாகுதல், விபத்து நேருதல் போன்ற அசம்பாவிதங்கள் நிகழக்கூடும். மிகக் கடுமையான பிதுர் தோஷத்தால் அந்தக் குடும்பமே பாதிக்கப்படும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில், அவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால் தான் செய்ய வேண்டும். 

திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும், எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலம் என்றால் எள் என்று அர்த்தம். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும். திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும். இந்தச் சம்பவம் நிகழ்ந்தால் தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிரவதிப்பதாக அர்த்தம். 

வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலா ஹோமம் செய்து பித்ருக்களின் ஆசீர்வாதம் பெறலாம். கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம சேத்திரம் என்ற தலம் உள்ளது. அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா, ராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டியது அவசியம். 
 

சிறப்புக் கட்டுரைகள்

தனிநபர் கடனும், தங்க நகை கடனும்







நிதி நெருக்கடியின்போது, திடீர் பொருளாதார நெருக்கடியின்போது நமக்கு உடனே நினைவில் வருபவை, கடன்கள். அதிலும் தனிநபர் கடன், தங்க நகை கடன் போன்றவை உடனடியாகக் கைகொடுப்பவை.

பதிவு: செப்டம்பர் 29, 2018 11:56 AM
தனிநபர் கடனையும் தங்க நகை கடனையும் ஒப்பிட்டால் எதைப் பெறுவது எளிதானது, அதிக அனுகூலம் மிக்கது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்...

தனிநபர் கடன், தங்க நகை கடன் இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவிலான வட்டி விகிதம்தான். தங்க கடன் பொதுவாக 9.6 முதல் 24 சதவீதம் இடையிலான வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது. தனிநபர் கடன் 10.99 முதல் அதிகபட்சம் 18 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

தங்க கடன் அதிகபட்சம் 1.5 கோடி ரூபாய் வரை அளிக்கப்படும் நிலையில், தனிநபர் கடன் 40 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. உடனடியாகப் பணம் தேவைப்படும்போது தங்க கடனே எளிமையாகக் கிடைக்கும். தங்க கடனை 1000 ரூபாய் முதல் பெற முடியும். ஆனால் தனிநபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது 5000 ரூபாயை கடனாகப் பெற வேண்டும்.

தங்க கடன் வாங்கும்போது அடமானம் வைக்கும் தங்க நகையே உத்தரவாதம் என்பதால் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவை பெரியதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் இதுவும் குறிப்பிட்ட அளவிலான தொகை வரை கடன் பெறும்போது மட்டுமே ஆகும். அதிக மதிப்புடைய கடன் பெறும்போது கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மறுபக்கம், தனிநபர் கடனுக்குக் கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதம் மற்றும் கடனைச் செலுத்தும் கால அளவு மாறும். கடன் பெற முயலும்போது குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் விண்ணப்பம் ரத்தாக வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால், வட்டி விகிதம் உயரும். குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளபோது வங்கிகளிடம் வட்டி விகிதம் போன்றவை தொடர்பாக எந்தப் பேரமும் செய்ய முடியாது.

தங்க நகை கடனுக்கு அடையாளம் மற்றும் முகவரிச் சான்றை சமர்ப்பித்தால் போதும். உடனே கடன் கிடைக்கும். இதுவே தனிநபர் கடன் என்றால் முகவரி மற்றும் அடையாளச் சான்று, வருமான சான்றிதழ், வங்கி அறிக்கை போன்றவைச் சமர்ப்பிக்க வேண்டும். தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதை திருப்பிச் செலுத்த பல்வேறு வகையில் வளைந்து இடம் கொடுப்பார்கள். வட்டி விகிதம், மாதம் போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கும். இது போன்றவை தனிநபர் கடன் வாங்கும் போது கிடைக்காது.

தங்க நகை கடனை ஓராண்டு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவே தனிநபர் கடனை 5 வருடங்களுக்குச் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றாற்போல வட்டி விகிதம் உயரும். தங்களது வருவாய் மற்றும் மாத தவணை செலுத்துக்கூடிய திறனைப் பொறுத்து கடனைப் பெறலாம்.

தங்க நகை அடமான கடன் பெறும்போது தங்கத்தை நேரடியாக வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பைக் கணக்கிட்ட பிறகே கடன் பெற முடியும். எனவே, நீங்கள் விரும்பும் வங்கி நிறுவனத்தின் கிளை உங்கள் அருகில் இல்லை என்றால் சிரமம் ஏற்படும்.

ஆனால் இன்றைக்கு, வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலம் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து வங்கி அலுவலர்களை வீட்டுக்கு வரவைத்து கடனைப் பெற முடியும்.

இவையெல்லாம், தனிநபர் கடன், தங்க நகை கடன் குறித்த ஒப்பீட்டு விவரங்கள். இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் கடனைப் பெற விரும்பு பவர்கள்தான்.

கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள, தங்கம் வைத்துள்ளவர்கள் சில மணி நேரங்களில் கடன் வேண்டும் என்றால் தங்க நகை கடனை தேர்வு செய்யலாம். அதுவே கிரெடிட் ஸ்கோர் அதிகமாக வைத்திருப்பதுடன், கடனைச் செலுத்துவதற்கான கால அளவு 3 வருடத்துக்கும் அதிகமாக வேண்டும் என்பவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாநில செய்திகள்

ஆகம விதிகளுக்கு புறம்பாக ‘சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று விளக்கு ஏற்றி பெண்கள் உறுதிமொழி’



ஆகம விதிகளுக்கு புறம்பாக சபரிமலைக்கு நாங்கள் போகமாட்டோம் என்று கூறியபடி சென்னை கங்காதீஸ்வரர் கோவிலில் பெண்கள் விளக்கு ஏற்றி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

பதிவு: செப்டம்பர் 30, 2018 05:15 AM

சென்னை,

‘சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம்’ என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் பாரத் இந்து முன்னணியின் மகளிர் அணி சார்பில் சென்னை மாநகர மகளிர் அணி தலைவி லட்சுமி மற்றும் கோவாவில் இருந்து வந்திருந்த, இந்து ஜனக்குருதி சமிதியின் ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஜெய்குமார் ஆகியோர் தலைமையில் பெண்கள் சென்னை, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10.30 மணி அளவில் திரண்டனர். பின்னர், பெண்கள் அய்யப்ப சாமியின் சரணங்களை கூறியபடி, விளக்கு ஏற்றி கோவிலை வலம் வந்தனர். பின்னர் கொடிமரம் அருகில் விளக்குளை வைத்து ‘ஆகம விதிகளுக்கு புறம்பாக சபரிமலைக்கு செல்ல மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் லட்சுமி, சுகந்தி ஜெய்குமார் மற்றும் மாநிலத்தலைவர் ஆர்.டி.பிரபு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘உடல் ஒத்துழைக்காது’

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பால் இந்துக்கள் மனம் புண்பட்டு இருப்பதுடன், தமிழகம் போர்க்களமாக மாறி வருகிறது. இந்து தர்மம் இயற்கையுடன் தொடர்புடையது.

குறிப்பாக பொங்கல் அன்று சூரியனை வழிபடுவது, பஞ்சபூதங்களை வழிபடுவது போன்றவற்றை கூறலாம். பிரம்மச்சாரிய விரதம் இருக்கும் சபரிமலை அய்யப்பன் சாமியை தரிசிக்க 48 நாட்கள் விரதம் இருந்து தான் செல்ல வேண்டும். ஆனால் உடல் ரீதியாக பெண்களால் தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது. உடலும் ஒத்துழைக்காது.

கலாசாரத்தை சிதைக்க முயற்சி

உலகில் உயர்ந்த தர்மத்தை கடைப்பிடிக்கும் இந்துக்கள் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மீறுவது கிடையாது. தர்மம் பற்றி தெரியாத தீயசக்திகள் புகார் அளித்து நம்முடைய தர்மத்தையும், கலாசாரத்தையும் கொச்சைப்படுத்தி சிதைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் இடம் தரமாட்டோம். தர்மம் மோசமான பாதையை நோக்கி செல்வதால் தான் அய்யப்ப சாமி கோபம் கொண்டதால் தான் கடந்த மாதம் கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளம் ஏற்பட்டது.

எனவே தர்மத்தை காக்க ஆகம விதிகளின் படித்தான் அனைவரும் நடக்க வேண்டும்.

சீரழிக்க கூடாது

நீதிபதிகள் மதம் சார்ந்த விவகாரங்களில் தீர்ப்பு வழங்கும் போது, பெரும்பான்மையினர் தலைமுறை தலைமுறையாக மதிக்கும் மதநம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் தீர்ப்பு வழங்கக்கூடாது.

வெளிநாட்டினரே நம்முடைய கலாசாரத்தை பின்பற்றி வரும் நிலையில், நாம் நம்முடைய கலாசாரத்தை சீரழிக்க கூடாது. எனவே நாங்கள் ஆகம விதிகளுக்கு புறம்பாக இளம் வயதில் சபரிமலைக்கு செல்ல மாட்டோம். எனவே தற்போது வழங்கிய தீர்ப்பை பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கங்காதீஸ்வரர் கோவிலில் பெண்கள் அதிக அளவில் திரண்டதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வகையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...