Sunday, November 3, 2019


மதுரையில் தீவிரமாகும் ‘டெங்கு’: அரசு மருத்துவமனையில் அலைமோதும் காய்ச்சல் நோயாளிகள்- போலீஸார் பாதுகாப்புடன் மருந்துகள் விநியோகம்



மதுரை 2.11.2019

மதுரை மாவட்டத்தில் கடந்த காலங்களைப் போல், இந்த ஆண்டும் ‘டெங்கு’ காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.

இதனால், மதுரை அரசு மருத்துவமனையில் வழக்கத்தைவிட காய்ச்சல் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. கூட்டத்தை சமாளிக்க போலீஸார் பாதுகாப்புடன் மருந்து, மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகளும், பாதாள சாக்கடை வசதிகளும் முழுமையாக இல்லாத கிராமங்கள் நிறைந்த நகரமாக மதுரை உள்ளது.

அதனாலேயே, இங்கு மிதமான மழை பெய்தால்கூட மழைநீர் தேங்கி வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் வேகமாக பரவுகிறது.

ஆண்டுதோறும் ‘டெங்கு’ காய்ச்சலையும், அதனால், ஏற்படும் உயிரிழப்புகளையும் மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது.

சுகாதாரத்துறை அதிகாரிகள், ‘டெங்கு’, ‘பன்றி’ காய்ச்சல்களை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டாமல் அதை மூடிமறைப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், கடந்த காலங்களைப் போல், தற்போதும் மதுரையில் ‘டெங்கு’ தீவிரமடைந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு புறம் டெங்கு நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினாலும் மறு புறம் நோயாளிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதனால், எப்போதும் அங்கு15 பேர் டெங்கு காய்ச்சலுக்கு நிரந்தரமாக சிகிச்சை பெறும் சூழல் இருக்கிறது.


டெங்கு தவிர, 100-க்கும் மேற்பட்டோர் மற்ற வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதில், குழந்தைகள், பெரியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரழிப்பும் ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளதால் வழக்கத்தைவிட மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்கு ரேஷன் கடை வரிசை போல் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கின்றனர். அதனால், நெரிசலை தவிர்க்க போலீஸார் பாதுகாப்புடன் நோயாளிகளுக்கு மருத்துவப் பணியாளர்கள் மருந்துகள் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் ‘டெங்கு’ காய்ச்சலுக்கு யாரும் மரணமடையவில்லை என்று சுகாதாரத்துறை கூறி வந்தனர். நேற்று முதல் முறையாக ஒரு டெங்கு நோயாளி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார்.

அதுபோல், தனியார் மருத்துவமனைகளில் சத்தமில்லாமல் ‘டெங்கு’ நோயாளிகள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து வருகின்றனர்.

ஆனால், சுகாதாத்துறை அதிகாரிகள் ‘டெங்கு’ மரணங்களை மற்ற உடல் உபாதைகளால் இறந்துவிட்டதாக கணக்கு காட்டி சமாளிக்கின்றனர்.

இந்த ஆண்டு ‘டெங்கு’ தாக்கம் அதிகமிருந்தால் அடுத்த ஆண்டு வராமல் தடுப்பதே அரசு இயந்திரங்களின் பணி. ஆனால், ஆண்டுதோறும் டெங்கு பாதிப்பு அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.

2020-க்கான தினசரி அபிஷேக முன்பதிவு: ஆஞ்சநேயா் கோயிலில் நவ.10-இல் தொடக்கம்
By DIN | Published on : 03rd November 2019 05:45 AM 



நாமக்கல் ஆஞ்சநேயா் (கோப்புப் படம்).

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில், 2020-ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு, கோயில் மண்டபத்தில் வரும் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. 18 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கும், ஆஞ்சநேயரைத் தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி, தங்கம், முத்தங்கி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும். வரும் 2020-ஆம் ஆண்டு முழுவதும் தினசரி அபிஷேகத்துக்கான முன்பதிவு, நவம்பா் 10-ஆம் தேதி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெறுகிறது. குறிப்பாக, தமிழ் மாதப் பிறப்பின் முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆஞ்சநேயா் ஜயந்தி உள்ளிட்டவற்றை தவிா்த்து மற்ற நாள்களில் அபிஷேகம் கட்டளைதாரா்கள் மூலமாகவே நடைபெறும்.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியது: ஒவ்வோா் ஆண்டும், அடுத்த ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு நவம்பா் மாதத்தில் தொடங்கும். அதன்படி, 2020-ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவானது நவ.10-இல் தொடங்கி முழுமையாக நிறைவேறும் வரை நடைபெறும். சுவாமிக்கு, தினமும் 1008 வடைமாலை சாத்தப்பட்டு, அதன்பின், நல்லெண்ணெய், பஞ்சாமிா்தம், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சொா்ணாபிஷேகத்துக்குப் பிறகு ஆஞ்சநேயருக்கு மாலைகள் சாத்துப்படி செய்து சிறப்பு அலங்காரம் நடைபெறும்.

இந்த அபிஷேகம், அலங்காரத்தை, ஆரம்பத்தில் 3 போ் இணைந்து செய்யும் வகையிலே இருந்தது. 2017-க்கு பிறகு 5 போ் பங்கேற்கும் வகையில் மாற்றப்பட்டது. ஒருவருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேருக்கு ரூ.30 ஆயிரமாகும். பிரசாதம் பகிா்ந்து அளிக்கப்படும். முழுத் தொகையையும் முன்பதிவின்போதே செலுத்திட வேண்டும். ஆண்டின் 365 நாளில் தங்களுக்கு விருப்பமான நாள்களை, கோயில் விசேஷ நாள்களை தவிா்த்து, பக்தா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

'பிகில்' காட்சிகள் ரத்து படத்தால் நஷ்டமா?

Added : நவ 03, 2019 03:01

சென்னை:நடிகர் விஜய் நடித்த, பிகில் படத்திற்கு, ரசிகர்களின் ஆதரவு குறைந்ததால், முன்பதிவு செய்த காட்சிகளை, தியேட்டர் உரிமையாளர்கள் திடீரென நிறுத்தி உள்ளனர்.

பிகில் படத்தால், 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும், தகவல் வெளியாகி உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி என, இரண்டு படங்கள் வெளியாகின. இதில், பிகில் படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன. முதல் ஐந்து நாட்கள் வரை, பிகில் படத்திற்கு இருந்த வரவேற்பு, தற்போது மிகவும் குறைந்துள்ளது.

வார இறுதி நாட்களை தவிர்த்து, மற்ற நாட்களில், ரசிகர்கள் போதிய ஆதரவு தராததால், பிகில் படம் திரையிடப்பட வேண்டிய தியேட்டரில், கைதி படம் திரையிடப்படுகிறது. சமீபத்தில், சென்னை, தேவி பாரடைஸ் தியேட்டரில், பிகில் படத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட மதிய காட்சி, திடீரென ரத்து செய்யப்பட்டு, டிக்கெட் வாங்கியவர்களை, தேவி தியேட்டருக்கு மாற்றியது சர்ச்சையானது.

பல தியேட்டர்களில், பிகிலுக்கு பதில் கைதி மாற்றப்பட்டது. பிகில் படத்தை வாங்கி வெளியிட்ட வகையில், 40 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவில், முதல் முறையாக, பிகில் படம் இன்று திரையிடப்படுகிறது. அங்கோலா தமிழ் சங்கத்தினர், பிகில் படத்தை இன்று மதியம் திரையிடுகின்றனர். அங்கு தமிழ் படம் திரையிடுவது, இதுவே முதல் முறை.
பயணிக்கு மூச்சு திணறல் விமானம் நிறுத்தம்

Added : நவ 03, 2019 02:51

சென்னை:பெங்களூரு புறப்பட்ட விமானத்தில், பயணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அந்த விமானம், ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து, நேற்று காலை, 7:00 மணிக்கு, 'ஏர் இந்தியா' விமானம், 84 பயணியருடன், பெங்களூரு புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் ஓடத்துவங்கிய நிலையில், அதில் பயணித்த, சென்னையைச் சேர்ந்த சுஜித் சுனில், 43, என்பவருக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது குறித்து, விமான சிப்பந்திகள், பைலட்டிடம் தகவல் தெரிவித்தனர். பைலட், ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார்.

அந்த விமானம், இழுவை வண்டிகள் உதவியுடன், புறப்பட்ட இடத்தில் மீண்டும் நிறுத்தப்பட்டது. தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட சுஜித் சுனிலை, விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் விமானம், நேற்று காலை, 8:00 மணிக்கு, ஒரு மணி நேரம் தாமதமாக, பெங்களூரு புறப்பட்டுச் சென்றது.
சேமிப்பு கணக்கில் முறைகேடு: ஊழியர் பணி விடுவிப்பு சரியே

Added : நவ 03, 2019 02:53

சென்னை:'சேமிப்பு கணக்குகளில் முறைகேடு செய்த, வங்கி ஊழியரை பணியில் இருந்து விடுவித்தது சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின், ஈரோடு கிளையில், சுகந்தி என்பவர் பணியாற்றினார்; சேமிப்பு கணக்குகளை கையாண்டார். அப்போது, 'டாஸ்மாக்' கணக்கு உள்ளிட்ட, பல கணக்குகளில் இருந்த பணத்தை, தன் கணக்கிற்கு மாற்றி, முறைகேட்டில் ஈடுபட்டார். இதுகுறித்து, விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையின் முடிவில், சுகந்தியை பணியில் இருந்து விடுவிப்பது என, முடிவு செய்யப்பட்டது.

வங்கி நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து, மத்திய அரசின் தொழில் தீர்ப்பாயத்தில், சுகந்தி முறையிட்டார். வங்கி நிர்வாகத்தின் முடிவை, தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது.மனுத் தாக்கல்இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம், மனுத்தாக்கல் செய்தது.

மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். வங்கி சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவீந்திரன் ஆஜராகி, ''வங்கியின் நலனை பாதிக்கும் விதத்தில், சுகந்தி செயல்பட்டு உள்ளார். சேமிப்பு கணக்குகள், தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளன,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:ஊழியர்கள் பொதுவாக, நிறுவனத்தின் உள்ளேயும், வெளியேயும், ஒழுக்கமுடனும், நல்ல நடத்தையுடனும் இருக்க வேண்டும். இவ்வழக்கில், வங்கி ஊழியராக இருந்த சுகந்தி, சேமிப்பு கணக்கை தவறாக பயன்படுத்தி உள்ளார். பரிவர்த்தனைகளின் தன்மை, பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையின் அளவை, வங்கி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

குறைபாடு இல்லை

சலுகைகளுடன் கூடிய பணி விடுவிப்பு தான், தண்டனையாக வழங்கப் பட்டுள்ளது. இந்த தண்டனையை, குற்றச்சாட்டுக்கு அதிகமானது எனக்கூற முடியாது. எனவே, சுகந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை, உகந்தது தான்; வங்கி நிர்வாகம் விதித்த தண்டனையில் எந்த குறைபாடும் இல்லை. அதனால், தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியாவில் விற்பனையாகும் 49 மருந்துகள் தரமற்றவை

Added : நவ 03, 2019 02:44

சென்னை:'இந்தியாவில் விற்பனையாகும், 49 மருந்துகள்தரமற்றவை' என, மத்திய மருந்து தரகட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும், சந்தையில் உள்ள மருந்துகளின் தரம் குறித்து, மத்திய - மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் ஆய்வு செய்து, தரமற்ற மருந்துகள் இருந்தால், அதன் விற்பனையை தடை செய்து வருகின்றன. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், 2,085 மருந்துகளை, மத்திய - மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் ஆய்வு செய்தன. அவற்றில், 2,036 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய, காய்ச்சல், சளி, குடற்புழு நீக்கம், கிருமி தொற்று, வயிற்றுப் புண் ஆகியவற்றுக்கான, 49 மருந்துகள் தரமற்றவை. இவை, குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த தரமற்ற மருந்துகளை தயாரித்த நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது. தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்தவிபரங்களை, https://cdscoonline.gov.in என்ற இணைதளத்தில், மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.
Chennai: Woman dies mid-air due to cardiac arrest

DECCAN CHRONICLE.

PublishedNov 2, 2019, 2:20 am IST

On landing, she was motionless in her seat.

After a check, the team said the woman had died due to cardiac arrest.

Chennai: A 43-year-old woman passenger died aboard an aircraft after she suffered cardiac arrest while on way to Chennai, on Friday .The passenger, N. Nazaruddin Nisha, was flying from Kolkata to Chennai, when she complained of chest pain. Following this, the pilot alerted the Chennai air control and made an emergency landing at the Chennai airport.Sources said the woman and her husband Nausak Ansari (47), a businessman, were heading to Chennai for medical check.

Airport sources said Nisha complained of chest pain and suffered a cardiac arrest mid-air. On landing, she was motionless in her seat. Attempts by airport staff to wake her up were futile, and they informed the airport manager who summoned the medical emergency team. After a check, the team said the woman had died due to cardiac arrest.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...