Sunday, October 20, 2019

கல்லூரி தாளாளரால் பாலியல் வன்முறைக்குள்ளான இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி: டிஎன்ஏ மாதிரியை சேமிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு 




மதுரை

கல்லூரித் தாளாளரால் பாலியல் வன்முறைக்குள்ளான இளம் பெண் ணின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றம், குற்றவாளியை உறுதி செய்ய டிஎன்ஏ மாதிரியை சேமிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 2018-ல் சேர்ந்தேன். கல்லூரி தாளாளர் நடத்தை சரியாக இல்லாததால் படிப்பைப் பாதியில் நிறுத்தினேன். மாற்றுச் சான்றிதழ் பெற கல் லூரிக்குச் சென்ற என்னை தாளாளர் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டார்.

செப்.11-ல் எனக்குத் திருமணம் நடைபெற்றது. சில நாட் களுக்குப் பிறகு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனைக்குச் சென்றபோது நான் மூன்றரை மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இதனால் கணவர் வீட்டி னர் என்னைப் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். கல்லூரித் தாளா ளர் மீது சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாளாளரை கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமையால் நான் கருவுற்றிருப்பதால், அந்தக் கருவைக் கலைக்க அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். எனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது கருவைக் கலைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ் வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், மனுதாரரின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கியும், குற்றவாளியை உறுதிசெய்ய கருவின் டிஎன்ஏ மாதிரியை சேமிக்க வும் சிவகங்கை அரசு மருத்துவ மனைக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...